ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஓரளவுக்காவது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார் என்பதையும் பொதுஜன பெரமுன இன்னமும் திருந்தவில்லை என்பதையுமே, கட்டானையில் உள்ள ஓமான் நாட்டவருக்குச் சொந்தமான ஆடை உற்பத்தித் தொழிற்சாலை மீதான தாக்குதல் எடுத்துக் காட்டுகிறது.
தமிழ் இலக்கணத்தின் அடிப்படை நூல் எது ? தொல்காப்பியம். தொல்காப்பியம் தமிழிலுள்ள எழுத்துகள் எத்தனை எனக் குறிப்பிடுகின்றது? ‘ எழுத்தெனப்படுவ அகர முதல் னகர இறுவாய் முப்பதென்ப ‘ : தொல்காப்பியம் மேலே தொல்காப்பியமானது ‘எழுத்து’ எனச் சிறப்பித்துச் சொல்லப்படுவது ‘அ’ முதல் ‘ன்’ வரையிலான முப்பது எழுத்துகளே எனச் சொல்லுகின்றது. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 மொத்தம் 30. ஃ என்ற எழுத்தின் ஒலியினைக் கூட ‘அக்’ எனச் சொல்லி விடமுடியும். இவ்வாறே உயிர் மெய் எழுத்துகள் 216 இனையும் சொல்லலாம்; காட்டாக, ‘க’ என்பதனை “க் + அ ” எனச் சொல்லலாம். ‘எழுத்து’ என்ற சொல்லின் வேர்ச்சொல் ‘எழு’ என்பதாகும், அதாவது எழுப்பப்படும் ஒலியே எழுத்து ஆயிற்று ( பேச்சு மொழியிலிருந்தே எழுத்து மொழி). தமிழின் அடிப்படை ஒலி வடிவங்கள் முப்பதே. இவற்றினைச் சார்ந்து வருபவையே ஏனையவை. எனவே தமிழிலுள்ள எழுத்துகள் 30 மட்டுமே! அவற்றின் வடிவங்கள் வேண்டுமானால் 247 எனலாம். ஆங்கிலத்தில் கூட பெரிய எழுத்துகள், சிறிய எழுத்துகள், தொடர் எழுத்துகள் என 78 வடிவங்களுள்ளன, ஆனால் எழுத்துகள் எனும் போது 26 ஒலி வடிவங்களை மட்டும் தானே கூறுகின்றோம். அது போலவே தமிழிலும் முப்பது எழுத்துகளே! 247 எழுத்துகள் என அச்சுறுத்த வேண்டாம்! 🙏தமிழில் முப்பது எழுத்துகளே 🙏
புதிய வரி திருத்தத்துக்கு எதிராக பரவலாக எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அறிமுகப்படுத்திய வரியை மீளப்பெறவோ அல்லது குறைக்கவோ அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நமது நாட்டில் பணம்படைத்தவர்கள், ஏழைகள் என்ற இரண்டு பிரிவினர் மட்டுமே உள்ளனர். மத்திய தர வர்க்கம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது.
Negombo Recycling Club (NRC) என்ற பெயரில் ஒரு விரிவான பொருள் மீட்பு வசதி (Material Recovery Facility – MRF) 2023 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி சர்வதேச மீள்சுழற்சி தினத்துடன் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்கவின் பங்கேற்புடன் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. MRF ஆனது, Coca-Cola இன் பரோபகாரப் பிரிவான The Coca-Cola Foundation (TCCF) மற்றும் இலங்கையின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனமான Eco Spindles ஆகியவற்றால் நிதியளிக்கப்பட்டது.
நம்மிடையே உள்ள பாராம்பரிய வேளாண்மை முறைமைகளில் நவீன நுட்பங்களை புகுத்தி, இலங்கையில் ஒரு விவசாயப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான நவீன விவசாயக் கொள்கைகளை உருவாக்கும் சாத்தியங்கள் குறித்து ஆராய்ச்சி முடிவுகளுடன் தர்க்கித்து, மக்களுக்கும், விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கும் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது ஆராய்ச்சித் துறை மாணவர்களுக்கு உசாத்துணை ஆதாரமாகவும் ‘இலங்கையின் வேளாண்முறைமையில் நவீன நுட்பங்கள்’ என்ற இந்தக்கட்டுரைத்தொடர் அமைகிறது. இலங்கையின் பாரம்பரிய வேளாண்மை முறைமையில் உள்ள சாதக – பாதகங்கள், அதிலுள்ள போதாமைகளை நிவர்த்திக்கும் வகையில் நவீன நுட்பங்களைப் புகுத்துதல், நவீன நுட்பங்களால் உண்டாகக்கூடிய விளைவுகள், இலங்கையில் பசுமைப்புரட்சிக்காக முன்வைக்கப்படவேண்டிய விவசாயக் கொள்கைகள் என்பன பற்றி விரிவாகவும், ஆய்வுத்தளத்திலும் இந்தக்கட்டுரைத்தொடர் விபரிக்கின்றது. அறிமுகம்
“மனிதர்களின் வாழ்வுரிமையை யானைகள் பறிக்கின்றன. ஆனால், யானைகளைத் துன்புறுத்துவதும் கொல்வதும் தண்டனைக்கு உரிய குற்றங்களாகும். வெடிகள் போன்றவற்றுக்கு யானைகள் பழக்கப்பட்டு இருப்பதால் இவற்றை விரட்ட வித்தியாசமாக சிந்தித்து செயற்பட வேண்டி உள்ளது. பனை ஓலைகளில் நெருப்பை கொளுத்தி எறிந்தால், யானைகள் மிரண்டு ஓடி விடும்” என்று தனது அனுபவத்தில் கண்டு கொண்டதை விவரித்தார் அம்பாறை, காரைதீவைச் சேர்ந்த ஓய்வு நிலை பிரதி அதிபரும் விவசாய ஆர்வலருமான எஸ். தில்லையம்பலம்.
கொஸ்ரா றீக்கா – 2.5 மில்லியன் தொன் என்ற கணக்கில் விளைச்சலாகிறது. இந்தியாவில் 800’000 ஹெக்ரர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. மகாராஸ்ரா, தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், ஆந்திரப் பிரதேஷ், மற்றும் அசாம் பிரதேசங்களில் இவை பெருமளவில் பயிரிடப்படுகிறது. இருந்தபோதும் இந் நாடுகளில் பலவும் உள்நாட்டுச் சந்தைகளுக்கான தேவைகளையே மையமாகக் கொண்டிருக்கின்றன. உலகின் முன்னணி ஏற்றுமதி நாடுகளாக எக்குவடோர் 24 சதவீதமும், கொஸ்ரா றீக்கா 12.9 சதவீதமும், பிலிப்பைன்ஸ் 7.8 சதவீதமும், கொலம்பியா 7 சதவீதமும், குவாத்தமாலா 6.5 சதவீதமும் என்ற அடிப்படையில் இருக்கின்றன. 5 பெரும் கம்பனிகள் Dole, Del Monte, Chiquita, Fyffes and Noboa உலக சந்தையின் 80 வீதமான வாழைப்பழ ஏற்றுமதியை கட்டுப்படுத்துகின்றன. வாழைப்பழத்தின் அரசியலை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
மிகப்பழங்காலத்தில் உலகின் பல பாகங்களிலும் நரம்புக்கருவி குடும்பத்தைச் சேர்ந்த வாத்தியங்களில் Harp, Lyre, lute போன்ற வாத்தியக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இவை இந்தியாவில் கின்னரம் என்றும் யாழ் என்றும் வழங்கப்பட்டது.