‘விஜயகாந்தை வளைத்தது இப்படித்தான்…!’ கடைசி நிமிட காட்சிகள்

தேர்தல் காலங்களில் அரசியல் கட்சித் தலைவர்களை பாடாய்ப்படுத்தும் சென்டிமெண்ட்டுக்கு மக்கள் நலக் கூட்டணியும் தப்பவில்லை. பங்குனி உத்திரத்தின் நல்லநேரத்தில் கூட்டணியை உறுதி செய்திருக்கிறார் விஜயகாந்த். இதனால், தி.மு.கவின் கடைசி நிமிட நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது.

(“‘விஜயகாந்தை வளைத்தது இப்படித்தான்…!’ கடைசி நிமிட காட்சிகள்” தொடர்ந்து வாசிக்க…)

ரோஹித் பெயரில் சட்டம் வரும் வரை போராட்டம்… எச்சரிக்கும் கன்ஹையா!

ஹைதராபாத்: ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வேமூலாவின் பெயரில் சட்டம் இயற்றப்படும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும் என்று ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யு.) மாணவர் சங்கத் தலைவர் கன்ஹையா குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா, ரோகித்தின் சகோதரர் ராஜா ஆகியோரை சில மாதங்களுக்கு முன் நேரில் சந்தித்து தேச துரோக வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையான டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்ஹையா குமார் ஆறுதல் கூறினார்.

(“ரோஹித் பெயரில் சட்டம் வரும் வரை போராட்டம்… எச்சரிக்கும் கன்ஹையா!” தொடர்ந்து வாசிக்க…)

வைகோவின் ஆகாச வெடி: ‘இலங்கை தமிழரை திருப்பியனுப்பினால் கிளர்ச்சி வெடிக்கும்’

‘இலங்கை தமிழர் தயன்ராஜை இலங்கைக்கு அனுப்பும் முடிவை கைவிட வேண்டும்’ என இந்திய மத்திய அரசு மற்றும் தமிழக மாநில அரசிடம் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘இந்தியாவில் இலங்கை அரசின் ஆதிக்கம்தான் இன்னும் செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

(“வைகோவின் ஆகாச வெடி: ‘இலங்கை தமிழரை திருப்பியனுப்பினால் கிளர்ச்சி வெடிக்கும்’” தொடர்ந்து வாசிக்க…)

பிரஸ்ஸல்ஸில் விமான நிலையத்தில் வெடிப்புகள்: 34 பேர் பலி

பெல்ஜியம், பிரஸ்ஸல்ஸில் உள்ள சவென்டம் விமான நிலையத்துக்கு வெளியே இடம்பெற்ற இரண்டு வெடிப்பு சம்பவங்களில் 34 பேர் பலியாகியுள்ளதாகவும் 170 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் வெளிநாட்டு செய்தி தெரிவிக்கின்றது. வெடிப்பு சம்பவமொன்றையடுத்து விமானநிலையத்தின் நுழை வாயிலிலிருந்து கரும்புகை மேலெழும்பியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் மறு அறிவித்தல் வரும்வரையிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு

பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களையடுத்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்றுக்காலை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருக்கின்ற இரண்டு விமானங்களுக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு எடுக்கப்பட்டிருந்த தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கையாக இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே அரசின் இலக்கு

அதிகாரங்களைப் பற்றிக்கொள்ளாது அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதே தமது நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சர்வதேச ரீதியில் அரசியல் நிபுணர்கள் மற்றும் அரசியல் யாப்புக்கள் மூலம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது பற்றியே பேசப்படுகிறது. இது போன்று தானும் அதிகாரங்களை பகிர்ந்தளிக்கவே பதவிக்கு வந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

(“அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே அரசின் இலக்கு” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அரசியலமைப்பு பணிகள் மேயில் ஆரம்பம்

அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாக, அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள், மே மாதத்தில் ஆரம்பிக்கப்படுமெனத் தெரிய வருகிறது. நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களையும் அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கும் குறித்த பிரேரணை, அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள், மே மாதத்தின் முதல் வாரத்தில் ஆரம்பிக்குமெனத் தெரியவருகிறது.

(“புதிய அரசியலமைப்பு பணிகள் மேயில் ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

(“பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவு வல்லன், வீராமலை மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள்..!

சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களே!

கடந்த வருடம் புங்குடுதீவின் வல்லன் பிரதேசத்தில் நடைபெற்ற ஒரு துர்ப்பாக்கிய சம்பவத்தினைத் தொடர்ந்து வல்லன், வீராமலை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் மிகவும் தொலைவிலுள்ள புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்பதற்குச் செல்ல முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

(“சுவிஸ் ஒன்றியத்தினால், புங்குடுதீவு வல்லன், வீராமலை மாணவ, மாணவியருக்கான பிரயாண ஒழுங்குகள்..!” தொடர்ந்து வாசிக்க…)

கியூபாவுக்கு ஒபாமா வரலாற்று விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கியூபாவுக்கு வரலாற்று முக்கியம் வாய்ந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். பல தசாப்த எதிரி நாடான கியூபாவின் கொம்மியுனிஸ தலைவருடனும் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். 1959 கியூப புரட்சிக்குப் பின்னர் பதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் கியூபாவுக்கு விஜயம் செய்வது இது முதல் முறையாக அமைந்தது. இரு நாடுகளும் முன்னாள் பனிப்போர் எதிரி நாடுகளாகும்.

(“கியூபாவுக்கு ஒபாமா வரலாற்று விஜயம்” தொடர்ந்து வாசிக்க…)