கிளிநொச்சியில் ஏழை மாணவ‌ர்க‌ளை அவ‌மான‌ப் ப‌டுத்திய‌ பாட‌சாலை அதிப‌ர்!

கிளிநொச்சி பார‌திபுர‌த்தில் உள்ள‌ பாட‌சாலை ஒன்றின் அதிப‌ர், ச‌ப்பாத்து (ஷூ) அணிந்து வ‌ராத‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு த‌ண்ட‌னை வ‌ழ‌ங்கும் நோக்க‌த்துட‌ன், மாண‌வ‌ர்க‌ளின் கால‌ணிக‌ளை பாட‌சாலைக்கு வெளியே வீதியில் குவித்து வைத்து மாண‌வ‌ர்க‌ளை அவ‌மான‌ப் ப‌டுத்திய‌ ச‌ம்ப‌வ‌ம் நேற்று முன்தின‌ம் இட‌ம்பெற்றுள்ள‌து. கிளிநொச்சி மாவ‌ட்ட‌ம் க‌ல்வியில் பின்த‌ங்கிய‌தும் வ‌றுமை நிலையிலுமுள்ள‌ மாவ‌ட்ட‌மாக‌ அடையாள‌ப் ப‌டுத்த‌ப் ப‌ட்டுள்ள‌து. இந்த‌ மாவ‌ட்ட‌த்தில் பார‌திபுர‌ம் மிக‌வும் பின்த‌ங்கிய‌ கிராம‌மாக‌ காண‌ப் ப‌டுகின்ற‌து.

(“கிளிநொச்சியில் ஏழை மாணவ‌ர்க‌ளை அவ‌மான‌ப் ப‌டுத்திய‌ பாட‌சாலை அதிப‌ர்!” தொடர்ந்து வாசிக்க…)

ஆசிரியர்களின் சேவை உளளீர்ப்பில் குளறுபடிகள் – மக்கள் ஆசிரிய சங்கம்

இலங்கை ஆசிரிய சேவையின் புதிய சேவை பிரமாணக் குறிப்பு 1885/38 இலக்கமும் 2014/10/23 திகதியும் கொண்ட அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய சேவை பிரமாணக் குறிப்பு 2008/07/01 திகதி முதல் அமுல்படுத்தப்படுவதுடன் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 1994 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆசிரிய சேவைப் பிரமாணக் குறிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. இப்புதிய சேவை பிரமாணக் குறிப்பே இனிவரும் காலங்களில் இலங்கை ஆசிரிய சேவையில் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள ஏற்றம் என்பவற்றை தீர்மானிக்கப் போகின்றது. இச்சேவை பிரமாணக் குறிப்பின்படி, ஆசிரிய சேவையில் இருப்போரை உள்ளீர்க்கும் நடவடிக்கைகள் நாடெங்கிலும் உள்ள வலய கல்விப் பணிமனைகளால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்புதிய ஆசிரிய சேவைப் பிரமாணக் குறிப்பின்படி ஆசிரியர்களை உள்ளீர்க்கும் நடவடிக்கையின் போது பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதாக மக்கள் ஆசிரிய சங்கத்தின் செயலாளர் திரு. நெல்சன் மோகன்ராஜ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் புதிய சேவை பிரமாணக் குறிப்பின்படி சேவை உள்ளீர்ப்பின் போது பல ஆசிரியர்களின் பதவியுயர்வுகள் பின்தள்ளப்பட்டுள்ளதாகவும் அடிப்படை சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது. புதிய சேவை பிரமாணக் குறிப்பு தொடர்பில் போதிய தெளிவில்லாமல் எழுதுவினைஞர்கள் இவ்வாறு செய்வதாகவும் அவர்களை வழிப்படுத்த வேண்டிய அதிகாரிகள் இது தொடர்பில் அக்கறையின்றி இருப்பதாகவும் குறிப்பிட்டார். அவ்வாறான பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் தமது சங்கத்திற்கு 071 62 70703, 071 60 70644 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கோ ptusrilanka@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ 52/3, ஆலய வீதி, கஹவத்தை எனும் தபால் முகவரிக்கோ தமது முறைப்பாடுகளை சமர்பித்தால் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

பாண்டிபஜாரில் புத்தகக் கடை

பாண்டிபஜாரில் உள்ள கார்ப்பரேஷன் வணிக வளாகத்தின் தரைத் தளத்தில் Boo Books என்றொரு புத்தகக் கடை உள்ளது (கடை எண் 74, B ப்ளாக்). நேற்று முதல் முறையாக இந்தக் கடைக்குச் சென்றேன். நாலடிக்கு ஆறடி பெட்டிக்கடைதான். (வத்திப்பெட்டிக் கடையென்றும் சொல்லலாம்.) ஆனால் அந்தச் சிறு இடத்துக்குள் ஆயிரக்கணக்கான புத்தகங்களை மிகத் திறமையாக அடுக்கியிருக்கிறார் மாற்றுத் திறனாளியான கடைக்கார இளைஞர் தமீமுன் அன்சாரி.

(“பாண்டிபஜாரில் புத்தகக் கடை” தொடர்ந்து வாசிக்க…)

அசாஞ்-இன் இணையத் தொடர்பு நிறுத்தம்: விக்கிலீக்ஸ்

தமது நிறுவுநரான ஜூலியன் அசாஞ்-இன் இணையத் தொடர்பு, ஈக்குவடோர் அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்டுள்ளதாக, நேற்று முன்தினம் திங்கட்கிழமை (17), விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. கோல்ட்மன் சக்ஷ்ஸ் வங்கியில், ஹிலாரி கிளின்டன் ஆற்றிய உரைகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில், ஜி.எம்.டி நேரப்படி, கடந்த சனிக்கிழமை (15) மாலை, அசாஞ்-இன் இணையத் தொடர்பை, ஈக்குவடோர் நிறுத்தியதாக, தாங்கள் உறுதிப்படுத்துவதாக, விக்கிலீக்ஸ் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

(“அசாஞ்-இன் இணையத் தொடர்பு நிறுத்தம்: விக்கிலீக்ஸ்” தொடர்ந்து வாசிக்க…)

‘இக்கட்டான சூழ்நிலையில் கைச்சாத்து’ – ஆறுமுகன் தொண்டமான்

தற்போதைய இக்கட்டான சூழ்நிலை காரணமாகவே, இந்த 730 ரூபாய் கொடுப்பனவுக்குச் சம்மதம் தெரிவித்ததாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். இ.தொ.கா தலைமையகத்தில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர், மேலும் தெரிவித்ததாவது,’

(“‘இக்கட்டான சூழ்நிலையில் கைச்சாத்து’ – ஆறுமுகன் தொண்டமான்” தொடர்ந்து வாசிக்க…)

புதிய ஒப்பந்தப்படி அடிப்படைச்சம்பளம் 500 ரூபாய் மட்டுமே

தோட்ட மக்களை வீதிக்கு இறக்கி ஆயிரம் தான் தமது குறிக்கோள் என வாய்ச்சவடால் விட்டவர்கள் கடைசியா ரூ 730 க்கு கையெழுத்து வைத்துவிட்டு இன்று வெளியேறி இருக்கிறார்கள், திட்டமிடப்படாத போராட்டங்களின் விளைவு இப்படித்தான் இருக்கும், இனி எப்படி இவர்கள் மலையக தோட்டத் தொழிலாளர்களின் முன் சென்ற தம்மை உங்கள் தலைவர்கள் என்று சொல்லி திரிவார்கள்? உண்மையில் அடிப்படை சம்பளம் ரூ 500 தான்.

(“புதிய ஒப்பந்தப்படி அடிப்படைச்சம்பளம் 500 ரூபாய் மட்டுமே” தொடர்ந்து வாசிக்க…)

சம்பள உயர்வு திருப்தியில்லை! லோரன்ஸ்

கூட்டு ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு திருப்திகரமானதாக இல்லை என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான லோரன்ஸ் தெரிவித்தார். தோட்டத்தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக 730 ரூபா வழங்கும் வகையில் இன்று கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

(“சம்பள உயர்வு திருப்தியில்லை! லோரன்ஸ்” தொடர்ந்து வாசிக்க…)

Hummer-ஐ கொண்டுவந்தார் சித்தார்த்தன்

அரசாங்கத்தின் வரிச் சலுகையின் கீழ் வாகனங்களைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஓர் உறுப்பினர் மாத்திரம், Hummer (ஹம்மர்) ரக மோட்டார் வாகனத்தைக் கொள்வனவு செய்து நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனே, இவ்வாறு ஹமர் ரக வாகனத்தைக் கொள்வனவு செய்துள்ளார் என்று, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(Tamil Mirror)

தேசிய கலை இலக்கிய பேரவை யில் 15.10.2016 சனிக்கிழமை நடைபெற்ற.

 

‘சாதியம் மறுப்போம் – சமத்துவம் காண்போம், மனங்களை விரிப்போம் – மனிதராய் எழுவோம்’ என்ற தொனிப்பொருளில் சாதிய தீண்டாமைக்கு எதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் 50 ஆவது ஆண்டு நினைவாக இடம்பெற்ற ஆய்வரங்கின் காட்சிகள்.

யாழ்ப்பாணத்தின் பிரபல ஆசிரியரின் உயிரைப் பறித்த மதம்

யாழ்ப்பாண மண்ணின் புகழ்பூத்த வணிகக் கல்வி ஆசிரியரான ஜெனதாஸ் பசில் அவர்கள் நேற்றிரவு 15.10.2016 காலமாகி விட்டார். கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அச்சுவேலியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பசில் ஆசிரியரும் அவரது மனைவியும் படுகாயமடைந்து சுய நினைவை இழந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

(“யாழ்ப்பாணத்தின் பிரபல ஆசிரியரின் உயிரைப் பறித்த மதம்” தொடர்ந்து வாசிக்க…)