கவிதை: பேதுருவுக்கு எழுதிய புதிய திருமுகம் அல்லது சர்க்கரைக் கிண்ண முத்தம்

(பதிவுகள்.காம்)

  • செல்லத்துரை சுதர்சன் –
  • நல்ல கவிதை. கியூபாவின் மானுட நேயத்தைச் சரியான நேரத்திலுணர்ந்து எழுதிய கவிதை. உலகின் எந்தப்பகுதியிலென்றாலும் இதுபோன்ற பேரழிவுகளின்போது கியூபா தன் மருத்துவர்களையு, மருந்துகளையும் அனுப்பி உதவுவது வழக்கம். ஆனால் இம்முறை மேற்கு நாடுகளிலும் இத்தகைய அழிவுகள் ஏற்படுகையில், உலகமே பேரழிவை எதிர்நோக்கிக் காத்திருக்கையில் இவ்விதமான மானுட நேயச் செயற்பாடுகள், உதவிகள் போற்றப்பட வேண்டியவை. இவ்வழிவிலிருந்து மீண்டபின்னர் மேற்கும் கியூபாவின் பரந்த உள்ளத்தை உணர்ந்து, தடைகளை நீக்குமென எதிர்பார்ப்போம். –

இன்று அசாமில் நாளை எங்கோ….?

(Rathan Chandrasekar)

யூதர்களாயினும்,
பாலஸ்தீனியர்களாயினும்,
ரோஹிங்கியா முஸ்லிம்களாயினும்,
இலங்கைத்தமிழராயினும்,
இன்று –
அசாமில் குலைநடுங்க அச்சுறுத்தப்படும்
புலம்பெயர்ந்த வங்க மக்களாயினும்….
இன்றும் கொத்தடிமைகளாக விற்கப்படும்
கறுப்பினமக்கள் – அவராயினும் –
எவராயினும் ஆகுக!

வெருகல் படுகொலையின் வெஞ்சினம்

பேரிகை ஆற்றின் கதறல்.
கதிரவெளி ஒரு குருசேத்திரமாக
மகாவலி உறைந்து போனதொரு கணத்தில்
கிழக்கு சூரியனும் உதிக்க மறுத்தான்
வெலிக்கடையையும் வென்றுவிட்ட இறுமாப்பு
வடக்கேயிருந்து வந்த வன்னி சூறாவளிக்கு
அன்றுதான் 1972 ஆண்டுகள் கழித்து
இரண்டாவது பெரியவெள்ளியை
எழுதிச் சென்றது இலங்கைத்தீவின் வரலாறு.
வடக்கு வாரியடித்த புழுதியில்
வாகரைக்காடுகள் அதிர்ந்தது மட்டுமல்ல
கிழக்கு மண்ணும் சிவந்தது.
வெருகலாற்று படுக்கை வெந்தணலானபோதும்
வங்கக்கடல் வற்றிவிடப்போவதில்லையே
அதை நாம் அறிவோம் என்றும்
காற்று திருப்பி அடிக்கும் காலம் வரும் என்றும்
கணக்குத் தீர்த்துக்கொள்ள காத்திருப்போம் என்றும்
காடுகளுக்கு சொல்லிப்பறந்தது
கதிரவெளி கடலலைகளுக்குள் ஒர் ஆள்காட்டி குருவி.

பிரண்டை தண்டு

எம்மிடம் வேலைபார்க்கும் இருவருக்கு முழங்கால் வலி அதிகமாக இருந்தன ஏதாவது பண்ணுங்க என்றார்கள்……

கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவாரமாக வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இல்லாமல் இருக்கிறது என்றார்கள் எங்கம்மா ஏர் உழுவும் காலங்களில் கால் வலியை போக்க. பிரண்டையை சிறிது நேரம் மோரில் ஊற வைத்து பிறகு அதில்,மல்லிதலை,தூதுவளை, கறிவேப்பிலை சேர்த்து துவையல் செய்து தந்த ஞாபகம் அதையே இங்கு செய்தோம் …… (“பிரண்டை தண்டு” தொடர்ந்து வாசிக்க…)

நான்கு பேரும் நம்ம தனியார் ஆஸ்பத்திரியும்!

டாக்டர்: என்ன வருத்தம்?

நோயாளி 1: தலைவலி டாக்டர்.
டாக்டர்: என்ன தொழில் செய்றீங்க?
நோயாளி 1 : ஒரு தொழிலும் இல்லீங்க. ரொம்பக் கஷ்டமான வாழ்க்கை.
டாக்டர்: சரி…ஒரு நாளைக்கு மூணு வேளை ஒவ்வொரு பனடோல் போடுங்க…சரியாயிடும்.

(“நான்கு பேரும் நம்ம தனியார் ஆஸ்பத்திரியும்!” தொடர்ந்து வாசிக்க…)

இன்று ராஜிவ் நினைவு நாள்.

‘ஏ தாழ்ந்த தமிழினமே’ என்று
ஏய்க்கிறவனுக்கு இரையானதைத் தவிர
பிழையேதுமில்லை தமிழனிடம்.

(“இன்று ராஜிவ் நினைவு நாள்.” தொடர்ந்து வாசிக்க…)