மிக்க அவதானமாக செயற்பட வேண்டிய நேரமிது
வாராந்த பத்திரிகையாளர் மாநாட்டில் அமைச்ர் டாக்டர் ராஜித சேனாரட்ண அவர்கள் இலங்கையில் அரசியல் கைதிகள் இல்லையென்று தெரிவி;த்தமை விரைவில் மீண்டுமொரு சங்கடமான நிலைமையை சிறைக்கைதிகள் மத்தியில் ஏற்படும் என்ற ஐயம் எனக்கு எழுக்கிறது. கைதிகள் குற்றம் செய்தார்களோ இல்லையோ என்பது அல்ல எமது பிரச்சனை. அவர்கள் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்தமையால் அவர்கள் செய்த குற்றம் எதுவாக இருந்தாலும் அனுபவித்த தண்டனை அதிகமாகையால் போதுமானதாகும். அந்த அடிப்படையில்தான் அவர்களின் விடுதலையைக் கோரி இத்தனை போராட்டங்கள் நடந்தது மட்டுமல்ல இறுதியில் சாகும்வரையிலான உண்ணாவிரதத்தில் ஜனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோர் தலையிட்டு உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர். ஆனால் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன விடுத்துள்ள அறிக்கை மீண்டும் பிரச்சினையை உயிர்பெறச் செய்யும் என்பது எதுவித சந்தேகமும் இல்லை.
Category: செய்திகள்
தீர்வு வழங்காவிடின் மீண்டும் ஆயுதம் ஏந்தலாம்
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால் மீண்டும் ஆயுதப் போராட்டம் உருவெடுக்கலாம் என ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்தியாவினாலோ ஜ.நாவினாலோ தீர்வு கிடைக்காது என்று குறிப்பிட்ட அவர் சகலரதும் ஒத்துழைப்புடன் விசேட நீதிமன்றம் அமைத்து யுத்ததின் போது இடம் பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
(“தீர்வு வழங்காவிடின் மீண்டும் ஆயுதம் ஏந்தலாம்” தொடர்ந்து வாசிக்க…)
முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்’ பற்றி தமிழ்க் கூட்டமைப்பு வாய் திறக்காதது ஏன்?
சம்பந்தன் ஐயாவும் கண்டுகொள்வதில்லை
ஜெனீவா உள்ளிட்ட சர்வதேசத்துக்குச் சென்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அதே தமிழ் மொழியைப் பேசும் வடபகுதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வாய்திறப்பதில்லையென வாணிப மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
(“முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்’ பற்றி தமிழ்க் கூட்டமைப்பு வாய் திறக்காதது ஏன்?” தொடர்ந்து வாசிக்க…)
‘தமிழீழம் உருவாவதை தடுக்க முடியாது’ – மாவையின் வெடி
ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான தீர்மானத்தை நிறைவேற்றாமல், தமிழர்களின் உரிமைகளை அழித்து, இலங்கையை தனிச் சிங்கள நாடாக மாற்றுவதற்கு முயற்சித்தால், தனித் தமிழ் தேசம் உருவாகுவதற்கு அது வழியேற்படுத்தும், அதனை தடுக்க முடியாது, அதற்கு, சர்வதேச நாடுகளின் அனுமதியை வாங்குவதற்கு நாம் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
(“‘தமிழீழம் உருவாவதை தடுக்க முடியாது’ – மாவையின் வெடி” தொடர்ந்து வாசிக்க…)
படுகொலை நினைவுதினம்…
1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் கடமையிலிருக்கும் போது, இந்திய அமைதிப்படையால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட 21 வைத்தியசாலை பணியாளர்களின் நினைவுதினம், இன்று புதன்கிழமை (21) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய அமைதி காக்கும் படையினர், வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளிகள் அடங்கலாக 68 பேரைச் சுட்டுக்கொலை செய்தனர். அவ்வாறு உயிரிழந்தவர்களில் வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் ஆகியோரின் நினைவு தினம், இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
ஈபிடிபி “TV” க்கு யாழில் டன்டனக்கா…..
யாழ்ப்பாணத்தினில் ஈபிடிபியால் இயக்கப்பட்டு வந்த டிடி தொலைக்காட்சி சேவை தடை செய்யப்பட்டுள்ளது.கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த இலங்கை தொலை தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அலுவலக அதிகாரிகளினால் அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் ஒளிபரப்பும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
(“ஈபிடிபி “TV” க்கு யாழில் டன்டனக்கா…..” தொடர்ந்து வாசிக்க…)
அரசன் செய்தால் அபராதம் மக்கள் செய்தால் சிரச் சேதம் இது என்ன நியாயம்
பணிப்பெண்களை கற்பழிக்க முயன்று கைதான சவுதி இளவரசர்: அறையில் நடந்தது என்ன?
பணிவிடை செய்யவந்த 3 பெண்களை கற்பழிக்க முயன்றதாக சவுதி இளவரசர் கைதாகி உள்ள நிலையில், அவரது அறையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சவுதி அரேபிய முன்னாள் மன்னரான அப்துல்லாவின் மூத்த மகன் இளவரசர் மஜட் பின் அப்துல்லா(29). கடந்த செப்டம்பர் 21ம் திகதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஓய்வெடுப்பதற்காக தன்னுடைய ஆடம்பர பட்டாளங்களுடன் பயணமாகியுள்ளார்.
37 மில்லியன் டொலர் மதிப்புள்ள அந்த மாளிகையில் பணியாற்றிய 3 பெண்களை இயற்கைக்கு எதிராக கற்பழிக்க முயன்ற வழக்கில் செப்டம்பர் 25ம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
(“அரசன் செய்தால் அபராதம் மக்கள் செய்தால் சிரச் சேதம் இது என்ன நியாயம்” தொடர்ந்து வாசிக்க…)
மக்கள் மீது இராணுவத்தின் தாக்குதல் நிரூபணம்
இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இலங்கையின் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக, ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது.காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்கான நியமிக்கப்பட்ட இந்தக் குழுவினது ஆணைப்பரப்பு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரிப்பதற்கு விரிவுபடுத்தப்பட்டது.
(“மக்கள் மீது இராணுவத்தின் தாக்குதல் நிரூபணம்” தொடர்ந்து வாசிக்க…)
பாடும்மீன்கள் – கனடா
வருடாந்த பொதுக் கூட்டம்
பாடும்மீன்களின் அங்கத்தவர்கள் நண்பர்கள் நலன்விரும்பிகள் அனுசரணையாளர்களுக்கு:
எமது வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. கடந்த பதின்னான்கு வருடங்களாக கனடாவில் வாழும் எமது பிரதேசமக்களின் ஒட்டுமொத்த பங்களிப்புடன் மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் ஒன்றுகூடல் ஊடாக தாயகத்தில் பல நற்காரியங்களை முடிந்தவரை செய்து வருகின்றோம் என்பது நீங்கள் அறிந்ததே.
மகன் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு…..
நான் வாழும் ரூஜ்பார்க் தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட நியமனம் கோரிய Gaரி ஆனந்தசங்கரி லிபரல் உட்கட்சித் தேர்தலில் வெற்றியடைந்திருக்கிறார். (இனி 2015இல் வரப்போகும் பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் அவர் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும்.) அவரது நியமனத் தேர்தல் நடந்த மண்டபத்திற்குப் போயிருந்தேன். தமிழ்கனடாவின் பெரும்புள்ளிகள் மட்டுமல்ல லிபரல் தமிழ்ப் பொது மக்களும் பெருமளவில் வந்திருந்தார்கள் ஏற்கனவே சூடு பிடித்திருந்த இந்த உட்கட்சித்தேர்தல் கடைசிவரை விறுவிறுப்பாகவே போய் முடிந்தது. Gaரியின் வெற்றி முடிவு அறிவிக்கப்பட்டதும் வந்திருந்தவர்களிடையே ஏற்பட்ட ஆரவாரத்தை ரசிக்க முடிந்தது. புதிய அரசியல் உலகம் தெரிகிறது…
(“மகன் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு…..” தொடர்ந்து வாசிக்க…)