கிளிநொச்சியில் தீயணைக்க வண்டி இல்லை, அய்யாமாருக்கோ அதிவிரைவு வாகனங்கள்

 

கிளிநொச்சி எரிகிறது. மகிந்த ராஜபக்ச என்ற இனப்படுகொலையாளனால் எரிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாக்கப்பட்ட நகரம் மறுபடி எரிகிறது. இராணுவம் மண்ணில் புதைத்த ஊரை உழைப்பாளிகளும், உழவர்களும் உதிரத்தை சிந்தி கட்டி எழுப்பினார்கள். இன்று ஒரு சிறு நெருப்பை ஊதி அணைக்க வக்கற்ற வடமாகாணசபையின் பொறுப்பற்ற தன்மையினால் மறுபடி எரிகிறது. மக்கள் குறித்து, அவர் தம் உழைப்பு குறித்து எந்த விதமான அக்கறையுமற்ற அரசியல்வாதிகளாலும், அதிகார வர்க்கத்தினராலும் கிளிநொச்சி எரிகிறது.

(“கிளிநொச்சியில் தீயணைக்க வண்டி இல்லை, அய்யாமாருக்கோ அதிவிரைவு வாகனங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டத்தில் கூடிநின்று கூவிப்பிதற்றல் நன்றோ?

ஏழு கட்சி கூட்டு உணர்ச்சிகர மகஜரை உதவி இந்திய தூதுவர் மூலம், இந்திய பிரதமருக்கு அனுப்பிய செய்தி பார்த்ததும் மெய் சிலிர்த்தது. எட்டுத்திக்கும் எம் தமிழன் அடிவாங்குகிறான் என ஆதங்கப்பட்ட பாரதிராஜாவின் அறிக்கை ஆதங்கத்தை தந்தது. தமிழன் பொங்கினால் கன்னடம் தாங்காது என வைகோ பேசியதும், சீமான் சீறியதும் சிரிப்பை தந்தது. இந்த மேடை பேச்சின் வீராதி வீரர்கள் தம் இனத்துக்கு ஈழத்தில் நடந்த அநீதிக்கு, அன்று எண்ணை வார்க்கும் செயலை செய்துவிட்டு இன்றும் அதேபோல் மேடையில் சீறினால் சிரிப்பு தானே வரும்.

(“கூட்டத்தில் கூடிநின்று கூவிப்பிதற்றல் நன்றோ?” தொடர்ந்து வாசிக்க…)

அரேபியரும் தமிழருக்கு தொப்புள்கொடி உறவுகளே! இதோ ஆதாரம்!!

 

இந்தியா பற்றிய சுற்றுலா நூலொன்றை வாசித்துக் கொண்டிருந்த பொழுது, அந்தத் தகவல் கண்ணில் பட்டது. “தென் கர்நாடகா மாநிலத்தில் குடகு மலைப் பிரதேசத்தில் குடவர்கள் என்ற சிறுபான்மை மொழி பேசும் இனம் வாழ்கின்றது. அவர்கள் பிற கன்னடர்களை விட வித்தியாசமாக வெள்ளையாக இருப்பார்கள். இந்தியா மீது அலெக்சாண்டர் படையெடுத்த நேரம், அந்தப் படையில் வந்த ஐரோப்பிய இனத்தவர்கள் அங்கேயே தங்கி விட்டனர்…” இவ்வாறு அந்த நூலில் எழுதப் பட்டிருந்தது.

(“அரேபியரும் தமிழருக்கு தொப்புள்கொடி உறவுகளே! இதோ ஆதாரம்!!” தொடர்ந்து வாசிக்க…)

அயர்லாந்து வரி ஏய்ப்பு: அப்பிளைக் கடித்தது யார்?

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அரசு யாருக்கானது என்ற வினா இடையிடையே எழும். காலங்காலமாக அரசாங்கத்தின் வகிபாகம் தொடர்ந்து மாறிவந்துள்ளது. அரசின் பிரதான வகிபாகம், இருந்துவரும் சமூக அமைப்பைப் பாதுகாப்பதும் சமூக உறுதியை நிச்சயப்படுத்துவதுமாக இருந்தது. ஆனால் இன்று அரசாங்கம் வெளிப்படையாகவே மக்கள் விரோதமான, சமூக நலன்களை இல்லாதொழித்துப் பல்தேசியக் கம்பெனிகளுக்குச் சேவகம் புரிவதாக வளர்ந்துள்ளது. இம் மாற்றம் உலகமயமாக்கலும் சந்தைப் பொருளாதாரமும் உலக அலுவல்களைத் தீர்மானிப்பதன் விளைவாக உருவானதாகும்.

(“அயர்லாந்து வரி ஏய்ப்பு: அப்பிளைக் கடித்தது யார்?” தொடர்ந்து வாசிக்க…)

திலீபனைப் போல் பலியாக்கப்பட்டவன்…. விக்னேஸ்வரன்

நாம் தமிழர் கட்சி இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விக்னேஸ் என்ற இளைஞர் தீக்குளித்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். விக்னேஸ் தீக்குளித்த செய்தி வந்த பொழுது, நான் அதைப் பெரிது படுத்தவில்லை. ஊர்வலத்தில் தனக்குத்தானே தீமூட்ட முயற்சித்திருப்பான், உடனடியாகவே அவனை பக்கத்தில் நின்ற தொண்டர்கள் காப்பாற்றியிருப்பார்கள், சிறிய தீக்காயம்தான் ஏற்பட்டிருக்கும், இன்றைக்கே வீடு வந்து விடுவான்’ இப்படி எனக்கு நானே நினைத்துக் கொண்டேன்.

(“திலீபனைப் போல் பலியாக்கப்பட்டவன்…. விக்னேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)

தற்கொலைகள்

ஊமைவிழிகள் படத்தில் ஒரு பாட்டு.வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மறக்கலாமா.வாழ்வு என்பது பலருக்கு சுலபமான விசயம் அல்ல.ஆனால் பெற்றவர்கள் ஏழைகளாக இருந்தாலும் இயலாதவர்களாக இருந்தாலும் தங்கள் பிள்ளைகளுக்காக வாழ்பவர்கள்.முடிந்தளவு பிள்ளைகளின் எல்லா சுமைகளையும் சுமப்பவர்கள்.அவரகளின் ஆசைகள் கனவுகளை பிள்ளைகள் புரிவதில்லை.

(“தற்கொலைகள்” தொடர்ந்து வாசிக்க…)

கன்னடர் – தமிழர் இனப்பிரச்சினை குறித்து அதிகம் அறியப் படாத உண்மைகள்

காவிரி நதி ஊற்றெடுக்கும் குடகு மலைப் பகுதி, துளு மொழி பேசும் குடகு இனத்தவரின் பாரம்பரிய பூமி. காவேரி அவர்களது குல தெய்வம்! குடகு மக்கள், இன்று அழிந்து வரும் திராவிட மொழியொன்றை (துளு?) பேசுகின்றனர். அது தமிழ், மலையாளம், கன்னடம் மூன்றுக்கும் மூல மொழியாக இருக்கலாம். பெங்களூர் நகரம் ஒரு தமிழ் மன்னனால் ஸ்தாபிக்கப் பட்டது. சோழர்கள் காலத்தில் இருந்து பெங்களூரில் தமிழர்களின் வரலாறு தொடங்குகின்றது. (அனேகமாக அந்தத் தமிழர்கள் பிற்காலத்தில் கன்னடர்களாக மாறி இருக்கலாம்.)

(“கன்னடர் – தமிழர் இனப்பிரச்சினை குறித்து அதிகம் அறியப் படாத உண்மைகள்” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்.

புலிகள் செய்திருக்க கூடாத மாபெரும் தவறாகவே அவர்களின் கட்டாய ஆட்சேர்ப்பை நான் கருதுவதால் இந்ததொடரில் இந்த கட்டாய ஆட்சேர்ப்பு என்கின்ற பெயரில் அவர்கள் யாருடைய விடுதலைக்காக போராடுவதாக கூறினார்களோ அவர்கள் மீதே கட்டவிழ்த்துவிட்ட வன்கொடுமையையும் , அடக்குமுறையையும் இதுவரை எழுதியுள்ளேன்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் நாட்டின் தண்ணீர் (கண்ணீர்) அபத்தம்!

எனக்கு புரியாத விடயத்தில் ஒன்று, யார் தீர்க்கதரசி என்பதே. காரணம் தான் வாழ்ந்த காலத்து யதார்த்த நிகழ்வுகளை நினைவில் கொண்டு கவிபாடிய எட்டயபுரத்து ஏந்தல், மகா கவி பாரதி பாடிய கவிதை. அவரின் ‘’சிந்து நதி இன்மிகை’’ பாடலில் மொத்த இந்தியாவையும் நதிநீரால், பண்டமாற்றால் மட்டுமல்ல சிங்கள் தீவையும் சேது பாலம் கொண்டு இணைக்க விரும்பியவர். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவரை ஏந்தல் செய்யாதவர் இன்று செய்யும் சிறுமதி செயல் கண்டு சித்தம் கலங்குகிறது.

(“தமிழ் நாட்டின் தண்ணீர் (கண்ணீர்) அபத்தம்!” தொடர்ந்து வாசிக்க…)

வவுனிக்குளம் குடியேற்றம்

இலங்கை சுதந்திரம் அடைந்தபின் பல இடங்களில் குடியேற்ற திட்டங்கள் உருவாகின.இவை டி.எஸ். சேனநாயக்கா அவர்களால் திட்டமிட்ட இன விரிவாக்க நோக்கமாகவே உருவாகின.இதன் அடிப்படையில் வட பகுதிகளிலும் குடியேற்ற திட்டங்கள் உருவாகின.இதில் முதன்மையானது இரணைமடுஅவை ஆதாரமாக கொண்ட கிளிநொச்சி குடியேற்ற திட்டம்.இதை முன்னின்று செயற்படுத்தியவர் முன்னாள் சாவகச்சேரி பா.உ வே.குமாரசாமி அவர்களாவார்.

(“வவுனிக்குளம் குடியேற்றம்” தொடர்ந்து வாசிக்க…)