கைக்குண்டுடன் அரசியல்வாதியின் தேசிய அடையாள அட்டை

வவுனியா குட் ஷெட் பகுதியிலிருந்து, கைக்குண்டொன்றும் அதன் அருகிலேயே பிரபல தமிழ் அரசியல்வாதியொருவரின் தேசிய அடையாள அட்டையொன்றும் மீட்கப்பட்டுள்ளது. உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையத்தே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டதாகவும் கைக்குண்டு தணிக்கைச் செய்யும் விசேட அதிரடிப்படையினர் மூலம் குண்டு செயலிழக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிள்ளையானின் விளக்கமறியல் மே 04 வரை நீடிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா முன்னிலையில் இன்று (20) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறுஉத்தரவிட்டார்.

(“பிள்ளையானின் விளக்கமறியல் மே 04 வரை நீடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

கஞ்சாவுடன் மூவர் கைது

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேரை மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்; இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், இவர்களிடமிருந்து கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர். கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, திடீர்ச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, மீராகேணிக் கிராமத்திலுள்ள இரண்டு வீடுகளில் மறைந்திருந்த 32 வயதுடைய ஒருவர் 3,000 மில்லிகிராம் கஞ்சாவுடனும் 40 வயதுடைய ஒருவர் 3,100 மில்லிகிராம் கஞ்சாவுடனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, மிச்நகர் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 2,220 மில்லிகிராம் கஞ்சாவுடன் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெட்கித் தலைகுனிவோம் – யாழில் 3 ஊடகவியலாளர்கள் பணி விலகல்

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு யாழ் ஊடகமொன்றில் பிரசுரிக்கப்பட்ட செய்தி தவறானது என சுமந்திரன் எம்.பி யினால் கொடுக்கப்பட்ட மறுப்பினை வெளியிட்டமை தொடர்பில் இரா.சம்பந்தன் குறித்த செய்தியை எழுதிய ஊடகவியலாளரும் அவரிற்கு ஆதரவாக இரு ஊடகவியலாளர்களும் தமது பணியினை இராஜினாமாச் செய்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

(“வெட்கித் தலைகுனிவோம் – யாழில் 3 ஊடகவியலாளர்கள் பணி விலகல்” தொடர்ந்து வாசிக்க…)

ஐரோப்பிய ஒன்றிய மீன் ஏற்றுமதி தடை நீக்கம்

ஐரோப்பிய ஒன்றியத்தால் (EU) விதிக்கப்பட்ட மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இன்று (21) இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, குறித்த தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்க காலத்தில், 2014 ஒக்டோபர் மாதம் ஐரோப்பிய யூனியனால் குறித்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சர்வதேச கடல் எல்லை தொடர்பான நிர்வாகம், கட்டுப்பாடு, மேற்பார்வை போன்றவை தொடர்பில் ஒழுங்கற்று செயற்படுவதாக தெரிவித்தே குறித் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இன்றைய தினம் (21) குறித்த பேச்சுவார்த்தை இடம்பெறவிருந்த நிலையில், குறித்த தடை நீக்கப்பட்டுள்ளதாக, நேற்றுமுன்தினம் (19) மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சின் செயலாளரால் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டிருந்ததோடு, பின்னர் அவ்வாறான அறிக்கையை தான் விடுக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
சூடான நாட்களும் தேவையான நடவடிக்கைகளும்.

வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி கோரும் யோசனை வடமாகாண சபையில் நிறைவேற்றம்

வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணத்துக்கு சமஷ்டி ஆட்சி முறைமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளை அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்க வேண்டும் என வட மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட யோசனை, இன்று வெள்ளிக்கிழமை (22) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இந்த யோசனை, சபையில் முன்வைக்கப்பட்டது. இந்த யோசனையைத் தயாரிப்பதற்காக, வட மாகாணசபையினால் விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது. இக்குழு, வடக்கின் பல பிரதேசங்களுக்கும் செய்து பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தே, மேற்படி யோசனையைத் தயாரித்திருந்தது.

(“வடக்கு, கிழக்குக்கு சமஷ்டி கோரும் யோசனை வடமாகாண சபையில் நிறைவேற்றம்” தொடர்ந்து வாசிக்க…)

பெருமைகொள் தமிழா

டொரோண்டோ மற்றும் அதன் பெரும் பாகத்திலும் “பெருமைகொள் தமிழா” என்று பெருமிதம் செய்து வந்த “வணக்கம் எப் எம்” வானொலி அதன் 102.7fm என்ற உரிமத்தை இழந்து விட்டது….102.7 fm கடந்த வருடம் 2015 இல் கீதவாணி வானொலி நிலைய இயக்குனர் நடா ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டு இருந்த போதிலும் “வணக்கம் எப் எம்” – இவர்கள் நடத்தில் வந்தார்கள் இந்த பன் வானொலி அலை வரிசை வானொலியாக நடத்த வென்றும் மென CRTC (கனடியன் ரேடியோ-டெலிவிஷன் மற்றும் தொலைத்தொடர்பு) வழங்கப்பட்டிருந்தது “வணக்கம் எப் எம்” அதையும் மீறி இவர்கள் தமிழுக்கே முக்கியத்துவம் வழங்கி நடாத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது……

‘பயங்கரவாத தடுப்புச்சட்டம் நீக்கப்படாது’

‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்றால் அதற்கு இணையான அல்லது நாட்டைப் பாதுகாக்கக்கூடிய சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறான புதிய பலமான சட்டம் உருவாக்கப்படும் வரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்படாது’ என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

(“‘பயங்கரவாத தடுப்புச்சட்டம் நீக்கப்படாது’” தொடர்ந்து வாசிக்க…)

காணாமற்போன மூவர் சிறையில் உள்ளனர்

வவுனியா முத்தையன்கட்டு மற்றும் புளியம்பொக்கணை ஆகிய இடங்களிலிருந்து, 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமற்போனதாகத் தெரிவிக்கப்படும் இளைஞர்கள் மூவர், மாலைதீவுகளிலிருந்து கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு, வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனது இளைய சகோதரன், 2005இல் வீட்டைவிட்டு வெளியே விளையாடச் சென்றிருந்த போது, காணாமற்போயிருந்ததாகவும் சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகளின் பின்னர், தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவர், மாலைதீவுகள் சிறை ஒன்றில் தான் உள்ளதாகக் கூறியதாகவும் அவர்களை நேரில் சென்று பார்த்துவிட்டுத் திரும்பிய கௌரிராஜா கவிதா தெரிவித்துள்ளார்.

(“காணாமற்போன மூவர் சிறையில் உள்ளனர்” தொடர்ந்து வாசிக்க…)

பிரசாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். 2008ஆம் ஆண்டு காத்தான்குடி, ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில்; தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.