வெனிசுவேலா எதிர்க்கட்சி ஒருங்கிணைப்பாளர் கைது

எதிர்க்கட்சி செயற்பாட்டாளர் றொலன்ட் கரென்னோ கைது செய்யப்பட்டதாக வெனிசுவேலாவின் சட்டமா அதிபர் தரேக் சாப் நேற்று தெரிவித்துள்ளார். பிரபல திடக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான கரென்னோவின் வலிந்த காணமலாக்கல் என நாடாளுமன்ற உறுப்பினர் குவான் குவைடோ விமர்சித்த சில மணித்தியாலங்களிலேயே குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கொரோனா இல்லாத மாவட்டம் எது?

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்று (30) வரையிலும் 5606 ஆக இருந்தது. அவர்கள் எந்ததெந்த மாவட்டங்களில் இருக்கின்றனர் என்பது தொடர்பிலான விவரம். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான எந்தவொரு நபரும் இல்லாத மாவட்டம், கிளிநொச்சி மாவட்டமாகும் என கொவிட்−19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாடு மையம் அனுப்பிவைத்துள்ள புள்ளிவிவரத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,105 ஆக அதிகரித்துள்ளது, அதில், 5804 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

துமிந்தவுக்காக மனோ சறுக்கிய இடம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

மனோ கணேசன், தன்னை ஓர் ‘அரசியல்வாதி’ என்று அழைப்பதைக் காட்டிலும், ‘மனித உரிமைப் போராளி’ என்று அடையாளப்படுத்துவதில் கவனமாக இருப்பவர். சட்டத்துக்கு முரணான கொலைகள், கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், கப்பம் கோரல் உள்ளிட்டவற்றுக்கு எதிராகக் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலமாகப் போராடி வந்திருக்கிறார். ஓர் அரசியல்வாதி, மக்களின் குரலாக ஒலிக்க வேண்டியது அவசியமானது. அதுவும், தான் சார்ந்திருக்கும் மக்களின் குரலாக, ஓங்கி ஒலிங்க வேண்டியது தவிர்க்க முடியாதது. மனோ கணேசன் மக்களின் குரலாக, அநேக சந்தர்ப்பங்களில் செயற்பட்டிருக்கிறார்.

இலங்கை : ஒருபுறம் வேடன், மறுபுறம் நாகம்!

(வி. சிவலிங்கம்)

சீனா – இலங்கை – அமெரிக்கா

இலங்கை மிகப் பெரும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. ஒரு புறத்தில் ‘கொரொனா’ தொற்று நோயின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஏற்கனவே மிகவும் பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரம், மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நாட்டின் செலவினங்களைச் சமாளிப்பதற்கு உள்நாட்டு வருமானம் போதியதாக இல்லை. உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதுடன், இறக்குமதியும் தடுக்கப்பட்டுள்ளதால் நிலமை மோசமான நிலையிலுள்ளது.

அரசமைப்புக்கான 20ஆம் திருத்தச் சட்டமூலமும் கட்சித்தாவல்களும்

(என்.கே. அஷோக்பரன்)

அரசமைப்புக்கான 20ஆம் திருத்தச் சட்டமூலம், இலங்கை நாடாளுமன்றத்தில் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி, 156 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 65 பேர் எதிர்த்துள்ளனர். இதில், பிரதானமாக இரண்டு விடயங்கள், பொது வாதப்பிரதிவாதத்தின் பொருளாக மாறியிருக்கின்றன. முதலாவது, 20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் பாரதூர விளைவுகள். இரண்டாவது, கட்சித்தாவல்கள்.

தமிழ்ச் சமூகத்தில் சாதியம்; பேசாப் பொருளை பேச நாம் துணிவோமா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையின் வடபுலத்தில் வாழ்கின்ற மக்களுக்கு குறிப்பாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒக்டோபர் மாதம் மகத்தானதுதான். இன்றைக்கு 54 ஆண்டுகளுக்கு முன்னர், ஓர் ஒக்டோபரில், வடபுலத்தில் ஓர் எழுச்சி ஏற்பட்டது. சாதியத்துக்கும் தீண்டாமைக்கும் எதிரான வெகுசன இயக்கம், 1966ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி, வடக்கில் ஏற்படுத்திய எழுச்சியே, தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமானது. அவ்வகையில் ஓக்டோபர் மாத நினைவுகள் மகத்தானவை தான்.

கொரனாவின் 2 வது அலையை இலங்கை தாங்கிக் கொள்ளுமா…?


(சாகரன்)

கொரனா பெரும் தொற்று அரம்பித்து ஒரு வருடத்தை நோக்கிய கால நகர்வு அண்மித்துக் கொண்டிருக்கின்றது. சீனாவில் முதலில் இந்த வைரசிற்கான இருப்பு கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் ஏன் இன்று வரை சீனா மீதான வெறுப்பை கக்கும் பிரசாரங்களுக்கு மத்தியில் சீனா தனது நாட்டிற்குள் எடுத்த நிதானமான ஆனால் கடும் போக்கான சுகாதார நடவடிக்கைகள் 3 மாதத்திற்குள் அதனை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

பிரபாகரனையும் கொண்டாடுகள் ஆனால்….

Mathuran Raveendran

பிரபாகரனை நீங்கள் கொண்டாட முனைந்தால் அது உங்களது உரிமையே ! நீங்கள் தாராளமாக படம் எடுத்து கொண்டாடலாம். அதேபோல முரளி வரலாற்றை படமாக்க விரும்பியவர்களின் உரிமையையும் நீங்கள் மதித்திருக்கவேண்டும். உரிமை எல்லோருக்கும் சமமானதே.

தோழர் கிருஷ்ணா அஞ்சலி மரியாதை

மலையினும் வலிமையாய் ஈழப்போராட்டம் நோக்கி எழுந்து வந்த மலையகத்தோழர்களில்ஈரோஸ் தோழர் கிருஷ்ணா முதன்மையானவர்,…மாபெரும் அர்ப்பணங்களை விதைத்து விட்டு விடை பெற்று செல்லும் தோழனை சிரம் தாழ்த்தி வழியனுப்புவோம்!…தியாகங்களின் வரலாறுசகலருக்கும் சொந்தமாகவானம் போல் நீண்டு விரிந்தது!..அஞ்சலி மரியாதை!….

தீவிர சிகிச்சைப் பிரிவில் கபில்தேவ்

இந்திய அணிக்கு முதன்முறையாக உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த அணியின் தலைவர் கபில் தேவுக்கு  மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.அவர், புதுடெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.