எங்களுக்கு எல்லாவற்றையும் அதிகரிக்க வேண்டும்…. இல்லாவிட்டால் ஒன்றும் செய்யமாட்டோம் – வட மாகாணசபை உறுப்பினர்கள்

வட மாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனம் அதிக சம்பளம் வேண்டும் இல்லையேல் மக்கள் சந்திப்புக்கள் ரத்தாகும் எனக் கோரி வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சபையில் இன்று அடுக்கடுக்காகக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஏனைய மாகாணங்களில் அமைச்சர்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் அனைத்து வசதிகளும் எமக்கும் வழங்கப்படவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இவற்றுக்கெல்லம் மேலாக வட மாகாண அமைச்சர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்திப்பதைப் குறைக்கவேண்டி ஏற்படும் என்றார் அமைச்சர் டெனீஸ்வரன்.

வட மாகாண சபையின் 37வது அமர்வு இன்று நடைபெற்றது. அதன்போதே இந்தக் கருத்துக்களை வெளியிட்டனர் மாகாணத்தில் மக்கள் பிரிதிநிதிகள்.

இன்றைய அமர்வில் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மாகாண சபை முதலமைச்சர் அமைச்சர்கள் உறுப்பினர்கள் அவைத் தலைவர் பிரதி அவைத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் மாதாந்த கொடுப்பனவு தொடர்பாக கேள்வி ஒன்றை கிண்டிவிட உசாரான ஆளும்கட்சி உறுப்பினர்கள் சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தவர்கள் போல் சொகுசுக் கார் முதல் காச்சலுக்கு குளிசைவரை கேட்டு சபையை குழப்பியடித்தனர்.

பெண் போராளி தமிழினியின் மரணம் போர்க்குற்றத்தின் குறியீடு

தனது இளமைக் காலம் முழுவதும் போராளியாகவே வாழ்க்கையை நகர்த்திய தமிழினி இன்று காலை புற்று நோயால் காலமனார். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழினி கடந்த வாரம் கொழும்பிலுள்ள மகரகம வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் பெண்கள் அணியின் பொறுப்பாளராகச் செயற்பட்ட தமிழினின் 1991 ஆம் ஆண்டில் தனது 19 வது வயதில் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டார். பெண்கள் இராணுவப் பயிற்சி, பிரச்சாரம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமிழினி பல இராணுவத் தாக்குதல்களை முன் நின்று நடத்தினார். யுத்தக் குற்றங்களின் நேரடிச் சாட்சிகளில் ஒருவரான தமிழினியின் மரணம் வரலாற்றின் ஒரு பிரதான கட்டத்தின் மரணமாகும்.

(“பெண் போராளி தமிழினியின் மரணம் போர்க்குற்றத்தின் குறியீடு” தொடர்ந்து வாசிக்க…)

கனடிய பாராளுமன்றத் தேர்தல். யாருக்கு வாக்களிப்பது

நாளைக்கு கனடிய பாராளுமன்றத் தேர்தல். யாருக்கு வாக்களிப்பது என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது. மிகவும் மோசமான பொருளாதார வீழ்ச்சியை கனடா எதிர்நோக்குகின்றது. என்.டி.பி கட்சி மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. சிறுபான்மை மக்களின் நலனிலும் அதிக அக்கறை செலுத்துகின்றது. சட்டங்கள் சி 24, சி 51ஐ முற்றாக நிராகரிக்கின்றது. இவர்களது வரவு செலவு திட்ட சமநிலை சாத்தியப்படுமா என்ற ஐயமே உள்ளது. என்.டி.பி கட்சி முதன்மை குடிகளின் நலனிற்கும் உரிமைக்கும் முக்கியத்துவமளிக்கின்றது. லிபரல் கட்சியும் அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும் எனக் கூறுகின்றது. சி24ஐ முற்றாக நிராகரித்தாலும் சி51 ஐ திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறியமை ஏமாற்றமளிக்கின்றது.

(“கனடிய பாராளுமன்றத் தேர்தல். யாருக்கு வாக்களிப்பது” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் திலீபனைப்பற்றி அறிந்து கொள்ளுங்கள்

84ம் ஆண்டு எனது ஊரில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றுக்காக புலி உறுப்பினரன முரளி வந்திருந்தார். அப்போது புலிகள் தலைமறைவாக இருந்த காலம். ஊருக்குள் ஆட்சேர்க்கும் நடவைக்கையில் முரளி ஈடுபட்டிருந்தார். கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் முரளியைத் தாறுமாறாகக் கேள்விகள் கேட்டனர் அங்கு ஒருவர் கேட்ட .கேள்விக்கு முரளியால் பதில் சொல்ல முடியவில்லை.. கேள்வி கேட்டவர் வேறு யாருமல்ல. ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தைச் சேர்ந்த நக்கீரன்.

(“புலிகளின் திலீபனைப்பற்றி அறிந்து கொள்ளுங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

ஆச்சி மனோரம்மா எம்மை விட்டு பிரிந்தார்

பழம்பெரும் நடிகை மனோரமா(78) உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் ‘ஆச்சி’ என அன்போடு அழைக்கப்பட்ட மனோரமா ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை பெற்றிருந்தார். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கோபி சாந்தா. பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரைப்பட விருது போன்ற பல விருதுகளை பெற்றவர் மனோரமா. பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மனோரமா இன்று இரவு 11 மணியளவில் மரணமடைந்தார்.

மோடியின் தோல்விகள்

 

சிலிக்கான் வேலியில் மோடி கிளப்பும் விளம்பரப் புழுதி, நாளிதழ்களை கறையாக்கி வருகிறது. கறையும், புழுதியும் நல்லதல்ல என்றாலும் மோடி ஆண்டையின் காலில் விழுந்து கிடக்கும் ஊடகங்கள் சலிக்காமல் பஜனையை கிளப்பி வருகிறார்கள். மோடியை புகைப்படம் பிடிப்பதிலிருந்து, ஆட்களை அழைத்து வருவது, உள்ளூர் சில்லறை மற்றும் மொத்த விற்பனை பிரமுகர்களை காட்டுவது, வசனங்களை தயாரிப்பது, ஊடகங்களில் மானே தேனே போட்டு எழுதிக் கொடுப்பவது வரை பெரும்படையே அங்கும் இங்கும் வேலை செய்கிறது. ஆனாலும் ஒரு குற்றவாளியை இப்படி வாஷிங்டன் சென்ட் போட்டு மறைக்க முடியுமா?

(“மோடியின் தோல்விகள்” தொடர்ந்து வாசிக்க…)