இயற்கை அனர்த்தங்களினால் பாரிய பாதிப்பு

நாடளாவிய ரீதியில் நேற்றிவு முதல் நிலவிய மோசமான வானிலையால் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மரங்கள் முறிந்து விழுந்தமையால் இதுவரையில் இருவர் பலியாகியுள்ளனர். வள்ளம் கவிழ்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். இதேவேளை, இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட 15 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(“இயற்கை அனர்த்தங்களினால் பாரிய பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

அவசர சிகிச்சைப் பிரிவில் சிவசக்தி ஆனந்தன்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கொழுப்பு சத்து கூடியதன் காரணமாக, வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (29) மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதே, அவர் உடனடியாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் சிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூகத்துக்கும், நாட்டுக்கும் பயன்பட கூடிய சிறந்த தலைவர்களை தெரிவு செய்யுங்கள்!

– தேசிய காங்கிரஸ் மகளிர் தலைவியின் மீலாத் வாழ்த்து
ஒரு பூரண மனிதனுக்கு உரித்தான அனைத்து ஆளுமைகளும் ஒருங்கு சேர வாய்க்க பெற்றவராக விளங்கிய இறை தூதர் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் அனைத்து துறைகளிலும் உலகம் தழுவிய மானிட சமுதாயத்துக்கு முன்னுதாரண புருஷராக உள்ளார் என்று மீலாத் வாழ்த்து செய்தியில் தேசிய காங்கிரஸ் கட்சியின் மகளிர் பொறுப்பாளரும், வட மாகாண அமைப்பாளருமான ஜான்சிராணி சலீம் தெரிவித்து உள்ளார்.

இவருடைய வாழ்த்து செய்தி வருமாறு:-
நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் நல்ல கணவராக, சிறந்த வர்த்தகராக, மாபெரும் வீரராக, உன்னத தலைவராக… என்றெல்லாம் வாழ்ந்து காட்டினார். நாம் எல்லோரும் இவர் காட்டிய பாதையில் நடக்க குறைந்த பட்சம் இந்நன்னாளில் உறுதி பூணல் வேண்டும். இவருடைய பூரணத்துவ ஆளுமைகளில் ஒரு பங்கையேனும் அடைய நாம் சபதம் எடுக்க வேண்டும்.

குறிப்பாக நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்களை போன்ற உன்னத தலைவர்களே எமது நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் தேவைப்படுகின்றனர். அர்ப்பணிப்பு, பற்றுறுதி, விசுவாசம், நம்பிக்கை, உண்மை, கொள்கை பற்று, இரக்கம் போன்ற மேன்மையான பண்புகள் உன்னத தலைவர் ஒருவரிடம் காணப்பட வேண்டும் என்று நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் அவருடைய உயர்ந்த தலைமைத்துவம் மூலமாக உணர்த்தினார்.

குறிப்பாக சூரியனையும், சந்திரனையும் சேர்த்து பிடித்து அவருடைய கைகளில் தருகின்றபோதிலும் அவர் கொண்டிருக்கின்ற கொள்கையை விடவே மாட்டார் என்று நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் சொல்லிய கொள்கைப் பற்று ஒவ்வொரு அரசியல் தலைவர்களுக்கும் அமைய பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இவ்வாறான கொள்கை பற்று அவர்களிடம் உள்ளதா? என்று குறைந்த பட்சம் ஒவ்வொரு முஸ்லிம் அரசியல்வாதியும் சுய விமர்சனம் செய்து பார்த்து அவர்களை செப்பனிட வேண்டிய தருணம் இது ஆகும்.
இதே நேரம் எமது சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் அப்பழுக்கின்றி உழைக்க கூடிய நல்ல உன்னத தலைவர்களை வருங்காலத்தில் எமது மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்றும் இந்நன்னாளில் கேட்டு கொள்கின்றேன்.

மாவீரர் நினைவேந்தலும் “போராளிகளின்” இன்றைய நிலையும் 

தமிழ்தேசத்தின் மீதான ஒடுக்குமுறைக்கெதிராக தமிழ் தேசத்தின் காவலர்களாக மக்களின் உரிமைக்காகப் போராடி மடிந்த அனைத்துப் போராளிகளும் தமிழ் மக்களின் வணக்கத்திற்குரிய தமிழ் தேசிய வீரர்கள். அந்தவகையில் தமிழ் தேசத்தின் தேசிய உரிமைக்கான போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தமிழீழ விடுதலை புலிகளின் படையணி வீரர்களின் நினைவு தினத்தில் அவர்களுக்கு எமது வீரவணக்கத்தை செலுத்துகின்றோம். புலிகள் வழிவந்த போராளிகள் நினைவேந்தல் நிகழ்வாக மாவீரர் தினம் கொண்டாடப் படுகிறது. விடுதலைப் புலிகளில் இருந்து உயிர் நீத்த போராளிகள் உள்ளடங்கலாக தமிழ் தேசத்திற்காக உயிர் கொடுத்த அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த போராளிகளின் நினைவேந்தலையும் பொது நாள் ஒன்றில் கொண்டாட தமிழ் சமூகம் இன்னும் தன்னை புடம்போட வேண்டிய நிலையிலேயே உள்ளது. (“மாவீரர் நினைவேந்தலும் “போராளிகளின்” இன்றைய நிலையும் ” தொடர்ந்து வாசிக்க…)

“ஜெயலலிதா தாய்மை அடைந்திருந்தபோது அவசரமாக வரச் சொன்னார்!” – லலிதா

ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தது உண்மை என்று பெங்களூருவில் உள்ள அவரின் உறவினர் லலிதா பேசியது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(““ஜெயலலிதா தாய்மை அடைந்திருந்தபோது அவசரமாக வரச் சொன்னார்!” – லலிதா” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் அமைப்பு திருத்தத்துக்கான யோசனைகளை தமிழ் பேசும் தலைவர்கள் ஒன்றாக தயாரித்து சமர்ப்பிக்க முடியும்!

– தேசிய காங்கிரஸ் மகளிர் தலைவி நம்பிக்கை
தமிழ் பேசும் மக்களுக்கு இடையிலான பிரச்சினைகளை பேசி தீர்க்க முடியும் என்கிற நம்பிக்கையையும், விசுவாசத்தையும் தமிழ் பேசும் தலைவர்களுக்கு இடையே இடம்பெற்று வருகின்ற சந்திப்புகள், கலந்துரையாடல்கள், பேச்சுவார்த்தைகள் ஆகியன கொடுக்கின்றன என்று தேசிய காங்கிரஸின் மகளிர் பொறுப்பாளரும், வட மாகாண அமைப்பாளருமான ஜான்சிராணி சலீம் தெரிவித்து உள்ளார்.
கல்முனையை நான்கு சபைகளாக பிரிப்பது குறித்து தமிழ் – முஸ்லிம் தலைவர்களுக்கு இடையில் கொழும்பில் இரு கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று உள்ளன. மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தைக்கு திகதி குறிப்பிடப்பட்டு உள்ளது. மூன்று முஸ்லிம் பெரும்பான்மை சபைகளையும், ஒரு தமிழ் பெரும்பான்மை சபையையும் உருவாக்க அடிப்படையில் இணங்கி உள்ளனர்.

(“அரசியல் அமைப்பு திருத்தத்துக்கான யோசனைகளை தமிழ் பேசும் தலைவர்கள் ஒன்றாக தயாரித்து சமர்ப்பிக்க முடியும்!” தொடர்ந்து வாசிக்க…)

துயர் பகிர்வு

தோழர் ஸ்ரனிசின் தாயார் கனகம்மா அருளம்பலம் தனது 85 வயதில் நேற்று மாலை 3 மணியளவில் மட்டக்கிளப்பு பெரிய கல்லாற்றில் இயற்கை எய்தினார். ஈழவிடுதலைப் போராட்டத்தில் அவருடைய முழுக் குடும்பமுமே அற்பணிப்புடன் செயற்பட்டது.
அவர் தனது இரண்டு பிள்ளைகளான தோழர்கள் காளி,
மனோ ஆகியோர் ககோதரப்படு கொலைக்கு பலிகொடுத்தபின்னும் தனது முதிய வயதிலும் எமக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் இருந்தவர். கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் கட்சியின் வேலைத்திட்டங்களில் பணியாற்றிய பல தோழர்களை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் பணிசமான பங்களிப்பை நல்கியிருந்தார்.அந்த தியாகத்தாய்க்கு எமது புரட்சிகர அஞ்சலிகள்.

பத்மநாபா மக்கள் முன்னணி
தமிழர் சமூக ஜனநாயக் கட்சி(SDPT)

பிரித்தானிய அரச குடும்பத்தினரின் காதலுக்கு மரியாதை

(இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்)

மிகப் பிரமாண்டமான வளத்தையும் வசதியையும் கொண்ட பிரித்தானிய இளவரசர் ஹரி,இதுவரை பிரித்தானிய அரச பரம்பரை நினைத்தும் பார்க்காத விதத்தில் தனது திருமணத்தை மேகன் மெர்கில் என்ற அமெரிக்க கலப்பு இனப்பெண்ணுடன் நடத்தப் போகிறார். அவரின் மனைவியாக வரவிருக்கும் மெகனின்; தாய்; ஒருகாலத்தில் பிரித்தானியரால் அடிமைகளாக அமெரிக்காவுக்கு இழுத்துச் செல்லப் பட்ட ஆபிரிக்க கறுப்பு இனப் பரம்பரையைச் சேர்ந்தவர்.தகப்பன் ஒரு வெள்ளையர்- ஐரிஸ்,டச் கலப்புடையவர்.

(“பிரித்தானிய அரச குடும்பத்தினரின் காதலுக்கு மரியாதை” தொடர்ந்து வாசிக்க…)

மறக்கமுடியுமா?

எத்தனை வருடம்? எத்தனை மரணங்கள்? ஒரு அழகான தேசத்தின் அமைதியைக் கெடுத்த கொடியவர்கள். மறக்கமுடியுமா? திருநெல்வேலி சந்தியில் தொடங்கிய வெறியாட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றது. முடிக்கப்பட்டது. முப்பது வருடங்களாக எவராலும் எங்கேயும் நிம்மதியாக உறங்கவிடாமல் கெடுத்தவர்களை எப்படி மறப்பது? நாங்கள் மரணிக்கும்வரை அவர்களின் பயங்கர வெறியாட்டங்கள் மறக்கமுடியாது.

(“மறக்கமுடியுமா?” தொடர்ந்து வாசிக்க…)

புதுக்குடியிருப்பு மணல் குளம் (சுவாமி குளம்) காப்பாற்றப்பட வேண்டும்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் ஏ 35 வீதியின் அருகாமையில் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவை கொண்டதும் வாகனம் போய்வரக்கூடியதும் சுமார் பத்து அடி உயர முமானஅணைக்கட்டை கொண்ட குளம் மணல் குளம் (சுவாமி குளம்)இன்று அக்குளம் தேய்ந்து குளத்துக்குரிய காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு அரச அதிகாரிகளால் கவனிக்கப்படாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரியதொன்று. (“புதுக்குடியிருப்பு மணல் குளம் (சுவாமி குளம்) காப்பாற்றப்பட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)