செங்கைஆழியான் காலமானார்.

பிரபல எழுத்தாளரும், ஒய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரியுமான செங்கைஆழியான் என அழைக்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா யாழ்ப்பாணம் பிரௌன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 75ஆகும். புவியியல்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற குணராசா புவியியல் பாடநூல்கள் பலவற்றை எழுதியதுடன் பல தொடர்கதைகள், நாவல்கள், சிறுகதைகள் என ஆக்க இலக்கியங்களையும் படைத்துள்ளார். வீரகேசரி வெளியீடாக வெளிவந்த வாடைக்காற்று நாவல் பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. அது தவிர சிரித்திரன், வீரகேசரி தினகரன் ஆகியவற்றில் தொடர்கதைகளையும் எழுதியுள்ளார். வீரகேசரி வெளியீடாக 10க்கு மேற்பட்ட இவரின் நாவல்கள் வெளியாகியுள்ளன. இறுதியாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளராகவும் இவர் பணியாற்றினார்.

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட் விலகல்?

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் இணைத் தலைமையில் உருவாகிய தமிழ் மக்கள் பேரவையில் இருந்து கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றாகிய புளொட் விலகவுள்ளதாக தெரியவருகிறது. தமிழ் மக்கள் பேரவையில் முதலமைச்சர் இணைந்துள்ளமை தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலரும், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் புளொட் அமைப்பு அதிலிருந்து விலக முயல்வதாக தெரிகிறது.

(“தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட் விலகல்?” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 12)

சம உரிமைப் போராட்டமாக தொடங்கி எதிரிகளின் கொலைவெறியால் இப்போது சமூகங்களிடையேயான பழிவாங்கலாக மாறிவிட்டது.நமது சமூகத்தினர் திடீரென அமைதியானார்கள்.வழமைபோலவே செயற்பாடுகள் இயல்பு நிலை திரும்பின.ஆனாலும் இரத்தினம் பற்றிய பேச்சு தொடர்ந்தது.இரத்தினம் இல்லாத்தால் மீண்டும் அவர்கள் ஊரைத் தாக்கலாம் என்ற அச்சம் சிலரிடையே இருந்தது.அவரகளும் அமைதியாக செயலாற்றினார்கள்.அவரகளில் சிலர் இரண்டு கைக்குண்டுகளை கொண்டுவந்தார்கள்.இது திரியை வாயால் இழுத்து எறிவது.இது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.ஆனால் இதை யார் வைத்திருப்பது,எங்கே வைத்திருப்பது என்ற பிரச்சினை உருவானது.வைத்திருப்பவர் கண்டிப்பாக அதனுடன் இருக்க வேண்டும்.இது உயிர் பாதுகாப்பு சம்பந்தமானது.அத்துடன் பொலிஸ் கெடுபிடியும் கூடியது.அப்போது எமது ஊரில் எல்லா வீடுகளும் குடிசைகளே.அது என்னவென்றே தெரியாதவர்கள்.ஆகவே இதை காட்டில் உள்ள கூழா மரத்தின் அடியில் வைத்திருந்தனர்.இதை யாழ்பாண நகரில் இருந்து ஊருக்கு கொண்டுவர இரண்டு நாட்கள் எடுத்தன.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 12)” தொடர்ந்து வாசிக்க…)

விசமப் பிரச்சாரங்களை தயவு செய்து நிறுத்துக

“ஈழத் தமிழரின் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக மாறப் போகும் ஏப்ரல் 9 : ”
என தலைப்பிட்டு இரா.துரைரத்தினம் எழுதிய பொறுப்பற்ற ஆய்வுக்க் கட்டுரையினை இணையதளங்கள் சில தாமே படிக்காது வெளியிட்டு இருந்தமை கண்டிக்கப்படத்தக்கது. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் மீது வேண்டுமென்ரே சேறு பூசும் செயல். திரு. இரா.துரைரத்தினம் அவர்கள் நன்கு தகவல்களை அறிந்த பின்பு அலசி ஆராய்ந்திருந்தால் அவரின் அறிவைப் பாராட்டியிருக்க முடியும். அவர் யாரிடம் பரிசு வாங்கினாரோ தெரியவில்லை.

(“விசமப் பிரச்சாரங்களை தயவு செய்து நிறுத்துக” தொடர்ந்து வாசிக்க…)

சமஸ்டி தீர்வுக்கு ராஜீவ் காந்தி உடன்பாட்டை தெரிவிக்கவில்லை – வரதராஜப் பெருமாள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1984- 1989ஆம் ஆண்டுக்காலப் பகுதியில் சமஸ்டி தீர்வு ஒன்றை இலங்கையிடம் கோருவதற்கு விருப்பம் கொண்டிருக்கவில்லை என்று வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாமலை வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார் இந்திய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் 13வது திருத்தத்தையும் நடைமுறைப்படுத்துதில் அவர் அக்கறை காட்டவில்லை என்றும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

(“சமஸ்டி தீர்வுக்கு ராஜீவ் காந்தி உடன்பாட்டை தெரிவிக்கவில்லை – வரதராஜப் பெருமாள்” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையர் பெரும் தொகையாக வாழ்ந்து வரும் ரொறொன்ரோ நகரில் நடைபெற்றது. கனடா சமஉரிமை இயக்கம் கனடாவில் ஒன்றரை வருடங்களிற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த வசந்தகாலத்தில் “யாவரும் கேளிர்” என்ற கலை நிகழவினை வெற்றிகரமாக நடாத்திய அமைப்பினர் தொடர்ச்சியாக உலகளாவிய முஸ்லிம் மக்கள் மேல் வலுத்துவரும் வெறுப்புணச்சியை எதிர்த்து பொதுகூட்டம் ஒன்றையும் நடாத்தியது.  இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் இணையத்தள ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் பல சமூகசெயற்பாட்டாளரும் பங்குபற்றி கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன் பல கேள்விகளை கேட்டு சமஉரிமை இயக்கத்தின் கொள்கைகளையும் புரிந்து கொண்டனர்.

(தொடர்ந்து வாசிக்க…)

சீறும் சீமான்

ராஜபக்ச கொன்றது ஒரு லட்சம் கருணா – ஜெயா கொன்றது இரண்டு லட்சமாம்… சீறும் சீமான்
பிரபாகரன் கொன்றொழித்த தமிழர் எண்ணிக்கையும் சுமார் ஒரு லட்சத்துக்கு மேல் என்பதை இந்த சீறும் சீமான் மறைப்பது ஏன்????????????

சு.கவை பலப்படுத்தியவன் நான்; ஒருபோதும் வெளியேறமாட்டேன் – மஹிந்த ராஜபக்ஷ

சுதந்திரக்கட்சிலிருந்து தான் ஒருபோதும் வெளியேறப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்துள்ளார். புதிய கட்சி உருவாக வேண்டும் என்பது மக்களின் விரும்பமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர் நாட்டு மக்களை திசை திருப்புவதற்காக அரசியல் நோக்கில் கைதுகள் இடம்பெறவதாகவும் அவர் தெரிவித்தார். தலதா மாளிகையில் நேற்று காலை(28) வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் முன்னாள் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார் .

(“சு.கவை பலப்படுத்தியவன் நான்; ஒருபோதும் வெளியேறமாட்டேன் – மஹிந்த ராஜபக்ஷ” தொடர்ந்து வாசிக்க…)

அன்று சாமியார் தரப்பு நீதிபதி! இன்று அமைச்சர் சார்பு முதல்வர்?!

குற்றவாளி தரப்பு சாட்சி இலக்கம் 13 என்றால் பலருக்கும் தெரியாது. அது பற்றி தெரிய வேண்டுமானால் திருச்சி விராலி மலையில் ஆசிரமம் நடத்தி, அங்கு நடந்த கொலை மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் பற்றிய குற்றச்சாட்டில் கைதாகிய, செக்ஸ் சாமியார் என அறியப்பட்ட, பிரேமானந்தா அவர்களின் வழக்கு பற்றி தெரிந்து கொள்ளவேண்டும். இலங்கையின் மலையகத்தை பிறப்பிடமாக கொண்ட அவர், ஆரம்பத்தில் கிளிநொச்சி திருநகரில் ரவி சாமி என்ற பெயரில் சில சித்து விளையாட்டுகள் காட்டினார். மாணவபருவத்து நண்பர்கள் சிலர் ஒன்றுகூடி அவரை அங்கிருந்து இடம்பெயர செய்ததால், அவர் இன்று நிலத்தடி நீர் மாசுபட்ட சுன்னாகத்தை அன்றே மாசுபடுத்த அங்கு சென்று ஆசிரமம் அமைத்தார். அப்போது மல்லாகம் நீதிமன்றில் நீதிவானாக இருந்த சி வி விக்னேஸ்வரன் அவரின் பக்தரானார்.

(“அன்று சாமியார் தரப்பு நீதிபதி! இன்று அமைச்சர் சார்பு முதல்வர்?!” தொடர்ந்து வாசிக்க…)

பிள்ளைகளை டக்ளஸ் தருவார் என கொப்பேகடுவ கூறினார்! அவர்கள் எங்கே?!

யாழ்.அல்லைப்பிட்டியில் கொப்பேகடுவ தலமையிலான படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 600 இளைஞர்களில் என்னுடைய 3 பிள்ளைகள், என் சகோதரியின் 3 பிள்ளைகள். அவர்களை டக்ளஸ் தேவானந்தா தருவார் என கொப்பேகடுவ கூறினார். அவர்கள் எங்கே? எங்களுடைய பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள் என தாயொருவர் வேண்டுகோள் விடுத்தார். மேற்கண்டவாறு திருமதி சூசைதாஸ் யேசுரட்ணம் என்ற தாய் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்துள்ளார்.

(“பிள்ளைகளை டக்ளஸ் தருவார் என கொப்பேகடுவ கூறினார்! அவர்கள் எங்கே?!” தொடர்ந்து வாசிக்க…)