அயர்லாந்து வரி ஏய்ப்பு: அப்பிளைக் கடித்தது யார்?

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

அரசு யாருக்கானது என்ற வினா இடையிடையே எழும். காலங்காலமாக அரசாங்கத்தின் வகிபாகம் தொடர்ந்து மாறிவந்துள்ளது. அரசின் பிரதான வகிபாகம், இருந்துவரும் சமூக அமைப்பைப் பாதுகாப்பதும் சமூக உறுதியை நிச்சயப்படுத்துவதுமாக இருந்தது. ஆனால் இன்று அரசாங்கம் வெளிப்படையாகவே மக்கள் விரோதமான, சமூக நலன்களை இல்லாதொழித்துப் பல்தேசியக் கம்பெனிகளுக்குச் சேவகம் புரிவதாக வளர்ந்துள்ளது. இம் மாற்றம் உலகமயமாக்கலும் சந்தைப் பொருளாதாரமும் உலக அலுவல்களைத் தீர்மானிப்பதன் விளைவாக உருவானதாகும்.

(“அயர்லாந்து வரி ஏய்ப்பு: அப்பிளைக் கடித்தது யார்?” தொடர்ந்து வாசிக்க…)

‘புதிய அரசியல் யாப்பானது சகலருக்கும் ஏற்றதாக அமையும்’

புதிய அரசியல் சாசனமானது பொதுஜன வாக்கெடுப்பின் மூலமே நிறைவேற்றறப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்பதுடன், அதற்கு மாறாக எவரும் பொதுமக்களை ஏமாற்ற முடியாது என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

(“‘புதிய அரசியல் யாப்பானது சகலருக்கும் ஏற்றதாக அமையும்’” தொடர்ந்து வாசிக்க…)

திலீபனைப் போல் பலியாக்கப்பட்டவன்…. விக்னேஸ்வரன்

நாம் தமிழர் கட்சி இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விக்னேஸ் என்ற இளைஞர் தீக்குளித்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். விக்னேஸ் தீக்குளித்த செய்தி வந்த பொழுது, நான் அதைப் பெரிது படுத்தவில்லை. ஊர்வலத்தில் தனக்குத்தானே தீமூட்ட முயற்சித்திருப்பான், உடனடியாகவே அவனை பக்கத்தில் நின்ற தொண்டர்கள் காப்பாற்றியிருப்பார்கள், சிறிய தீக்காயம்தான் ஏற்பட்டிருக்கும், இன்றைக்கே வீடு வந்து விடுவான்’ இப்படி எனக்கு நானே நினைத்துக் கொண்டேன்.

(“திலீபனைப் போல் பலியாக்கப்பட்டவன்…. விக்னேஸ்வரன்” தொடர்ந்து வாசிக்க…)

தற்கொலைகள்

ஊமைவிழிகள் படத்தில் ஒரு பாட்டு.வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மறக்கலாமா.வாழ்வு என்பது பலருக்கு சுலபமான விசயம் அல்ல.ஆனால் பெற்றவர்கள் ஏழைகளாக இருந்தாலும் இயலாதவர்களாக இருந்தாலும் தங்கள் பிள்ளைகளுக்காக வாழ்பவர்கள்.முடிந்தளவு பிள்ளைகளின் எல்லா சுமைகளையும் சுமப்பவர்கள்.அவரகளின் ஆசைகள் கனவுகளை பிள்ளைகள் புரிவதில்லை.

(“தற்கொலைகள்” தொடர்ந்து வாசிக்க…)

பளை விபத்தில் ஐவர் பலி

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் 278 ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை (15) காலை 5.30 க்கு இடம்பெற்ற வாகன விபத்தில், வானில் பயணித்த நால்வர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் அறுவர் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(“பளை விபத்தில் ஐவர் பலி” தொடர்ந்து வாசிக்க…)

‘ட்ரம்ப் ஒரு தேசிய அவமானம்’

ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், “ஒரு தேசிய அவமானம்” என, குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும் முன்னாள் இராஜாங்கச் செயலாளருமான கொலின் பவல் தெரிவித்துள்ளார். அவரது மின்னஞ்சல்கள், ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுவோரால் ஊடுருவப்பட்டு (ஹக்), வெளியிடப்பட்டுள்ளன. அதிலேயே, இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

(“‘ட்ரம்ப் ஒரு தேசிய அவமானம்’” தொடர்ந்து வாசிக்க…)

பல மில்லியன் பணத்துடன் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது

மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் இந்திய கடலோர பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அருள் ஜயரத்னம் என்றழைக்கப்படும் ராஜன் என்ற 41 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(“பல மில்லியன் பணத்துடன் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

கன்னடர் – தமிழர் இனப்பிரச்சினை குறித்து அதிகம் அறியப் படாத உண்மைகள்

காவிரி நதி ஊற்றெடுக்கும் குடகு மலைப் பகுதி, துளு மொழி பேசும் குடகு இனத்தவரின் பாரம்பரிய பூமி. காவேரி அவர்களது குல தெய்வம்! குடகு மக்கள், இன்று அழிந்து வரும் திராவிட மொழியொன்றை (துளு?) பேசுகின்றனர். அது தமிழ், மலையாளம், கன்னடம் மூன்றுக்கும் மூல மொழியாக இருக்கலாம். பெங்களூர் நகரம் ஒரு தமிழ் மன்னனால் ஸ்தாபிக்கப் பட்டது. சோழர்கள் காலத்தில் இருந்து பெங்களூரில் தமிழர்களின் வரலாறு தொடங்குகின்றது. (அனேகமாக அந்தத் தமிழர்கள் பிற்காலத்தில் கன்னடர்களாக மாறி இருக்கலாம்.)

(“கன்னடர் – தமிழர் இனப்பிரச்சினை குறித்து அதிகம் அறியப் படாத உண்மைகள்” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்.

புலிகள் செய்திருக்க கூடாத மாபெரும் தவறாகவே அவர்களின் கட்டாய ஆட்சேர்ப்பை நான் கருதுவதால் இந்ததொடரில் இந்த கட்டாய ஆட்சேர்ப்பு என்கின்ற பெயரில் அவர்கள் யாருடைய விடுதலைக்காக போராடுவதாக கூறினார்களோ அவர்கள் மீதே கட்டவிழ்த்துவிட்ட வன்கொடுமையையும் , அடக்குமுறையையும் இதுவரை எழுதியுள்ளேன்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்.” தொடர்ந்து வாசிக்க…)