மாட்டு இறைச்சியை அதிகமாக உண்டவர்கள்பிராமணன்களும், அரசர்களும் தான்..

சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் தமிழ் நாக அரச வம்சத்தினர் சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர்….

நாக வம்சத்தினர் காலத்தில் தான் ஹரப்பா, சிந்து சமவெளி ,நகரங்கள் உருவாக்கப்பட்டு..செழிப்பாக இருந்தது…

அப்போது வந்த வெளிறிய ஆரியர்கள் …
இங்கு நிரந்தரமாக குடியேற வேண்டும் என ஆசைப்பட்டு…

நாக அரசர்களிடம் பணியில் அமர்ந்து சூழ்ச்சி செய்து அரசர்களிடையே பிரிவினையை உருவாக்கி…

வெள்ளையர்கள் போல் பிரித்தாளும் கொள்கையை கடைபிடித்து…சில ராஜ்யங்களை கைப்பற்றினர்..

(“மாட்டு இறைச்சியை அதிகமாக உண்டவர்கள்பிராமணன்களும், அரசர்களும் தான்..” தொடர்ந்து வாசிக்க…)

காரைதீவு மகா சபை தேர்தல் நோக்கத்துக்காக மாத்திரம் உருவாக்கம் பெறவே இல்லை!

காரைதீவு பிரதேசத்தின் இருப்பு, இறைமை, பாதுகாப்பு, அபிவிருத்தி, அடையாளம், தனித்துவம் ஆகியவற்றை பேணி பாதுகாக்கின்ற செயல் திட்டத்தின் ஒரு அம்சமாகவே எதிர்வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் எந்த அரசியல் கட்சிகளுக்கும் இடம் கொடுக்க போவதில்லை என்று ஊர் மக்கள் கூடி ஏகோபித்த தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர் என்று காரைதீவு மகா சபையின் நிறைவேற்று குழு முக்கியஸ்தர் ஆறுமுகம் பூபாலரட்ணம் எமக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.

(“காரைதீவு மகா சபை தேர்தல் நோக்கத்துக்காக மாத்திரம் உருவாக்கம் பெறவே இல்லை!” தொடர்ந்து வாசிக்க…)

‘உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய முறை அறிமுகமாகிறது’

இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முதலாக இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில், கட்சிகளில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்களும் கட்டுப்பணம் கட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். அகில இலங்கை வை.எம்.எம். ஏ. ​பேரவை மற்றும் யன்ங் ப்ரென்ட்ஸ் அமைப்பு உட்பட சில அமைப்புகள் இனைந்து நடத்திய, புதிய தேர்தல் முறை தொடர்பில் மக்களை அறிவுறுத்தும் நிகழ்வு, கண்டி- மஹியாவையில் அமைந்துள்ள கிரான்ட் வரவேற்பு மண்டபத்தில் நேற்று (26) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

(“‘உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய முறை அறிமுகமாகிறது’” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸுக்கு பாவமன்னிப்பு?

(எஸ். நிதர்ஷன்)

“கடந்தகால ஆட்சியாளர்களுடன் இணைந்து தேன்நிலவு கொண்டாடிய நாடாளுமுன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது பாவமன்னிப்புக் கோரும் நிலையில் உள்ளார். அவருக்கு பாவமன்னிப்புக் கொடுக்க வேண்டுமா, இல்லையா? என்பதை, தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும்” என, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

(“டக்ளஸுக்கு பாவமன்னிப்பு?” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளின் மாவீரர் தின படிப்பினை. 

பிரபாகரன் பல நாட்கள் தன் குடும்பத்தாலேயே
ஒதுக்கி வைக்கப்பட்டவர். அவரது திருமணத்திற்கே
பெற்றோர் அழைக்கப்படவில்லை.
2 வீடு தமக்கு இருந்தும் பிரபாகரனால் தன்
பெற்றோர் ஊரில் இருக்க வீடு கிடைக்காமல்
எவ்வாறு அலைந்து களைத்து கடைசியில்
தமிழ்நாட்டுக்கு ஓடினார்கள் என்பதையும்
“அந்த கோபங்களின் வலி இப்போது ஆறிவிட்டது”
என்று வெளிப்படையாகவே 6 வயது மூத்த தமையன்
பிரபாகரனின் 50 வது பிறந்தநாள் மலருக்கு
எழுதியதில் குறித்துள்ளார்.
காணி அதிகாரியாக இருந்தாலும் சகாயம்
IAS போன்ற மிகநேர்மையான வேலுப்பிள்ளை
தன் குடும்பத்திற்கென ஒரு சதமும் ஊழலால்
சம்பாதிக்கவில்லை. தமிழகத்திலிருந்த மனோகரனை
வெளிநாட்டுக்கு அனுப்பவும் அவரிடம் பணமிருக்கவில்லை
தானே மனோகரன் நார்வே செல்ல உதவினார்
என்பதை நெடுமாறன் எழுதிய பிரபாகரன் சரிதப்புத்தகத்தில்
குறித்துள்ளார். 2 சகோதரிகளுக்கு சீதனம்
கொடுத்து திருமணம் செய்வித்ததே குடும்பத்துக்கு பெரும் செலவல்லவா!
மனோகரன் ஆழக்கடலோடி கப்பலில் வேலைசெய்த பணமெல்லாம்
சகோதரிகளின் திருமணத்தோடு தீர்ந்து விட்டது. தகப்பனைப்போல
களவெடுக்க தெரியாத தங்க மகன்தான் மனோகரனும்.
ஒழுக்கத்தில் தகப்பனைப்போல உரிச்சுப் படைக்கப்பட்டவர்.
மதிவதனியின் தம்பி பாலச்சந்திரன்
புலிகளுக்கு போரிட்டு மடிந்ததுபோல பிரபாகரனின்
சகோதரம் ஒன்றும் புலிகளோடு நேரடியாக
பங்கு பற்றாததையும் இப்பின்னணியிலேயே
விளங்கவேண்டும்.
2002 க்குப்பிறகே பிரபாகரனே தமக்குகொள்ளி
வைக்கவேண்டும் என்று பெற்றோர் வன்னியில்
குடிவந்தார்கள். கடைசியில் நாலு பிள்ளைகளில்
யாரும் பெற்றோருக்கு கொள்ளி வைக்கமுடியவில்லை.
பிரபாகரனுக்கு கடைசியில் கொள்ளிவைத்தது
பிரபாகரனே அரசகட்டிலிலேற்றிவைத்த மகிந்ததான்.
கல்லறையல்ல அவருக்கு ஒரு மண்ணறை
யும் கிடைக்கவில்லை.
– நட்சத்திரன் செவ்விந்தியன்.

தோழர் றேகனின் 32 வது நினைவுதினம்.

வவுனியா மாவட்டத்தில் பிறந்த இன்பராசா என்னும் இயற்பெயருடைய தோழர் றேகன் 23.11.1985ம் ஆண்டு புலிகளினால் படுகொலை செய்யப்பட்டார். 1980 களின் ஆரம்பத்தில் ஈழ மாணவர்
பொதுமன்றம்(Gues) என்னும் மாணவர் அமைப்பினூடாக தனது அரசியல் பணியை ஆரம்பத்தவர் . மக்களின் மீதும் மண்ணின் மீதும் அளவுகடந்த நேசத்துக்குரியவராகவிருந்தார். அதற்காக தன்னுடைய பல்கலைக்களக பட்டப்படிப்பையும் தூக்கியெறிந்து விட்டு பெற்றோர்கள் உயர்கல்வியை கற்பதிற்கு தேவையென கொடுத்த பணத்துடன் தன்னை போராட்டத்துடன் முழுமையாக இனைத்துக்கொண்டவர்.

(“தோழர் றேகனின் 32 வது நினைவுதினம்.” தொடர்ந்து வாசிக்க…)

வெருகல் படுகொலை பகிரங்கமாக நடந்ததொன்று.இதை மறுத்து வரலாற்று ஆதாரம் தாங்க என்று கேட்போரை என்னவென்பது?

பாண்டிசேரியைச் சேர்ந்த எழுத்தாளரும் பெண்ணியவாதியுமான மாலதி மைத்திரி அவர்கள் புலிகளை ஆதரிப்பதென்பது அவரது அரசியல் சுதந்திரம். அவர் புலிகளின் வீரதாபங்களை மெச்சட்டும் அது பற்றி எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் புலிகளின் படுகொலைகளை ஆதரிக்கும் அல்லது நியாயப்படுத்தும் அவரது நிலைப்பாடு ஈழத்து மக்களுக்கு அவர்கள் செய்கின்ற அப்பட்டமான துரோகமாகும் என்பதை நாம் சொல்லியே ஆகவேண்டும்.

(“வெருகல் படுகொலை பகிரங்கமாக நடந்ததொன்று.இதை மறுத்து வரலாற்று ஆதாரம் தாங்க என்று கேட்போரை என்னவென்பது?” தொடர்ந்து வாசிக்க…)

‘சலசலப்புக்கு நாம் அஞ்சோம்’

“பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( ஈ.பி.ஆர்.எல்.எவ்), சலசலப்புக்கு அஞ்சாது” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தமிழரசுக் கட்சியினுடனான கொள்கை முரண்பாடு காரணமாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் புதிதாக இணைந்துகொண்ட சிலர் தமிழரசுக் கட்சியால் உள்வாங்கப்பட்டு வரும் நிலையிலேயே, தான் இவ் அறிக்கையை மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் வெளியிடுவதாக அதில் அவர் தெரிவித்துள்ளார்.

(“‘சலசலப்புக்கு நாம் அஞ்சோம்’” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியாவும் கியூபாவும் இணைந்தன

கியூபாவும் வடகொரியாவும் இணைந்து, ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிரான தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. ஐ.அமெரிக்காவின் “ஒருதலைப்பட்சமானதும் தன்னிச்சையானதுமான” கோரிக்கைகளை இரு நாடுகளும் நிராகரிக்கின்றன என, கியூப வெளிநாட்டு அமைச்சுத் தெரிவித்தது. கியூபாவின் தலைநகர் ஹவானாவில், இரு நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களும் சந்தித்துப் பேசினர்.

(“அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியாவும் கியூபாவும் இணைந்தன” தொடர்ந்து வாசிக்க…)

‘புதிய தேசிய கொடி வேண்டும்’

“இலங்கையின் தேசியக் கொடியை அவமதிக்கவில்லை. மாறாக, அதற்குரிய கௌரவத்தையே அளித்தேன். இந்த விவகாரத்தைக் குறுகிய அரசியல் இலாபங்களுக்காகத் திசை திருப்பி, பூதாகாரப்படுத்தும் நோக்கிலேயே சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என்று, வடக்கு மாகாண கல்வியமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

(“‘புதிய தேசிய கொடி வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)