கடல் அட்டை வளர்ப்பும், தீவக கடல்களின் பொருத்தப்பாடும் – அவைகளின் அரசியலையும், சூழலியலையும் முன்வைத்து – 03

ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்) (சிரேஸ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்)

இலங்கை மீன்பிடிக் கைத்தொழிலும், வளங்களும்:

இந்தியாவிற்கு தென்கிழக்கில் இந்திய உப கண்டத்தில் அமைந்திருக்கும் இலங்கையானது பல கரையோர அம்சங்களைக் கொண்ட 1770 கிலோமீற்றர் கரையோரத்தையும், 200 கடல் மைல் பிரத்தியேக பொருளாதார வலயத்தையும் (Economic Exclusive Zones), 517000 சதுர கிலோமீற்றருக்கு மேற்பட்ட ஆள்புல உரிமையுள்ள (Soveriegn rights) சமுத்திர பிரதேசத்தையும் கொண்டு காணப்படுகின்றது. இலங்கையின் தரைப் பரப்பளவைவிட 8 மடங்கு கடல் பரப்பு அதிகமாகும். இவைகளில் கண்டமேடையும், ஆழ்கடலும் அடங்குகின்றன. இங்கு பதினொரு சதவீதமாக காணப்படும் கண்டமேடைகளில்; 250000 தொன் அடித்தள, இடைத்தள, மேற்தளவாழி மீன்களும், ஆழ்கடல் மீனினங்களும் (இவைகள் இடம்பெயரக்கூடியன) பிடிபடுகின்றன. இருந்தும் மீன்பிடியானது சராசரியாக 25 கிலோமீற்றருக்குள்ளும், ஆகக்கூடியது 40 கிலோமீற்றருக்குள்ளும், மொத்தமாக 25000 தொடக்கம் 30000 சதுர கிலோமீற்றருக்குள்ளேயே நடைபெறுகின்றது.

கடல் அட்டை வளர்ப்பும், தீவக கடல்களின் பொருத்தப்பாடும்:– அவைகளின் அரசியலையும், சூழலியலையும் முன்வைத்து – 02

ஏ.எம். றியாஸ் அகமட் (அம்ரிதா ஏயெம்) (சிரேஸ்ட விரிவுரையாளர், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்)

உள்ளுர் அறிவு:

பெனடிக்ற் சின்னமணியை இருத்தி உரையாடுவதற்கு தயாரானேன். றெஜினோல்டும், சசியும் அருகே இருந்தார்கள். கடுமையா களைச்சிப் போயிருப்பயள். உடுப்ப மாத்திக்கி, றெஸ்ட் எடுத்துற்றுக் கதைப்பம் என்றார். நான் களைக்கல்ல. கதைப்பம் என்றேன். என்ன குடிப்பம் என்றார். பிளேன்ரி என்றேன். இஞ்சி போட்டதா, வேர்க்கொம்பு போட்டதா?. வேர்க்கொம்பு என்றேன். சாப்பாட்டுக்கும், நான் தங்குதவற்குமான அறைக்கும் மிகுந்த கவனமெடுக்க ஓடித்திருந்தார்.

இந்த பதிவை இரண்டு முறையாவது படிங்க

உலகில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்காலம் 70 ஆண்டுகள்.

குழந்தை வயது முதல், பருவ வயது வரை:

முதல் 20 வருடங்கள் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் விளையாட்டாக ஓடிவிடும்.

கிழக்கு மாகாணம் வரை படம்

(Thulanchanan Viveganandarajah)

கி.பி 1695இல் வரையப்பட்ட இலங்கையின் ஒரு ஒல்லாந்து வரைபடம், இணையத்தில் காணக் கிடைத்தது. முந்நூறு ஆண்டுகள் கடந்தும் கிழக்கிலங்கைக் கிராமங்கள் பெரும்பாலும் அப்படியே பெயர் மாறாமல் இருக்கின்றன என்பதை வெள்ளையர் சொற்களினூடே கண்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! நீங்களும் கண்டு களியுங்கள்! 🙂

கதிர்காமம் தொடர்பாக 1977 இல் தாக்கல் செய்யப்பட்டு இருந்த வழக்கு

(Tharshanth Rajenthram)

கதிர்காமக்கந்தன் கோயில் சம்பந்தமான பின்வரும் விண்ணப்பத்தை மனுதார் (செ. சுந்தரலிங்கம் உயர் நீதி மன்றத்தில் 1977-ம் ஆண்டு தாக்கல் செய்துள்ளார்:- “பிரசித்த நொத்தாரிசு ஜே. கதிரமான் (து. ஊயனயசயஅயn) 1898-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் திகதி எழுதி கைச்சாத்திட்ட 2317 இலக்க உறுதியின் சட்டதிட்ட நிபந்தனைகளின் பிரகாரம் மேலே சொல்லப்பட்ட கதிர்காமக் கோயில்களின் சில கட்டடங்கள், காணி பூமிகள் சட்டரீதியாக நியமிக்கப்பட்ட தர்மகர்த்தாவும், அவற்றை நிர்வகித்து நடத்த உரிமை பெற்றவருமான தத்தாரமகிரி சுவாமியை வெளியேற்றி விட்ட மேற்குறிப்பிட்ட கட்டடங்களையும் நிலபுலன்களையும் உரிமைகொண்டாடி தனக்கே சொந்தமாக்கி கொள்ள முதல் பிரதிவாதி (பிக்க சித்தார்த்த தேரோ) முயற்சித்து வருகிறார். மூல உறுதியின் உண்மையான பிரதி P (பி) இலக்கமிட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

நிர்வாணமான சட்டம்

ஜனநாயக நாடொன்றில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலையுமாக இருக்குமாயின் அங்குதான், போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கும். அப்போது  சட்டம், ஒழுங்கைப்   பேணுவதற்காக முப்படையினரையும் களத்தில் இறக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுகின்றது.

வட்டை, போட்டா, கணத்தை, மறுகா, கணகாட்டு, பொருபத்தல் (மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்கள்)

(செங்கதிரோன்) 

வட்டை, போட்டா, கணத்தை, மறுகா, கணகாட்டு, பொருபத்தல் 

சென்றதடவை மட்டக்களப்பு மாநிலத்துக்கு மட்டுமே உரித்தான மண்வாசனைச் சொல் ‘கா’ பற்றிப் பேசினோம். 

இத்தடவை வேறு பல விசேட சொற்களை எடுத்து நோக்குவோம். 

பசுமையான பூமி! அது பேசுவதை கேட்போம்!” அதை பாதுகாப்போம்!

(Rathinam Ramasamy)

“1. எனது பெயர் – பூமி (மனிதர்கள் வைத்தது)

2. எனது பிறப்பு – 454 கோடி ஆண்டுகளுக்கு முன்பு

3. எனது உடன் பிறப்புகள் – 8 பேர் (இது வரையில் மனிதர்கள் கண்டுபிடித்து எனக்கு சொன்னது> (புதன்,வெள்ளி,செவ்வாய்,வியாழன்,சனி,நெப்டியூன்,ப்ளூட்டோ)

மரம்

மதுரையின் மிகப் பிரபலமான மரக்கடை குடும்பத்தாரின் மகன் எனது பள்ளிக் காலத்து நண்பன். அவரை பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் சந்தித்தேன். பள்ளியில் படிக்கும் போதே அவர் எங்களை விட இரண்டு வயது பெரியவர். எல்லோரும் அவரை பெருசு என்றே அழைப்போம். படிப்பு சரியாக வராது. கடுமையாக மனப்பாடம் செய்தாலும் பரிட்சையில் கோட்டை விட்டு விடுவார்.