ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் துரிதப்படுத்த வேண்டுமென, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளில், போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற நிலையிலேயே, இந்த நிலைப்பாட்டை, அவ்வொன்றியம் வெளிப்படுத்தியுள்ளது. பிரெக்சிற் தொடர்பான புதிய பேச்சுவார்த்தைகள், பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரஸல்ஸில், நேற்று முன்தினம் ஆரம்பமாகின. அதன்போதே, இந்த நிலைப்பாட்டை, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதம பேரம்பேசுநர் மைக்கல் பார்னியர் வெளிப்படுத்தினார்.
(“பிரெக்சிற் பேச்சுவார்த்தை: துரிதப்படுத்தக் கோருகிறது ஐரோப்பிய ஒன்றியம்” தொடர்ந்து வாசிக்க…)