3 அமைச்சுகள் சி.வி. வசமாகின

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தான் வகிக்கும் அமைச்சுகளுக்கு மேலதிகமாக, இன்னும் 3 அமைச்சுகளைத் தன்வசப்படுத்திக்கொண்டார். அந்த மூன்று அமைச்சுகளுக்கான பொறுப்புக்களையும், நேற்று மாலை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் சி.வி., வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். வட மாகாண அமைச்சர் வைத்திய கலாநிதி பத்தமநாதன் சத்தியலிங்கத்திடமிருந்த, சமூகசேவைகள், புனர்வாழ்வு மற்றும் மகளிர் விவகாரம் ஆகிய மூன்று அமைச்சுக்களே முதலமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

(“3 அமைச்சுகள் சி.வி. வசமாகின” தொடர்ந்து வாசிக்க…)

மண்சரிவு பாதிப்பு பகுதி; அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்

மண் சரிவுக்குள்ளான பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்துமாறும், குடியிருப்புக்கு பொருத்தமற்றது என அரசாங்கம் ஏற்கனவே குறிப்பிட்ட இடங்களில் குடியிருக்க எவருக்கும் எவ்வித அனுமதியும் வழங்கப்படக் கூடாதெனவும் ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவு வழங்கியுள்ளார். எதிர்பாராமல் முகங்கொடுத்த அவசர அனர்த்த நிலைமையை முகாமைப்படுத்தி மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைக்கப்பட்ட அவசர அனர்த்த செயலணி ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் விடயங்கள் தொடர்பான அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர், உள்ளிட்ட அமைச்சரவை செயலாளர்கள், முப்படைத் தலைவர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

(“மண்சரிவு பாதிப்பு பகுதி; அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழக அரசு – அரசின் மதுவிலக்கு நோக்கிய அறிவிப்புக்கு அமோக வரவேற்பு

டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை குறைத்தும், 500 கடைகளை மூடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த உத்தரவு இன்னும் ஒரு வாரத்துக்குள் நடைமுறைக்கு வரும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு மதுவிலக்கு கோரி நீண்ட போராட்டம் நடத்தி வரும் பல்வேறு தரப்பினரும் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம் இந்த அறிவிப்பினால் ஏற்படும் சாதக, பாதங்களையும், கூடுதலான கோரிக்கைகளையும் சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

(“தமிழக அரசு – அரசின் மதுவிலக்கு நோக்கிய அறிவிப்புக்கு அமோக வரவேற்பு” தொடர்ந்து வாசிக்க…)

வியட்நாம் மீதான அமெரிக்க ஆயுதத் தடை நீக்கம்

அமெரிக்கா தனது முன்னாள் எதிரியான வியட்நாமுக்கான ஆயுத விற்பனை தடையை முழுமையாக அகற்றுவதாக ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவித்துள்ளார். கொம்மியுனிஸ வியட்நாமுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஒபாமா அந்நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த முன்னெடுப்பு “பனிப்போரின் அடையாளங்களை” அகற்ற உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

(“வியட்நாம் மீதான அமெரிக்க ஆயுதத் தடை நீக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையின் வெள்ளத்தால் 5 லட்சம் பேர் பாதிப்பு: பலியானோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

‘இலங்கையில் மழைவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை, 82-ஆக உயர்ந்துள்ளது. 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்’ என, இலங்கையில் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களில் நேற்று வரை மழை தொடர்ந்து பெய்துவந்த நிலையில், இன்னும் அதிகமான இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாகவும், பேரிடர் மேலாண்மை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

(“இலங்கையின் வெள்ளத்தால் 5 லட்சம் பேர் பாதிப்பு: பலியானோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு” தொடர்ந்து வாசிக்க…)

மூன்று புத்தகங்களின் வெளியீடு

 

புத்தக வெளியீட்டில் மதிப்பீட்டுரை செய்கின்றார் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தோழர் ஜேம்ஸ்

(“மூன்று புத்தகங்களின் வெளியீடு” தொடர்ந்து வாசிக்க…)

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சர்வதேச உதவிகள் குவிகின்றன: பலி 71 ஆக உயர்வு

மழை வெள்ளம் மற்றும் நிலச் சரிவுகளால் கடும் பாதிப்புக்கு உள்ளான இ லங்கைக்கு இந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் இருந்து உதவிப் பொருட்கள் குவிந்து வருகின்றன. இந்தியா சார்பில் நேற்று முன் தினம் ராணுவ விமானம் மூலம் அவசர தேவைக்கான நிவாரணப் பொருட்களுடன் மீட்புக் குழுவினர் கொழும்பு நகருக்கு அனுப்பப்பட்டனர். இரண்டு கடற்படை கப்பல் களும் அனுப்பப்பட்டுள்ளன.

(“மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சர்வதேச உதவிகள் குவிகின்றன: பலி 71 ஆக உயர்வு” தொடர்ந்து வாசிக்க…)

புயலால் இலங்கைக்கு கடுமையான பாதிப்பு: நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட கொழும்பு நகர வீதி ஒன்றில் வழிந்தோடும் வெள்ளம்.
இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட கொழும்பு நகர வீதி ஒன்றில் வழிந்தோடும் வெள்ளம். ரோனு புயலால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் இலங்கைக்கு, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களுடன் 2 கடற்படை கப்பல்கள் மற்றும் மீட்புக் குழுவினருடன் சி-17 விமானத்தை இந்தியா அனுப்பியுள்ளது.

(“புயலால் இலங்கைக்கு கடுமையான பாதிப்பு: நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் தலைவர் பிரபாகரனை காட்டி கொடுத்தார் நளினி!

இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்ற நளினி முருகனால் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் காட்டி கொடுக்கப்பட்டு உள்ளார் என்று பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய பிரபாகரன்தான் உத்தரவிட்டு இருந்தார் என்று பிரியங்காவுக்கு நளினி முருகன் தெரிவித்து இருக்கின்றார்.

(“புலிகளின் தலைவர் பிரபாகரனை காட்டி கொடுத்தார் நளினி!” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்த் தேசிய ‘கோமாளி’ சீமான் கட்டுப்பணத்தை இழந்து தோல்வியடைந்தார்

இன்னும் ஐந்து வருடங்களுக்கு தம்மை ஆள்வதற்கு இன்னோரன்ன காரணங்களால் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட வாக்குகளின் பின்னர் நூற்றுக்கணக்கான கட்சி உறுப்பினர்கள் தவழ்ந்து சென்று அவரின் பாதங்களை தொட்டு வணங்கினர். இந்த வெற்றியின் பின்புலத்தில் வை.கோபாலசாமி குழுவின் பங்கு புதைந்திருப்பதை பலர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. ஈழப் பிரச்சனையை தமது அரசியல் வியாபாரத்திற்ககப் பயன்படுத்திவந்த சீமான், அன்புமணி ராமதாஸ், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போன்றவர்கள் படு தோல்வியடைந்தனர்.

(“தமிழ்த் தேசிய ‘கோமாளி’ சீமான் கட்டுப்பணத்தை இழந்து தோல்வியடைந்தார்” தொடர்ந்து வாசிக்க…)