பிரபாகரனும் வன்னி மாணவர்களும்

காட்டிக்கொடுத்த மாணவர்களுக்கு பரிசாக அவர்களை வீடுகளுக்கு அனுப்பி பல்கலை கழகம் செல்ல வைத்தார். இந்த மாணவர்கள் பெயரில் வேறு நபர்கள் பரீட்சை எழுதியதனாலும் திறமையான மாணவர்களை பரீட்சை எழுத விடாமல் தடுக்கப்பட்டதாலும் கல்வி அதிகாரிகளின் ஒத்துழைப்பினாலும் புலிகளின் விசுவாசிகளான மாணவர்கள் பல்கலை கழக அனுமதியை பெற்றுக்கொண்டனர்.

(“பிரபாகரனும் வன்னி மாணவர்களும்” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பதிவு 55 )

பொதுவாக மாவட்ட அதிகாரிகளின் அலுவலகம் கச்சேரிகளில் அமைந்திருக்கும் .திருகோணமலையில் துறைமுகத்தின் அருகில் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகம் அமைந்திருந்தது.அதன் அருகே நகர காரியாதிகாரி அலுவலகம் ,சுங்க இலாகா அலுவலகம் ஆகியவை அமைந்திருந்தன.ஆனால் எனக்கு சுங்க இலாகா என்றால் என்ன என்பது தெரியாது.

 

நான் பற்குணத்தோடு நிற்கும் நாட்களில் எங்காவது தூர இடங்கள் செல்வதானால் என்னையும் அழைத்துச் செல்வார்.அதுபோலவே புதிதாக கப்பல் ஏதாவது உணவுகள் கொண்டுவந்தால் அவற்றைப் பொறுப்பேற்க போகும்போதும் அழைத்துச் செல்வார்.

நான் முதன் முதலாக கப்பலை பார்க்க அழைத்து சென்றபோது என்னிடம் இரண்டு தேயிலைப் பெட்டிகள் வாங்கித் தந்தார்.அவர் கப்பலுக்கு போவதற்கு தனியான இயந்திரப் படகு இருந்தது.அதில் ஏறி இருவரும் கப்பலுக்கு செனறோம்.

அவர் கப்பலின் தலைவரைக் கண்டு கை குலுக்கி என்னையும் அறிமுகப் படுத்தினார்.நானும் அவருடன் கை குலுக்கி கொண்டு சென்ற தேயிலைப் பெட்டியை கொடுத்தேன்.அதற்கு பிரதி உபகாரமாக எனக்கு நிறைய இனிப்பு வகைகள்,கொப்பிகள்,பேனாக்கள் தந்தார்.நானும் வாங்கிவிட்டு நன்றி சொன்னேன்.அதன் பின் பற்குணத்தின் வேண்டுதலுக்கு இணங்க எனக்கு ஒருவர் கப்பலை சுற்றிக் காட்டினார்.

அன்றுதான் நான் தொலைக்காட்சி பெட்டி,ராடர் என்பவற்றைப் பார்த்தேன்.பற்குணத்தின் அலுவல்கள் முடிந்தபின் நாங்கள் கரை திரும்பினோம்.அப்போது பற்குணம் ஒரு அலுவலகத்தைக் காட்டி அங்கே போய் நீ கொண்டு வந்த எல்லாவற்றையும் காட்டிவிட்டு வா என்றார்.அவரகள் எதுவும் எடுக்காவிட்டால் நீ கொஞ்சம் இனிப்புகளை கொடுத்துவிட்டு வா என்றார்.

அப்போதுதான் அது என்ன எனக் கேட்க அதுதான் சுங்க அலுவலகம் என விளங்ப்படுத்தினார்.நான் அங்கே போனபோது ஏதோ வகையில் என்னை அடையாளம் கண்டு போகச் சொன்னார்கள்.நான் கொஞ்ச இனிப்புகளை அவர்களுக்கும் கொடுத்து திரும்பினேன்.

அப்போது அவரின் இந்த செயற்பாடு விளங்கவில்லை.இப்போது அவர் மற்றவர்களின் கடமைகளுக்கும் எவ்வளவு மதிப்பளித்தார் என நினைத்துப் பார்க்கிறேன்.

 

பயிரை மேய்ந்த வேலிகள்….

(Rajh Selvapathi என்பவர்  UNHCR, the UN Refugee Agency தனது அலுவலகத் தளமாக கொண்டவர் தனது அனுபவப் பகிர்வுகளைப் பதிவு செய்கின்றார்.)

இந்த தொடரின் நோக்கம் புலிகளை விமர்சிப்பதோ அல்லது தமிழீழ போராட்டங்களின் நன்மை தீமைகளை ஆராய்வதோ அல்ல. 2006 ஜூனுக்கு பின்பு புலிகள் பெரிதும் மாறிப்போய் எவற்றில் இருந்து எல்லாம் மக்களை காப்பாற்றபோவதாக கூறினார்களோ அவற்றையெல்லாம் சொந்த மக்கள் மீதே தாங்களே செய்தார்கள். இதனால் பலர் தமது உயிரை விடவேண்டியிருந்தது. பல குடும்பங்கள் சிதைக்கப்பட்டன. முள்ளிவாய்காலை விட 100 மடங்கு கோரதாண்டவத்தை அப்பாவி மக்கள் மீது அவர்கள் கட்டவிழ்த்து விட்டார்கள். புலிகளின் இந்த கொடிய செயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மக்களுக்கான நீதியை மனசாட்சி உள்ள மனிதர்களிடம் கோரும் ஒரு சுயாதீன அறிக்கையாகவே இந்த தொடர் அமைகின்றது.

(“பயிரை மேய்ந்த வேலிகள்….” தொடர்ந்து வாசிக்க…)

‘சக்கரே‘!! ‘யாழ்ப்பாண கம்பஸ் கலவரத்துக்கு நீதானப்பா காரணம்‘??!!

(Yalini)

யாழ்ப்பாண ‘கம்பஸ் சயன்ஸ்பக்கல்றி டீன்‘ ஆக இருப்பவர் சற்குணராசா. 1996-2000ம் ஆண்டு காலப்பகுதியில் ‘ஆமி‘க்காரர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி ஆட்சி புரிந்த போது ‘கம்பஸ்சில‘ படிக்கிற பொடியல் இவருக்கு வைத்த பட்டம் ‘சக்கர்‘. அந் நேரம் ‘சக்கர்‘ கோவில் வீதியில் நல்லுாருக்கு அருகாமையில் ‘கந்தன்கருனை‘ என்ற வீட்டுக்கு அருகில் உள்ள மேல்மாடி வீட்டில் வசித்து வந்தார். அந்நேரம் புலிகளின் இராணுவப் புலனாய்வுப் போராளிகளில் இருவர் யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்துக்கும் முகாமைத்துட பீடத்திற்கும் தெரிவு செய்யப்பட்டு கல்வி கற்று வந்தார்கள். இப் போராளிகளில் ஒருவரின் சொந்த இடம் மன்னார். இன்னொருவர் கிளிநொச்சி. இரு போராளிகளும் பல்கலைக்கழகத்திற்கு ஒரு கிலோமீற்றர் துாரத்தில் இருந்த வயோதிபத் தம்பதிகளி்ன் வீட்டில் தங்கியிருந்தனர்.

(“‘சக்கரே‘!! ‘யாழ்ப்பாண கம்பஸ் கலவரத்துக்கு நீதானப்பா காரணம்‘??!!” தொடர்ந்து வாசிக்க…)

இனப்பிரச்சனையில் சிங்களத் தலைவர்களின் கண்ணோட்டம்

(சுகு, சமரன்)

இலங்கையின் சிங்கள தமிழ் அரசியல் தலைமைத்துவத்துவங்களிடம் பொதுவான போக்கொன்று நிலவுகிறது. தேசிய இனப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதில் இதய சுத்தியான அக்கறைகள் இவர்களிடம் கிடையாது. விதிவிலக்குகள் இருக்கலாம். இனப்பிரச்சனை நீடித்து நிலவுவது தமது அதிகாரக் கைப்பற்றல் அரசியலுக்கு உதவும் என்பது இவர்களின் திடமான நம்பிக்கை. இந்த அற்பத்தனம் இலங்கை சமூக பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு என்றென்றும் தடையாகவே இருக்கும் – சுகு சறீதரன்

(“இனப்பிரச்சனையில் சிங்களத் தலைவர்களின் கண்ணோட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(19)

(மாணவர்களை நெருங்கிய காலன்)

2006ற்க்கு பின்பு கிளிநொச்சி முல்லைத்தீவில் பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளில் கல்விகற்ற மாணவர்கள் அனைவரும் போர் பயிற்சியை பெற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். இவ்வாறு பயிற்சியை பெற்றுக்கொள்ள விருமபாதவர்கள் பாடசாலைகளில் கல்வி கற்பதே சிரமம் என்கின்ற நிலையை புலிகள் உருவாக்கியிருந்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(19)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C ( பகுதி 54 )

திருகோணமலை உணவுக்களஞ்சியங்களில் இருப்பு பற்றாக்குறைகள் வர சந்தர்ப்பங்கள் இல்லை.ஒவ்வொரு கப்பலில் வரும் உணவுகளில் மேலதிகமாக இரண்டு மூன்று தொன் உணவுகள் வரும்.பல அதிகாரிகள் இவற்றை கணக்கில் காண்பிப்பது இல்லை.ஆனால் பற்குணம் இவற்றையும் சேர்த்து விடுவார் .பொதுவாக திருகோணமலை துறைமுகத்தில் குறைந்தது பத்துக் கப்பல்களிலாவது உணவு வரும்.இவற்றை எல்லாம் நேரடியாக பற்குணமே பொறுப்பேற்பார்.

(“பற்குணம் A.F.C ( பகுதி 54 )” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்க‌ ஜ‌னாதிப‌தித் தேர்த‌ல்

அமெரிக்க‌ ஜ‌னாதிப‌தித் தேர்த‌ல், முன்னொருபோதும் இல்லாத‌வாறு ப‌ல‌ திருப்ப‌ங்க‌ளை கொண்டு வ‌ர‌வுள்ள‌து. ஹிலாரி கிளின்ட‌ன் தேர்த‌ல் செலவுக‌ள் ப‌ற்றிய‌ இர‌கசிய‌ ஆவ‌ண‌ங்க‌ள் வெளியிடப் ப‌டும் என்று விக்கிலீக்ஸ் நிறுவ‌ன‌ர் ஜூலிய‌ன் அசாஞ்சே தெரிவித்துள்ளார்.

(“அமெரிக்க‌ ஜ‌னாதிப‌தித் தேர்த‌ல்” தொடர்ந்து வாசிக்க…)

ஈழத்து வாசகர்களிடையே….

ஈழத்து வாசகர்களிடையே அல்லது படைப்பாளிகளிடையே ஜெயமோகன் சாருநிவேதா, மனுஷ்ய புத்திரன் ஆகியோரது எழுத்துக்களைப் படிப்பது அல்லது அவர்களையிட்டுப் பேசுவது ஓர் அந்தஸ்த்துக் குறியீடாக (status of sympolic) இருக்கின்றது. உண்மையில் இவர்கள் எழுத்துக்கள் தமிழ் இலக்கியப் பரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தினவா?

(“ஈழத்து வாசகர்களிடையே….” தொடர்ந்து வாசிக்க…)

2016ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் இலங்கையின் இனப்பிரசினைக்கான ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)

திருகோணமலையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழர் சமூக ஜனநாயக் கட்சி அறைகூவல்

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று (07.08.2016) திருகோணமலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடைய காங்கிரஸ் கடந்த ஏப்ரல் மாதம் கூடி அந்த கட்சியின் பெயரை தமிழ் சமூக ஜனநாயக கட்சி என பெயர் மாற்றம் செய்து வடக்கு கிழக்கு எங்கும் வட்டாரங்கள் தோறும் அடிப்படைக் கிளைகளை அமைத்து ஒரு பரந்து பட்ட மக்களின் கட்சி ஒன்றை கட்டி எழுப்புதல் என்ற தீர்மானம் எடுத்திருந்தது. அதன் பிறகு தமிழர் சமூக ஜனநாயக கட்சியை ஒரு புதிய அரசியல் கட்சியாக பதிவதற்காக ஏற்கனவே தேர்தல் ஆணையாளருடன் பேச்சு வார்த்தையும் நடாத்தப் பட்டிருக்கின்றது. மிக விரைவில் அந்த பதிவுக்கான முறையான விண்ணப்பங்கள் கொடுக்கப்படும். அதற்கான பதிவு மிகவிரைவில் நடைபெறும் என்று நம்புகின்றோம்.

(“2016ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் இலங்கையின் இனப்பிரசினைக்கான ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)” தொடர்ந்து வாசிக்க…)