சம்பந்தன் பகிடி விடுகிறார். அரசுக்கு கடும் எச்சரிக்கை

எங்களுடைய மக்களின் காணிகளை யாருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கடந்த 30 ஆண்டுகளாக தமது சொந்த காணிகளில் குடியேற முடியாது தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

(“சம்பந்தன் பகிடி விடுகிறார். அரசுக்கு கடும் எச்சரிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் ஜெயந்தன் அணியைத் தேடி வேட்டை

தமிழீழ விடுதலைப் புலிகளின், ஜெயந்தன் படையணியைச் சேர்ந்த உறுப்பினர்களை தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, பாதுகாப்புத் தரப்புத் தகவல் தெரிவிக்கின்றது. அந்தப் படையணியிலிருந்து தப்பிச்சென்று, தென்னிந்தியாவில் தலைமறைவாகி வாழ்ந்தவர்களில் சிலர் நாட்டுக்குள் மீண்டும் வந்துள்ளதாக தகவல் கிடைத்ததையடுத்தே, இந்தத் தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல் மேலும் தெரிவிக்கின்றது. ஜெயந்தன் படையணியைச் சேர்ந்தவர்களில் சிலர், மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலேயே, நடமாடுவதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் அந்தத்தரப்பு தெரிவித்துள்ளது. தங்களுடைய பொலிஸ் பிரிவில், சந்தேகத்துக்கு இடமானமுறையில் நடமாடுபவர்கள் மற்றும் புதிய நபர்கள் தென்பட்டால், அவ்வாறானவர்கள் தொடர்பில், அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குமாறும், பாதுகாப்பு தரப்பினர், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலண்டனில் அமிலம் விசிறப்பட்டுத் தாக்குதல்! 12 பேர் காயம்…600 பேர் வெளியேற்றம்!

(எஸ். ஹமீத்)

General view of the Mangle nightclub in Dalston, east London on Monday April 17, 2017. London police are investigating an acid attack at a London club that led to a mass evacuation with 12 people injured. Police said Monday April 17, 2017 that 12 people were treated at hospitals for burns. None of the injuries were said to be life-threatening. (Jack Hard/PA via AP)

கிழக்கு இலண்டனிலுள்ள ஒரு களியாட்ட விடுதியில் இரு கோஷ்டிகளுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் சக்தி வாய்ந்த அமிலம் விசிறப்பட்டதினால் சுமார் 12 பேர்வரை படுகாயங்களுக்குள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(“இலண்டனில் அமிலம் விசிறப்பட்டுத் தாக்குதல்! 12 பேர் காயம்…600 பேர் வெளியேற்றம்!” தொடர்ந்து வாசிக்க…)

சாதி வெறியர்களின் கொலைவெறித் தாக்குதல்…

ரத்தச் சேற்றில் கோயம்புத்தூர், புள்ளாக்கவுண்டன்பாளையம்; நிராதரவாக தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்கள்…
கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட புள்ளாக்கவுண்டன்புதூர் பகுதியில் சுமார் 30 தாழத்தப்பட்ட அருந்ததியர் சமூக குடும்பங்களும், 300க்கும் மேற்பட்ட ஆதிக்கச் சாதி கொங்கு வேளாளர் கவுண்டர் மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

(“சாதி வெறியர்களின் கொலைவெறித் தாக்குதல்…” தொடர்ந்து வாசிக்க…)

நைஜீரிய பள்ளியிலிருந்து 300 பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு மூன்றாண்டு நிறைவு: நீதி கோரி பேரணிக்கு ஏற்பாடு

2014 ஏப்ரல் 14-ம் தேதி நள்ளிரவில் நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் சிபோக்கில் 300 பள்ளி மாணவிகள் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனர்.இச்சம்பவம் நடந்து இன்றுடன் மூன்றாண்டு நிறைவடைந்துவிட்டது.மாணவிகளை மீட்கக் கோரி தலைநகர் அபுஜாவில் சமூக ஆர்வலர்கள் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். தலைநகர் அபுஜாவில் போராட்டமும் நடைபெற்றது.

(“நைஜீரிய பள்ளியிலிருந்து 300 பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு மூன்றாண்டு நிறைவு: நீதி கோரி பேரணிக்கு ஏற்பாடு” தொடர்ந்து வாசிக்க…)

முதலமைச்சர் எவ்வாறு ஏழு மாடி ஹோட்டல் கட்டுகிறார்?

”வடை விற்ற முதலமைச்சர் எவ்வாறு ஏழு மாடி ஹோட்டல் கட்டுகிறார்?”-கேள்வி.
”ஏழு மாடியல்ல பத்து மாடிகள் கட்டுகிறேன்.”-பதில்!

(எஸ். ஹமீத்)

”ஓடும் ரயில்களில் வடை விற்றுப் பிழைப்பு நடத்திய ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் எவ்வாறு ஏழு மாடிகள் கொண்ட ஹோட்டலொன்றைக் கட்டுகிறார்?” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கொழும்பு ஊடகம் ஒன்றிடம் எழுப்பிய கேள்விக்கு ” நான் ஏழு மாடிகள் கொண்ட ஹோட்டலையல்ல, பத்து மாடிகள் கொண்ட ஹோட்டலையே கட்டுகிறேன்!” என்று முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

(“முதலமைச்சர் எவ்வாறு ஏழு மாடி ஹோட்டல் கட்டுகிறார்?” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்காவின் முதலாவது முஸ்லிம் பெண் நீதிபதி சடலமாக மீட்பு

அமெரிக்காவின் முதலாவது முஸ்லிம் பெண் நீதிபதியான ஷீலா அப்துஸ் சலாமின் சடலத்தை அமெரிக்காவின் ஹட்சன் ஆற்றிலிருந்து பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். நியூயோர்க்கின், ட்ரெயில்பேளசிங் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த ஷீலா அப்துஸ் சலாம், கடந்த வாரத்தில் காணாமல் போனார். இந்நிலையில், புதன்கிழமை மதியம் 1.45 மணியளவில் அவரது உடல் ஹட்சன் ஆற்றில் கரை ஒதுங்கியது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார், சலாமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 65 வயதாகும் சலாம், அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதி மற்றும் கருப்பின நீதிபதி என்ற பெருமைக்கு சொந்தக்காரர். மேலும் இவர் அமெரிக்காவின் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து நியூயோர்க் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

His Worship the Mayor of Toronto

By Email:

84 Tambrook Drive
Agincourt, ON M1W 3L9
Tel. (416) 498-0783
April 14, 2017
The Editor
Toronto Star
Toronto, Ontario
Copy to: His Worship the Mayor of Toronto

Dear Editor,
Mayor John Tory’s Opinion Column published on April 4, 2017 on
‘The quest for healing and Justice in Sri Lanka’
I find Mayor Tory’s opinion arrived at after a short visit to the country having spent just a day or two in the north is inaccurate, misleading and obviously based on whatever he heard from a few pre-selected individuals who were given the opportunity to meet with him. He being the Mayor of a city which has a multiplicity of ethnic groups that have made it their home, should avoid taking up the cause of a single ethnic group which has been engaged in a three decade long armed conflict including suicide terrorism in Sri Lanka to form a break away state with an eye to harness the votes of the expat Tamil community who are mainly residing in Toronto. Such comments could hinder the ongoing reconciliation process in that country, as he has ignored the views of other ethnic groups from Sri Lanka such as the Sinhalese, Moors, Malays, Burghers, etc. , who also live in his city.

(“His Worship the Mayor of Toronto” தொடர்ந்து வாசிக்க…)

மட்டக்களப்பில் கறுப்பு, வெள்ளை நிறத்தில் சுவரொட்டிகள்

பிறக்கவிருக்கின்ற புத்தாண்டுக்கு வாழ்த்துக்கூறும் முகமாக, வெள்ளைத்தாளில் கறுப்பு எழுத்தில் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள் என எழுதப்பட்டும் அதன் கீழே, நாங்கள் தெருவோரப் பட்டதாரிகள் என குறிப்பிட்டும், மட்டக்களப்பு நகர் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகள், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இருமொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், தமக்கான நியமனத்தினை வழங்ககோரி, மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று (12), 51ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

(“மட்டக்களப்பில் கறுப்பு, வெள்ளை நிறத்தில் சுவரொட்டிகள்” தொடர்ந்து வாசிக்க…)

‘ஆத்திரமூட்டப்பட்டால் அணுத் தாக்குதல்’

எந்தவகையான ஐக்கிய அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும் ஐக்கிய அமெரிக்கா மீது அணுத் தாக்குதலொன்று நடைபெறும் என வடகொரிய அரச ஊடகம், நேற்று (11) எச்சரித்துள்ளது. இதேவேளை, “போர்க்கப்பல்களின் கூட்டம்” என ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்த ஐக்கிய அமெரிக்க கடற்படையின் தாக்குதல் குழுவொன்று மேற்கு பசுபிக்கை நோக்கிச் செல்கையிலேயே, வடகொரியாவின் மேற்படி எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

(“‘ஆத்திரமூட்டப்பட்டால் அணுத் தாக்குதல்’” தொடர்ந்து வாசிக்க…)