அன்று சாமியார் தரப்பு நீதிபதி! இன்று அமைச்சர் சார்பு முதல்வர்?!

குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 என்றால் பலருக்கும் தெரியாது. அது பற்றி தெரிய வேண்டுமானால் திருச்சி விராலி மலையில் ஆசிரமம் நடத்தி, அங்கு நடந்த கொலை மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் பற்றிய குற்றச்சாட்டில் கைதாகிய, செக்ஸ் சாமியார் என அறியப்பட்ட, பிரேமானந்தா அவர்களின் வழக்கு பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். இலங்கையின் மலையகத்தை பிறப்பிடமாக கொண்ட அவர், ஆரம்பத்தில் கிளிநொச்சி திருநகரில் ரவி சாமி என்ற பெயரில் சில சித்து விளையாட்டுகள் காட்டினார். மாணவபருவத்து நண்பர்கள் சிலர் ஒன்றுகூடி அவரை அங்கிருந்து இடம்பெயர செய்ததால், அவர் இன்று நிலத்தடி நீர் மாசுபட்ட சுன்னாகத்தை அன்றே மாசுபடுத்த அங்கு சென்று ஆசிரமம் அமைத்தார். அப்போது மல்லாகம் நீதிமன்றில் நீதிவானாக இருந்த சி வி விக்னேஸ்வரன் அவரின் பக்தரானார்.

(“அன்று சாமியார் தரப்பு நீதிபதி! இன்று அமைச்சர் சார்பு முதல்வர்?!” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 11)

இரத்தினத்தின் மரணம் பெரும் அதிர்ச்சியை எமக்கு மட்டுமல்ல அன்று போராடிக்கொண்டிருந்த எல்லோருக்கும்,அவரை அறிந்தவர்களுக்கும் ஏற்படுத்தியது.எமது எதிரிகள் கொடிகாம்ம் அய்யாவுக்கும் எதிரிகள்.அவரும் கொஞ்சம் நிலை குலைந்தார். இதுவரை கட்டுப்பாட்டோடு இருந்த எமது ஊர் இளைஞர்கள் பயப்படவில்லை.மிக ஆவேசம் கொண்டனர்.உறவுக்கார்ர்கள் அவரது ஈமக்கிரியைகள் சம்பந்தமாக செயற்பட அன்றிரவே குழுக்களாக எதிரிகளின் வீடுகளுக்குள் நுழைந்து தேடினர்.அவரகளின் திட்டம் அங்கே ஒரு பிணம் விழவேண்டும்.சந்தேகத்துக்கு உரிய தில்லைநாதன்,இராசரத்தினம்,சின்னக்குட்டி என பலர் வீடுகளில் இரவுத் தேடுதல் நடாத்தினர்.யாரும் அகப்படவில்லை.ஒரு மாதம் வரை தொடர்ந்தது.கொலையாளிகள் யாரும் வாய்திறக்கவில்லை.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 11)” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 10)

18 மாசி 1968 அன்று இரத்தினம் கொல்லப்பட்டார்

இந்த தினத்தில் சாவகச்சேரி நீதிமன்றத்தில் கொலை வழக்கின் ஆரம்ப விசாரணைக்கு எல்லோரும் போக வேண்டும,.இந்த அன்று இரத்தினம் போகப் புறப்படும்போது எனது அம்மாவின் சிறிய தகப்பன் கனகச்சாமி என்பவர் தன் தங்கையுடன் காலையில் இரத்தினம் வீட்டுக்குச் சென்றார்.இவருக்கு கண் தெரியாது.இவருக்கு இரத்தினத்தின் சாதகபலன்கள் அறிந்தவர்.இரத்தினம் பொதுவாக பெரியவர்களிடத்தில் மரியாதையானவர்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 10)” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் -மந்துவில்( பகுதி 9)

சாதி வெறியர்கள் ஊருக்குள் புகுந்து நடத்த இருந்த திட்டம் தோற்றது.ஆனால் எமது பகுதி இளைஞர்கள் அதே வழியை சிந்திக்க தொடங்கினர்.இதே வேளை இதற்கு தலைமை தாங்கும் எதிரிகளை கொல்லும் முடிவுக்கு வந்தனர்.இது தொடர்பாக இரத்தினத்திடம் கேட்க அவர் மறுத்துவிட்டார்.அப்படி செய்வதாயின் ஒரே நாளில் சத்தமின்றி அவர்களை அழிக்கலாம்.நமது நோக்கம் அதுவல்ல.அவரகளை நம் கண் முன்னே பணிய வைக்க வேண்டும்.

(“தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் -மந்துவில்( பகுதி 9)” தொடர்ந்து வாசிக்க…)

உடைக்கிறது தேங்காயவா? இல்லை மகிந்தவயா?

பாவியள் எப்பிடி இருந்த மனுசனை இப்பிடி ஆக்கிப்போட்டு திரும்பவும் விடுறாங்கள் இல்லை. சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை எண்டுற மாதிரி மகிந்தருக்கு சில வலக்கையள்.அதுகள் மகிந்தருக்கு தேங்காய் உடைச்சு ஆட்சி பிடிச்சு குடுக்கப் போகினமாம். என்னவொரு அறிவு. சும்மா சொல்லப்படாது. மகிந்தரைச் சுத்தி அப்பிடி அறிவான கூட்டம். கூட்டம் எண்டால் இரண்டு மூண்டு பேர்தான். ஆனால் பெரிய கூட்டம் மாதிரி சவுண்டு கேக்கும். ஆரால் கேடு, வாயால் கேடு எண்டுற மாதிரி. ஆட்சியை கவிழ்க்க சிங்கப்பூரிலை தேங்காய் உடைக்கப் போறம் எண்டுறினம். உடையுங்கோ! உடையுங்கோ! ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி எண்டுற கதைதான் மகிந்தருக்கு.

(“உடைக்கிறது தேங்காயவா? இல்லை மகிந்தவயா?” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம் – மந்துவில்(பகுதி 8)

எனது கிராமத்தில் மூன்று பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள்.பெரிய மந்துவில் ,கும்பாவெளி,கலட்டி ஆகிய பகுதிகளில் வாழ்கிறார்கள்.இப் போராட்டத்தில் தனியாக பெரிய மந்துவில் மட்டும் பங்கேற்றது.மற்றைய பகுதிகளில் சிலர் ஆதரவளித்தனர்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம் – மந்துவில்(பகுதி 8)” தொடர்ந்து வாசிக்க…)

பதில் சொல்லுங்கள் ஐங்கரநேசா?!

ஐங்கரநேசன் பொறுப்பு வகிக்கும் விவசாய அமைச்சின் கீழ் கூட்டுறவுத்துறை, விவசாயம், நீர்ப்பாசனம், குடிநீர் விநியோகம்இ சுற்றுச்சூழல் எனப் பல துறைகள் உள்ளடங்குகின்றன. இவை அனைத்தும் மிக முக்கியமானவை. இவற்றை வைத்துக்கொண்டு பெரும்நிதிச் செலவைச் செய்து கொண்டிருக்கிறாரே தவிர பயனாக எந்தச் செயலும் இதுவரை நடந்ததில்லை. சில மாதங்களுக்கு முன் நான் யாழ்ப்பாணம் போயிருந்தபோது அங்கேயிருந்து வெளியாகும் ஒரு பிராந்தியப் பத்திரிகையில் ‘ஐயோ ஐங்கரநேசன்’ என்ற தலைப்பில் சில பத்திகளைப் படித்தேன். வடக்குமாகாண சபையின் விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசனின் தவறுகளையும் குறைபாடுகளையும் விமர்சிக்கும் பத்தி. நெத்தியடியாக பல விசயங்கள் அதிலே எழுதப்பட்டிருந்தன.

(“பதில் சொல்லுங்கள் ஐங்கரநேசா?!” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 7)

நவரத்தினம் கொலை செய்யப்பட்டதை அடுத்து வெள்ளாளரும் கொஞ்சம் சாதிவெறியர்களுக்கு ஆதரவளிக்க தொடங்கினர்.ஆனாலும் அயலில் உள்ளவர்கள் உண்மை நிலை தெரிந்ததால் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர்.ஒவ்வொரு விசயத்திலும் நமது பகுதி கையே முந்துவதால் இரத்தினத்தை எப்படியாவது கொலை செய்ய தீர்மானித்தனர்.இதற்கு இப்போது வெள்ளாளர் ஒத்துழைப்பும் கிடைத்தது.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 7)” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசியல் யாப்பிற்கான இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணியினரின் பரிந்துரைகள்.

இலங்கையில் 2015 இற்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக உருவாகிய புதியஐனாதிபதி மீதும், தேசிய அரசாங்கத்தின் மீதும் சிறுபான்மை இன மக்களின் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் அதிகரித்திருக்கின்றன. இந்நிலையில் விரைவில் உருவாக்கப்பட இருக்கும் புதிய அரசியல் யாப்புக்கான ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டிருப்பதனை இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி வரவேற்கின்றது.

(“புதிய அரசியல் யாப்பிற்கான இலங்கை தலித் சமூகமேம்பாட்டு முன்னணியினரின் பரிந்துரைகள்.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழர்கள் தொடர்ந்தும் பகடைக்காய்களா?

போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்காக நாட்டு மக்களுடன் கலந்தாலோசனை செய்து நல்லிணக்க பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டுள்ள செயற்றிட்டம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நீதி வழங்குவது என்றும் அவற்றை அடையும் வழிகள் குறித்தும் நாட்டு மக்களிடம் பரந்துபட்ட கருத்துக்களை கேட்டறிவதும்தான் இந்த செயற்றிட்டத்தின் நோக்கம் என்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இணையமொன்றை ஆரம்பித்துப் பேசிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்த நடவடிக்கையானது சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்தும் செயலென்றோ வெறுமனே ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்றோ எண்ணவேண்டாம் என்றும் தமது அரசு இதயசுத்தியுடன் இந்த செயற்பட்டில் இறங்கியிருப்பதாக கூறியிருக்கிறார்.

(“தமிழர்கள் தொடர்ந்தும் பகடைக்காய்களா?” தொடர்ந்து வாசிக்க…)