ஐ.நா தீர்மானம் நிறைவேற்றம்; சிரியாவுக்குள் ஐ.நா கண்காணிப்பாளர்கள்

சிரியாவில் முற்றுகைக்குள்ளாகியுள்ள பொதுமக்கள் வெளியேறுவதைக் கண்காணிக்கவும் நகரங்களில் எஞ்சியுள்ள மக்களின் நலன்களைக் கண்காணிக்கவும், ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பாளர்களை அனுப்புவதற்கான தீர்மானத்தை, ஐ.நா பாதுகாப்புச் சபை நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பான தீர்மானத்தை, ஐக்கிய அமெரிக்கா கொண்டுவரவிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு வெளியிட்ட ரஷ்யா, தன் சார்பில் புதிய தீர்மானமொன்றைச் சமர்ப்பிக்க முடிவு செய்திருந்தது. எனினும், பிரான்ஸும் ரஷ்யாவும் இணைந்து தயாரித்த தீர்மானம், திங்கட்கிழமையன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, அலெப்போவில் ஏற்கெனவே காணப்படும் 100க்கும் அதிகமாக ஐ.நா மனிதாபிமானப் பணியாளர்கள், இதற்காகப் பயன்படுத்தப்பட முடியுமென, ஐ.நா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

(“ஐ.நா தீர்மானம் நிறைவேற்றம்; சிரியாவுக்குள் ஐ.நா கண்காணிப்பாளர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

‘மைத்திரி மரணிப்பார்: கோட்டா ஜனாதிபதியாவார்’

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனவரி மாதத்துக்குள் இயற்கையாக மரணமடைவார் என்றும், அதன் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும். அத்தேர்தலில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ வெல்வார் என்றும் ஜோதிடரினால் கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளமையாது, சாஸ்திர சதியாகும் என்று ஊடகத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பாக வெளியாகியுள்ள ஜோதிடரின், ஜாதகக் கணிப்பின் பின்னணியைக் கண்டறிவதற்காக அது தொடர்பான காணொளி, பொலிஸ்மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.

(“‘மைத்திரி மரணிப்பார்: கோட்டா ஜனாதிபதியாவார்’” தொடர்ந்து வாசிக்க…)

நீர்மூழ்கியை அமெரிக்காவிடம் ஒப்படைத்தது சீனா

தென்சீனக் கடல் பகுதி முழு வதையும் சீனா சொந்தம் கொண் டாடி வருகிறது. ஆனால் அந்தப் பகுதி சர்வதேச கடல் எல்லை என்று அமெரிக்கா வாதிட்டு வருகி றது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் அருகே தென்சீனக் கடலில் மிதந்த அமெரிக்க கடற் படையின் ஆளில்லா நீர்மூழ்கியை சீன கடற்படை கைப்பற்றியது. சீன கடல் பகுதியில் அமெரிக்கா உளவு பணியில் ஈடுபட்டதாக அந்த நாடு குற்றம் சாட்டியது.

(“நீர்மூழ்கியை அமெரிக்காவிடம் ஒப்படைத்தது சீனா” தொடர்ந்து வாசிக்க…)

துருக்கியில் ரஷ்ய தூதர் சுட்டுக் கொலை

துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள கலைக்கூடத்தில், துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கார்லோஃப் மீது நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்தார். துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். கலைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் உரையாற்றிய தொடங்கிய போது, சிரியாவின் அலெப்போ நகர் குறித்த தகவலுடன் கோஷமிட்டவாறு துப்பாக்கி ஏந்திய ஒருவர் கார்லோஃபை நோக்கி சுட்டதாக தகவல்கள் தெரிக்கின்றன.

மீண்டும் இந்திய – இலங்கை பயணிகள் கப்பல் சேவை

வடக்கில் இருந்து இந்தியாவுக்கு 10 நாட்களுக்கு பயணிகள் கப்பல் சேவையை நடத்துவதற்கு 32 வருடங்களுக்குப் பிறகு, இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இந்தியாவிலுள்ள ​இந்து கோவிலில் இடம்பெறவுள்ள நிகழ்வுக்காக வடக்கில் இருந்து இந்து பக்தர்களை கொண்டு செல்லதற்காக அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி கிடைத்துள்ளமை தொடர்பில் கருத்து தெரவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

(“மீண்டும் இந்திய – இலங்கை பயணிகள் கப்பல் சேவை” தொடர்ந்து வாசிக்க…)

‘பொதுமக்களைக் கொல்கிறது மியான்மார்’

மியான்மாரின் ரோகிஞ்சா முஸ்லிம் சிறுபான்மையினர் மீது மியான்மார் இராணுவம், வன்முறைகளைப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, அந்த வன்முறைகள், மனிதத்துக்கு எதிரான குற்றங்களாகக் கணிக்கப்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. “முக்கியமான கட்டத்தில் நாம்” ரோகிஞ்சா: மியான்மாரின் துன்புறுத்தல், பங்களாதேஷில் புறக்கணித்தல் என்ற பெயரில், சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

(“‘பொதுமக்களைக் கொல்கிறது மியான்மார்’” தொடர்ந்து வாசிக்க…)

அடுத்த ஜனாதிபதியைத் தேடுகிறது தென்கொரியா

தென்கொரிய ஜனாதிபதி பார்க் கியுன்-ஹை, அவரது பதவியிலிருந்து இன்னமும் உத்தியோகபூர்வமாக அகற்றப்படாத நிலையிலும், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகள், முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தால் பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஜனாதிபதி பார்க், அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார். அந்நீதிமன்றத்தால் பதவி விலக்கல் உறுதிப்படுத்தப்பட்டதுமே, அடுத்த 60 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற வேண்டும்.

(“அடுத்த ஜனாதிபதியைத் தேடுகிறது தென்கொரியா” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்கு அலெப்போவில் வெளியேற்றம் தொடர்கிறது

சிரியாவின் அலெப்போ நகரத்தில், எதிரணிப் போராளிகளின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிழக்குப் பகுதிகளிலிருந்து, பொதுமக்களில் பலர், இன்று வெளியேற்றப்பட்டனர். இன்று காலை முதல் இடம்பெற்ற இந்த நடவடிக்கைகளில், சுமார் 4,500 பேர் வெளியேற்றப்பட்டனர் என, துருக்கி அறிவித்தது.

(“கிழக்கு அலெப்போவில் வெளியேற்றம் தொடர்கிறது” தொடர்ந்து வாசிக்க…)

அலெப்போவில் அமெரிக்க படைகள்

அலெப்போவில் அமெரிக்க இராணுவ வீரர்கள் கடந்த ஐந்தாண்டுகளாக செயற்பட்டு வந்துள்ளனர். இதை எனக்கு ஏற்கனவே ஒருவர் உறுதிப் படுத்தி இருந்தார். அமெரிக்காவில் வாழும் வெள்ளையின அமெரிக்கப் பெண் ஒருவருடன் இணையத்தில் அரட்டை அடித்த நேரம் அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருந்தார். அமெரிக்க இராணுவ வீரரான அவரது கணவர், ஐந்து வருடங்களுக்கு முன்னர் சிரியாவில் நடந்த யுத்தத்தில் கொல்லப் பட்டதாக கூறினார். அந்த இடமும் அலெப்போ தான். அப்போது இந்தத் தகவல் எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், சிரியாவின் உள்ளே தனது படைகள் இருப்பதாக, அமெரிக்க அரசு எந்தக் காலத்திலும் ஒத்துக் கொள்ளவில்லை. அமெரிக்க அரசு இப்படி எத்தனை இரகசியங்களை தனது மக்களுக்கு மறைத்திருக்கும்?

(Kalai Marx)

எனது கருத்தை விமர்சிக்க கட்சியின் தலைமையைத் தவிர வேறு யாருக்கும் தகுதி கிடையாது – திருநாவுக்கரசர்

நான் தெரிவிக்கும் கருத்தை விமர்சிக்கும் தகுதி கட்சியின் தலைமையைத் தவிர, வேறு யாருக்கும் கிடையாது என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நேற்று நடைபெற்ற ஒரு சமூக சேவை சங்கத்தின் மண்டல மாநாட்டில் கலந்துகொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

(“எனது கருத்தை விமர்சிக்க கட்சியின் தலைமையைத் தவிர வேறு யாருக்கும் தகுதி கிடையாது – திருநாவுக்கரசர்” தொடர்ந்து வாசிக்க…)