காற்றுள்ள போதே தமிழர்கள் தூற்றிக் கொள்வார்களா? அல்லது புதிய பொறிமுறைகள் தேடிவரும் எனக் கனவுலகில் காத்திருப்பார்களா?

(தோழர் வரதராஜபெருமாள்)
காற்றுள்ள போதே தமிழர்கள் தூற்றிக் கொள்வார்களா? அல்லது புதிய பொறிமுறைகள் தேடிவரும் எனக் கனவுலகில் காத்திருப்பார்களா?
புதிய அரசுடன் தமிழரசுக் கட்சி ரகசியமாக எவ்வாறானதொரு தீர்வைப் பேசப்போகிறது என யாருக்காயினும் தெரியுமா?
அடைந்தால் சமஷ்டி இல்லையெனில் எதுவும் வேண்டாமா? அல்லது அடைய ஏதாவது உண்டா?;
எவ்வாறான அரசியற் தீர்வு வேண்டும் என்பதில் பெரும்பான்மையான தமிழர்களிடையே ஒருமித்த கருத்து அவசியமாகும்.

(“காற்றுள்ள போதே தமிழர்கள் தூற்றிக் கொள்வார்களா? அல்லது புதிய பொறிமுறைகள் தேடிவரும் எனக் கனவுலகில் காத்திருப்பார்களா?” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரன் தான் குமார் பொன்னம்பலத்தை கொன்றார் கூறுகிறார் கருணா

டக்ளஸ், கருணாவை பேரவையில் இணைக்கலாம் என்று விக்கி ஐயா கூறிய கருத்திற்கு சில யாழ் நண்பர்கள் துடியாய் துடித்து துரோகிகளை பேரவையில் இணைக்கவேண்டாம் என்று கூறியிருக்கின்றார்கள் அதற்கான சுருக்கமான விளக்கத்தைத்தர கடமைப்பட்டுள்ளேன்! ஏன் எல்லாரும் அவதிப்படுகின்றீர்கள் நான் சேரப்போவதாக கூறவில்லையே இதில் கருணா என்பது முக்கியமில்லை இதில் கருத்து தெரிவித்திருக்கும் நீங்கள் அனைவரும் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் உங்களின் உள்மனங்களை மக்கள் புரிந்து கொள்வதற்கு இது சிறந்த உதாரணம் நாம் அரசியல் பிச்சை கேட்கவில்லையே விக்கினேஸ்வரன், குமார்பொன்னம்பலம் அவர்களின் கருத்து, கொள்கைகள் எங்களுக்கு பிடித்திருக்கின்றது அவ்வளவுதான்.

(“பிரபாகரன் தான் குமார் பொன்னம்பலத்தை கொன்றார் கூறுகிறார் கருணா” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்காக்காரனுக்கு வேறை வேலை வெட்டி இல்லையோ?

இந்த அமெரிக்காக்காரனுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் வேறை வேலை வெட்டி இல்லையோ? தமிழன் எதைச் செய்தாலும், மற்ற வேலைகளை அப்படியே விட்டு விட்டு, உற்றுப் பார்ப்பது தான் அவர்களுக்கு பிழைப்பாப் போச்சு! தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டதை அமெரிக்கா அவதானித்து வருவதாக தூதரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்புச் செய்தியாளர் (?) தெரிவித்துள்ளாராம்.

(“அமெரிக்காக்காரனுக்கு வேறை வேலை வெட்டி இல்லையோ?” தொடர்ந்து வாசிக்க…)

பத்மநாபா பற்றிய தகவல் ? என் பார்வையில் !

சூத்திரம் இணையத்தில் வந்த [“”மாகாண அரசிற்கான அதிகாரங்களை தாருங்கள் இல்லாவிட்டால் நாங்கள் அதை எடுத்துகொள்வோம் பத்மநாபா ( 1989 ல் )”” ] என்று தலைப்பிட்டு சுதர்சன் சரவணமுத்து எழுதிய கட்டுரையில் [“” 1985 திம்பு பேச்சுகளுக்கு பின்னரான காலப்பகுதியில் திரு பத்மநாபா அவர்கள் அவரது அமைப்பை சேர்ந்த ஒரு சில முக்கியமானவர்களை வருடத்திற்கு ஒரு தடவை அல்லது இரு தடவைகள் நட்சத்திர ஹோட்டல்களுக்கு உணவருந்த அழைத்துச் செல்வது வழக்கம்””] என எழுதியுள்ளார். என்ன நோக்கில்? எந்த ஆதாரத்தில்? இவ்வாறு எழுதப்பட்டது என்பது எனக்கு புரியவில்லை. என்வரையில் நாபாவை 1978 ல் சந்தித்தது முதல் 1990 ல் பறிகொடுத்தது வரை அவருடனான நேரடி தொடர்பில் அவர் பணித்த இயக்க மற்றும் கட்சி வேலைத்திட்டத்தில் ஈடுபட்டவன், அவருடன் இலங்கையில், இந்தியாவில் நீண்ட பயணங்கள் செய்தவன் என்பதால் பின் வரும் தகவலை பதிவு செய்கிறேன்.

(“பத்மநாபா பற்றிய தகவல் ? என் பார்வையில் !” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு மனிதர்: பன்முக பக்கங்கள்/பார்வைகள்

வாழ்வின் காரணங்களையும் விடைகளையும் தேடி…..

இன்று முக்கியமான நாள்.
இந்தப் பதிவின் முதற் பக்கத்தில் நீங்கள் வாசித்த ஒரு மனிதரின் கடைசிக் கணங்கள் பற்றிய ஒரு பதிவு. இந்த சம்பவம் முள்ளிவாய்காலில் நடந்ததுடன் ஒப்பிடும் பொழுது மிகச் சாதாரணமான ஒரு நிகழ்வே. ஆனாலும் தனிமனித உயிர் என்றளவில் முக்கியமானது என்றால் மறுப்பதற்கில்லை.

இக் கதையில் கொல்லப்பட்டு இறந்தவர் கரவை ஏ.சி. கந்தசாமி (Karavai A.C.Kandasamy).
இன்று அவரது இறந்த நாள் (31.12.1994).
இந்த நாளில் அவரைப் பற்றிய வாழ்க்கை குறிப்பை எழுதுவதற்கான முயற்சியை இங்கு அறிமுகப்படுத்தி ஆரம்பிக்கின்றேன்.

(“ஒரு மனிதர்: பன்முக பக்கங்கள்/பார்வைகள்” தொடர்ந்து வாசிக்க…)

மைத்திரி-மஹிந்த சந்தித்தனர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இன்று வியாழக்கிழமை சந்தித்துக்கொண்டனர். அமரபுர மகாநாயக்க அதி.வண தவுல்தென ஞானிதிஸ்ஸரவின் 100 ஆவது பிறந்தநாள் வைபவம், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. வைபவத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முதலில் வருகைதந்தார். அதன்பின்னரே மஹிந்த ராஜபக்ஷ வருகைதந்தார். முதல் வரிசையில் அவ்விருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர்.

அரசியலமைப்புச் சபை வரும் போது கூட்டமைப்பு பிளவுபடுவதா?

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையில் கடந்த 19ஆம் திகதி அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை, மக்களைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என்றே கூற வேண்டும். இது அரசியல் கட்சியா, இல்லையென்றால் இவ்வாறானதோர் அமைப்பு எதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கங்களும் இந்த புதிய அமைப்பின் நோக்கங்களும் ஒன்றா, ஒன்றாக இருந்தால் இரண்டு அமைப்புக்கள் எதற்கு, நோக்கங்கள் முரண்படுவதாக இருந்தால் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அதில் இயங்குவது எவ்வாறு?

(“அரசியலமைப்புச் சபை வரும் போது கூட்டமைப்பு பிளவுபடுவதா?” தொடர்ந்து வாசிக்க…)

காணிகள் விடுவிப்புக்கு த.தே.கூ வரவேற்பு

வலிகாம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இராணுவத்தினரின் வசமிருந்த 701 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களின் மீள்குடியேற்றத்துக்கென அரசாங்கம் விடுவித்துள்ளமையை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று(31) தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர், விடுக்கப்படாத காணிகளை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார். விடுவிக்கப்படக் கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியை நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்திருந்தார்.

(“காணிகள் விடுவிப்புக்கு த.தே.கூ வரவேற்பு” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்பு – மு.கா. பேச்சு: அழைப்பைப் புறக்கணித்தனர் செல்வமும் சித்தார்த்தனும்!

த.தே.கூட்டமைப்புக்கும் மு.காங்கிரஸுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொள்ள அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. (ரெலோ), த.சித்தார்த்தன் எம்.பி. (புளொட்) ஆகியோருக்கு அழைப்பு விடுத்த போதும் வரவில்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத்தில் புளொட்டின் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. கூட்டமைப்பின் தலைமைப்பீடத்திற்கு அறிவிக்காமல் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(“கூட்டமைப்பு – மு.கா. பேச்சு: அழைப்பைப் புறக்கணித்தனர் செல்வமும் சித்தார்த்தனும்!” தொடர்ந்து வாசிக்க…)

மாகாண அரசிற்கான அதிகாரங்களை தாருங்கள் இல்லாவிட்டால் நாங்கள் அதை எடுத்துக்கொள்வோம் – பத்மநாபா(1989 ல்)

 

அமரர் பத்மநாபா தொடர்பாக வருடத்தில் இருமுறை மட்டுமே அதிகம் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. ஒன்று நவம்பர் 19 அவரது பிறந்த நாள், இரண்டு ஜூன் 19 அவரது இறந்த நாள். 1985 திம்பு பேச்சுகளுக்கு பின்னரான காலப்பகுதியில் திரு பத்மநாபா அவர்கள் அவரது அமைப்பை சேர்ந்த ஒரு சில முக்கியமானவர்களை வருடத்திற்கு ஒரு தடவை அல்லது இரு தடவைகள் நட்சத்திர ஹோட்டல்களுக்கு உணவருந்த அழைத்துச் செல்வது வழக்கம்.

(“மாகாண அரசிற்கான அதிகாரங்களை தாருங்கள் இல்லாவிட்டால் நாங்கள் அதை எடுத்துக்கொள்வோம் – பத்மநாபா(1989 ல்)” தொடர்ந்து வாசிக்க…)