விற்று விடுவாரா சம்பந்தன்? ‘வரலாம், வராமலும் போகலாம்’

(கே. சஞ்சயன்)
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 2016ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு புதிய அரசமைப்பு மூலம் தீர்வு காணப்படும் என்று திட்டவட்டமாகக் கூறி வந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “தீர்வு வரலாம், வராமலும் போகலாம்” என்று கூறுகின்ற நிலைக்கு இப்போது வந்திருக்கிறார். 2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவரும் என்ற நம்பிக்கையில் தான், அவர் அந்தக் காலக்கெடுவை முன்வைத்திருந்தார். ஆனால், கிட்டத்தட்ட பத்து மாதங்கள் கழித்துத்தான், அந்த இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கிறது. (“விற்று விடுவாரா சம்பந்தன்? ‘வரலாம், வராமலும் போகலாம்’” தொடர்ந்து வாசிக்க…)

அணுவாயுதத்துக்கு எதிராக 51 நாடுகள் ஒப்பந்தத்தில்

வடகொரியாவின் அணுவாயுதப் பிரச்சினை, மிகவும் தீர்க்கமானதாக மாறிவரும் நிலையில், 51 நாடுகள் ஒன்றுசேர்ந்து, அணுவாயுதத்தை அழிக்க வேண்டுமென, ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுக்காக, ஐக்கிய அமெரிக்காவுக்கு அநேகமான நாடுகள் சென்றுள்ளன நிலையிலேயே, இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும், ஐ.அமெரிக்கா உள்ளிட்ட அணுசக்தித் திறனைக் கொண்ட நாடுகள், இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்க்கின்றன.

(“அணுவாயுதத்துக்கு எதிராக 51 நாடுகள் ஒப்பந்தத்தில்” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம் காங்கிரஸுக்கு ஹக்கீமின் தலைமை வேண்டாம் என்ற தீர்ப்பை வருகின்ற தேர்தல் மூலமாக வழங்குங்கள்!

– கிழக்கு முஸ்லிம்களுக்கு ஹசன் அலி அறைகூவல்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ரவூப் ஹக்கீமின் தலைமை தேவை இல்லை என்கிற தீர்ப்பை எதிர்வரும் தேர்தல் எதுவாக இருப்பினும் அதன் மூலமாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் நிச்சயம் வழங்க வேண்டும் என்று இக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகமும், சுகாதார துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.

(“முஸ்லிம் காங்கிரஸுக்கு ஹக்கீமின் தலைமை வேண்டாம் என்ற தீர்ப்பை வருகின்ற தேர்தல் மூலமாக வழங்குங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

உலகத்தை இன்னும் ஒரு போர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய ட்றம் இன் ஐநாவின் பேச்சு

(சாகரன்)
நடந்து முடிந்த ஐநாவின் வருடாந்தக் கூட்டத் தொடரில் அமெரிக்க ஜனாதிபதியின் பேச்சு உலக மக்களின் கவனத்தை அச்சுறுத்தல் என்ற வகையில் ஏற்படுத்தியுள்ளது. வட கொரியாவை முற்றாக அழித்தொழிப்பது என்ற பேச்சாக இருக்கட்டும்…. ஈரான் மீதான சமாதான சகோதரத்து செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அறை கூவலாக இருக்கட்டும்… அமைதிப் பூங்காகவாக இருந்து அதி உச்ச போர்களமாக மாற்றப்பட்ட சிரியாவில் ஏற்பட்டுவரும் போரை முடிவுக்கு கொண்டுவரும் நிகழ்வுகளை நிராகரிப்பதாக இருக்கட்டும் எங்கும் உலகத்தின் பெரும்பான்மை மக்களின் விருப்பை நிராகரிக்கும் போக்குடையதாகவே ஜனாதிபதியின் பேச்சு அமைந்திருந்தது.

(“உலகத்தை இன்னும் ஒரு போர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய ட்றம் இன் ஐநாவின் பேச்சு” தொடர்ந்து வாசிக்க…)

ட்ரம்பின் ஐ.நா உரை: பழைய பொய்களும் புதிய கதைகளும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
கோவில் திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடப்பதுபோல, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்தக் கூட்டங்களும் மாறிவிட்டன. வெறுமனே ஒரு சடங்காக, உலகத் தலைவர்கள் உரையாற்றும் இடமாக, பொதுச்சபைக் கூட்டம் நடந்தேறுகின்றது. இன்று, எதையும் பயனுள்ள வகையில் செய்ய இயலாதுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கையறுநிலை, இதற்கான பிரதான காரணமாகும். ஐ.நா வலுவாகவும் உலக அலுவல்களில் முக்கிய சக்தியாகவும் திகழ்ந்தவொரு காலத்தில், பல வரலாற்றுச் சிறப்பு மிக்க உரைகளை இச்சபை கண்டுள்ளது. அவ்வுரைகள் காலத்தின் கண்ணாடியாக, உலக அலுவல்களின் நிகழ்நிலையைப் பிரதிபலிக்கும் விமர்சனங்களாக அமைந்தும் உள்ளன.

(“ட்ரம்பின் ஐ.நா உரை: பழைய பொய்களும் புதிய கதைகளும்” தொடர்ந்து வாசிக்க…)

றோகிஞ்சாக்கள் அடையாளங்காட்டும் பல முகங்கள்

(Gopikrishna Kanagalingam)
அண்மைய நாட்களில், உலகின் எந்த நாட்டு ஊடகங்களையும் தொடர்ச்சியாகப் படிப்பவர்கள், பார்ப்பவர்கள், அல்லது கேட்பவர்கள், “றோகிஞ்சா” என்ற பதத்தை அறிந்திருப்பர். இல்லாவிடின், “றோகிங்கியா”, “ரோஹிஞ்சா”, “ரோஹிங்கியா”, “றோஹிங்கா” என்று, அக்குழுவினரை வேறு பெயரில் அறிந்திருந்தாலும், அவர்களைப் பற்றி நிச்சயமாக அறிந்திருப்பர்.

(“றோகிஞ்சாக்கள் அடையாளங்காட்டும் பல முகங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் பௌத்த பீடங்களின் பிடியும்

(புருஜோத்தமன் தங்கமயில்)
தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை, அண்மைய நாட்களில் இரண்டு விடயங்கள் மிகுந்த கவனத்தைப் பெற்றிருக்கின்றன. அதில், முதலாவது, ‘சந்திரசோம எதிர் மாவை சேனாதிராஜா மற்றும் கே.துரைராஜசிங்கம்’ வழக்கில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. இரண்டாவது, அந்தத் தீர்ப்பின் அடிப்படைகளை முன்வைத்து, பௌத்த பீடங்களுடன் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் நடத்திய சந்திப்புகள்.

(“உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் பௌத்த பீடங்களின் பிடியும்” தொடர்ந்து வாசிக்க…)

டெனீஸ்வரனின் மனு தொடர்பில் ஒக். 3இல் உத்தரவு

வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தாக்கல் செய்த ரிட் மனுவின் அடிப்படையில், இடைக்காலத் தடையுத்தரவு மற்றும் பிரதிவாதிகளுக்கான நோட்டீஸ் பிறப்பிப்பது தொடர்பான உத்தரவு, ஒக்டோபர் 3ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என, மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (19) அறிவித்தது.

(“டெனீஸ்வரனின் மனு தொடர்பில் ஒக். 3இல் உத்தரவு” தொடர்ந்து வாசிக்க…)

அருளினியனின் கேரள டயரீஸ் மட்டக்களப்பில் வெளியீடு

யாழ்ப்பாணம் குப்பிளானில் பிறந்து யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று பெங்களுர் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைக் கற்று தற்போது பயண ஊடகவியலாளராக செயற்பட்டுவரும் அருளினியனின் ‘கேரள டயரீஸ் – வேர்தேடுவோம்’ நூல்; மட்டக்களப்பிலும் வெளியிடப்பட்டுள்ளது.

(“அருளினியனின் கேரள டயரீஸ் மட்டக்களப்பில் வெளியீடு” தொடர்ந்து வாசிக்க…)

‘றோகிஞ்சாக்களைக் கணக்கெடுக்காத ட்ரம்ப்’

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன், றோகிஞ்சா அகதிகள் தொடர்பாகக் கலந்துரையாடிய போதிலும், அவர்கள் குறித்து எந்தவிதமான கருத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை என, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸினா தெரிவித்துள்ளார். அகதிகள் பற்றிய தன்னுடைய நிலைப்பாட்டை, ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கெனவே தெளிவாக வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவரிடம் உதவிகளையும் எதிர்பார்க்கவில்லையெனவும், பிரதமர் ஹஸினா தெரிவித்துள்ளார்.

(“‘றோகிஞ்சாக்களைக் கணக்கெடுக்காத ட்ரம்ப்’” தொடர்ந்து வாசிக்க…)