பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 31)

1970 அப்பசி மாதம் இல்ங்கை வானொலியில் ஒரு அதிர்ச்சிகரமான புதிய செய்தி ஒலிபரப்பானது.அன்றைய நிதி அமைச்சர் கலாநிதி என்.எம்.பெரேரா புதிய அம்பது,நூறு ரூபா நாணயத்தாள்களை அரசாங்கம் அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார்.

(“பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 31)” தொடர்ந்து வாசிக்க…)

இன்றும் நீங்கள் ஆதரவாக பதிவிட்டுள்ள முன்னிலை சோசலிசக் கட்சியினரும் ஒரு காலத்தில் மகிந்தவை ஆட்சியில் அமர்த்தியவர்களே. அவர்கள் இடதுசாரிகளா? அல்லது வலதுசாரிகளா?

ஒரு காலத்தில் அது செய்தார்கள், இது செய்தார்கள் என்று குற்றம் சாட்டுவதாக இருந்தால், நாங்கள் விடுதலைப் புலிகளையும் ஆதரிக்க முடியாது. ஒரு காலத்தில் அவர்கள் தான் மகிந்தவை ஆட்சியில் அமர்த்துவதற்கு உதவியாக தேர்தலை பகிஷ்கரித்தார்கள். அதற்காக, மகிந்த புலிகளுக்கு கோடிக்கணக்கான பணம் கொடுத்ததாக, மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.

(“இன்றும் நீங்கள் ஆதரவாக பதிவிட்டுள்ள முன்னிலை சோசலிசக் கட்சியினரும் ஒரு காலத்தில் மகிந்தவை ஆட்சியில் அமர்த்தியவர்களே. அவர்கள் இடதுசாரிகளா? அல்லது வலதுசாரிகளா?” தொடர்ந்து வாசிக்க…)

மே தினம் அது உழைப்பாளிகளின் உரிமைகான போராட்ட தினம்

(சாகரன்)

19ம் நூற்றாண்டின் இறுதியில் 8 மணி மட்டும் வேலை கோரிப் போராட்டத்தை ஆரம்பித்த தொழிலாளி வர்க்கம் பல உயிர் தியாகங்களின் மத்தியில் ஓரளவிற்கேனும் சில உரிமைகளை அன்று தனதாக்கிக் கொண்டது வரலாறு. முதலாளித்துவத்தின் தாயகமான அமெரிக்காவிலேயே இந்தப் போராட்டத்திற்கான பொறி தட்டி வைக்கபப்பட்டது என்பது முதலாளித்துவ தாயகத்தில் மனித உழைப்பு சுரண்டல்கள் அன்றைய காலகட்டத்தில் எவ்வளவு தூரம் உழைப்பாளிகளை வாழும் நிலையிலேயே கொன்று குவித்துக் கொண்டிருந்தது என்பதற்கான சான்றாக கொள்ளலாம்.
அன்றைய கால கட்டத்தில் அமெரிக்கா கறுப்பின மக்களை அடிமைகளாக கால்களை சங்கிலியால் பிணைத்து வேலை வாங்கிய யுகம். கிரேக்க சாம்ராஜ்யமும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும், இதனைத் தொடர்ந்து ஜேர்மன் நாஜிகளும் ரஷ்யாவின் முடிக்குரிய மன்னன் ஜார் மன்னனின் ஆட்சிகளும் கொடிகட்டிப் பறந்த காலம் அது. அமெரிக்க அப்போது முதலாளித்துவ ஏகாதிபத்தியமாக வளர்ச்சயடைந்து வரும் நிலையில் மட்டும் இருந்து. நிலப் பிரபுவத்தின் வளர்சிக் காலத்தில் ஆண்டான் அடிமை நிலைகளே பெரிதும் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகில் ஏற்பட்ட தொழிற் புரட்சிக்கு பின்பே தொழிலாழிகளின் சுரண்டல்கள் உச்சத்தை அடைந்திருக்கின்றவோ என்று எண்ணத் தோன்றும் அளவிற்கு இன்றைய நிலமைகள் எற்பட்டிருக்கின்றன.

(“மே தினம் அது உழைப்பாளிகளின் உரிமைகான போராட்ட தினம்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர்.ஓ (பதிவு 19)

பற்குணம் அவர்கள் பயிற்சிகாலத்தில் வாழைச்சேனையில் பணியாற்றினார்.ஒரு இளைஞர் ஒருவர் அதுவும் தமிழர் புதிதாக நிர்வாக சேவையில் சேர்ந்து தன் தொகுதியில் பணியாற்றுவதை அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் இராசதுரை பற்குணத்தை தானாகவே நேரில் வந்து சந்தித்து வாழ்த்தினார்.இது பற்குணத்துக்கு அதிரச்சியாகவும் கொஞ்சம் சங்கடமாகவும் இருந்தது.ஏனெனில் அவர் ஒரு மக்கள் பிரதிநிதி.அவர் போய் சந்திக்க வேண்டிய ஒருவர் தன்னை வந்து பார்த்து வாழ்த்தி வரவேற்றது கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது.இதை அவரிடமே நேரில் சொன்னார்.இனிமேல் தேவை எனில் அழையுங்கள் நானே வருவேன் என்றார்.ஆனாலும் மீண்டும் சில தடவை அழைக்காமலே இராசதுரை வந்து பார்த்தார்.கொள்கை முரண்பாடு இருந்தபோதும் இராசதுரையின் இந்த பண்பு பற்குணத்துக்கு பிடித்திருந்தது .இராஜன் செல்வநாயகம் கவனிக்கவே இல்லை.

(“பற்குணம் டி.ஆர்.ஓ (பதிவு 19)” தொடர்ந்து வாசிக்க…)

அரசியலையும் ஆட்டிப்படைக்கும் மின்சாரம்

பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள அரசாங்கத்துக்கு அடுத்த சவாலாக மாறியிருக்கிறது மின்சாரத் தடை. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திடீரென ஏற்பட்ட மின்சாரத் தடை, நாடு முழுவதையும் பல மணி நேரம் இருளில் மூழ்கச் செய்திருந்தது. பல இடங்களில் மின்சார விநியோகம் சீராக, இரவு 10 மணிக்கு மேல் சென்றது. இதற்கு முன்னர், கடந்த சில மாதங்களுக்குள் இரண்டு தடவைகள் இதுபோன்ற நாடளாவிய மின்சாரத் தடை ஏற்பட்டது.

(“அரசியலையும் ஆட்டிப்படைக்கும் மின்சாரம்” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 5)

இரத்தினம் கொலை முயற்சிகள் யாவும் தோல்வி கண்டதை அடுத்து ஊரையே பழிவாங்க திட்டம் போட்டார்கள்.இவரகளுக்கு முன் எச்சரிக்கையாக எமது ஊரவர்கள் இரவு வேளைகளில் தெருக்கள்,பற்றைகள் எல்லாம் இரவுகளில் வலம் வந்தனர்.இதனால் இலகுவாக திட்டம் தீட்ட முடியவில்லை.இதை அறிந்த அவர்கள் பொலிசார் உதவியை நாடி நமது ஊரவர்களை சோதனைகள் போட வைத்தனர்.எமது ஊரில் எல்லைகளில் தமிழ் பொலிசார் நடமாடி அவர்களைக் பாதுகாக்க உதவினர்.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 5)” தொடர்ந்து வாசிக்க…)

புலம்பெயராத குட்டிகளாவது அனுபவிக்கட்டும்?

தமிழர் உணவு பார்த்தலே நாவூறுகிறது! புலம்பெயராத குட்டிகளாவது அனுபவிக்கட்டும்?

 

தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு கிராமிய சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளை சுவையுடன் சமைக்க விருந்தோம்ப தமிழர் சமையற்கலை வழிசொல்கின்றது. பல்வகை மரக்கறிகள், சுவையூட்டும் நறுமணம் தரும் பலசரக்குகள், கடலுணவுகள் தமிழர் சமையலில் இன்றியமையா இடம் பெறுகின்றன. சோறும் கறியும் தமிழரின் முதன்மை உணவாகும். கறிகளில் பலவகையுண்டு; எடுத்துக்காட்டுக்கு, மரக்கறிக் குழம்பு, பருப்பு, கீரை, வறை, மசியல், மீன் கறி என்பன. பொதுவாக, தமிழர் உணவுகள் காரம் மிகுந்தவை. தேங்காய், மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம்,உள்ளி, இஞ்சி உட்பட பல்வகை பலசரக்குகள் கறிகளுக்கும் பிற பக்க உணவுகளுக்கும் சேர்க்கப்படுவது வழக்கம்.

(“புலம்பெயராத குட்டிகளாவது அனுபவிக்கட்டும்?” தொடர்ந்து வாசிக்க…)

இன்று கன்பொல்லை தியாகிகள் தினம்.

 

தோழர்கள் மா.சீவரத்தினம், க.செல்வராசா, கி.வேலும்மையிலும் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் உயிர்களை1970.02.12 ஆகுதி ஆக்கி சாகாவரம் கொண்ட நாள். அவர்களுக்கு என் வணக்கம். 18 மாசி 1968 தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் முன்னணி போராளி மந்துவில் இரத்தினம் காட்டிக்கொடுக்கப்பட்டு சாதி வெறியர்களால் கொல்லப்பட்டார்.இவரை தானே கொலை செய்ததாக புழுகி அச்சுவேலி தவராசன் தன் தலையில் மண்ணை வாரிப் போட்டான். அச்சுவேலி தவராசன் ஆண்டுகள் ஞாகம் இல்லை அச்சுவேலியில் வெட்டிச்சாய்கப்பட்டு கொலை செய்யப்பட்டான் 1968/ 69 என்ற நினைக்கின்றேன். எனது அறியாப் பருவம் அது.

(“இன்று கன்பொல்லை தியாகிகள் தினம்.” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மீள்குடியேற்ற மக்களை சந்தித்தார்

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் ராட் அல் ஹீஸைன் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து மருதனார்மடம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்தில் வாழும் மக்களை நேரில் சென்று சந்தித்தார். கடந்த 25 வருடங்களாக சொந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் அகதி வாழ்வு வாழும் மக்களையே அவர் நேரில் சென்று கலந்துரையாடினார். அங்கு மக்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்ககையில்,மீள்குடியமர்வு தொடர்பாக ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் வலியுறுத்தியுள்ளளேன் எனவும், எனது அடுத்த கட்ட விஜயத்தில் நான் உங்களை சொந்த இடத்தில் சந்தி்ப்பேன் என தான் நம்புவதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் முகாம் மக்களிடம் தெரிவித்தார்.