இராமநாதன் அர்ச்சுனாவே மன்னிப்பு கேள்! தமிழர் ஒற்றுமையைச் சிதைக்காதே!

(அண்ணன் வேல்முருகன்)

நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள், தங்களுடைய அரசியல் உரிமை, மொழி உரிமை, நில உரிமை மற்றும் வாழ்வுரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து தங்களுக்கான விடுதலைக்காக, 75 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்..

முதல் பெண் போராளி தோழர் ஊர்மிளா.

{Kunapalan Selvaratnam}

·காலத்தை வென்ற கழக கண்மணிகள்!
முதல் பெண் போராளி தோழர் ஊர்மிளா.
40 ஆவது நினைவு தினம்.
விதைப்பு : 19.05.1980
உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணிச் செயலாளராகச் செயற்பட்ட வேளையில் அதன் மகளீர் அணியின் செயலாளராக இருந்த ஊர்மிளா என்பவருடன் அறிமுகமாயிருந்தார்.

ஊர்மிளா மிகுந்த தேசிய உணர்வுகொண்ட போராளி என்பது தவிர அடக்குமுறைகள் மிகுந்த சமூகத்தில் எமக்கு ஆதரவாக கிடைத்த முதல் பெண் என்பது இன்னொரு சிறப்பம்சம் (ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள், கணேசன் ஐயர்).

தெல்லிப்பளை வறுத்தலைவிளானை பிறப்பிடமாக கொண்ட தோழர் ஊர்மிளா முதல் ஈழ விடுதலைப் போராளி மட்டும் அல்லாது அவரே முதல் பெண் விடுதலை புலியும் ஆவார்.

1978 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி முருங்கன் காட்டு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த தமிழீழ விடுதலை புலிகளின் மடு முகாமில் வைத்து பொலிஸ் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை மற்றும் அவருடன் சென்ற அதிகாரிகளான பேரம்பலம், பாலசிங்கம், சாரதி சிறிவர்த்தனா ஆகியோர் கொல்லப்பட்டார்கள். (the team of police officers consisting of Bastianpillai, Perampalan, Police Sergent Balasingham and Police cosatable (Driver) Sriwardene).

இந்த கொலையில் இடம்பெற்றவர்களின் பெயர் விபரங்கள் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கடிதம் மூலம் கிடைத்திருந்தது. பொலிசாருக்கு உளவாளியாக செயல்பட்டு இருந்த செட்டி (செல்லக்கிளியின் ஒன்று விட்ட சகோதரர்) என்பவரே இந்த கடிதத்தினை பொலிசாருக்கு அனுப்பி இருந்தார்.

செட்டி எழுதிய கடிதத்தின் பிரதியினை போலிசாரிடம் இருந்து சாமர்த்தியமாக எடுப்பதற்கு திறமையாகவும் சாதூர்யமாகவும் செயற்பட்டவர் தோழர் ஊர்மிளா ஆகும்.

ஊர்மிளாவின் பெண் நண்பருக்கு நெருக்கமான ஒருவர் இலங்கை உளவு பிரிவில் வேலை செய்து கொண்டிருந்தார். இவரூடாக இந்த கடிதத்தின் பிரதியியை எடுத்து கொழும்பில் இருந்து சாந்தன் என்பவர் ஊடாக உமாமகேஸ்வரனுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

ஆயுத போராட்டத்தின் ஆரம்பகாலமான 1978 இல் தோழர் ஊர்மிளா புலனாய்வில் செயற்படுவதில் திறமையாகவும் துணிகரமாகவும் இருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த உமாமகேஸ்வரனின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட கொலைகளை உரிமைக் கோரிய முதலாவது துண்டு பிரசுரத்தினை (Comrade Urmila had typed them) தோழர் ஊர்மிளா அவர்களே தட்டச்சு செய்திருந்தார். இலங்கை நாடாளமன்ற கட்டிடத்தில் இருந்த தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவரும் நாடாளமன்ற உறுப்பினருமான அமிதலிங்கம் அவர்களின் செயலாளரின் அலுவலக தட்டச்சு பொறியிலேயே அந்த துண்டு பிரசுரம் தட்டச்சு செயப்பட்டது. பெண்ணடிமை என்பது வேர் ஊண்டி விருச்சமாக இருந்த சமுதாயத்தில், குறிப்பாக 1977 , 1978 ஆம் ஆண்டுகளில் தோழர் ஊர்மிளா துணிவுகரமாக ஒரு விடுதலை போராளியாக முன்வந்து பெண் சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாக விளங்கினார்.
பெண்ணியம் (Womanism, feminism) என்ற தளத்தில் தத்துவம், இயக்கம் , கோட்பாடு என்பன அதிகம் பேசப்படாத காலகட்டங்களில் தோழர் ஊர்மிளா ஒரு முன்னோடியாக செயற்பட ஆரம்பித்தார். இவைகள் குறித்து அதிகம் புரிதல் இல்லாத காலகட்டங்களில் பெண்கள் சமூகத்தில் தோழி ஊர்மிளா ஒரு ஊக்க விசையினை (Motivation key) தோற்றுவித்து இருந்தார். தனது இறுதி காலகட்டத்தில் செங்கமாரி நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவேளை இறந்து போனார். காந்தீய அமைப்பின் ஸ்தாபர்களில் ஒருவரும் வெலிகடைச் சிறைசாலையில் கொல்லப் பட்டவருமான வைத்தியர் இராஜசுந்தரத்தின் மனைவியார் வைத்தியர் சாந்தி அவர்களே இவருக்கு சிகிச்சை வழங்கியிருந்தார். தமிழ் இனத்தின விடுதலைக்காக போராட புறப்பட்ட முதல் பெண் போராளியான தோழர் ஊர்மிளாவின் இழப்பு பெண்ணியத்திற்கு மட்டும் அல்லாது ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்குமே பேரிழப்பாகும். தமிழ் இனத்தின் இருப்பை போன்று தோழர் ஊர்மிளாவின் தியாகம் அணையாத தீபமாக என்றும் ஒளிரும்.
செ.குணபாலன்.
மே மாதம். 2020.

ஈற்று….

(Suhan Kanagasaba)

உறுட்டும் பிரட்டும் சிரட்டையும் கையும்” என்பதோர் தமிழ் மொழி வழக்கு. சிரட்டை வெறுத்தொதுக்கப்படவேண்டிய ஒரு பொருளல்ல , அகப்பை உள்ளிட்ட ஏதனங்களாகவும் தணலாக நிற்கும் எரிபொருளாகவும் கலைப் பொருட்கள் உருவாக்கத்திலும் இடம்பெறுவது.

ஏழை மக்களின் அன்றாடப் பாவனையில் உள்ள பொருள்தான் சிரட்டை. “சிரட்டைக்கும் வழியில்லாமல் இருக்கிறோம் ” என்று வறுமையை அளக்கும் கோலாகவும் சிரட்டை உவமானமுண்டு.

சட்டத்தரணிகளின் அறிவின் அறம் தமது சமூகத்தின் வாழ்வை வலுவாக்குவதே

(அ. வரதராஜா பெருமாள்)( முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்)

சில வாரங்களுக்கு முன்னர் தமிழர்கள் மத்தியிலுள்ள பிரபலமான கட்சிகளின் தலைவர்களுக்கும் தமிழ் சட்டத்தரணிகள் சங்க பிரமுகர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியற் தீரவு காண்பதற்கான விடயங்களில் தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தினரின் ஆர்வமுடன் செயற்படப் போகிறார்கள் என்றதொரு செய்தி வெளிவந்ததும் தமிழர்களிடையேயுள்ள அரசியற் செயற்பாட்டார்கள் மத்தியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோஸ்இயக்கத்தை கலைத்து விட்டு புலிகளிடம் இணைந்த பாலகுமார் தொடர்பான பார்வை.

Eksath Newspaper
( முரளிமுன்னாள் புலி உறுப்பினர்))
ஈரோஸ் அமைப்பு இராணுவபலம் மிக்கதல்ல. இராணுவ வழிமுறைகள் அவ்வளவாக கைவரப்பெற்றதுமல்ல. இடதுசாரி சித்தாந்தங்கள் உள்ளிட்ட சித்தாந்தங்களை கற்று அதுபற்றி விவாதித்துக் கொண்டிருந்த அமைப்பு. ஈரோஸ் பற்றி நகைச்சுவையாக சில விடயங்கள் சொல்வார்கள். ஒன்று, பேசியே தமிழீழம் பிடிக்கலாமென நினைத்தார்கள் என்பது. (அதாவது, விஜயகாந்த் பக்கம்பக்கமாக வசனம் பேசி எதிராளிகளை தெறிக்க விடுவதை போல). அதுபோல, ஒரு விடயத்தில் உறுதியாக இல்லாமல் நழுவிச்செல்வதை ‘ஈரோஸ்பாணி’ என்பார்கள். உறுதியாக இல்லாமல், பாம்பக்கு தலையும், மீனுக்கு வாலும் காட்டும் ஆட்களை இயக்கங்கள் பல இருந்தகாலத்திலேயே ‘ஆள் ஈரோஸ்காரன்’ என்று நகைச்சுவையாக கூறுவார்கள்.”

இதுவரை சொல்லவோ எழுதவோ படாத ஈழ வரலாற்று நிழ்வுகளில் ஒன்று!

(பஷீர்)

(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)

பத்பநாபாவும் அவர் தோழர்களும் இறந்த நாளை எனது வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. 1990 ஜூன் மாதம் 16 ஆம் நாள் இரவு ஒன்பது மணிக்கு அன்று முதலமைச்சராக இருந்த கருணாநிதியுடைய கோபாலபுரத்து வாசஸ்தலத்துக்குள் அவரைச் சந்திப்பதற்காக நானும் தோழர் பாலகுமாரனும் நுழைந்தோம்.

மரண தண்டனை ..!

எனது அண்மைய பதிவு ஒன்றுக்கு எதிர் கருத்தாக அநேகமாக எல்லோரும் ஒரே விதமான கருத்துக்களையே முன் வைத்திருக்கிறார்கள். அதாவது இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலகட்டத்தில் EPRLF நடந்து கொண்ட நடத்தைகள் தொடர்பாக.

மாகாண ஆட்சிக் கூடாரத்தில் குடியேறும் கிராம ராஜ்யம்

(அ. வரதராஜா பெருமாள்)
(முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்)

பாராளுமன்ற ஆசனங்களில் ஐம்பதுக்கு ஐம்பது தராவிட்டால் வேறெதனையும் ஏற்கவும் மாட்டோம் – கேட்கவும் மாட்டோம் என 1948 வரை இலங்கைத் தமிழர் மத்தியில் மேலாதிக்கம் செலுத்திய தலைப்பா கட்டிய மேட்டுக்குடி அரசியல் திரு ஜி.ஜி.பொன்னம்பலத்தின் தலைமையில் பயணித்தது.

இலங்கையின் மத்திய ஆட்சியே மாகாண ஆட்சியை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்

அ. வரதராஜா பெருமாள்)

(இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்)

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கொண்ட மாகாண ஆட்சி இப்போது இலங்கையின் எந்தப்பாகத்திலும் நடைமுறையில் இல்லை.. அவை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களின் தலைமையில் செயற்படுகின்றன. மாகாண ஆட்சியானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் கீழ் செயற்பட்டாலென்ன அல்லது ஆளுநரின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தாலென்ன அது அரசியல் யாப்பின்படி – வரையறுக்கப்பட்ட அளவிலாயினும் – சுயாதீனமானமாக செயற்பட வேண்டிய அரச கட்டமைப்பாகும். மக்களால் தெரிவு செய்யப்படும் மாகாண அரசாங்கங்கள் செயற்படுகின்ற நிலைமை எப்போது இலங்கையில் ஏற்படும் என்று இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை. 

சுரேஷ் சலேயின் கைதின் பின்னணி

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.