தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 15 )

அச்சுவேலியில் ஏற்பட்ட சம்பவத்தில் அரியரத்தினம் கொல்லப்பட்டார். இது தொடர்பாக யாரும் எந்த தகவலும் பொலிசாருக்கு கொடுக்கவில்லை.உண்மை விபரங்களை வெளியிடவும் இல்லை.எனக்குத் தெரிந்த விசயங்களை பகிரவிரும்பவில்லை.இறப்பதற்கு முதல்நாள் எங்கள் வீட்டுக்கு வந்து தன் தோட்டத்துக்கு பனை ஓலை வாங்கிக்கொண்டு போனார். மறுநாள் இந்த தகவல் கிடைத்தது.அவர் பிரபாகரன் பாணியில் செயற்பட முனைந்தார்.புரிந்தவரகள் விளங்கிக் கொள்ளவும்.

இரத்தினம் கொலை செய்யப்பட்டபின் கொடிகாம்ம் அய்யா எமது ஊர் தொடர்புகளை விட்டுவிட்டார்.தவராசன் கொல்லப்பட்ட சில மாதங்களின் பின் எமது எதிரிகள் அய்யாவை கொடிகாம்ம் பஸ் நிலையத்தில் வைத்து சுட்டுக்கொன்றனர்.1956ம் ஆண்டு தேர்தலோடு தொடங்கிய மோதல் 1969இல் அய்யா கொல்லப்பட்டார்.இந்த மோதல் காங்கிரஸ் கட்சியால் ஆரம்பிக்கப்பட்டது .

அய்யா கொலையை தமிழரசுக்கட்சி கண்டித்தது.அவரது மரணச் சடங்கில் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.இதைவிட அதிக பங்களிப்பை அவர்களுக்கு கொடுத்தவர் இரத்தினம்.யாருமே கண்டு கொள்ளவில்லை .எமது எதிரிகள் காங்கிஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.எமது ஊரவர்கள் தமிழரசுக்கட்சியின் கட்சி ஆதரவாளர்கள்.சாதி காரணமாக எதிரிகளுக்கே கை கொடுத்தனர்.

அய்யா இறந்தபோது ஒரு நோட்டீஸ். அதில் உள்ள வாசகம். தமிழுக்காக வாழ்ந்த உயிர் ஓய்ந்ததம்மா- கடமை வீரன் கதறுகிறான்
இப்படி ஒரு வாசகம் எழுதி நவரத்தினம் அழுகிற படம் போட்டு வாரக் கணக்காக ஊரெங்கும் விநியோகித்தார்கள்.

இந்த போராட்ட காலங் களில் சில மனித நாகரீகங்கள் இருபகுதிகளாலும் காக்கப்பட்டன.உண்மையில் பெருமைக்குரிய விசயம்.எம்மோடு பிரச்சினைக்கு உரியவர்கள் தவிர யாருடனும் பகை பாராட்டவில்லை.எமது ஊருக்கால் அவர்கள் தாராளமாக போய்வர அனுமதிக்கப்பட்டனர்.ஆனால் அவர் பகுதியால் வந்த எமது ஊரவர்களை தாக்கினார்கள்.ஆனாலும் மூன்று குடும்பங்கள் அவர்கள் வாழும் மையப்பகுதியில் வாழ்ந்தனர்.ஒரு குடும்பம் பிரபல நெரிவு முறிவு வைத்தியர் புத்தூர்சந்தி கிருஸ்ணர்.அவர் வீட்டுக்கு அருகில் இன்னொரு குடும்பம்.இவரகளுக்கு எதிரிகள் எந்த கெடுதலும் செய்யவில்லை.நடராசாவின் மாமா குடும்பம் ஒன்றும் அப்பகுதியில் தனியாக இருந்தது. அவர்களுக்கும் எந்த தூங்கும் செய்யவில்லை.ஆனாலும் அவர்கள் பயந்தே வாழ்ந்தார்கள்.அது இயல்பானதே.

இம்மாதிரியான மோதல்கள் புன்னாலைக்கட்டுவன் .எழுதுமட்டுவாளில் நடைபெற்றபோது ஊரையே காலிபண்ண வைத்தார்கள்.

அய்யா கொலையை தொடர்ந்து மோதல்கள் மறுபக்கம் திரும்பின.அவரகளின் உள் சாதி மோதல்கள் ஆரம்பமாகின.

(தொடரும்….)

(விஜய பாஸ்கரன்)