புதிய அரசியலமைப்பைக் குழப்பிவிடுவாரா விக்னேஸ்வரன்?

புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்வதையே, புத்தாண்டில் தாம் நிறைவேற்ற வேண்டிய அதி முக்கிய கடமையாக அரசாங்கம் கருதுவதாகத் தெரிகிறது. உண்மையிலேயே, புதிய அரசியலமைப்பென்று கூறப்பட்டாலும், பிரதானமாக மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பாகவே அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வரப்படப் போகிறது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழித்தல், தேர்தல் முறையில் சீர்த்திருத்தம் கொண்டு வருதல் மற்றும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் ஆகியனவே அந்த மூன்று விடயங்களாகும்.

(“புதிய அரசியலமைப்பைக் குழப்பிவிடுவாரா விக்னேஸ்வரன்?” தொடர்ந்து வாசிக்க…)

கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.! சிவா பசுபதியிடம் விரக்தியில் கூறினார் விக்னேஸ்வரன் !

இணையங்களில் வந்த செய்தியை உறுதிப்படுத்தியது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. முன்நாள் சட்டமா அதிபர் திரு சிவா பசுபதி அவர்களிடம், வட மாகாண சபை முதல்வர் திரு விக்னேஸ்வரன் விடுத்த வேண்டுகோளை அவர் மறுத்ததாகவும், அதனால் முதல்வர் விசனமுற்றதாகவும் வந்த செய்தி பற்றி திரு விக்னேஸ்வரனிடம் வினவியபோது, இது தமிழ் மக்கள் பேரவைக்கு எதிரானவரின் விசமத்தனமான செயல் என்றும், தான் அது பற்றி கருத்து கூறத்தேவையில்லை என கூறியுள்ளார். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதுபோல் அரசியல்வாதிகள் பலதுபட்டால் செய்தியாளர் காட்டில் மழை.

(“கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.! சிவா பசுபதியிடம் விரக்தியில் கூறினார் விக்னேஸ்வரன் !” தொடர்ந்து வாசிக்க…)

01 ஜனவரி 2016 இல் வெளியான கண்ணோட்டம் பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம்)

கூட்டத்தில் கூடி நின்று கூவிப்பிதற்றாமல், செயல் ஆற்றல் களில் நாட்டங்கள் கொள்வீர்.

2008 ஜனவரியில் நிகழ்ந்த மாற்றம் குறைத்து மதிப்பிட முடியாத ஒன்று. ஸ்ரீலங்காவின் ஆட்சியாளர்கள் மீண்டும் வழமையான பாணியல் செல்வதற்கான நிலைமைகள் உள்நாட்டில் பல்லின, பல்மத சமூகங்களின் அபிலாசைக ளாலும் மற்றும் சர்வதேச நிலைமைகளாலும் தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இராணுவ மய சூழ்நிலையைத் தளர்த்துவது, அது எடுத்த காணிகளை மீளவும் மக்களிடம் கையளிப்பது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது, அரசியற் கைதிகளை விடுதலை செய்வது, காணாமற் போனோர், படுகொலை செய்யப்பட்டோர்; தொடர்பில் உண்மைகளைக் கண்டறிந்து நீதியை நிலை நாட்டுவது அனைத்தும் அவசியம்.
இனப் பிரச்சினைக்கு நீடித்து நிலைக்கத்தக்க தீர்வுடன் கூடிய புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் முனைப்புடன் பாராளுமன்றத்தை அரசியல் நிர்ணய சபையாக மாற்றும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

(“01 ஜனவரி 2016 இல் வெளியான கண்ணோட்டம் பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம்)” தொடர்ந்து வாசிக்க…)

மண்ணையும் கடலையும் காற்றையும் மரணிக்கச் செய்து மனிதர்கள் மட்டும் வாழமுடியுமா?

(சுகு-ஸ்ரீதரன்)

2015 உலக- பிரபஞ்ச அளவிலான அதிர்வுகள். sri-t
மேற்கு ஆபிரிக்காவில உயிர் கொல்லி எபோலா,
நேபாளத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த பூகம்பங்கள்.
சென்னை -கடலூரில் பிரளயமான வெள்ளம்.

சமூக இயக்கம் என்னும் போது கிரேக்கத்தை அடுத்து போர்த்துக்கல்லில் ,ஸ்பெயினில் நிகழ்ந்த சாதகமான அரசியல் மாற்றங்கள்.

(“மண்ணையும் கடலையும் காற்றையும் மரணிக்கச் செய்து மனிதர்கள் மட்டும் வாழமுடியுமா?” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் இன்றேல் தமிழ் மக்கள் பேரவையின் இலக்கு என்ன? – TULF

தீவிர அரசியலில் 55 ஆண்டுகளுக்குமேல் ஈடுபட்டிருக்கும் நான் தமிழ் மக்கள் மத்தியில் எனது செயற்பாடுகள் பற்றி எடுத்துக்கூற வேண்டிய அவசியமில்லை என நினைக்கின்றேன். 1960ம் ஆண்டு தொடக்கம் உள்ளுராட்சி மன்றங்கள் பாராளுமன்றம் போன்ற ஸ்தாபனங்கள் மூலம் எனது மனச்சாட்சிக்கு விரோதமின்றி செயற்பட்டு வந்திருக்கின்றேன். தொடர்ந்தும் அவ்வாறே செயற்பட்டு வருகின்றேன். தமிழ் மக்களின் இனப்பிரச்சனை சம்பந்தமாக விசேடமாக இன்று மிக அவதானமாகவும் புரிந்துணர்வோடும் செயற்பட வேண்டிய காலம் இதுவென நினைக்கின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு மூலம் பெரும் சாதனைகளை புரியலாமென கருதி நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினோம். அதன் இயக்கத்துக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் பற்றி விபரிக்க தகுந்தநேரம் இதுவல்ல. இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தெரியாமலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஓரங்கட்டப்பட்டு எதுவித பொறுப்பும் வழங்கப்படாது ஒதுக்கப்பட்டிருந்தேன். அதன் பின்னர் இன்றுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகள் சில புறந்தள்ளப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏகபிரதிநிதிகளாக காலத்துக்காலம் ஒரு கட்சி ஏனையவற்றை புறந்தள்ளி செயற்படுகின்றது. இதன் விளைவாக இன்று பெயரளவில் மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பு இயங்குகின்றதேயொழிய சில சந்தர்ப்பத்தில் ஒரு கட்சி மட்டும் தனியாகவும், வேறு சந்தர்ப்பத்தில் இரு கட்சி தலைவர்கள் இணைந்தும், பெருமளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அணியின் தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டும் வந்துள்ளமையால், தமிழ் தேசிய கூட்டமைப்பு உண்டா இல்லையா? என்ற நிலைமைதான் இன்று ஏற்பட்டுள்ளது. இக்கட்டத்தில்தான் சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் இணைத்து ஒரு புதிய அணியை உருவாக்க உத்தேசித்து நல்லதொரு தலைமையை தேட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டிருந்தேன். சிலர் திட்டமிட்டு இம்முயற்சியை தோல்வியடைய செய்துள்ளனர். ஆனால் இன்றைய அவசர சூழ்நிலையை உணர்ந்து வட மாகாண முதலமைச்சரின் தலைமையில் ஒரு புதிய அணியை உருவாக்கும் முயற்சியின் முன்னோடியாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையைகூட விட்டுக்கொடுக்க தயாராக இருந்தேன்.

(“அரசியல் இன்றேல் தமிழ் மக்கள் பேரவையின் இலக்கு என்ன? – TULF” தொடர்ந்து வாசிக்க…)

எண்ணெய் தேடும் பேராசையினால் புவிக்கு வரப் போகின்ற பேராபத்து!

வளைகுடா நாடுகளே எண்ணெய் அகழ்விற்கு மிகவும் உகந்தவையாகத் திகழுகின்றன. இலங்கையின் கடல் எல்லைக்குள் உள்ள மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வளம் தென்பட்டதாக அறிந்த நாம் பெரும் உவகை அடைந்தோம். முன்னர் பதவிக்கு வந்த அரசுகள் எண்ணெய் அகழ்வுக்கென்று பூர்வாங்க நடவடிக்கையில் ஈடுபட்டதையும் நாமறிவோம். சில வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுடன் உடன்படிக்கைகள் கூட கைச்சாத்திடப்பட்டன.

(“எண்ணெய் தேடும் பேராசையினால் புவிக்கு வரப் போகின்ற பேராபத்து!” தொடர்ந்து வாசிக்க…)

சென்னையிலிருந்து வெளியேற்றப்படும் மெட்ராஸ்காரர்கள்.

(தி.ஸ்டாலின்)

சென்னையை நிலைக்குலையவைத்த வெள்ளப்பெருக்குக்குப் பிறகு அதிமுக அரசால் எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கையாக இருப்பது ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி. சென்னையின் நீர் தளங்களும், நீர்வழித்தடங்களும் ஆக்கிரமிப்புக்குட்பட்டதாலேயே பெரும்பாதிப்பு வந்தது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததும், அறிவுப்பு எதுவுமின்றி செம்பரம்பாக்கம் ஏரியின் நீரை திறந்துவிட்டதுவும் கூட இந்தப் பேரிடருக்கு முக்கியக்காரணங்களாக குற்றச்சாட்டு உண்டு.ஆனால் அதற்கு பொறுப்பேற்க தயாரில்லாத மாநில அரசு, ஆக்கிரமிப்பை முன்னிலைப்படுத்துகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும், தவிர்க்கப்படவேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை. எந்தவகையான ஆக்கிரமிப்பும் சமூகத்திற்கு எதிரானதுதான். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் என அடையாளப்படுத்தப்படுபவர்கள் யாவர்? அவர்களை அடையாளப்படுத்துபவர்கள் யாவர்?

(“சென்னையிலிருந்து வெளியேற்றப்படும் மெட்ராஸ்காரர்கள்.” தொடர்ந்து வாசிக்க…)

பல தடம் பதித்த தமிழ் தேசியம்

(வல்வை ந.நகுலசிகாமணி)

(இந்தத் தமிழரசுக்கட்சியின் வழித்தோன்றல்கள்தான் புலிகளும் அவர்களால் உருவாக்கபபட் தமிழ் தேசியக் கூட்டமைப்பும். முள்ளிவாய்கால் அவலங்களுக்கு இவர்கள் யாபேரது பங்களிப்பு சமனாக இருந்ததே உண்மை – ஆர்)

1947ல் நடைபெற்ற தேர்தலில் தமிழரின் உரிமைக்குரலாக இனங்காட்டிய தமிழ்க் காங்கிரஸ் பின்னர் சலுகை அரசியலில் நாட்டம் காட்டியவேளையில் தமிழ்த் தேசியத்தின் காவலனாக அதன் கேடயமாக தந்தை செல்வா தலைமையில் எழுச்சிபெற்ற தமிழினத்தின் விடிவெள்ளியாக 1949ல் ஆரம்பித்ததுதான் இந்தப்பேரியக்கம். கல்லடியும் சொல்லடியும் பொல்லடியும் பெற்று செங்குருதி சிந்தி, சிறை நிரப்பி வடகிழக்கு என்ற பேதம்களைந்து தமிழர்களை ஒருங்கிணைத்த பேரியக்கம் தமிழரசுக்கட்சி.

(“பல தடம் பதித்த தமிழ் தேசியம்” தொடர்ந்து வாசிக்க…)

கலைக்கப்படுமா வடக்கு மாகாணசபை?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தோன்றியிருக்கும் முரண்பாடுகளையடுத்து, வடக்கு மாகாணசபையைக் கலைக்குமாறு பரிந்துரை செய்வது குறித்து, கொழும்பில் ஆலோசனை நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. வடக்கு மாகாண முதலமைச்சரின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியாததால், அதிருப்தியடைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலரே, இத்தகைய ஆலோசனைகளில் ஈடுபட்டதாகவும் செய்தி ஒன்றில் கூறப்பட்டிருந்தது.

(“கலைக்கப்படுமா வடக்கு மாகாணசபை?” தொடர்ந்து வாசிக்க…)

பலாலியில் சர்வதேச விமான நிலையமாக மாற்ற அரசாங்க இணங்கியுள்ளது – மாவை சேனாதிராசா ?

விக்கியாரின் பேரவை, புதுவருட வாழ்த்துகள் இவைகளுக்கு போட்டியாக நேற்று இன்னும் ஒரு விடையமும் இங்கே உலாவிக்கொண்டிருந்தது. யாழ்ப்பாணம் பலாலியில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற அரசாங்க இணங்கியுள்ளதாக மாவை சேனாதிராசா கூறியதாகவே அந்த செய்தி உலவியது. இந்த செய்தி உண்மையா என்பதைவிட இந்த விமானநிலையத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் எனறு சிலர் பெயர் கண்டுபிடிக்கும் முயறசிகளிலும் இறங்கிவிட்டனர்.
முதலில் விமான நிலையம் அமையட்டும் அதன் பின்பு பெயரை பற்றி சிந்திப்போம்.

(“பலாலியில் சர்வதேச விமான நிலையமாக மாற்ற அரசாங்க இணங்கியுள்ளது – மாவை சேனாதிராசா ?” தொடர்ந்து வாசிக்க…)