சி.வியை கைது செய் – உதய கம்மன்பில

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து சிறையில் அடைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார். கொழும்பில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.

(“சி.வியை கைது செய் – உதய கம்மன்பில” தொடர்ந்து வாசிக்க…)

சமூக வலைத்தளங்கள் பற்றிய கணிப்பு???

எம் மண்ணில் அண்மையில் அரங்கேறிய காட்சிப்பதிவு, சமூக வலை தளத்தில் வந்ததால், சிறுமி மீதான வன்முறை சம்பவம் அம்பலமாகி, நீதிமன்ற வாசலை தட்டியது. இதுவரை காலமும் அடுத்தவர் தனிப்பட்ட வாழ்க்கை பக்கம் திரும்பிய காட்சி படுத்தல், சிறுவர் துன்புறுத்தல் பக்கம் திரும்பியது, வைத்தியர் கையில் உள்ள கத்தியும், கசாப்பு கடைகாரன் கையில் உள்ள கத்தியும் செய்யும் செயல் பற்றிய, வித்தியாச செய்தியை சொல்கிறது.

(“சமூக வலைத்தளங்கள் பற்றிய கணிப்பு???” தொடர்ந்து வாசிக்க…)

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசசேலத்தை அங்கிகரிப்பேன் – டொனால்ட் ட்ரம்ப்

தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், ஜெருசசேலத்தை, இஸ்ரேலின் தலைநகரமாக, ஐக்கிய அமெரிக்கா அங்கிகரிக்கும் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசசேலத்தை அங்கிகரிப்பேன்’தெரிவித்ததாக, அவரது பிரசாரக் குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு நடைபெருமானால், ஐக்கிய அமெரிக்க கொள்கையின் பாரிய மாற்றமாக இது அமையும்.

(“இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசசேலத்தை அங்கிகரிப்பேன் – டொனால்ட் ட்ரம்ப்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் மக்களின் இலட்சியம் நிறைவேறும்வரை நாம் ஓயமாட்டோம். எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் டக்ளஸ் தேவானந்தா உரை!

எமது மக்களின் இலட்சிய கனவுகள் நிறைவேறும்வரை நாம் ஒருபோதும் ஓயப்போவதில்லை. எழுக தமிழ் கூட்டுப்பேரணியை நாம் வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றோம். தொடர்ந்தும் இதுபோன்ற எழுச்சிப் போராட்டங்களை நாம் நடத்துவோம் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எழுக தமிழ் கூட்டுப் பேரணியில் கலந்து கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

(“தமிழ் மக்களின் இலட்சியம் நிறைவேறும்வரை நாம் ஓயமாட்டோம். எழுக தமிழ் கூட்டுப்பேரணியில் டக்ளஸ் தேவானந்தா உரை!” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கைத் தமிழர் வாழ்வில் என்று ஒளி வரும்?

(அகிலன் கதிர்காமர்)
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனால், மக்கள் எதிர்பார்த்த நன்மைகளோ வளர்ச்சியோ ஏற்படவில்லை. தீர்மானங்கள் இயற்றப்படுவதும் அறிக்கைகள் வாசிக்கப்படுவதுமாக மாகாண சட்டப்பேரவை வெறும் பேச்சு மடமாகி விட்டது.

(“இலங்கைத் தமிழர் வாழ்வில் என்று ஒளி வரும்?” தொடர்ந்து வாசிக்க…)

‘எழுக தமிழ்’ நிகழ்வில்

‘எழுக தமிழ்’ நிகழ்வில் எட்டாயிரம் வரையான மக்கள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. சிலர் மூவாயிரம் பேர் வரையே கலந்து கொண்டார்கள் என்று சொல்கிறார்கள்.’எழுக தமிழ்’ நிகழ்வின் ஒளிப்படங்களை நுண்மாண்நுழைபுலன் கொண்டு ஆராய்ந்த போது, ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டிருப்பது புலப்பட்டது. ஆறாயிரத்தில் இருந்து எட்டாயிரம் வரையான மக்கள் கலந்து கொண்டார்கள் என்று சொல்வது சரியாக இருக்கும்.

(“‘எழுக தமிழ்’ நிகழ்வில்” தொடர்ந்து வாசிக்க…)

நீறு பூத்த நெருப்பை பெரும் தீ ஆக்கலாமா?

அண்மையில் வட மாகாண சபை முதல்வர் முஸ்லிம் மக்கள் சம்மந்தமாக தெரிவித்த கருத்து விசனத்தை/விமர்சனத்தை ஏற்படுத்தியதை, இலங்கை மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கிகை மூலம் அறியமுடிகிறது. முஸ்லிம்கள் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டபோதும், அவர்கள் தங்களை தமிழர்களாக அடையாளம் காட்டாமல், தமது அரசியல் காரணங்களுக்காகவே தம்மை முஸ்லிம்களாக அடையாளம் காட்டுகின்றார்கள் என, வடமாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் மட்டக்களப்பில் தெரிவித்த கருத்தை, றிசாட் பதியுதீன் தலைமை வகிக்கும் கட்சியின் செயலாளர் நாயகம் வை எல் எஸ் ஹமீட் விடுத்த, அறிக்கை மூலம், நீறு பூத்த நெருப்பாக இருந்த, முன்னர் அரங்கேறிய பல அராஜக சம்பவங்கள், வெளிப்பட தொடங்கி மீண்டும் இன நல்லிணக்கத்தை கேள்விக்குறியாக மாற்றும் நிலை தோன்றி உள்ளது.

(“நீறு பூத்த நெருப்பை பெரும் தீ ஆக்கலாமா?” தொடர்ந்து வாசிக்க…)

மலையக நண்பர்களின் 2வது ஒன்றுக்கூடல்

 

தேனீருக்கும் நமக்குமான இந்த ஆத்மார்த்தமான உறவின் அடிநாதமான தேயிலை தோட்டங்கள் எப்படி உருவாகின ??  தினம் தினம் குழவி கொட்டுக்கும் அட்டை கடிக்கும் முதலாளிகளின் சுரண்டலுக்கும் இறையாகி கொண்டிருக்கும் தோட்ட தொழிலாளர்கள் யார் ??? எமது வரலாற்றின் பக்கங்கள் துயர் நிறைந்த சிவப்புத் தேயிலைச் சாயத்தில் எழுதப்பட்டவை.

(“மலையக நண்பர்களின் 2வது ஒன்றுக்கூடல்” தொடர்ந்து வாசிக்க…)

சாத்தான் ஒன்று வேதம் ஓதுது. அது சூத்திரச்சாத்தான்…

இன்று “எழுக தமிழ்” என்ற பெயரில் மாபெரும் இரு பேரணிகள் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றன. இந்த பேரணியில் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன்,செல்வம் அடைக்கலநாதன், ஆனந்தி எழிலன், கஜேந்திரன் உட்ப்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
மறு புறத்தில் ஈபிடிபியும் “எழுக தமிழ்” என்ற பெயரில் ஒரு பேரணியை டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடத்தியது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த இரு பேரணியில், காணாமல் போனோர், கடத்தப்பட்டோரின் விசாரணைகள், இடம்பெற வேண்டும் என்பது பிரதான அம்சமாக இடம்பெற்றது.

(“சாத்தான் ஒன்று வேதம் ஓதுது. அது சூத்திரச்சாத்தான்…” தொடர்ந்து வாசிக்க…)

உயிருடன் உள்ளாரா பிரபாகரன்….?

(தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராக இருந்தவர் தயா மோகன். இலங்கை இறுதிப் போரின் போது தப்பி வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக இருக்கிறார்.அவர் அளித்த கருத்தை இப்போ பார்ப்போம் …..!)

உயிருடன் உள்ளாரா பிரபாகரன்….?

தற்போது பிரபகாரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா? என்பது தொடர்பாக சில விசயங்களை நாங்கள் இப்போது சொல்வது என்பது சாத்தியமில்லாத விசயமாக இருக்கும். இருந்தாலும் இறுதியாக உறுதியாக சொல்கின்றேன் ,.. நாட்டுக்காக இறுதி வரை மக்களோடு மக்களாக நின்று போராடுவேன். வெற்றி பெற இயலவில்லை என்றால் மாவீரர்களோடு இணைந்து விடுவேன். இதுதான் தலைவர் சொன்ன தாரக மந்திரம் .தலைவர் இருக்கிறார் என்று விடுபவர்களே சிந்தியுங்கள் …

(“உயிருடன் உள்ளாரா பிரபாகரன்….?” தொடர்ந்து வாசிக்க…)