கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கும் ஐ.ம.சு.கூ சமுகமளிக்கவில்லை

சபாநாயகர் தலைமையில் சற்றுமுன்னர் நிறைவடைந்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில், ஒழுங்குப்பத்திரத்தில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட யோசனையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டுவருவதற்கு, இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கும் ஐ.ம.சு.கூ சமுகமளிக்கவில்லை” தொடர்ந்து வாசிக்க…)

’பின்புலத்தில் சம்பந்தனும் மேற்குலக நாடுகளும்’

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமைகளுக்குப் பின்னால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மேற்குலக நாடுகளுமே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று(04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இ​தேவேளை, இந்நெருக்கடி நிலைமையினை சாதகமாக்கிக்கொண்டு சமஷ்டி ஆட்சிமுறையைக் கொண்டுவருவதற்கு முயற்சிக்கிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘26ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானது’

நாட்டுக்காக ஒக்டோபர் 26ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட தீர்மானம் சரியானதென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (04) மாலை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்துரையாற்றுகையில், ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கத்தையும், ஐக்கிய தேசிய கட்சியை​யும் நாசமாக்கியுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

காங்கிரஸுடன் நெருங்கும் ஆம் ஆத்மி: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார் கேஜ்ரிவால்

டெல்லியில் 1998 முதல் 2013-ம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. இதற்கு, புதிய கட்சியாக உருவான ஆம் ஆத்மி கட்சி முடிவு கட்டியது டெல்லியில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆட்சி அமைந்தது முதல், ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே மோதல் வலுத்து வந்தது. அதன் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை எதிர்த்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து வந்த காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மியை மட்டும் சேர்க்கவில்லை. (“காங்கிரஸுடன் நெருங்கும் ஆம் ஆத்மி: எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார் கேஜ்ரிவால்” தொடர்ந்து வாசிக்க…)

மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை

(அ. அகரன்)

‘நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும்’ (553) என்ற திருக்குறள் வாசகத்தின் பிரகாரம், ஒவ்வொரு நாளும் குடிமக்களின் நன்மை தீமைகளை ஆராய்ந்து, முறை செய்யாத அரசன், நாள்தோறும் மெல்ல மெல்லத் தன் நாட்டை இழப்பான் என்பதற்கிணங்க, அரசியல் என்பது அமைந்திருக்க வேண்டும்.

(“மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை” தொடர்ந்து வாசிக்க…)

ஐ.தே.மு இறுதித் தீர்மானம்

நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சினை தொடர்பில், இன்று (03) இரவு, ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர், மீண்டும் இது விடயத்தில் ஜனாதிபதியைச் சந்திக்கப்போவதில்லையென, ஐக்கிய தேசியக் கட்சி அடங்கலான ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த, ஐ.தே.மு.வின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்த வாரத்துக்குள் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்றார். அவ்வாறாக, இந்த வாரத்துக்குள் இறுதித் தீர்மானமொன்று வழங்கப்படவில்லையாயின், மாற்று வழி தொடர்பில் சிந்திக்கவேண்டி ஏற்படுமெனவும், அவர் மேலும் கூறினார்.

வவுணதீவு சம்பவத்தைக் கண்டித்து அம்பாறையில் ஆர்ப்பாட்டங்கள்

மட்டக்களப்பு, வவுணதீவில் பொலிஸார் இருவர், சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டங்கள் இன்று (03) முன்னெடுக்கப்பட்டன. திருக்கோவில் ஆர்ப்பாட்டம், திருக்கோவில் பிரதேச சமாதானத்தை விரும்பும் மக்கள் வணிகம் எனும் அமைப்பாலும், அக்கரைப்பற்று ஆர்ப்பாட்டம், மக்கள் ஒருங்கிணைப்புக் குழுவாலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

(“வவுணதீவு சம்பவத்தைக் கண்டித்து அம்பாறையில் ஆர்ப்பாட்டங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

வவுணதீவு சம்பவம்; முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் விசாரணை

மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலம் அருகில் பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, வவுணதீவிலுள்ள முன்னாள் போராளிகளின் வீடுகளுக்குச் சென்ற படைப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல்களை நடத்தியதுடன், விசாரிப்பிலும் ஈடுபட்டனர். மட்டக்களப்பு வவுணதீவு வாவியிலும் கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

(“வவுணதீவு சம்பவம்; முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் விசாரணை” தொடர்ந்து வாசிக்க…)

நடிகர் மோகன்லால் மீது பிரகாஷ் ராஜ் பாய்ச்சல்

மீடூ இயக்கம் தொடர்பான மோகன்லாலின் கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய திரையுலகில் மீடூ இயக்கம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்து வருகிறது. தமிழ், கன்னடம் மற்றும் இந்தி திரையுலகில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்கள். (“நடிகர் மோகன்லால் மீது பிரகாஷ் ராஜ் பாய்ச்சல்” தொடர்ந்து வாசிக்க…)

இந்திய அணியைக் கிண்டல் செய்து ஆஸி. நாளேடு செய்தி

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணியையும், கேப்டன் விராட் கோலியையும் கிண்டல் செய்து ஆஸி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு மக்களே கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு விளையாடச் செல்லும் வெளிநாட்டு அணிகளை தரக்குறைவாக கிண்டல் செய்வதும், செய்தி வெளியிடுவதையும் அங்குள்ள ஊடகங்கள் சில வாடிக்கையாக வைத்துள்ளன. தென் ஆப்பிரிக்க, இந்திய, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து போன்ற வலிமையான அணிகள் அங்கு விளையாடும் போது கிண்டல் செய்திகள் தொடர்ந்து வந்தது.

(“இந்திய அணியைக் கிண்டல் செய்து ஆஸி. நாளேடு செய்தி” தொடர்ந்து வாசிக்க…)