சிரியா: அரசு படையின் அட்டூழியங்களை மறுக்கும் புதினின் செய்தி தொடர்பாளர்

சிரியா அரசு ஆதரவு படைப்பிரிவுகளால் நடத்தப்படும் அட்டூழியங்கள் பற்றிய அறிக்கைகளில் ரஷ்ய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்றி பாஸ்கோஃப் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார். சிரியா அரசு ஆதரவு படைப்பிரிவுகளால் நடத்தப்படும் அட்டூழியங்கள் பற்றிய அறிக்கைகளில் ரஷ்ய அதிபர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்றி பாஸ்கோஃப் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறார்.

(“சிரியா: அரசு படையின் அட்டூழியங்களை மறுக்கும் புதினின் செய்தி தொடர்பாளர்” தொடர்ந்து வாசிக்க…)

450 மின் மாற்றிகள் சேதம்; 4 துணை மின் நிலையங்களில் பாதிப்பு: 4 மாவட்டங்களில் 10 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன

‘வார்தா’ புயலால் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 10 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன. 450 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைத்து, மின் விநி யோகத்தை தொடங்குவதற்கான பணிகள் போர்க்கால அடிப் படையில் நடந்து வருகின்றன.

(“450 மின் மாற்றிகள் சேதம்; 4 துணை மின் நிலையங்களில் பாதிப்பு: 4 மாவட்டங்களில் 10 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன” தொடர்ந்து வாசிக்க…)

மலையக மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யாழ். நூலக எரிப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரியதைப்போல், மலையக மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென ஜேவீபி தலைவர் நண்பர் அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்ட குடியுரிமை பறிப்பு, வாக்குரிமை பறிப்பு என்பவை, மலையகத் தமிழரின் இருப்பையே இந்நாட்டில் அசைத்து விட்டன என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனவே ஐதேக மலையக மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென நண்பர் அனுர கூறியிருப்பது நியாயமானதுதான்” தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

(“மலையக மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவியேற்றார் குட்டரெஸ்

ஐக்கிய நாடுகளின் ஒன்பதாவது செயலாளர் நாயகமாக அந்தோனியோ குட்டரெஸ், நேற்று (12) பதவியேற்றுக் கொண்டார். பூகோளரீதியாக நெருக்கடியையும், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டமையைத் தொடர்ந்ததான நிச்சயமற்றதன்மையை எதிர்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

(“ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவியேற்றார் குட்டரெஸ்” தொடர்ந்து வாசிக்க…)

பிரித்தானியப் பிரதமர் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் 13-12-2016 08:59 PM

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை துரிதப்படுத்த எதிர்பார்க்கும் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே இல்லாமல், பெல்ஜியத் தலைநகர் ப்ரசெல்ஸில் இரவுணவு ஒன்றில் இவ்வாரம் சந்திக்கவுள்ளனர்.

(“பிரித்தானியப் பிரதமர் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் 13-12-2016 08:59 PM” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தலில் ரஷ்யாவின் பங்கு: மேலும் சிக்கலடைகிறது ட்ரம்ப்பின் நிலைமை

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆதரவாக ரஷ்யாவின் அரசாங்கம் செயற்பட்டது என்ற அறிக்கைகளைத் தொடர்ந்து, அமெரிக்க அரசியல் களம், மேலும் சிக்கலடைந்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆதரவான முடிவைப் பெறுவதற்காகவே, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுக்கு எதிராக, ரஷ்யாவின் அரசாங்கத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் செயற்பட்டனர் என, அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள், முடிவுக்கு வந்திருந்தன.

(“தேர்தலில் ரஷ்யாவின் பங்கு: மேலும் சிக்கலடைகிறது ட்ரம்ப்பின் நிலைமை” தொடர்ந்து வாசிக்க…)

அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற போட்டி

 

அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்ற போட்டியில், செங்கோட்டையனை மையமாக வைத்து அந்தக் கட்சியில் பிளவு ஏற்படும் என்ற ஊகங்கள் பொய்த்துப் போயுள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்ற நேரத்தில், புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற் றார். அப்போதே அமைச்சரவை யில் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் பலமானவர்களா, கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த வர்கள் பலமானவர்களா என்ற மோதல் மறைமுகமாக ஏற்பட்டது.

(“அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற போட்டி” தொடர்ந்து வாசிக்க…)

ட்ரம்ப்பை தெரிவுசெய்வதே ரஷ்யாவின் நோக்கம்

ஐக்கிய அமெரிக்காவில் இவ்வாண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ரஷ்யா தலையிட்டமை, அடுத்த ஜனாதிபதியாகவே டொனால்ட் ட்ரம்ப்பைத் தெரிவுசெய்வதற்காகவே ஆகும் என, ஐக்கிய அமெரிக்காவின் புலனாய்வு நிபுணர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். அமெரிக்க தேர்தல் முறைமையில் நம்பிக்கையை இழக்கச் செய்வதற்காகவே ரஷ்யா தலையிடுகிறது என ஆரம்பத்தில் கருதப்பட்ட நிலையிலேயே, தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

(“ட்ரம்ப்பை தெரிவுசெய்வதே ரஷ்யாவின் நோக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

அரசியலுக்கு வருவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் அறிவிப்பு

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என்றும்ஜெ யலலிதாவுக்கு நானே உண்மையான வாரிசு என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெயக்குமார் தீபா தெரிவித்திருப்பதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அச் செய்தியில் தீபா தெரிவித்திருப்பதாவது,

‘இன்றைய சூழ்நிலையில் நான் அரசியலுக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டால் அது தவறாக இருக்காது என்றே கருதுகிறேன்.

(“அரசியலுக்கு வருவதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் அறிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

‘பிளாஸ்டிக் கூடை’ சட்டம் நடைமுறைக்கு வருகிறது

மரக்கறி மற்றும் பழங்களைக் கொண்டு செல்ல பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. எனினும், இந்தச் சட்டத்தை விவசாயிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, மரக்கறி மற்றும் பழங்களை, பொருளாதார மத்திய நிலையத்துக்கு விநியோகிக்கும் நடவடிக்கைக்கு மாத்திரம் பிளாஸ்டிக் கூடைகளைப் பயன்படுத்தப்படுவதாக தெரியவருகின்றது. இந்நிலையில், மரக்கறி மற்றும் பழங்களை கொண்டு செல்ல பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவுள்ளதுடன், இம்முறையை பின்பற்றுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, விவசாயிகளிடம் கோரியுள்ளது.