பிரெக்சிற் பேச்சுவார்த்தை: துரிதப்படுத்தக் கோருகிறது ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவது (பிரெக்சிற்) தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் துரிதப்படுத்த வேண்டுமென, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளில், போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்ற நிலையிலேயே, இந்த நிலைப்பாட்டை, அவ்வொன்றியம் வெளிப்படுத்தியுள்ளது. பிரெக்சிற் தொடர்பான புதிய பேச்சுவார்த்தைகள், பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரஸல்ஸில், நேற்று முன்தினம் ஆரம்பமாகின. அதன்போதே, இந்த நிலைப்பாட்டை, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதம பேரம்பேசுநர் மைக்கல் பார்னியர் வெளிப்படுத்தினார்.

(“பிரெக்சிற் பேச்சுவார்த்தை: துரிதப்படுத்தக் கோருகிறது ஐரோப்பிய ஒன்றியம்” தொடர்ந்து வாசிக்க…)

‘போராட்டத்தில் கலந்துகொள்ளவும்’

நாளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு, அனைவரும் கலந்துகொள்ளுமாறு, கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், கிளிநாச்சி – பரவிப்பாஞசான் பகுதியில் இன்று (29) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

(“‘போராட்டத்தில் கலந்துகொள்ளவும்’” தொடர்ந்து வாசிக்க…)

வன்னியிலும் வாகரையிலும் வாடும் மக்களுக்கு ஆதரவளிப்பது யார்?

(எஸ்.கருணாகரன்)

மாவை சேனாதிராஜா தலைமையில், தமிழரசுக்கட்சியின் அணியொன்று கனடாவுக்குப் பயணமாகியுள்ளது. இந்த அணியில், நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, வட மாகாணசபை உறுப்பினர் ஆனோல்ட், தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான துரைராஜசிங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கனடாவில் உள்ள தமிழரசுக் கட்சி அனுதாபிகள், அபிமானிகள், ஆதரவாளர்கள் போன்றவர்களை, இந்த அணியினர் சந்திக்கச் செல்வதாகவே, அதன் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(“வன்னியிலும் வாகரையிலும் வாடும் மக்களுக்கு ஆதரவளிப்பது யார்?” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவுக்கு மீண்டும் பதவி: எதிர்ப்பைச் சமர்ப்பிக்க அவகாசம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் நியமிக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் தரப்பின் எழுத்துமூல எதிர்பை சமர்ப்பிப்பதற்கு திகதி குறிக்கப்பட்டது. இந்த எதிர்ப்புகளை, செப்டெம்பர் 4ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு, கொழும்பு மாவட்ட நீதிபதி சுஜீவ நிசங்க, நேற்று (29) உத்தரவிட்டார். எழுத்துமூல எதிர்பை, ஓஸ்கட் 29ஆம் திகதி (நேற்று) சமர்ப்பிக்குமாறு, உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தமக்குக் கால அவகாசம் வேண்டுமென இரு தரப்பினரும் கோரியதையடுத்தே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்ப்டடது.

(“மஹிந்தவுக்கு மீண்டும் பதவி: எதிர்ப்பைச் சமர்ப்பிக்க அவகாசம்” தொடர்ந்து வாசிக்க…)

மண்டை தீவு கடல் இழப்பு!  சோகங்களுடன் நானும் இணைந்து கொள்கின்றேன்.

(சாகரன்)

மண்டை தீவுக்கடலில் மூழ்கி மரணித்த அந்த இளைஞர்கள் அனைவருக்கும் எனது அஞ்சலிகள். மிகுந்த வருத்தம் நிறைந்த நிகழ்வு சிறப்பாக அவர்தம் பெற்றோரின் கவலையை நீக்க எம்மிடம் வார்த்தைகள் இல்லை. தவிர்த்திருக்கக் கூடிய இழப்புக்கள். நீரில் மூழ்காதிருக்கும் பாதுகாப்பு கவசங்களை இவர்கள் அணித்திருக்கவில்லை என்பதுவும் எவ்வாறு இந்த களியாட்ட விபத்து நிகழ்ந்திருக்கின்றது என்பதுவும் இங்கு கேள்விகளாகவும் கண்டனங்களாகவும் எம் முன் இருக்கின்றன. உல்லாசப் பயணத்திற்கு அழைத்துச் சென்றவர்களிடம் நீச்சல் ‘நன்கு’ தெரிந்தவர் இல்லையா என்ற கேள்விகளும் பிரதான இடத்தைப் பிடிக்கின்றது. நடக்க தெரிந்த மனிதன் மற்றய உயிரினங்கள் போல் பழகாமலே நீந்தும் இயல்பைக் கொண்டிருப்பதில்லை என்பதினால் நீச்சல் என்பது இங்கு மனிதர்களுக்கு அடிப்படையாக தெரிந்திருக்க வேண்டியதொன்றாகின்றது.

(“மண்டை தீவு கடல் இழப்பு!  சோகங்களுடன் நானும் இணைந்து கொள்கின்றேன்.” தொடர்ந்து வாசிக்க…)

பட்டும் திருந்தவில்லை

1952 இல் சேர்.யோன்.கொத்தலாவல பிரதமராகிய பின் யாழ்ப்பாணம் வந்தார்.இவருக்கு யாழ் ம்த்திய கல்லூரி மைதானத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த வரவேற்பில் அமிர்தலிங்கம் தலைமையில் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. இதன் மூலம் அமிர்தலிங்கம் பிரபலமானார்.இருந்தாலும் இந்த வரவேற்பை கொத்தலாவல பொருட்படுத்தவில்லை. அதன் பின் தீவுப்பகுதியில் கொழும்பு தமிழ் வர்த்தகர்களால் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த வரவேற்பைக் கண்டு மகிழந்த கொத்தலாவல உணர்ச்சிவசப்பட்டு தமிழுக்கு ஒரு சிறந்த இடத்தை வழங்க ஏற்பாடுசெய்வதாக கூறினார்.இந்த உணர்ச்சிவசப்பட்டு சொன்ன வார்த்தை இலங்கையில் அரசியலையும் அரசியற்போக்கையும் சின்னாபின்னமாக்கியது.

(“பட்டும் திருந்தவில்லை” தொடர்ந்து வாசிக்க…)

பிக்பொஸ் பேரலை?! ஈழப் போராளிகள் நினைவலை!?

அண்மையில் தாயகம் சென்று திரும்பிய இருவர் பேரூந்தில் எனது முன் ஆசனத்தில் இருந்து பேசிய விடயம் என் காதுவரை கேட்டது. கன காலத்துக்கு பின் இப்போதுதான் சொந்த மண்ணுக்கு செல்லும் பாக்கியம் கிடைத்தது பற்றி ஒரு நிமிடம் மட்டும் பேசியவர்கள் ஓவியா பக்கம் பாதை மாறினார்கள். அந்த பிள்ளை போனபின் பிக்பொஸ் சூடு தணிஞ்சு போச்சு என்றார் ஒருவர். மற்றவரோ எண்டாலும் சுஜா அவரை ஈடு செய்வார் என்றார். பதினைந்து நிமிட பயணத்தில் பதின்நான்கு நிமிடங்களும் பிக்பொஸ் பற்றிய பேச்சுத்தான் தொடர்ந்தது. தாயக பயணம் பற்றிய பேச்சை பாதை மாற்றியது பிக்பொஸ்.

(“பிக்பொஸ் பேரலை?! ஈழப் போராளிகள் நினைவலை!?” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் ஆறு மாணவர்கள் கடலில் மூழ்கிப் பலி

யாழ்ப்பாணம், மண்டைத்தீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் ஆறு மாணவர்கள் இன்று (28) பிற்பகல் கடலில் மூழ்கிப் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மண்டைத்தீவு கடற்பரப்பில் இளைஞர்கள் 7 பேர் படகில் இருந்தவேளை அது மூழ்கியுள்ளது. கடலில் மூழ்கியோரில் ஒருவர் மாத்திரம் நீந்தி, கரையை வந்தடைந்துள்ளார். ஏனையோரில் ஐவரின் சடலங்கள் உடனடியாக மீட்கப்பட்டதுடன் மேலும் ஒருவரைத் தேடும் பணிகளில் பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டனர். அவர்களின் தீவிர தேடுதலின் பின்னர் மற்றையவரின் சடலமும் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் உரும்பிராய், நல்லூர், கொக்குவில் பகுதிகளைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுடையவர்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. மீட்கப்பட்டோரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஹக்கீமிடம் பணம் வாங்கியவர்களுக்கே குமாரிக்கு நேர்ந்த அநியாயம் குப்பை, பழைய கதை

(தமிழ் மிரர் பத்திரிகை ஆசிரியரின் தான்தோன்றித்தனமான அசிங்க தலையங்கத்துக்கு பதில்)

ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சரும், தூய முஸ்லிம்  காங்கிரஸ்செயற்பாட்டளருமான பஷீர் சேகுதாவூத் அவரின் பேஸ்புக்கில்”இறைவன் நாடிவிட்டான்” என்ற தலைப்பில் வெளியிட்ட ஒருபதிவைஆதராமாக கொண்டு தமிழ் மிரர் பத்திரிகையின் ஆசிரியரான நீங்கள் உங்களது பத்திரிகையில் அவரை தாக்க வேண்டும் என்ற ஒரேநோக்கத்தில் ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கிறீர்கள்.

(“ஹக்கீமிடம் பணம் வாங்கியவர்களுக்கே குமாரிக்கு நேர்ந்த அநியாயம் குப்பை, பழைய கதை” தொடர்ந்து வாசிக்க…)

பிலிப்பைன்ஸ் – சீன பொருளாதார உறவு

(ஜனகன் முத்துக்குமார்)

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பைன்ஸ், பிராந்திய வல்லரசான சீனாவின் தென் சீனக் கடல் எல்லை தொடர்பான ஆக்கிரமிப்புக்கு எதிராக, டேவிட் எதிர் கோலியாத் பாணியிலான வழக்கைதத் தொடுத்திருந்த போதிலும், பிலிப்பைன்ஸ் – சீன உறவானது அண்மைக்காலத்தில் சுமூகமான நிலையை அடைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறாக பிலிப்பைன்ஸ் தனது எதிர்ப்புக் கொள்கைகளைத் தளர்த்துவதற்கும் சீனாவுடன் இணைந்து போதலுக்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் சீனாவுடனான பொருளாதாரத் தொடர்புகளின் வகிபாகம் முக்கியமென பிலிப்பைன்ஸ் உணர்ந்தமையே காரணமாகும் என, அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

(“பிலிப்பைன்ஸ் – சீன பொருளாதார உறவு” தொடர்ந்து வாசிக்க…)