சு.கவின் உடைவைத் தடுக்க பகிரதப் பிரயத்தனம்
சந்திரிகா தொடர்ந்தும் எதிர்ப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் இணைத்துக் கொண்டு எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முகம் கொடுக்க சுதந்திரக் கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சுதந்திரக் கட்சியில் உள்ள சிலரும் ஐ. ம சு. மு. கூட்டுக் கட்சியிலுள்ள சிலரும் இணைந்து தனியாக கட்சியமைத்து தேர்தலுக்கு முகம் கொடுக்க முயலும் நிலையில் கட்சி உடைவதை தடுப்பதற்காக ஜனாதிபதி இவ்வாறு உடன்பட்டுள்ளதாக அறிய வருகிறது.