கண்டி-நுவரெலியா வீதியில் கொத்மலை கரடி எல்ல பகுதியில் 23 பேரின் உயிரைப் பறித்து பலரைக் காயப்படுத்திய இலங்கை போக்குவரத்து சபை பேருந்து விபத்து குறித்து விசாரிக்க மோட்டார் வாகன ஆணையாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் அதிகாரிகள் வியாழக்கிழமை(15) அன்று, ஸ்தலத்தை பார்வையிட்டு விபத்துக்குள்ளான பேருந்து குறித்து முறையான விசாரணையைத் தொடங்கினர்.