இந்தியா உதவவில்லை – வரதர்! இந்தியா உதவ வேண்டும் – விக்கி?

இந்தியா சமஸ்டி அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள உதவவில்லை என்று இந்தியாவின் அரவணைப்பில் இருக்கும் முன்னாள் மாகாண முதல்வர் வரதராஜப் பெருமாள் கூறியிருக்கிறார். ஆனால் சமஸ்டி அதிகாரங்களை பெறுவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று இந்நாள் முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் கேட்டிருக்கிறார். இந்தியா தமிழ் மக்களுக்கு இதுவரை உதவவில்லை. இனியும் உதவப் போவதில்லை. எனவே மீண்டும் மீண்டும் இந்தியா உதவ வேண்டும் என்று கேட்பதன் மர்மம் என்ன? தமிழ்மக்கள் மீதான இத்தனை அழிவுக்கும் காரணமான இந்தியா உதவவேண்டும் என்று இன்னமும் கேட்பதன் அரசியல் என்ன? இலுப்பம் பழம் பழுத்தால் வெளவால் வரும் என்று முன்பு சொன்னார்கள். வந்தது வெளவால் அல்ல, இந்தியா என்ற குள்ள நரி என்று கண்டோம்.

(“இந்தியா உதவவில்லை – வரதர்! இந்தியா உதவ வேண்டும் – விக்கி?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு?

தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் இந்த கருத்து முரண்பாடுகளையும், உட்கட்சி பிளவுகளையும் தீர்ப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எதிர்வரும் 6ஆம் திகதி சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவரது கொழும்பு அலுவலகத்தில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

(“தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவு?” தொடர்ந்து வாசிக்க…)

சிறீலங்காவில் 28 துறைமுகங்கள் கட்டவிரும்பும் சீனா?

இலங்கைத் தீவைச் சுற்றி 28 துறைமுக நகரங்களை நிர்மாணிக்க சீனா விருப்பம் தெரிவித்திருப்பதாக, இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய, ஆரம்பிக்கப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் கடந்த ஆண்டு மார்ச் முதல் வாரம் இடைநிறுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் உடன்பாட்டில் திருத்தங்களைச் செய்து அதனைத் தொடர்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் விருப்பம் கொண்டுள்ளது.

(“சிறீலங்காவில் 28 துறைமுகங்கள் கட்டவிரும்பும் சீனா?” தொடர்ந்து வாசிக்க…)

அரசுக்கு எதிராக மஹிந்த அணி!

தேசிய அரசின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 17ஆம் திகதி கொழும்பில் மாபெரும் மக்கள் எதிர்ப்பு கூட்டமொன்றை நடத்துவதற்கு பொது எதிரணி எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் மஹிந்த ஆதரவு அணியினர் தீர்மானித்துள்ளனர். நல்லாட்சி அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அரசுக்கு எதிரான சக்திகளின் செயற்பாடுகளை கண்டித்தும் எதிர்வரும் 15 ஆம் திகதி சில அமைப்புகள் இணைந்து கொழும்பில் போராட்டம் நடத்தவுள்ளன. இதில் ஐக்கிய தேசியக் கட்சியும் பங்கேற்கவுள்ளது. இந்தக் போராட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே 17ஆம் திகதி கூட்டத்தை மஹிந்த அணி ஏற்பாடு செய்துள்ளது.

(“அரசுக்கு எதிராக மஹிந்த அணி!” தொடர்ந்து வாசிக்க…)

மைத்திரிக்கு பதிலடி கொடுக்க மஹிந்த வியூகம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து தனது விசுவாசிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாக நீக்கியுள்ளதால் கடும் சீற்றத்தில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகக்‌ஷ, இதற்கு எவ்வாறு பதிலடிகொடுக்கலாம் என்பது பற்றி பொது எதிரணி உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளார். பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள மஹிந்தவின் மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இந்த அவசர சந்திப்பில் காமினிலொக்குகே, ரோகித்த அபேகுணவர்தன உள்ளிட்ட மஹிந்த ஆதரவு அணி எம்.பிக்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

(“மைத்திரிக்கு பதிலடி கொடுக்க மஹிந்த வியூகம்!” தொடர்ந்து வாசிக்க…)

உண்ணாவிரதப் போராட்டத்தை ஷர்மிளா தொடர்கின்றார்

இம்பால் : மணிப்பூரில் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த இரோம் ஷர்மிளா, நீதிமன்ற காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்பும், தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.

(“உண்ணாவிரதப் போராட்டத்தை ஷர்மிளா தொடர்கின்றார்” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி யாழில் போராட்டம்!

விசாரணையின்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. மகஸின் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் 14 அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவுகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள், சிவில் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கி கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏழு வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாகத் தடுத்துவைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் கொழும்பு விசேட நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முருகையா கோமகனும் கலந்துகொண்டார்.

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை!?

பொறுப்புக்கூறும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புக் கூறுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட காணாமற்போனோர் குறித்த விசாரணைகள், நேற்றுடன் முடிவடைந்தன.

(“வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை!?” தொடர்ந்து வாசிக்க…)

ஊழல் விசாரணை ஆணைக்குழு செயலர் பதவி நீக்கம்!?

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், முறைகேடுகள், ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் செயலர் பதவியில் இருந்து லசிலி டி சில்வா திடீரென நீக்கப்பட்டுள்ளார். உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவர் நேற்று இந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதுபற்றி, சிறிலங்கா அதிபரின் செயலர் பி.பி.அபயகோன் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.

(“ஊழல் விசாரணை ஆணைக்குழு செயலர் பதவி நீக்கம்!?” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 14)

வேலாயதம் வளவு கொலையைத் தொடர்ந்து மீளவும் அவர்கள் தமது ஊர் மீது தாக்குதல் நடாத்தினால் இம்முறை கைக்குண்டை வீசலாம் என தீர்மானித்து கைக்குண்டை தேடிப்போக சில நாட்களுக்குள்ளேயே அதை சுற்றி புற்று கிளம்பிவிட்டது.அதை எடுக்க முடியவில்லை .ஒரு குண்டு கொஞ்சம் தெரியவே அதை துப்பாக்கியால் சுட்டு வெடிக்க வைக்கப்பட்டது.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 14)” தொடர்ந்து வாசிக்க…)