விக்னேஸ்வரனின் அரசியல்

ஆனாலும் விக்னேஸ்வரன் தான் அதிக பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றமைக்கு மறைந்த “மாவீரன் ” பிரபாகரனும் ஒரு காரணம் என்று நம்புகிறார். மொத்தத்தில் அதி தீவிர தமிழ் அரசியல் நிலைப்பாடுகளை தம்மால் எடுக்க முடியும் , அதற்கான தீவிர தமிழ் மக்கள் அணியொன்று வடக்கு கிழக்கிலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ளது என்று அவர் நம்புகிறார் போலும் ! போதக் குறைக்கு தீவிர இனவாதம் பேசும் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் வேறு அவருக்கு நம்பிக்கை ஊட்டுகின்றன.

(“விக்னேஸ்வரனின் அரசியல்” தொடர்ந்து வாசிக்க…)

எழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசியலும் அரசியல் சக்திகளும்

மன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறத்திலே உள்ள முசலிக் கிராமத்திலே ஆய்வு ஒன்றிலே ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த முஸ்லீம் பெரியவர் ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்ட விடயங்கள்: ‘நாங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த காட்டு வளங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது. எனது வீட்டின் பின்புறம் வனவளப் பாதுகாப்பு அதிகாரிகளினால் இப்போது பாதுகாக்கப்பட்ட காடாக மாற்றப்பட்டுள்ளது. ஒரு மண்வெட்டி செய்ய பிடி தேவை என்றால் கூட என்னால் பின்னுக்கு இருக்கிற மரத்தினை வெட்ட முடியாது. முசலி தெற்குப் பகுதியில் புதிதாகப் புத்தர் சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. நாங்களும் வடமாகாணத்தினைச் சேர்ந்தவர்களே. உங்களுடைய முதலமைச்சர் ஐயா ஏன் எங்களுடைய பிரச்சினைகள் பற்றி எதுவும் பேசுவதில்லை. ஒரு கை தட்டினால் சத்தம் கேட்குமா? எல்லாரும் சேர்ந்து பிரச்சினைகளைத் தீர்க்க முன்வரலாமே?’

(“எழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசியலும் அரசியல் சக்திகளும்” தொடர்ந்து வாசிக்க…)

அட்டைக்கத்தி நாயகர்கள்

(கருணாகரன்)

“எழுக தமிழ்“ என்றொரு யுகப் புரட்சி நடக்கப்போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் இதற்கான தடல் புடலான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த எழுச்சியை எப்படியும் கலையாடக்கூடியமாதிரி ஆக்க வேணும் என்ற நோக்கில் அங்கங்கே எழுதிக் குவிக்கிறார்கள் பலரும். விண்தொடக்கூடியமாதிரியான சுலோகங்கள் தயார்ப்படுத்தப்படுகின்றன. மக்களை அலையாகக் கடலாக எழுச்சி கொள்ள வைப்பதற்கான பயிற்சிகளும் முயற்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது இந்த நிகழ்வைப்பற்றிய அறிவிப்புகளை ஒலிபெருக்கிகளில் ஊர்ஊராகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

(“அட்டைக்கத்தி நாயகர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

வன்முறையும் ஆணியமும் பெண்ணியமும்

இதில் உள்ள தரவுகளை கொஞ்சம் மாற்றி எழுக தமிழுக்கு மாற்றி போட்டு படிக்கலாம் , எந்தவகையான ஆபத்தை நான் கவனத்தில் எடுக்க சொல்கிறேன் என்பது .-

(யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் உள்ள பெரும்பான்மை ஆண்களின் நிலை பற்றி சில பதிவுகள் இதில் உண்டு .. எனது கதையை விட்டு விடுங்கள் ,சக பெண்கள் எப்படி அதை பார்த்தார்கள் என்று பாருங்கள் )

ஒரே ஒரு பெண்ணை கூட இந்த உலகத்தில் சந்தோசமாக வைத்திருக்க தெரியாதவன் தான் நான். ஆணின் உளவியலில் ஆழமான பகுதி வன்முறையானது , அது வன்முறையை விரும்பும் அல்லது கொண்டாடும் பகுதி ,ஆகவே எனது இதயத்தின் மூலமாக வன்முறை , ஆணியம் , பெண்ணியம் என்பவற்றை விளங்கிக் கொள்ளும் முயற்சி தான் இந்தப் பத்தி.

(“வன்முறையும் ஆணியமும் பெண்ணியமும்” தொடர்ந்து வாசிக்க…)

என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி, PLOT, EPRLF, TELO ஆகியவை உள்ளன. இவற்றின் சி்ன்னம் வீடு. இது அகில இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சி்ன்னம். தமிழ் மக்கள் பேரவையில் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ், PLOT, EPRLF, TELO இணக்கமாக உள்ளன. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதில் முக்கியமான தரப்பு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சி்ன்னம் சைக்கிள். இது அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸின் சின்னம். அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி எழுக தமிழ் நிகழ்வுக்கு எதிர்ப்பு. தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டவர்கள் அந்தச் சின்னத்துக்குரிய கட்சியைத் தனித்து விட்டு தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வுக்குப் பயணம். தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நிகழ்வில் பங்கேற்பு.

(“என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?” தொடர்ந்து வாசிக்க…)

அதிவேக பயணமும்! பரலோக பிராப்தமும்?


தமிழ்நாட்டில் என் கவனத்தை ஈர்த்த அறிவிப்புகள் ‘’வேகம் விவேகம் அல்ல’’. ‘’வளைவுகளில் முந்தாதே விளைவுகளால் வருந்தாதே’’, ‘’கரம் சிரம் புறம் நீட்டாதே’’. என்பவையே இவை ஒன்றும் ஒளவையார் சொன்ன ஆத்திசூடி அல்ல. சென்னை நெடுஞ்சாலைகளில், பேரூந்துகளில், பதிக்கப்பட்ட அதிவேக போக்குவரத்தின் போது ஏற்பட கூடிய ஆபத்தை உணர்த்தும் வாசகங்கள். நெடுஞ்சாலைகளில் பயணித்தவரில் பலர் எமலோக வாசலில் தேங்காய் உடைத்து, உயிர் தப்பியதால், அவர் பெற்ற துன்பம் அடுத்தவரும் பெற்றுவிடக்கூடாது என்ற, மனிதாபிமான சிந்தனையில் மற்றவர் நலன் காக்க முன் எச்சரிக்கை செய்யும் அறிவிப்புகள் அவை.

(“அதிவேக பயணமும்! பரலோக பிராப்தமும்?” தொடர்ந்து வாசிக்க…)

புல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்!

(எஸ்.எம்.எம்.பஷீர்)

“இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.”   ( குறள்)

திருகோணமலை மாவட்ட மறைந்த முன்னாள் துறைமுகங்கள் கப்பற்துறை ராஜாங்க அமைச்சர் எம்.ஈ எச்.எம் . மஹ்ரூப் 20 வருடங்கள் , தனது மரணம் வரை நாடாளுமன்ற அங்கத்தவராக இருந்தவர், அமைச்சர் பதவி வகித்தவர். அவர் தமது பிரதேச மக்களுக்கு ஆற்றிய பல்வேறு பணிகளில் கல்வி சார்ந்து அவர் ஆற்றிய பணிகள் குறித்து நூல் ஒன்று வெளியிடும் வைபவம் இன்று காலை மூதூரில்  இடம்பெறப் போவதாக ஒரு செய்தி கண்ணில் பட்டது.

(“புல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்!” தொடர்ந்து வாசிக்க…)

திலீபன்

இலங்கையில் திலீபன் ஒரு வரலாற்றுப் பதிவுக்கு உரிய பெயர் என்பது மறுக்க முடியாதது.ஆனால் அவர் வாழ்வும் மரணமும். விமர்சனத்துக்கு உரியது. இந்திய இராணுவத்தின் வருகையின் பின்பு மக்கள் மனதில் பாரிய மாறுதல்களும் சந்தோசங்களும் மீள திரும்பின.ஊரெங்கும் பறந்த புலிக்காடிகள் காணாமல் போயின.

(“திலீபன்” தொடர்ந்து வாசிக்க…)

மாமிசம் மனித உணவா?

(இதை எழுதியவர் யார் என்று தெரியாது. ஓரளவு உண்மை போல தெரிகிறது. அந்த முகம் தெரியாத நபருக்கு நன்றி. நான் ஒன்றும் ‘சுத்த சைவம்’ கிடையாது. முடிந்த வரை சைவமாக இருக்க ஆசைப்படுபவன். அவ்வளவே. படியுங்கள், உங்கள் பகுத்தறிவு ஏற்றுக் கொண்டால் அதன்படி நடவுங்கள்.)

இயற்கை கோட்பாடுகளின் படி மனிதன் சைவமா?அசைவமா?
இயற்கையில் இரண்டு விதமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
1. சைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .
2. அசைவம் சாப்பிடும் ஜீவராசிகள் .
இவ்விரு ஜீவராசிகளையும் சற்றே ஆராய்ந்து பார்த்தால் மனிதன் சைவமா?அல்லது அசைவமா? என சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
சைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக மாடு, குதிரை, கழுதை, யானை, மான் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.
அசைவ ஜீவராசிகளுக்கு உதாரணமாக சிங்கம், புலி, நாய் போன்றவற்றை எடுத்துக் கொள்வோம்.

(“மாமிசம் மனித உணவா?” தொடர்ந்து வாசிக்க…)

மீனாட்சிபுரத்திலிருந்து புழல் சிறை வரை…

(ஷங்கர்ராமசுப்ரமணியன்)
ராம்குமாரை புழல் சிறை வரைக்கும் மரணம் தொடர்ந்து துரத்தியிருக்கிறது. ஒட்டுமொத்தச் சமூகமும் வேடிக்கை பார்க்க சுவாதியின் கொலை வழக்கு, அதற்குப் பின்னாலுள்ள எத்தனையோ ரகசிய முடிச்சுகள் அவிழ்க்கப்படுவதற்குச் சாத்தியப்படாமலேயே முடிந்துவிட்டது. 2012-ம் ஆண்டு வங்கிக் கொள்ளையர்கள் என்று சொல்லப்பட்டு, ஐந்து பிஹார் இளைஞர்கள் சென்னை வேளச்சேரியில் கொல்லப்பட்ட சம்பவம் உடனடியாக ஞாபகத்துக்கு வருகிறது. சம்பவம் நடந்து சில நாட்கள் தொடர்ந்த சலசலப்புகள், ஊடகச் செய்திகள் மற்றும் விவாதங்களைத் தொடர்ந்து கிட்டத்தட்ட பொதுநினைவின் மறதியில் புதைந்துபோன பழங்கதை அது. இன்னும் எத்தனையோ என்கவுன்டர்கள் மற்றும் மர்மமான முறையில் நடந்த காவல் மரணங்கள் நமது ஞாபகத்தில் நிழலிடுகின்றன.

(“மீனாட்சிபுரத்திலிருந்து புழல் சிறை வரை…” தொடர்ந்து வாசிக்க…)