தோழர் சுகு சிறிதரன் அவர்கள் ஐரோப்பிய விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்பாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் அவர்கள் ஐரோப்பிய விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். அவர் மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக……. என்னும் நூலினை இலங்கையில் வெளியிட்டிருந்தார்.அதன் தொடர்ச்சியாக Swiss, Germany, France போன்ற நாடுகளில் அவருடைய புத்தக வெளியீடு நடைபெறவுள்ளது.அதுபற்றிய விபரங்கள் பின்பு விபரமாக வெளியிடப்படும் .அவர் தற்சமயம் Germany தங்கியுள்ளார். அவருடன் தொடர்பு கொள்ள விரும்புவோர் 004917675054051 என்னும் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும்.

தோழர்கள்.

புலிகளுக்குள் ஜனநாயம் முளையில் கிள்ளப்பட்டது

1985 இல் புலிகளின் 3வது பயிற்சி முகாமில் புலிகளின் ஜனநாயக விரோத போக்குகளிற்கு எதிராகவும் சுத்த ராணுவாத கட்டமைப்புக்கு எதிராகவும் கேள்வி கேட்ட போராளி கொல்லப்பட்டமைக்கு எதிராகவும் தன் சுய நலத்திற்க்காக கல்யாணம் செய்யக் கூடாது என்ற அமைப்பு விதியினை மாற்றி பிரபாகரன் திருமணம் செய்து கொண்டமைக்கு எதிராகவும் பலர் அதிருப்தி அடைந்து வெளியேறினார்கள். அதில் தயாநிதி (இயக்கப் பெயர் ரு+பன்) – கப்புதூ – நெல்லியடி தன்னுடன் வெளியேறிய பலருடன் சேர்ந்து மீண்டும் செயற்படும் நோக்கில் செயற்பாடுகளை மேற்க் கொண்டார். இவர் வேதாரணியம் சென்ற வேளை பொட்டனால் ரகசியமாக கடத்தப்பட்டு சித்திரவதைகளின் பின்னர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இலங்கைப் பாடசாலைகளின் தரம்….?

பாடசாலைகள் உண்மையில் என்ன செய்கின்றன. அதன் கல்வித்திணைக்களங்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு வடக்கு – கிழக்கில் தூங்கப் போகின்றன

தேவராசா (தோழர் சீலன்) கண்ணீர் அஞ்சலி

தேவராசா (தோழர் சீலன்),51 வயது.
22.03.2018 அன்று அதிகாலை 12.15 மணியளவில் வயிற்றில் ஏற்பட்ட கட்டியை அகற்ற சத்திரசிகிச்சை செய்தபோது அது பலனளிக்காமல் இயற்கை எய்திவிட்டார். அன்னார் மட்டக்களப்பு மகிழுரைச்சேர்ந்தவர். நாம் இடம் பெயரும் நிலை ஏற்பட்டபோது ஒரிசா, திருச்சி கொட்டப்பட்டு, புழல் போன்ற இடங்களில் இருந்தவர். பின்னர் மலேசியா சென்றார். கடந்த மூன்று மாதமாக அவரது சொந்த ஊரில் இருந்தபோதே இந்நிலை ஏற்பட்டது. சிறந்த பொது நோக்காளன். தோழர் களுடன் தோழைமையுடன் பழகும் குணமுடையவர்.
அவரது இறுதிக்கிரியை மகிழூரில் நடைபெற்றது.
தோழருக்கு SDPT யினரின் கண்ணீர் அஞ்சலி.

தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை

தமிழ் நாடு ராமநாதபுரம் மாவட்ட மேல் நீதிமன்றம் தீர்ப்பு

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரில் இருவருக்கு தலா 10 ஆண்டு தண்டனை விதித்து தமிழ்நாடு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு ராமநாதபுரத்திலிருந்து மண்டபம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி பகுதியில் தமிழக காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலான கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர். அந்தக்காரில் இலங்கை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த கிருஷ்ண குமார் என்ற காந்தன் (40), உச்சிப்புளியை சேர்ந்த ராஜேந்திரன்(40), கார் டிரைவர் சசிக்குமார்(41) இருந்துள்ளனர். இவர்கள் வந்தக் காரை சோதனையிட்டபோது அவர்களிடம் இருந்த 4 ஜி.பி.எஸ்.கருவிகள், 75 சயனைட் குப்பிகள், 600 கிராம் சயனைட் விஷம், ரொக்கம் ரூ.65 ஆயிரம் ஆகியனவற்றை பறிமுதல் செய்தனர்.

(“தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை” தொடர்ந்து வாசிக்க…)

Funeral arrangements of Late Renuka Amarasinghe

It is with deep sadness that we announce the funeral arrangements of Late Renuka Amarasinghe whose death together with that of many others threw entire city of Toronto into deep sorrow about a week ago. Late Renuka was loved and respected by all who knew her especially the Toronto Mahavihara members.
The funeral arrangements are as follows:
Viewing: Sunday 6th of May, 5.00-9.00PM

Monday, 7th of May, 8.00-11.00AM

Religious Service (Pansakula): Sunday, 6th of May, 7.00PM

Location: Chapel Ridge Funeral Home & Cremation Centre (Markham)

8911 Woodbine Avenue

Markham, ON L3R 5G1

Single mother Renuka Amarasingha killed in Toronto van attack

மரண அறிவித்தல்

தோழர் சாந்தனின் (க. தம்பையா — லண்டன்) அன்புத் தாயார் கதிரவேலு நாகலட்சுமி, நாவலர் வீதி, கடைச்சாமி ஒழுங்கை, யாழ்ப்பாணம். இன்று (27. 04 . 2018) காலை 9 மணியளவில் காலமாகிவிட்டார். அவருடைய இறுதிக்கிரியைகள் 30.04.2018 திங்கள் கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் .

தோழர்கள்

பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்

பிரபல பின்னணிப் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. ‘டவுன் பஸ்’ படத்தில் கலக்கிய இசைக்குயில் ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்ன விட்டுப்பிரிந்தே போன கணவன் வீடு திரும்பலே’ என்ற பாடல் 1950 களில் மிகப்பிரபலம். ‘டவுன் பஸ்; என்ற படத்தில் அஞ்சலிதேவிக்காக பின்னணிக் குரல் கொடுத்தவர் எம்.எஸ்.ராஜேஸ்வரி. அதே படத்தில் பொன்னான வாழ்வே என்ற பாடலும் எல்லோராலும் உச்சரிக்கப்பட்ட பாடல்.

(“பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்” தொடர்ந்து வாசிக்க…)

3 ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளது

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளதாகவும், அந்த வழக்குகளின் விசாரணை அறிக்கைகள் தொடர்பில் ஆராய்வதுக்காக, குறித்த வழக்குகள் எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்தார்.

(“3 ஆட்கொணர்வு மனுக்களை முல்லைத்தீவு நீதிமன்றம் நிராகரித்துள்ளது” தொடர்ந்து வாசிக்க…)

மீண்டும் சாதனை படைத்தார் அனித்தா

தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் ஜெகதீஸ்வரன் அனித்தா மீண்டும் புதிய சாதனையை படைத்துள்ளார். கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகிய தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில், 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலிலேயே யாழ். மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பில் கலந்துகொண்ட ஜெகதீஸ்வரன் அனித்தா 3.55 மீற்றர் உயரத்தைத் தாண்டி தங்கப் பதக்கத்தைப் பெற்றதோடு புதிய சாதனையையும் படைத்துள்ளார். தான் 3.48 மீற்றர் உயரத்தை முன்னர் தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிரிவில் தாண்டி சாதனை படைத்தையே அனித்தா தற்போது முறியடித்துள்ளார்.