எனது நாட்டின் சுதந்திர தினத்தில் நான் அந்நியனாகவே உணரப்படுகின்றேன்

(சாகரன்)

எனக்கு அரிவரியில் இருந்து சர்வகலாசாலை வரை இலவசக் கல்வியைத் தந்தநாடு இலவசமருத்துவத்தை தந்தநாடு. ஏன் இலவச கூப்பன் அரிசியையும் தந்தநாடு. பிரிவினை வேண்டும் என்று போராடியவர்களில் நானும் ஒருவன். ஆனால் பிரிவினையில் உடன்பாடு அதிகம் எனக்கு ஏற்படவில்லை. தமிழ் சிங்களக் கலவரம் என்று யாரிடமும் அடிவாங்காதவன். உள்ளுரில் கலவரங்களால் அகதிகளாக இடம்பெயராதவன். சிங்கள சமூகத்துடன் அதிகம் பழகும் வாய்ப்புகள் கிடைக்காதவன் ஆனாலும் நான் நன்றாக பழகிய முஸ்லீம் சமூகம் அளவிற்கு எனக்கு சிங்கள சமூகத்தையும் பிடிக்கும். இது ஏனோ தெரியவில்லை.

(“எனது நாட்டின் சுதந்திர தினத்தில் நான் அந்நியனாகவே உணரப்படுகின்றேன்” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் அத்தியாயம் 9

பழையபுலிகளின்; அனுபவப்பகிர்வு எனது நினைவுகளை இரண்டுவருடம் பின் நோக்கிஇழுத்துச்சென்றது. வன்னியில் அப்பொழுது மாத்தையா கொடிகட்டிபறந்தகாலம். TRO அப்பொழுதுதான் அங்கே காலூன்ற ஆரம்பித்தது. ஒருநாள் காலைஅப்போதைய TRO பொறுப்பாளன் என்னைசந்திப்பதற்காகஅவசரஅவசரமாகவந்தான்.
“சேர் இண்டைக்குமத்தியானம் ஒரு கூட்டம் இருக்குநீங்கள் கட்டாயம் வரவேணும,; மாத்தையாஅண்ணையும் வாறார்”என்றான் கதையோடுகதையாக.

(“முள்ளுள்ளபுதர்களின் மத்தியில் அத்தியாயம் 9” தொடர்ந்து வாசிக்க…)

திருமதி நவநாயகமலர் கதிரவேலு

மலர்வு : 4 ஏப்ரல் 1944 — உதிர்வு : 2 பெப்ரவரி 2017
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவநாயகமலர் கதிரவேலு அவர்கள் 02-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

(“திருமதி நவநாயகமலர் கதிரவேலு” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தலைமைகள் ஒரு குள்ளநரிக் கூட்டம்.

இயக்கங்கள் கட்சிகளை வைத்துக் கொண்டு சுய நல அலுவல்களை பாரத்துக் கொண்டு மக்களை ஏமாற்றும் குள்ளநரிக் கூட்டம் ஒன்று தன்னை தமிழர் தலைமை என்கின்றது நாம் ஏமாறுவதா??
தமிழ் தலைமைகளின் கேவலங்கள் : 2017 சுதந்திர தினம்.
உங்களுக்கு ஒரு பகிஸ்கரிப்பு தேவைப்படுகின்றதோ !! முதலில’ அரசின் சொகுசு வாகனங்களை பகிஸ்கரி
தேசியக் கூட்டமைப்பு 2016ல் அரசியல் தீர்வு என்ற பேய்க்காட்டல்
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொகுசு வாகனத்துக்கு கோட்டாவுக்கு கை நீட்டல்
தமது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பண ஆசை
தமது உறவினர்க்கும் பிள்ளைகளுக்டகும் பதவிக்கு ரனில் என்ன கோத்தா என்ன கை நீட்டுகின்றார்கள்

(“தமிழ் தலைமைகள் ஒரு குள்ளநரிக் கூட்டம்.” தொடர்ந்து வாசிக்க…)

எல்லோரும் சமமென்று இயற்றிடுக சட்டமொன்று!

(எஸ். ஹமீத்)
ஆங்கிலேயர் கருணை கூர்ந்து
அன்றொருநாள் சுதந்திரம் ஈந்து
ஆண்டுகள் அறுபத்தொன்பதும்
ஆகிற்று; ஆனாலும்…
ஓய்ந்ததுவோ வன் கொடுமை?
ஓங்கியதோ நம் நிலைமை?

(“எல்லோரும் சமமென்று இயற்றிடுக சட்டமொன்று!” தொடர்ந்து வாசிக்க…)

வெள்ளை மாளிகையை விட்டு மகனுடன் வெளியேறிய ட்ரம்பின் மனைவி! மீண்டும் திரும்புவாரா?

(எஸ். ஹமீத்)

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவிப் பிரமாணம் செய்த பின் இரண்டே நாட்கள் மட்டுமே வெள்ளை மாளிகையில் தங்கியிருந்த ட்ரம்பின் மனைவியும் அமெரிக்க முதற் பெண்மணியுமான மெலானியா ட்ரம்ப் அதன் பின் தன் மகனையும் அழைத்துக் கொண்டு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியுள்ளார். இவரது வெளியேற்றத்துக்குக் காரணமெனப் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.

(“வெள்ளை மாளிகையை விட்டு மகனுடன் வெளியேறிய ட்ரம்பின் மனைவி! மீண்டும் திரும்புவாரா?” தொடர்ந்து வாசிக்க…)

நாடு எங்கே செல்கிறது?

இலங்கையில் இப்பொழுது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் யார்?, அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்ற சந்தேகம் பலதரப்பட்டவர்களிடமும் எழுந்துள்ளது. இதுபற்றி அவர்களிடம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பதில்களைக் கூறுவார்கள்.

(“நாடு எங்கே செல்கிறது?” தொடர்ந்து வாசிக்க…)

இது- ஒரு சிரியச் சிறு பூவின் கதை!

(எஸ். ஹமீத்.)
கடந்த வருடம் சர்வதேச ஊடகங்களில் அந்த ஐந்து வயது சிரியச் சிறுமியின் வேண்டுகோள் முக்கிய பேசு பொருளாகியிருந்தது.
”என்னுடைய கண்களை எடுத்து என் தந்தைக்குப் பொருத்தி விடுங்கள். அப்போது அவரால் என்னை மீண்டும் பார்க்க முடியும்!”
இந்த வேண்டுகோள் உலகின் இதயத்தை உலுக்கி விட்டிருந்தது. ஆனாலும் அவளது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டது.

(“இது- ஒரு சிரியச் சிறு பூவின் கதை!” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாப்புலவு – பெண்கள் நீதி கேட்கும் மண்ணில் அடுத்த தலைமுறைகள் பிறக்கும்

ஜனநாயக வழிப் போராட்டங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருப்பதால் பலருடைய வேலைகளையும் அது பாதிக்கிறது. பலரால் தொடர்ந்தும் அதில் இயங்க முடியவில்லை. குறைந்த பட்சம் அக்கறையாயும் இருக்க முடியவில்லை.

(“கேப்பாப்புலவு – பெண்கள் நீதி கேட்கும் மண்ணில் அடுத்த தலைமுறைகள் பிறக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

வஞ்சிக்கப்பட்ட தமிழன் வாடிவாசல் வழி வெளியேறினான்

(பா.செயப்பிரகாசம்)

(இந்தியா பெரிய தேசம். பல அரசுகள். நிறையக் கலாசாரங்கள் இந்த உப கண்டத்தில். சில கலாசாரங்கள் விரும்பத்தக்கன, வேறு சில வெறுக்கத்தக்கன. காளை விளையாட்டைத் தமிழ் நாட்டில் தடுத்த நீதிமன்றம், ஏன் இங்கு சாதி வெறி விளையாட்டுகளைத் தடுக்கவில்லை? ஜல்லிக்கட்டு விவகாரம் இளம் சந்ததியைக் கொதிக்கச் செய்து மெரீனாவுக்கும் அழைத்துள்ளது. இந்த விவகாரம் இப்போது தீர்வைத் தேடி. தமிழின் சிறப்பான எழுத்தாளரும், இந்து மொழித் திணிப்பின் தலைமைப் போராளியாகவுமிருந்த பா. செயப்பிரகாசம் இந்த விவகாரம் மீது “காக்கைச் சிறகினிலே” எனும் காத்திரமான இதழில் மாசி மாதம் எழுதிய கட்டுரை நன்றியுடன் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.)

(“வஞ்சிக்கப்பட்ட தமிழன் வாடிவாசல் வழி வெளியேறினான்” தொடர்ந்து வாசிக்க…)