குளவிக் கூட்டை கலைக்காதீர்

(விஸ்வா)

வடக்கை ஒரு குழப்ப நிலையில் வைத்திருக்கும் வேலைகளை கடந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது. ஏதாவது ஒரு குற்றச் செயல் நடந்தால் அதனை விடுதலைப்புலிகளுடன் தொடர்பு படுத்தும் விதமான கருத்துக்கள் அக்காலங்களில் பரப்பப்பட்டன. விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்ய முனைவதாக குற்றம் சாட்டப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். பொது மக்கள் மேற்கொள்ளும் ஜனநாயக வழியிலான போராட்டங்களை குழப்புவதற்கு தயாராக பாதுகாப்பு தரப்பிலிருந்தே பலர் செயற்பட்டனர்.

(“குளவிக் கூட்டை கலைக்காதீர்” தொடர்ந்து வாசிக்க…)

தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: இவர்கள் மீது இலங்கைஅரசு,வடக்கு,கிழக்கு மாகாண சபை விசேட கவனம் செலுத்தவேண்டும்.

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் மீது இலங்கைஅரசு,வடக்கு,கிழக்கு மாகாண சபை விசேட கவனம் செலுத்தவேண்டும்.
(அ.விஜயன்)
இலங்கையில் ஏற்பட்ட உள்ளாநாட்டு பிரச்சினை காரணணமாக தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற பலர் தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்கள் பல்வேறு காலகட்டங்களில் இலங்கையின் வடக்கு,கிழக்கு பகுயில் இடம்பெயர்ந்தவர்களாவர்.

(“தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: இவர்கள் மீது இலங்கைஅரசு,வடக்கு,கிழக்கு மாகாண சபை விசேட கவனம் செலுத்தவேண்டும்.” தொடர்ந்து வாசிக்க…)

இனவாதம் வளர்க்க நெய் கொண்டு திரியும் தமிழ் அரசியல்வாதிகள்!!!

ஜெயபாலன். த உடன் இணைந்து சாகரன்

தங்கள் சொந்த அரசியல் லாபத்திற்காக எம் பி ஆசனத்திற்காக தமிழ் தேசியத்தை அழுங்குப் பிடியில் வைத்துள்ள தமிழ் அரசியல் தலைமைகளும் அவர்களைக் காவடி எடுக்கும் ஊடகங்களும் மக்களை பிளவுபடுத்தி இனவாதத்தைத் தூண்டுவதற்கு எப்போதும் நெய்கொண்டு திரிகின்றனர். அவர்களுக்கு அண்மையில் கிடைத்தது பொலிஸார் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொண்ட படுகொலைத் துப்பாக்கிப் பிரயோகம்.

(“இனவாதம் வளர்க்க நெய் கொண்டு திரியும் தமிழ் அரசியல்வாதிகள்!!!” தொடர்ந்து வாசிக்க…)

யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கொலை: ஒரு புதிய தகவல்-நண்பர்கள் கவனத்திற்கு

(விஜய பாஸ்கரன் உடன் இணைந்து சாகரன்)

கொல்லப்பட்ட மாணவர்கள் தொடர்பான தெரிந்த சில நண்பர்களிடம் இன்று பகிர்ந்து கொண்டேன். இலங்கையில் போக்குவரத்து பொலிசாரின் லஞ்சம் காரணமாக ஆயுதங்கள் பறிக்கப்பட்டு நிராயுத பாணிகளாகவே பணிபுரிவதாக சொன்னார்கள்.ஒரு சிலரிடம் மட்டுமே ஆயுத பாவனைகள் உண்டு.

(“யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கொலை: ஒரு புதிய தகவல்-நண்பர்கள் கவனத்திற்கு” தொடர்ந்து வாசிக்க…)

தீபாவளி: ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றித் திருநாள்!

இன்று இந்துக்கள் என அழைத்துக் கொள்ளும் பலர், தீபாவளியை வணிக மயப்படுத்தப் பட்ட பண்டிகையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளி எதற்கு கொண்டாட வேண்டும் என்று, ஆயிரம் வருடங்களாக கூறப்பட்டு வரும் கதையை இப்போதும் தம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். “மக்களுக்கு கொடுமை செய்த நரகாசுரனை கிருஷ்ணன் அழித்த நாள்.” என்பதில் மறைந்துள்ள அரசியலை புரிந்து கொள்ள முடியாத படி மதம் கண்ணை மறைக்கின்றது.

(“தீபாவளி: ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றித் திருநாள்!” தொடர்ந்து வாசிக்க…)

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்: பழிவாங்கப்படும் ஆபிரிக்கா

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எந்த அமைப்பும் அதன் பணியால் மட்டும் மதிப்பிடப்படுவதில்லை. அதன் உருவாக்கம் ஏன்? எப்போது நிகழ்ந்தது? என்பதும் அதை மதிப்பிடுவதில் முக்கியமானது. குறிப்பாகச் சர்வதேச அமைப்புகளை, அவை உருவாகுவதற்கு அடிப்படையான அரசியல் காரணிகளின் அடிப்படையிலேயே மதிப்பிடலாம். எந்த அமைப்பையும் அந்தக் கண்ணோட்டத்துடன் நோக்குவது தகும். ஓர் அமைப்பு செய்வது என்ன? செய்யாமல் விடுவது என்ன? என்பதை அவ்வமைப்பின் ஆணை தீர்மானிப்பது குறைவு. மாறாக அவ்வமைப்பை நடாத்துகின்ற அரசியலும் அவ்வரசியலில் செல்வாக்குச் செலுத்தும் அரசியல் கட்டமைப்புகளும் அது சார் சூழலுமே தீர்மானிக்கின்றன. இதற்கு எந்த அமைப்பும் விலக்கல்ல.

(“சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்: பழிவாங்கப்படும் ஆபிரிக்கா” தொடர்ந்து வாசிக்க…)

அரிய சந்தர்ப்பம்? தவறவிட்ட ஆனந்தி!

இங்கிலாந்தில் இருந்து கொண்டு எழுத்துமூலம் விடுத்த, முதல்வரின் அறிவுறுத்தல் மீறப்பட்டு நடந்தேறியது, வட மாகாண சபை பிரதி தவிசாளர் தெரிவு. மூன்று வருடங்களா கூடும் சபையின் பிரதி தவிசாளர், அண்மையில் மாரடைப்பால் மரணித்தார். தன்னை அரைநாள் மட்டுமே சபை நடத்த அனுமதித்த கவலை, நீண்ட நாட்களாக அவருக்கு தந்த, நெஞ்சு வலியுடன் தான் அவர் கண்துயின்றிருப்பார். அவருக்கு பரிசுத்த ஆவியின் அருள் கிடைத்தாலும், கடைசிவரை தவிசாளர் கதிரையில், முழுநாள் அமரும் பாக்கியம் கிடைக்கவில்லை.

(“அரிய சந்தர்ப்பம்? தவறவிட்ட ஆனந்தி!” தொடர்ந்து வாசிக்க…)

இன்னுமொரு பிரபாகரன் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வேண்டாம் என்று சங்கே முழங்கு!!!

மற்றையவர்களின் செயற்பாட்டுச் சுதந்திரத்தை துப்பாக்கி முனையில் பிரபாகரன் தடுத்து கைகோர்த்து நின்ற மற்றத் தலைவர்களையெல்லாம் சுட்டுக்கொன்றதன் விளைவு தான் ஒட்டுமொத்தமாக முள்ளிவாய்க்காலின் அழிவுக்கு இட்டுச்சென்றது. 30 வருடங்கள் புலிகள் மட்டும் செயற்படலாம் என்ற செயற்பாட்டுச் சுதந்திரத்தின் விளைவுகள் தான் இவை. ஏதோ செயல் வீரர்கள் வெட்டிப் புடுங்குகிறோம் என்று சொந்த மக்களையே பலி கொடுத்தும் தலைமையைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது இந்தப் புலியிசத்தால்.

(“இன்னுமொரு பிரபாகரன் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் வேண்டாம் என்று சங்கே முழங்கு!!!” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது ?

(Kiri shanth)

( இவை தற்போதைய நிலைவரத்தை வேறு திசையில் கொண்டு செல்வதற்கான எத்தனிப்பாக கருத வேண்டாம் . அநேகமாக அனைவரும் தமது நிலைப்பாடுகளை முன்வைத்து விட்ட நிலையில் தான் இதனை பதிவிடுகிறேன். சுலக்சனுக்கும் கஜனுக்கும் நிகழ்ந்தது இனி யாருக்கும் நிகழ்ந்து விடக் கூடாது. அதே நேரத்தில் அவர்களுக்காக நாம் பெற்றுக் கொடுக்க வேண்டிய நீதியை கண்டிப்பாக பெற்றுக் கொடுக்கவும் வேண்டும் . ஆனால் அதற்கு நாம் எவ்வளவு தூரம் தயாராய் உள்ளோம் , தயார்ப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை கவனிக்க வேண்டும் . இப்பொழுது கூட அவற்றை திருத்த முடியும் . அவற்றை ஆராய்வதற்காகவே இங்குள்ள நிலவரங்கள் எடுத்தாளப் பட்டுள்ளன.)

(“யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் தனது பொறுப்புக்களை எப்பொழுது கையிலெடுக்கப் போகிறது ?” தொடர்ந்து வாசிக்க…)

சாவினை அடுத்த சாணக்கியம் என்ன?

(ப.தெய்வீகன்)

அந்த இரண்டு இளைஞர்களின் படுகொலையும் ஓர் இனத்தின் மீதான பேரதிர்வாக மீண்டுமொரு தடவை தமிழ்நிலத்தில் பதிவாகியிருக்கிறது. தங்களின் உதிரத்தில் ஓடுகின்ற வக்கிரத்தினை மறைத்துக்கொள்ள முடியாமல்போன, இன்னொரு உக்கிர தருணமாகிப்போன அந்த மரணங்கள் தமிழர் பிரதேசங்களில் துண்டுப்பிரசுரங்களாக மாத்திரம் பறந்து கொண்டிருக்கின்றன. போருக்குப் பின்னர் தவணை முறையில் இடம்பெற்று வருகின்ற எத்தனையோ மரணங்களில் இதுவும் ஒன்றாகச் சேர்ந்துள்ளது.

(“சாவினை அடுத்த சாணக்கியம் என்ன?” தொடர்ந்து வாசிக்க…)