“அஸ்மிதா” : கதை திரும்புகிறது..

குஜராத் 2002 இன அழிப்பு நடந்த கையோடு புகழ்பெற்ற சமூகப் பொருளாதார ஆய்விதழான EPW ஒரு சிறப்பிதழை வெளியிட்டது. இந்தியத் துணைக்கண்டம் முழுமையிலும் உள்ள மிக முக்கிய அறிஞர்கள் அனைவரும் குஜராத் இன அழிப்பு குறித்த ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருந்தனர். உடனடியாக அவற்றை தமிழில் பெயர்த்தேன். எனது கட்டுரைகளையும் இணைத்து (மொத்தம் சுமார் 350 பக்கங்கள்) “குஜராத்: அர்த்தங்களும் உள்ளர்த்தங்களும்” எனும் நூலாக அது வெளிவந்தது (அடையாளம் பதிப்பகம்).

(““அஸ்மிதா” : கதை திரும்புகிறது..” தொடர்ந்து வாசிக்க…)

குஜராத் : மோடி வகை ஆட்சியின் தர்க்க பூர்வமான முடிவு..

காஷ்மீர் மட்டுமல்ல இன்று குஜராத்தும் பற்றி எரிகிறது. வரலாறு காணாத தலித் எழுச்சி இன்று அந்த மாநில முதல்வர் ஆனந்திபென் படேலைக் காவு கொண்டுள்ளது. அவரது பதவி விலகலுக்குப் பின் குஜராத்துக்குப் பொறுப்பேற்க பாஜகவில் எல்லோருக்கும் தயக்கம். அமித் ஷா பெயர் சொல்லப்பட்டவுடன் அவரும் தயாராக இல்லை என உடன் செய்திகள் வெளியாயின. இப்போது யாரோ அவரது விசுவாசி ஒருவரைத் தேர்வு செய்துள்ளாராம்.

(“குஜராத் : மோடி வகை ஆட்சியின் தர்க்க பூர்வமான முடிவு..” தொடர்ந்து வாசிக்க…)

உலகை உருக வைத்த அழுகை!

ஒலிம்பிக்கில் முதன் முறையாக ஒரு ஆப்பிரிக்க – அமெரிக்க கறுப்பின நீச்சல் வீராங்கனை, தங்கம் வென்றதோடு, ஒலிம்பிக் சாதனையும் படைத்துள்ளார்.

(“உலகை உருக வைத்த அழுகை!” தொடர்ந்து வாசிக்க…)

லண்டனில் இருந்துகொண்டு எல்.ரீ.ரீ.ஈ யினால் தீயவழியில் பெற்ற வருமானங்ளை அனுபவித்து வாழும் வெள்ளைப்புலி யார்?

அது வேறு யாருமல்ல ஒன்பது வயதுகூட ஆகாத பச்சிளம் பிள்ளைகளை சிறுவர் போராளிகளாக ஆட்சேர்;ப்பு செய்து, கொலை செய்யவும்; முடமாக்கவும், விகாரப்படுத்தவும் மற்றும் காயப்படுத்தவும் புத்திமதிகள் கூறியவரும் மற்றும் தீவிரவாத பயிற்சியை நிறைவு செய்தபின் அவர்களுக்கு சயனைட் குளிகைகளினால் ஆன மாலை சூட்டியவருமான அடேல் பாலசிங்கம் தான் அவர். இரண்டு உலகத் தலைவர்களைக் படுகொலை செய்தது உட்பட தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய எல்.ரீ.ரீ.யினது பெண்கள் பிரிவிற்கு ஒரு ஆலோசகராக செயற்பட்டதுக்கு மேலதிகமாக அடேல் ஒரு படைப்பாற்றல் மிக்க தீவிரவாத பிரச்சாரகர், தென் கொரியாவில் இருந்து ஆயுதங்களை அனுப்புவதற்காக ஆயுதக் கப்பல்களில் பயணம் செய்தது உட்பட ஒரு தொடர் சட்டவிரோத செயல்களில் அவர் ஈடுபட்டிருக்கிறார். இன்று அடேல் லண்டனில் சுகமாக வாழுகிறார்.

(“லண்டனில் இருந்துகொண்டு எல்.ரீ.ரீ.ஈ யினால் தீயவழியில் பெற்ற வருமானங்ளை அனுபவித்து வாழும் வெள்ளைப்புலி யார்?” தொடர்ந்து வாசிக்க…)

2006 ஆகஸ்ட் 12 தோழர் கேதீஸ் நினைவு நாள்

10 ஆண்டுகள் உருண்டோடி விட்டன!

யுத்தத்தினூடே தமிழச் சமூகம் புலமைத்துவ வறுமை கொண்ட சமூகமாக மாறியிருக்கிறது. தோழர் கேதீஸ் தேசிய இனப்பிரச்சனை மற்றும் பல்லினங்களின் நாடாக இலங்கையை மாற்றுவதற்கான கனவுகளுடன் வாழ்ந்தவர்.அவருடைய கட்டுரைகள் நூல்கள் மீள் வாசிக்கப்படவேண்டும். அறிவார்ந்த முறையில் பிரக்ஞை பூர்வமாக சமூகங்கள் மீள் இணைவதற்கான தேடலைப்பிரதிபலிப்பன. சமகாலத்தில் அவரின் வெற்றிடம் தமிழ் சமூகத்தில் நிரப்ப முடியாத ஒன்றாகவே எம்மால் உணரப்படுகிறது. இந்த கட்டுரை அவர் படுகொலை செய்யப்பட ஒரு சில நாட்களில் எழுதப்பட்டது. ஒருசில மாற்றங்களுடன் மீளவும் அந்தக்கணங்களின் உணர்வுநிலை -நினைவலைகள் சார்ந்தது.

(“2006 ஆகஸ்ட் 12 தோழர் கேதீஸ் நினைவு நாள்” தொடர்ந்து வாசிக்க…)

றியோ ஒலிம்பிக்: யாருக்காக?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

விளையாட்டு அனைத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளி மக்களை இணைக்கிறது என்று சொல்வர். விளையாட்டுக்கு அவ்வாறான ஒரு பெறுமதி ஒரு காலத்தில் இருந்தது. இன்று நிலைமை மாறிவிட்டது. விளையாட்டை வணிகம் தின்று விழுங்கியதன் எச்சத்தையே, நாம் விளையாட்டாகப் பார்க்கப்பணிக்கப்பட்டுள்ளோம். விளையாட்டு அதன் அடிப்படை விழுமியங்களை இழந்து விட்டது. விளையாட்டுகளின் நோக்கங்களும் மாறிவிட்டன. இன்று உலகமயமான வணிகமே விளையாட்டை உலகெங்கும் கொண்டு செல்கிறது; பிரபலமாக்குகிறது; வருவாய் பெறுகிறது. ஒலிம்பிக் இதற்கு விலக்கல்ல!

(“றியோ ஒலிம்பிக்: யாருக்காக?” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(2)

(பிரிக்கப்பட்ட புதுமண தம்பதிகள்)

புலிகளால் கட்டயமாக பிடித்து செல்லப்பட்டு சில நாட்களில் பயிற்சிகளின் பின் தொழில்முறை இராணுவத்துடன் போரிடுவதற்காக போர்களங்களில் விடப்படுவதை தவிர்ப்பதற்கு கிளிநொச்சி முல்லைதீவில் வாழ்ந்த மக்களுக்கு கிடைத்த ஒரு துருப்புச்சீட்டு திருமணங்கள். கட்டய ஆட்சேர்ப்பை ஜூன் 2006ல் புலிகள் தொடங்கியபோது திருமணம் செய்துகொண்டவர்களை பிடித்துசெல்வதை தவிர்த்திருந்தனர். எனவே இதனை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளை காப்பாற்றிக்கொள்ள நினைத்த பெற்றோர்கள் தங்கள் இளவயது பிள்ளைகளுக்கு அவசரமாக திருமணம் முடித்துவைத்தனர். திருமண வயதை எட்டாதவர்களுக்கு கூட திருமணங்கள் இரவோடு இரவாக செய்யது வைக்கப்பட்டன. தங்கள் பெண்பிள்ளைகள் கர்ப்பிணியாகிவிட்டால் அவர்களை புலிகள் பிடித்து செல்ல மாட்டார்கள் என்று அவர்கள் நம்பினர். ஆனால் இவர்களின் நம்பிக்கை நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(2)” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனும் வன்னி மாணவர்களும்

காட்டிக்கொடுத்த மாணவர்களுக்கு பரிசாக அவர்களை வீடுகளுக்கு அனுப்பி பல்கலை கழகம் செல்ல வைத்தார். இந்த மாணவர்கள் பெயரில் வேறு நபர்கள் பரீட்சை எழுதியதனாலும் திறமையான மாணவர்களை பரீட்சை எழுத விடாமல் தடுக்கப்பட்டதாலும் கல்வி அதிகாரிகளின் ஒத்துழைப்பினாலும் புலிகளின் விசுவாசிகளான மாணவர்கள் பல்கலை கழக அனுமதியை பெற்றுக்கொண்டனர்.

(“பிரபாகரனும் வன்னி மாணவர்களும்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பதிவு 55 )

பொதுவாக மாவட்ட அதிகாரிகளின் அலுவலகம் கச்சேரிகளில் அமைந்திருக்கும் .திருகோணமலையில் துறைமுகத்தின் அருகில் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகம் அமைந்திருந்தது.அதன் அருகே நகர காரியாதிகாரி அலுவலகம் ,சுங்க இலாகா அலுவலகம் ஆகியவை அமைந்திருந்தன.ஆனால் எனக்கு சுங்க இலாகா என்றால் என்ன என்பது தெரியாது.

 

நான் பற்குணத்தோடு நிற்கும் நாட்களில் எங்காவது தூர இடங்கள் செல்வதானால் என்னையும் அழைத்துச் செல்வார்.அதுபோலவே புதிதாக கப்பல் ஏதாவது உணவுகள் கொண்டுவந்தால் அவற்றைப் பொறுப்பேற்க போகும்போதும் அழைத்துச் செல்வார்.

நான் முதன் முதலாக கப்பலை பார்க்க அழைத்து சென்றபோது என்னிடம் இரண்டு தேயிலைப் பெட்டிகள் வாங்கித் தந்தார்.அவர் கப்பலுக்கு போவதற்கு தனியான இயந்திரப் படகு இருந்தது.அதில் ஏறி இருவரும் கப்பலுக்கு செனறோம்.

அவர் கப்பலின் தலைவரைக் கண்டு கை குலுக்கி என்னையும் அறிமுகப் படுத்தினார்.நானும் அவருடன் கை குலுக்கி கொண்டு சென்ற தேயிலைப் பெட்டியை கொடுத்தேன்.அதற்கு பிரதி உபகாரமாக எனக்கு நிறைய இனிப்பு வகைகள்,கொப்பிகள்,பேனாக்கள் தந்தார்.நானும் வாங்கிவிட்டு நன்றி சொன்னேன்.அதன் பின் பற்குணத்தின் வேண்டுதலுக்கு இணங்க எனக்கு ஒருவர் கப்பலை சுற்றிக் காட்டினார்.

அன்றுதான் நான் தொலைக்காட்சி பெட்டி,ராடர் என்பவற்றைப் பார்த்தேன்.பற்குணத்தின் அலுவல்கள் முடிந்தபின் நாங்கள் கரை திரும்பினோம்.அப்போது பற்குணம் ஒரு அலுவலகத்தைக் காட்டி அங்கே போய் நீ கொண்டு வந்த எல்லாவற்றையும் காட்டிவிட்டு வா என்றார்.அவரகள் எதுவும் எடுக்காவிட்டால் நீ கொஞ்சம் இனிப்புகளை கொடுத்துவிட்டு வா என்றார்.

அப்போதுதான் அது என்ன எனக் கேட்க அதுதான் சுங்க அலுவலகம் என விளங்ப்படுத்தினார்.நான் அங்கே போனபோது ஏதோ வகையில் என்னை அடையாளம் கண்டு போகச் சொன்னார்கள்.நான் கொஞ்ச இனிப்புகளை அவர்களுக்கும் கொடுத்து திரும்பினேன்.

அப்போது அவரின் இந்த செயற்பாடு விளங்கவில்லை.இப்போது அவர் மற்றவர்களின் கடமைகளுக்கும் எவ்வளவு மதிப்பளித்தார் என நினைத்துப் பார்க்கிறேன்.

 

பயிரை மேய்ந்த வேலிகள்….

(Rajh Selvapathi என்பவர்  UNHCR, the UN Refugee Agency தனது அலுவலகத் தளமாக கொண்டவர் தனது அனுபவப் பகிர்வுகளைப் பதிவு செய்கின்றார்.)

இந்த தொடரின் நோக்கம் புலிகளை விமர்சிப்பதோ அல்லது தமிழீழ போராட்டங்களின் நன்மை தீமைகளை ஆராய்வதோ அல்ல. 2006 ஜூனுக்கு பின்பு புலிகள் பெரிதும் மாறிப்போய் எவற்றில் இருந்து எல்லாம் மக்களை காப்பாற்றபோவதாக கூறினார்களோ அவற்றையெல்லாம் சொந்த மக்கள் மீதே தாங்களே செய்தார்கள். இதனால் பலர் தமது உயிரை விடவேண்டியிருந்தது. பல குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. முள்ளிவாய்காலை விட 100 மடங்கு கோரதாண்டவத்தை அப்பாவி மக்கள் மீது அவர்கள் கட்டவிழ்த்து விட்டார்கள். புலிகளின் இந்த கொடிய செயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மக்களுக்கான நீதியை மனசாட்சி உள்ள மனிதர்களிடம் கோரும் ஒரு சுயாதீன அறிக்கையாகவே இந்த தொடர் அமைகின்றது.

(“பயிரை மேய்ந்த வேலிகள்….” தொடர்ந்து வாசிக்க…)