நளினியை விடுவிக்க முடியாது..! தமிழக அரசு தடாலடி

நளினி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தம்மை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இன்று தமிழக அரசின் உள்துறை துணை செயலாளர் டேனியல் தேவஆசீர்வாதம் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார்.

(“நளினியை விடுவிக்க முடியாது..! தமிழக அரசு தடாலடி” தொடர்ந்து வாசிக்க…)

பேஸ்புக் நிறுவனம் நிறுவனம் விடுக்கும் அவசர செய்தி !

இப்போது நீங்கள் பேஸ்புக்கில் உள்ளீர்களா? நன்று, இந்த செய்தி உங்களுக்கானது தான். பேஸ்புக் புதிததாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்களை உடனடியாக டவுன்லோட் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளது.
பேஸ்புக்,  போட்டோக்களாலே அதிக வாசகர்களை இணைத்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(“பேஸ்புக் நிறுவனம் நிறுவனம் விடுக்கும் அவசர செய்தி !” தொடர்ந்து வாசிக்க…)

ஒர்லாண்டோவின் மறுபக்கம்: வானவில்லில் கலந்த குருதி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எந்தச் செய்திக்கும் ஒரு மறுபக்கம் உண்டு. அது அனேகமாக மறுக்கப்பட்ட பக்கமாகவும் அமையும். தொழிநுட்ப வளர்ச்சியும் தகவல் வழங்குநர்களின் மிகையான பெருக்கமும் இணைந்ததால் விளைந்த தகவற் குவியல் யுகத்தில் வாழ்கிறோம். சரியான செய்தியைப் பெறுவது எவ்வாறென்பதே, நம் முன்னுள்ள பெரிய சவால். ஒரு விடயம் பற்றிப் பொதுவெளியில் பேசப்படுவன கட்டாயம் உண்மையாயிருக்கத் தேவையில்லை. ஆனால், அவை ஊடகவெளியின் உதவியால் உண்மையாகின்றன. இந்நிலையில் அவ்வாறான செய்திகளின் மறுபக்கத்தை எழுதுவது சவாலானது. ஒரு செய்தியின் மறுபக்கம் அதிர்ச்சி, வியப்பு, ஏமாற்றம் எனப் பலவித உணர்வுகளைத் தரலாம். மறுபக்கத்தின் வலிமை அதுவே.

(“ஒர்லாண்டோவின் மறுபக்கம்: வானவில்லில் கலந்த குருதி” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் ஏ.ஜி.ஏ ( பகுதி 46 )

பற்குணம் தன் பதவி என்ற எல்லைக்கு அப்பால் சென்றும் அராஜகத்துடன் மோதியவர்.அன்றைய நாட்களில் பற்குணத்துடன் சமகாலத்தில். பல்கலைக் கழகத்தில் படித்த பொன்னையா,கணேசபிள்ளை,சின்னராசா ஆகியோர் வேலை கிடைக்காத காரணத்தால் ப.நோ.கூ சங்க பொது முகாமையாளர்களாக பணிபுரிந்தனர்.பொன்னையா குச்சவெளி (இவர் தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் உறவினர்)சின்னராசா தம்பலகாமம்- இவரின் சொந்த ஊரும் அதுவே.அடுத்தது கணேசபிள்ளை கந்தளாய்.

(“பற்குணம் ஏ.ஜி.ஏ ( பகுதி 46 )” தொடர்ந்து வாசிக்க…)

மகாபொல இல்லையா.. பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மகாபொல புலமை பரிசில் இவ்வருடம் தமக்கு கிடைக்கவில்லையென கூறி பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் கலஹா சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். தமக்கு இந்த வருடம் மகாபொல புலமைபரிசில் கிடைக்காது என பல்கலைக்கழகத்தின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகம், தெரிவித்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மகாபொல புலமைபரிசிலாக 5,000 மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 1 மணித்தியாலம் இடம்பெற்றதையடுத்து, மாணவர்கள் கலைந்துசென்றனர்.

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (Part 3)

ஏ.இ. குணசிங்கா தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த போது இலங்கை முழுவதற்கும் ஒரேயொரு சட்டசபைப் பிரதிநிதியாக இருந்த சேர். பொன்னம்பலம் இராமநாதன் “இந்தியாவில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முன் காற்றின் வீச்சினால் தற்செயலாக இலங்கை வந்தடைந்த சிங்கள மக்கள் எப்படித் தோட்டத் தொழிலாளிகளைப் பார்த்து இந்தியனே வெளியேறு என்று கூறமுடியும்? தேளை, பாம்பைக் கொல்லாது துரத்தும் சிங்கள மக்கள் எப்படி மனம் வந்து இம் மலைநாட்டுத் தமிழரை வெளியேறச் சொல்ல முடியும்? இது புத்த நெறிக்கோ தருமத்திற்கோ ஒத்துப் போகுமா?” எனச் சட்டசபையில் வருத்தத்தோடு கேட்டார்.

(“இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (Part 3)” தொடர்ந்து வாசிக்க…)

1990 ஆம் ஆண்டு திரு பாண்டியன் அவர்கள் கூறுவது…….

1987களில் ஈழ‌ போராளிகள் மூலம் ஜெயவர்த்தனா அரசு வழிக்கு வரவில்லை என்றால் படையெடுக்க இந்தியா தயாராக இருந்தது, அதற்கான திட்டங்கள் தயாராக வகுக்கபட்ட இடம் இந்தியாவின் கோவா. அந்த தாக்குதல் திட்டத்தை வகுத்த தளபதியும் தமிழரே வடமராட்சியில் புலிகள் அழியும் நிலையில் இந்தியா உணவுபொருள் வீசியது,இலங்கை அரசுக்கு உணவு போட்ட விமானத்தால் குண்டுகளையும் போடமுடியும் என்று சொல்லாமல் சொல்லியது இந்திய அரசு, அடுத்த கட்டத்தை உணர்ந்த சிங்கள அரசு ராணுவநடவடிக்கையினை நிறுத்திவிட்டு அமைதியானது.

(“1990 ஆம் ஆண்டு திரு பாண்டியன் அவர்கள் கூறுவது…….” தொடர்ந்து வாசிக்க…)

பிரான்ஸில் லைக்கா நிறுவ‌ன‌த்தின் மீது பொலிஸ் ந‌ட‌வ‌டிக்கை.

பிரான்ஸில் லைக்கா நிறுவ‌ன‌த்தின் மீது பொலிஸ் ந‌ட‌வ‌டிக்கை. பெரும‌ள‌வு க‌றுப்புப் ப‌ண‌ம் கைப்ப‌ற்ற‌ப் ப‌ட்ட‌து. 130000 யூரோ ரொக்க‌ப் ப‌ண‌மாக‌வும், 850000 யூரோ வ‌ங்கிக் க‌ண‌க்குக‌ளில் இருந்தும் ப‌றிமுத‌ல் செய்ய‌ப் ப‌ட்ட‌து. இது தொட‌ர்பாக‌ ஒன்ப‌து பேர் கைது செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர். அவர்க‌ளில் லைக்காவின் பிரான்ஸ் நிர்வாகி Alain Jochimek உம் ஒருவ‌ர் என‌த் தெரிய‌ வருகின்ற‌து. இவ‌ர் ஒரு யூத‌ர். பிரான்ஸில் சியோனிச‌ அமைப்பொன்றை ந‌ட‌த்தி வ‌ருகின்றார்.

(“பிரான்ஸில் லைக்கா நிறுவ‌ன‌த்தின் மீது பொலிஸ் ந‌ட‌வ‌டிக்கை.” தொடர்ந்து வாசிக்க…)

நீதிபதி நினைத்தால் யாரையும் ‘ நீ, இன்றிலிருந்து வக்கீல் இல்லை.

இந்திய இடதுசாரிகள் என்றாலே CPI மற்றும் CPI (M) என்கிற இரண்டு கட்சிகளை பிரதான கட்சிகள் எனலாம். CPI ( ML) இந்தி மொழி பேசும் மக்களின் சில பகுதிகளில் பரவலாக இருப்பினும் நாடு தழுவிய அளவில் அதன் அமைப்பு இல்லை. இந்திய அரசு அமைப்பு சட்டத்தை மிகவும் காலதாமதமாக ஏற்றுக் கொண்ட கட்சி. இந்த சிபிஐ, சிபிஎம் கட்சிகள் Indian Association of Lawyers மற்றும் All India Lawyers Union என்ற பெயரில் வழக்கறிஞர்களின் அமைப்பை வழி நடத்துகின்றன. தமிழக வழக்கறிஞர்கள் 40 க்கும் மேல் தொழில் செய்ய அகில இந்திய பார்கவுன்சில் தடை விதித்து , அவர்களின் வழக்கை பெங்களூரில் நடத்த உத்தரவிட்டது.

(“நீதிபதி நினைத்தால் யாரையும் ‘ நீ, இன்றிலிருந்து வக்கீல் இல்லை.” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 45 )

தம்பலகாமம் உதவி அரசாங்க அலுவலகம்,தம்பலகாமம் சந்தியில் உள்ளது.இதன் பின்னால் பற்குணத்தின் அரச வீடு இருந்தது. இதனைச் சுற்றி சிங்கள மக்கள் குடியேறி இருந்தனர்.தமிழர்கள் அதில் இருந்து இரண்டு மைல் உள்ளேயே இருந்தனர்.சந்தியை அண்மித்து ஒரு சில தமிழ்க் குடும்பங்களே இருந்தன.சந்தியைப் பொறுத்தவரை அது ஒரு சிங்கள கிராமம் போலவே இருந்தது.ஏறக்குறைய இருபது குடும்பங்கள் இருக்கலாம்.அதனை அண்மித்து விகாரை ஒன்றும் இருந்தது.

(“பற்குணம் ஏ.ஜி.ஏ (பகுதி 45 )” தொடர்ந்து வாசிக்க…)