உலகத் தமிழாராய்ச்சிக் கழகமும் அதனை மீளமைப்பதற்கான தேவையும்.

உலகத் தமிழாராய்ச்சிக் கழகத்தின் (International Association for Tamil Research, IATR) முதல் கூட்டம் தில்லியில் 1964 சனவரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தனிநாயகம் அடிகளாருடன், பேராசிரியர் கமில் சுவெலபில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வ. ஐ. சுப்பிரமணியம் ஆகியோர் அழைப்பாளர்களாக இருந்து செயற்பட்டனர். மொத்தம் 26 தமிழறிஞர்கள் சேர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை 1964 சனவரி ஜனவரி மாதம் 7 ஆம் நாள் ஆரம்பித்து வைத்தனர். அந்த அமைப்பின் முதல் தலைவராக பிரான்சு நாட்டுத் தமிழறிஞர் பேராசிரியர் ஜேன் ஃபிலியோசா தலைவராகவும், ஒக்ஸ்போட் பல்கலைக்கழக பேராசிரியர் தொமஸ் பரோ, அமெரிக்க நாட்டு பேராசிரியர் எமனோ, பன்மொழிப் புலவர் பேராசிரியர் தெ. பொ. மீனாடசிசந்தரனார், மு. வரதராசன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் செக்கோசெவவாக்கியா, பிராக் பல்கலைக்கழக பேராசிரியர் கமில் சுவெலபில், தனிநாயகம் அடிகள் ஆகியோர் இணைச் செயலாளராளர்கவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

(“உலகத் தமிழாராய்ச்சிக் கழகமும் அதனை மீளமைப்பதற்கான தேவையும்.” தொடர்ந்து வாசிக்க…)

முதலமைச்சருக்காக குழந்தைகள் சித்தரவதை!

முதலமைச்சருக்காக நடத்தப்பட்ட வேண்டுதலில், ஏழை எளிய இளம் குழந்தைகளுக்கு கொடூரமான முறையில் அலகு குத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம்பெற வேண்டி, அதிமுக கட்சித் தொண்டர்கள் எந்தவிதமான வேண்டுதல்களை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். ஆனால், சின்னஞ்சிறிய ஏழை குழந்தைகளுக்கு அலகு குத்தியிருப்பது ஒரு கொடூர நிகழ்வாகும். இந்த மோசமான மனித உரிமை மீறல் கண்டிக்கப்பட வேண்டும். இதனை நிகழ்த்தியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

(“முதலமைச்சருக்காக குழந்தைகள் சித்தரவதை!” தொடர்ந்து வாசிக்க…)

சீனாவின் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சி

சீனா உலகிலேயே மிகப்பெரிய ரேடியோ தொலைநொக்கி மற்றும் உள்வாங்கியை நிறுவி, வேற்று கிரக மனிதர்கள் தொடர்பாக ரகசியமாக பல ஆராட்சிகளை மேற்கொண்டு வருகிறது. சீனா ஒரு விடையத்தில் இறங்கி அது தொடர்பாக ஆராய்கிறார்கள் என்றால் அதனை நாம் வெறுமனவே அசட்டை செய்ய முடியாது. அவர்கள் ஏதோ ஒன்றை குறிவைத்து ரகசியமாக ஆராட்சிகளை மேற்கொண்டு வருவதும். இது தொடர்பாக அவர்களுக்கு ஏதோ தகவல் கிட்டி விட்டதா ? என அச்சம் கொள்ளும் அளவுக்கு நிலமை உள்ளது. உலகில் உள்ள பல வல்லரசு நாடுகள் வேற்று கிரக மனிதர்கள் தொடர்பாக பல ஆரட்சிகளை செய்து வருகிறது. ஆனால் அவர்கள் வேற்றுக் கிரக மனிதர்களை கண்டு பிடித்து அவர்களோடு கை குலுக்க இதனைச் செய்யவில்லை.

(“சீனாவின் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய ஆராய்ச்சி” தொடர்ந்து வாசிக்க…)

சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு கிளிநொச்சியில் அங்குராா்ப்பணம்

 

சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அங்குராா்ப்பண நிகழ்வு 02-10-2016 நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி கனகபுரம் நண்பா்கள் விடுதியில் இடம்பெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் முருகேசு சந்திரகுமாா் அவா்களின் வழிநடத்தலில் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ள மேற்படி அமைப்பானது தனது அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகள் தொடா்பில் செயற்பாட்டாளா்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளது.

வடக்கும் கிழக்கும்

இந்திய அரசின் ஆதரவுடன். உருவாக்கப்பட்ட வட கிழக்கு மாகாண சபை மகிந்த ஆட்சிக்காலத்தில் ஜே.வி.பி தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது.இதன் பின்னணியில் மகிந்த அரசும் செய்ற்பட்டது. இப்போஅது இதை மீண்டும் இணைப்பது தொடர்பாக வட பகுதி அரசியல்வாதிகளும் தமிழர்களில் ஒரு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.இதை கிழக்கு வாழ் இஸ்லாமிய மக்களும் சிலகிழக்கு வாழ் தமிழர்களும் எதிர்கின்றனர்.

(“வடக்கும் கிழக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தல் பலப்பரீட்சை களமாகும் வடக்கு அரசியல்!

அண்மையில் நடந்த எழுக தமிழ் நிகழ்வு, பேரவையா? கூட்டமைப்பா? என்ற தேர்தல் கால முடிவுக்கான வெள்ளோட்ட நிகழ்வாக மாறியதை, அதன் முக்கிய பேச்சாளர்களின் அறைகூவல் மூலம் அறிய முடிந்தது. குறிப்பாக சுரேஸ் பிரேமசந்திரன் சம்மந்தருக்கு விடுத்த பகிரங்க கோரிக்கை. தன்னை முன்பு நிராகரித்த மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்ப்படுத்தி, மீண்டும் தான் பாராளுமன்றம் செல்வதற்கான வாக்குகளாக அவை மாறவேண்டும் என்ற, அவரின் தீராத ஆசையை பறை சாற்றியது. விட்டதை எப்படியும் விரட்டிப்பிடிக்க வேண்டும் என்ற அவரின் விருப்பு, முன்பு அவர் முன் ஜாக்கிரதை இன்றி நடத்திய நெருப்பு தினம், சகதோழர்களை பிரபாகரன் சினத்துக்கு இரையாக்க, தான் தப்பிய நிகழ்வை நினைவூட்டுகிறது.

(“தேர்தல் பலப்பரீட்சை களமாகும் வடக்கு அரசியல்!” தொடர்ந்து வாசிக்க…)

ஐக்கியப்பட்ட பொது வேலைத்திட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு

(சட்டத்தரணி இ. தம்பையா)

இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் தோட்டத் தொழிலாளர்கள் 18 மாதங்கள் வரை சம்பள உயர்வு இன்றி உழைப்பதற்கும் வாழ்வதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் இன்று பொறுமை இழந்துள்ள நிலையில் பெருந்தோட்டக் கம்பனிகள் உடனடியாக நியாயமான சம்பளத்தை வழங்க முன்வர வேண்டும். தோடத்த தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றினை கம்பனிகள் அறியாதிருக்க நியாயமில்லை. எனவே, பிரச்சினையை மேலும் தீவிரமாக்கி பாரிய தொழில் உறவு பிரச்சினையாக மாற்றி பெருந்தோட்டக் தொழிற்துறையை அழிக்கும் நடவடிக்கையை விடுத்து நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு கம்பனிகளுக்கும் மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கும்; உள்ளது. அப்பொறுப்பை கம்பனிகளும் அரசாங்கமும் நிறைவேற்றாவிடின் விளைவுகளுக்கான பொறுப்பையும் கம்பனிகளும் அரசாங்கமுமே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேநேரம் கம்பனிகளின் இன்றைய விடாப்பிடியான நிலையை கருத்திற் கொண்டு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கங்கள் மற்றும் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் தமது தனித்தனியான நிலைப்பாடுகளை விட்டு தொழிலாளர்களுக்காக ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பை கொண்டுள்ளன.

(“ஐக்கியப்பட்ட பொது வேலைத்திட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

சுரேசிடம் இருந்து வெளியேறும் சிவசக்தி ஆனந்தன்!!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களது கள்ள மௌனம் சந்தேகத்தைத் தருவதாக சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த மேலாதிக்கம் தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடமும் இருப்பதாலேயே வடக்கில் தமிழர்கள் மாத்திரம் வாழும் பகுதிகளிலும் பெரும் எடுப்பில் பௌத்த விகாரைகள், புத்தர் சிலைகள் உருவாகுவதாக குறிப்பிட்டுள்ளார்.

(“சுரேசிடம் இருந்து வெளியேறும் சிவசக்தி ஆனந்தன்!!” தொடர்ந்து வாசிக்க…)

அ.தி.மு.க., எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை என்றால் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும், அதிமுக எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

(“அ.தி.மு.க., எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்” தொடர்ந்து வாசிக்க…)

ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌வாத‌த்திற்கும், சிங்க‌ள‌த் தேசிய‌வாத‌த்திற்கும் இடையில் ஒற்றுமை

ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌வாத‌த்திற்கும், சிங்க‌ள‌த் தேசிய‌வாத‌த்திற்கும் இடையில் உள்ள‌ அதிச‌ய‌ப் ப‌ட‌த்த‌க்க‌ ஒற்றுமை ஒன்றுள்ள‌து. இர‌ண்டையும் உருவாக்கிய‌வ‌ர்க‌ள் கிறிஸ்த‌வ‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள். சிங்க‌ள‌த் தேசிய‌ பிதாம‌க‌ர்க‌ளான‌ அந‌காரிக‌ த‌ர்ம‌பாலா, டி.எஸ். சேன‌நாய‌க்க‌, ப‌ண்டார‌நாய‌க்க‌, ஜெய‌வ‌ர்த்த‌ன‌ எல்லோரும் கிறிஸ்த‌வ‌ர்க‌ள். அத்துட‌ன், சிங்க‌ள‌த்தை விட‌ ஆங்கில‌த்தில் ச‌ர‌ள‌மாக‌ பேச‌த் தெரிந்திருந்த‌ன‌ர்.

(“ஈழ‌த் த‌மிழ்த் தேசிய‌வாத‌த்திற்கும், சிங்க‌ள‌த் தேசிய‌வாத‌த்திற்கும் இடையில் ஒற்றுமை” தொடர்ந்து வாசிக்க…)