பெரும்பாலான மக்கள் இனவாதிகள் அல்ல

சாதாரணமான தமிழ் மக்களும், சிங்கள மக்களும் தாங்கள் இனவாதிகள் அல்ல என்பதை அடிக்கடி நிரூபித்துள்ளனர். ஒட்டுமொத்த சமூகத்தையும் இனவெறியூட்டும் இனவாதிகளின் முகத்தில் கரி பூசியுள்ளனர். சிங்களவர்கள் மத்தியில் மட்டுமல்ல, தமிழர்கள் மத்தியிலும் இனவாதிகள் தமது அரசியல் நலன்களுக்காக ஆடும் நாடகங்கள் எடுபடுவதில்லை.

(“பெரும்பாலான மக்கள் இனவாதிகள் அல்ல” தொடர்ந்து வாசிக்க…)

துருக்கிக்கான ரஷ்ய தூதர் சுட்டுக்கொலை

துருக்கியின் அங்காரா நகரில் நடைபெற்ற ஒரு புகைப்படக் கண்காட்சி விழாவில் உரையாற்றிக் கொண்டிருந்த துருக்கிக்கான ரஷ்ய தூதரை மர்ம நபர் ஒருவர் சுட்டுக் கொன்றார். தூதரை சுட்டுக்கொன்ற நபரை அங்கிருந்த மற்ற போலீஸார் சுட்டு வீழ்த்தினர். இச்சம்பவம் தொடர்பாக துருக்கியின் தேசிய தொலைக்காட்சியான என்டிவி, “துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரை கார்லோவ் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் ‘அல்லாஹூ அக்பர்’ என துதிபாடிவிட்டு துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார். பின்னர் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த சில புகைப்படங்களையும் அவர் சுட்டு வீழ்த்தினார். திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பீதியடைந்த மக்கள் பாதுகாப்புக்காக அங்குமிங்கும் ஓடியதால் அரங்கத்தில் பதற்றம் நிலவியது. துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் மூன்று பேர் காயமடைந்தனர்” எனத் தெரிவித்தது.

(“துருக்கிக்கான ரஷ்ய தூதர் சுட்டுக்கொலை” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவர்?

ஒருவரின் கருத்தை விமர்சிக்கவோ அல்லது அவரின் பதிவை மறுதலிக்கவோ இதனை எழுதவில்லை. நிலைமைகளை அலசி ஆராய்ந்து, நிதர்சனம் இது தான் என விளக்கம் தரும் எனது எண்ணமே இப்பதிவு. ஜெயலலிதா தனக்கு பின்னர் யார் அ தி மு க தலைமை என உருவாக்காதது போலவே, சம்மந்தர் அவர்களும் தனக்கு பின் த தே கூ வின் தலைமை யார் என தெரிவு செய்யாதது, அவரும் ஜெயலிதா போலவே தன்னை மட்டும் முன்னிலை படுத்தியே அரசியல் செய்வதாக, அந்தப் பதிவில் குறை கூறப்பட்டது. அவரின் கூற்று சரி பிழை என்பதற்கு அப்பால் ஒரு விடயம் உண்டு.

(“தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவர்?” தொடர்ந்து வாசிக்க…)

ஜெயலலிதா ஜெயராம்-மறு பக்கம்

உலகில் இவரைப்போல எந்தப் பெண்ணும் அதிகளவு ஆண்களால் தவறாக பார்க்கப்பட்டவர்கள் இருக்கமுடியாது.அவர் இறக்கும்வரை அந்த தரக்குறைவான வசைமொழிகள் தொடர்ந்தன.அதையும் மீறி தலை நிமிர்ந்தவர்.அதன் காரணமாக அவரின் உழைப்பை விய்ந்தேன்.ஆனால் அவர் ஒரு ஆரோக்கியமான அரசியல்வாதியோ தலைவரோ அல்ல.

(“ஜெயலலிதா ஜெயராம்-மறு பக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

பல ஆயிரம் மக்கள் வீதியெங்கும் குழுமியிருக்க பிடல் காஸ்ட்ரோ இன் இறுதி யாத்திரை

வெள்ளை றோஜா மலர்களினால் சோடிக்கப்பட்ட பச்சை நிற ரஷ்யத் தயாரிப்பான இராணுவ ஜீப் வாகனத்தில் நாலு நாட்கள் கியூபாவின் பட்டி தொட்டியெல்லாம் 800 கிலோ மீற்றர் பயணம் செய்த பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி இறுதி அமைவிடமான சன்டியாகோவை இன்று அடைந்தது. வீதி எங்கும் பல ஆயிரத்தற்கு மேற்பட்ட மக்கள் குழுமி நின்ற தமது தலைவனுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். புரட்சிக்கு பின்னர் 50 வருட காலமாக கியூபாவின் ஆட்சிப் பொறுப்பில் நாட்டை வெற்றிப்பாதையில் கொண்டு சென்ற தமது தலைவனுக்கு தமது கண்ணீரை காணிக்கையாக்கி வழியனுப்பி வைத்தனர்.

(“பல ஆயிரம் மக்கள் வீதியெங்கும் குழுமியிருக்க பிடல் காஸ்ட்ரோ இன் இறுதி யாத்திரை” தொடர்ந்து வாசிக்க…)

பிடல் காஸ்ரோ: மனித குல வாழ்விற்காக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த தோழன்

(சாகரன்)

பொது உடமைத் தத்துவத்தை தனது நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் அடிநாதமாக கொணடு செயற்பட்டவர். சர்வதேசம் எங்கும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களுக்கு தனது தார்மீக ஆதரவை வழங்கியவர். மத்திய தென் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட ஏகாதிபத்திய எதிர்பு இடதுசாரிப் போராட்டங்களின் ஆதர்ச புருஷராக விளங்கியவர். தொடர்ந்த அங்கு கிடைத்த போராட்ட வெற்றிகளை ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து காப்பாற்ற இன்று வரை அயராது உழைத்தவர். இடதுசாரிகளிடம் காணப்படும் நாடுகளின் இறமையை அங்கீகரித்து அந்தந்த நாடுகளின் உள் நாட்டுப் பிரச்சனைகளை அந்த நாட்டு மக்களே போராடி, பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் இறுதிவரை தெளிவாக செயற்பட்டவர். எந்த வகையிலும் ஆக்கிரமிப்பு அற்ற உதவிகளை விடுதலை வேண்டிப் போராடிய நாடுகளுக்கு வழங்கியவர் இதனை நாம் தென் ஆபிரிக்காவின் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய ஆதரவில் இருந்து மற்றய எதனையும் விட அதிகம் அறியலாம்.

(“பிடல் காஸ்ரோ: மனித குல வாழ்விற்காக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்த தோழன்” தொடர்ந்து வாசிக்க…)

கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….

அமெரிக்கா தனது ஏகாதிபத்திய கொள்கையின் மூலம் கியூபாவிலும் தனது கொடியை நாட்டியிருந்தது. ஆனால் அமெரிக்காவால் அங்கு நெடுங்காலம் நிலைத்து நிற்கமுடியவில்லை. அமெரிக்காவின் பல பெரு முதலாளிகள் கியூபாவில் கால்பதித்து கியூபா நாட்டு அரசின் துணையுடன் அங்கு தொழில் செய்து கியூபா நாட்டு மக்களையும் அதன் செல்வத்தையும் சுரண்டிக்கொண்டிருந்தனர்.

(“கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….” தொடர்ந்து வாசிக்க…)

அரசாங்கம் பதவி விலக வேண்டும்!

2015 ஜனவரி 8ஆம் திகதி இலங்கையின்  ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கும், அதே ஆண்டு ஓகஸ்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் பிரதமராகப்  பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கவிற்கும்  இடையிலான சந்தர்ப்பவாத தேன் நிலவு முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.  ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக்
கட்சியின் ஒரு பிரிவினரும் இணைந்து உருவாக்கிய  தற்போதைய அரசாங்கத்திற்குள் ஆரம்பம் முதலே  ஏராளமான முரண்பாடுகளும், இழுபறிகளும் இருந்து  வந்தபோதிலும், இரு தரப்பினரதும் பரஸ்பர
நலன்களுக்காக அவை மூடி மறைக்கப்பட்டே (மேலும்)

வீடு திரும்புகின்றார் ஜெயலலிதா?

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று சனிக்கிழமை (19) மாலை 5 மணிக்குப் பின்னர், தனி அறைக்கு மாற்றப்படுன்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், முதல்வருக்கு ஊட்டச்சத்துத் தேவைப்படுவதால் உயர் ஊட்டச்சத்துகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் அவ்வப்போது தான் செயற்கை சுவாசம் அளிக்கப்படு வருவதாகவும், அவர், விரும்பும் போது வீடு திரும்பலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

(“வீடு திரும்புகின்றார் ஜெயலலிதா?” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு வாக்குமூலம்

நவம்பர் 13 ஞாயிற்றுக் கிழமை ஸ்காபரோ யுடவழn வுழறநச Pயசவல ர்யடட இல் அறிமுகம் செய்து வைக்கப்படும் “தாங்கொணா துன்பம்” நூலிலிருந்து….

-சாந்தி விவேகானந்தன்-

பெற்றோரின் பிள்ளை. எனது கணவர். என் பிள்ளைக்கு தந்தை. தங்களது?
செப்டெம்பர் 14, 1990 ஆம் ஆண்டு. அது ஒரு இரவு நேரம் நாங்கள் அனைவரும் நித்திரையில் இருந்தோம். இந்த இரவுதான் எனக்கும் அன்ரனுக்கும் எங்களது மகன் மகிந்தனுக்குமான கடைசி இரவு என்பது எனக்கு அப்போது தெரியாது. இரவு 10 மணியளவில் “அண்ணை அண்ணை” என்று யாரோ கூப்பிடும் சத்தம் எனக்குக் கேட்டது. நான் எழுந்து யாரோ வெளியிலிருந்து கூப்பிடுகிறார்கள் என்று எனது கணவரை எழுப்பிச் சொன்னேன். அவர் டோர்ச் லைட்டால் ஜன்னல் வழியாக பார்த்தார். அங்கே இரண்டு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர்.

(“ஒரு வாக்குமூலம்” தொடர்ந்து வாசிக்க…)