இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மூலம் 1987 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் செயற்படும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) வழக்குத் தொடர்ந்ததன் அடிப்படையில் 2006 ஒக்ரோபர் 10ஆம் திகதி வடகிழக்கு இணைப்பு செல்லாது மற்றும் சட்டவிரோதமானது என்ற அறிவித்தல் வந்தது. இது ஜே.வி.பி யின் தமிழர்கள் விடயம் தொடர்பான நிலைப்பாட்டை எடுத்துக்காட்டும்.
மார்கழி 2 1984. அது ஓர் அதிகாலை. சுறுசுறுப்பான கமக்காரர்கள். சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும் கார்காலக் காலை பனியை விலக்கி சூரியன் எழுந்ததோ இல்லையோ பச்சையுடைப் பகைவன் வந்தான் சத்தமின்றி பதுங்கியே ஊரும் ஒருவகை வண்டிகளினணியில் மெதுவாய் மெதுவாய் ஊர்ந்தபடி சற்று நிமிடங்களுக்கு முன்தான் திடீர் என்ற அதிகாலை ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்தது அரச ஊதுகுழல் வானொலி வெளியே புறப்பாடுகளை செய்திருந்த ஊரார் விரைந்து வீடு திரும்மியும் திரும்பியவாறும் இருந்தனர் வந்த இராணுவம் பிரதான பாதையில் இருந்து சிறிய சந்திகளுக்குள் நுழைய தொடங்க பரபரப்பு மக்களிடையே நாங்கள் இராணுவத்தை எப்பொழுதும் மனிதராக பார்ப்பதில்லை கூற்றுவராகத்தான் பார்ப்போம் அவர்கள் கையில் சிக்காமற் தப்பினாற்தான் உயிர்தப்பமுடியும் பரபரப்பாய் ஓடும் போது ‘ஆமி வாரான் ஆமி வாரன் ஓடுங்கோ ஓடுங்கோ’ என்று எச்சரித்தபடி ஓடுவார்கள், அப்படித்தான் இன்றும் எச்சரித்தபடி ஓடிக்கொண்டிருந்தனர் நான் எனது தோழி வீட்டில் தங்கியிருந்தேன் என்னுடன் என்னும் இரு தோழியர் மக்களின் எச்சரிக்கை கிடைத்தவுடன் அவர்களின் வீட்டின் பின்னால் இருந்த வாய்க்கால் தாண்டி வயற் பகுதிக்குள் ஓடிச் சென்றோம் அங்கே ஏற்கனவே ஓடிவந்தவர்கள் நின்று சுதரித்துக்கொண்டு ஊரை கவலையுடன் பார்த்தார்கள் நாங்களும் நின்று திரும்பிப் பார்த்தோம்.. எனக்கு இப்பொழுது என் வீட்டு ஞாபகமும் என் அண்ணாவின் ஞாபகமும், எங்கள் வீடு ஊரின் பிரதான வீதியில் இருக்கிறது அதனால் எப்பொழுதும் கூடிய கவனத்துடன் இருப்போம். மனதுக்குள் ஒன்றும் நடக்கக்கூடாது ஒன்றும் நடக்கக்கூடது என்று மனம் அடித்துக் கொண்டது. இப்பொழுது வயல்வெளியில் நிறைய மக்களின் தலைகள் தெரிந்தன. வயல் தாண்டினால் சிறிதாய் ஓடும் ஆறு அது நறுவிலியாறு என்றழைக்கப்படுகிறது. அது தாண்டினால் காட்டொடு சார்ந்த சேனைப் பயிர்ச்செய்கைக் காணிகள் அதற்கு பட்டகாட்டுவெளி என்று பெயர், அந்த பகுதியில்த்தான் தேவை எற்படும் போது தஞ்சம் அடைவோம் அனால் இன்று யாருக்கும் அங்கு சென்று பதுங்கும் எண்ணமில்லாமல் ஊரைப் பரிதாபமாகப் பார்த்தபடி ஆங்காங்கே நின்றிருந்தார்கள். முகத்தான்குளத்தின் முதற்துண்டுப் பகுதியில் நாங்கள் நின்றிருந்தோம் இப்பொழுத இடையில் இருக்கும் உலுக்குளம் என்ற குளத்தின் வயற்பகுதி அதன் அருகாக இருக்கும் குடியிருப்புக்களில் இருந்தும் மக்கள் ஒடி வந்துகொண்டிருந்தார்கள், திடீர் என்று அந்தப் பகுதியில் தீ பரவத்தொடங்கியது யாருடையதோ வீட்டுக்குத் தீ வைத்து விட்டார்கள் என்பது தெரிந்தது. அது மார்க்கண்டு அவர்களுடைய வீடாக இருக்கும் என எண்ணிக்கொண்டோம். தொடர்ந்து சற்றுத் தூரமாக சூட்டுச்சத்தங்களும் கேட்டது. நாம் தொடர்ந்து ஓடி ஒளிப்பதா? திரும்பிச்செல்வதா? என்று தெரியாமல் நின்றிருந்தோம் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக அங்கே நின்றோம் கிராமத்தில் இருந்து கடைசியாக எங்களுடன் இணைந்தவர்களின் தகவலின்படி பலர் கைதாகி இருக்கலாம் என்பதறிந்தோம்.. வந்தவர்கள் ஊரை இரண்டுபடுத்தி கைதானவரகளுடன் சென்றுவிட்டார்கள் என்பதறிந்து ஊரை நோக்கித் திரும்பினோம் நான் விரைவாக மிதியூந்தை எடுத்துக்கொண்டு எங்கள் வீட்டை நோக்கி ஓடினேன் வீதியில் ஊரவர்கள் கவலையுடன் கூடிக் கூடி நின்றுகொண்டிருந்தனர், உறவுகளின் கைதுகளில் தவித்த பல பெண்கள் ஓலமிட்டு அழுதுகொண்டிருந்தார்கள். ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் கூடிக்கொண்டிருந்தன, கிளியன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும், மார்க்கண்டு அவர்களும் மருத்துவர் ஜெயரட்ணம் அவர்களதும் மற்றும் மயில்வாகனம் அவர்களதும் வீடுகள் உடமைகளுடன் முழுதாக தீக்கிரையாக்கப் பட்டிருந்தன. எங்களின் அயலவர்களில் பலர் கைதாகி இருந்தனர். பெரும்பாலும் அவர்கள் உறவினர்கள் கூட. செட்டிகுளம் பிரதான வீதி, செட்டிகுளம் குடியிருப்பு, துடரிக்குளம் வீதி மருத்துவமனை சுற்று வட்டம் மற்றும் பிரதான குடியிருப்பான முகத்தான்குளம் என்று இங்கே மட்டுமல்ல வரும்பாதையிலேயே நேரியகுளம் அடப்பன்குளம் மற்றும் முதலியாகுளம் பகுதிகளில் ஆண்களைக் கைதுசெய்துகொண்டே வந்திருந்தார்கள் என்பதை அறிந்து கொண்டோம். நான் மேலே குறிப்பிட்டது போல் பிரதான வீதியில் இருந்த எங்கள் வீட்டிற்கும் எனது சிற்றன்னை வீட்டுற்கும் சென்றிருந்தார்கள், ஆனால் அங்கே ஆண்கள் யாரும் அந்த வேளை இருந்திருக்கவில்லை. எனது அண்ணா காலையிலேயே வெளியிற்சென்றிருந்தார் அவரும் இராணுவத்தின் துரத்துதலில் இருந்து மயிரிழையில் தப்பியிருந்தார். அவர் சென்ற மிதியுந்து அப்பாவினுடையது, 21 வருடமாக அவர் வைத்திருந்த ரலி மிதியுந்து அதன் துணையுடன்தான் அவர் தனது இதுவரையான ஆசிரிய சேவையையும் செய்திருந்தார் அதுவும் இன்று அவர்கள் கையில் சிக்கிவிட்டது.. அது போகட்டும் பல உயிர்களின் முன்னே எதற்கு அது? இருந்தாலும் ஞாபகம் வந்து விட்டது. அன்று முழுவதும் ஊர் சோகமப்பியதாக தங்கள் உறவுகளை எங்கே கொண்டசென்றார்கள் என்று தேடலிலும் விடை காணுவதிலும் தவித்தபடியும் நகர்ந்தது . பல்வேறு தகவல்கள் சுட்டு ரயர் போட்டு கொழுத்திவிட்டார்கள் என்றும், உயிரோடு குளிகளில் போட்டு மூடிவிட்டார்கள் என்றும் பல தகவல்கள், ஆனால் எது உண்மை என்று இதுவரைத்தெரியாத கேள்வியுடன் மறக்கமுடியாத துயரவரலாற்றுச் சம்பவம் என்ற பதிவுடன் இன்றுடன் 35 வருடங்கள் கடந்துவிட்டன, மருத்துவர் சங்கரப்பிள்ளை அவர்கள் தனது 3 பிள்ளைகளையும் செல்லர் என்பவரின் இரு பிள்ளைகள் இவ்வாறு பல குடும்பங்களில் மூவர் இருவராய் 52 பேர் அன்று காணாமற் போயினர். எம் ஊருக்கு என்றும் மறக்காத துயரம் இது. இதே நாளில் சேமமடு மற்றும் வவுனியா பூந்தோட்டப் பகுதியிலும் இதே போன்ற கைதுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. .அன்றய சாட்சிகளில் ஒருத்தியாக அன்று காணமற் போனவர்களுக்கும் அவர்தம் உறவுகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
தமிழர்களின் அரசியலைப் பற்றிய சில தென் பகுதி ஊடகவியலாளர்களின் அறிவு எந்தளவு என்பதை அவர்கள் இலங்கை தமிழ் அரசு கடசியின் புதிய தலைவர் தெரிவைப் பற்றி கடந்த 21 ஆம் திகதி எவ்வாறு அறிக்கையிட்டார்கள் என்பதன் மூலம் தெரிகிறது. அவர்கள் தமிழ்த் தேசியகடக கூட்டமைப்பையும் இலங்கை தமிழ் அரசு கட்சியையும் குழப்பிக் கொண்டே செய்தியை வெளியிட்டு இருந்தார்கள்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் தோழர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினருக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில், இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் மற்றும் வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா ஆகியோருடன் பேச்சுவார்த்தைக்காக இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இவ்விஜயத்தின்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் ஆகியவை தொடர்பாக கவனம் செலுத்தும் வகையிலான நேர்மறையான மற்றும் பயனுள்ள உரையாடல்கள் நடத்தப்பட்டதாக கலாநிதி ஜெய்சங்கரின் சமூக ஊடகப் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
1960 டிசெம்பர் 31ஆம் திகதி சிங்களம் மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு மறுநாளே நடைமுறைக்கு வந்தது. 1961ஆம் ஆண்டு மொழிவாரிச் சிறுபான்மையினருக்கு மிகுந்த சவால்களுடன் தொடங்கியது. இது கல்வித்துறையில் எதிரொலித்தது. 1959 முதலே பல்கலைக்கழகங்கள் சிங்கள, தமிழ் மொழிமூல மாணவர்களை அனுமதித்தன. மருத்துவம், விஞ்ஞானம் மற்றும் பொறியியல் ஆகிய பீடங்கள் 1960களில் சேர்க்கப்பட்டன. பல்கலைக்கழகங்களில் இணைவோரின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்தது.
இலங்கையின் தேசிய அரசியலையும் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியலையும் தொடர்ச்சியாக கூர்ந்து நோக்குவோர், இந்த நாட்டை அல்லது ஒரு இனக் குழுமத்தை ஆள்வதற்கான தலைமைத்துவச் சங்கிலியில் இடைவெளி ஒன்று காணப்படுகின்றமையை அவதானிப்பார்கள்.
1959இல் பண்டாரநாயக்கவின் கொலை இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதம் எவ்வாறு உள்முரண்பாடுகளால் ஊசலாடியது என்பதையும் அதன் பல்பரிமாணத் தன்மையையும் வெளிக்கொண்டுவந்தது. இனிமேலும் இலங்கையின் பௌத்த பிக்குகள் அனைத்தையும் துறந்த துறவிகள் அல்ல என்ற ஏற்கக் கடினமான உண்மையை பொதுவெளிக்குக் கொண்டு வந்தது.
இலங்கைக்கு உள்ளேயும், நாட்டுக்கு வெளியேயுள்ள புலம்பெயர் தேசங்களிலுமென இமயமலைப் பிரகடனம் விமர்சிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வருகின்றது. தமிழ் மக்களின் நிலைப்பாடுகளைக் கருத்தில் கொள்ளாத “இமயமலை பிரகடனம்” என்றே அதன் மீதான விமர்சனங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.
நேற்று இரவு, யாழ்ப்பாணம் ‘றீகல்’ திரையரங்கில் நடைபெற்ற – 9 ஆவது யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சியில், வாழ்நாள் சாதனைக்கான விருது, புகழ்பெற்ற சிங்களத் திரைப்பட நெறியாளர் தர்மசிறி பண்டாரநாயக்கவுக்கு வழங்கப்பட்டது! ; மிக்க மகிழ்ச்சியைத் தருவ தாக அது இருக்கிறது! அவருக்கு எனது இதயபூர்வமான வாழ்த்து!