தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி (SDPT) யின் மே தின அறைகூவல் 2016 மே 1 – தொழிலாளர் தினம்

 

மேதினம் ஒடுக்கப்பட்ட மக்களின் தினம். சமூக பொருளாதார ரீதியில் இம் மக்களின் வாழ்க்கைநிலை பொதுவாக இலங்கையிலும், குறிப்பாக வடக்கு-கிழக்கிலும்; எவ்வாறிருக்கிறது? வடக்கு- கிழக்கைப் பொறுத்தவரை பாராளுமன்றம், மாகாணசபை, உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதித்துவத்தை, ஆட்சிப் பொறுப்பை கைகளில் வைத்திருக்கும் தமிழ் அரசியல் தலைமை சாதாரண மக்களின் அபிலாசைகள் தொடர்பாக என்ன செய்கிறார்கள், செய்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குரியது. இதற்கான பதில்; வெறுமை, விரக்தி, அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது. இவர்கள் மக்களுக்கு உருப்படியாக எதைச் செய்தார்கள் என்பதை பட்டியலிட முடியவில்லை.

(“தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி (SDPT) யின் மே தின அறைகூவல் 2016 மே 1 – தொழிலாளர் தினம்” தொடர்ந்து வாசிக்க…)

யார் கையில் இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல்?

தமிழ்நாட்டில் சாதி அரசியல் சம்பந்தமாகப் பேசப்படும்போதெல்லாம், மன்னார்குடி ஞாபகம் வரும். எதையும் வாழ்வில் நேரடியாகப் பார்க்கும் களங்கள் மறக்க முடியாதவை அல்லவா! செய்தித்தாள்கள், புத்தகங்களில் நாம் படிக்கும் கதைகளும், களத்தில் யதார்த்தத்தில் நிலவும் சூழல்களும் எல்லா விஷயங்களிலும் அப்படியே பொருந்திப்போவது இல்லை. இந்தியாவில் சாதி அரசியலுக்கு இது நிறையவே பொருந்தும்.

(“யார் கையில் இருக்கிறது தமிழ்நாட்டு அரசியல்?” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர.ஓ (பதிவு22

நாங்கள்அங்கு சென்ற சிலநாட்களில் பற்குணம் வீட்டில் இருந்த பாலை மரத்தில் எனக்கு ஊஞ்சல் கட்டி நானும் அவரும் விளையாடிக்கொண்டிருந்தோம்.அப்போது ஒரு சில பெரியவரகள் வீட்டுக்கு வந்தனர்.அய்யா நிற்கிறாரா எனக் கேட்க நான் தான் அய்யா என்றார்.அவர்கள் நம்பாமல் தம்பி விளையாடாதே அய்யாவைப் பார்க்கவேண்டும்.கூப்பிடு என்றார்கள்.அவரகள் கணிப்பில் டீ.ஆர்.ஓ ஓரளவு வயதானவராக இருப்பார் என்றே கருதினார்கள்.அதை புரிந்த பற்குணம் விளக்கி நான்தான் என்ன விசயம் என்றார்.அப்போது அவர்கள் அய்யா என அழைக்க நான் வெகுளித்தனமாக என்னடா உன்னை அய்யா என்று கூப்பிடுகிறாரகள் என்றேன்.இதைக் கேட்ட அம்மா வந்து என்னை உள்ளே இழுத்துக்கொண்டு சென்றார்.அதன் பின் நான் டா என்கிற வார்த்தைகள் பாதிப்பதில்லை.

(“பற்குணம் டி.ஆர.ஓ (பதிவு22” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் தமிழ் மக்கள் இணைந்து நடாத்தும் மேதினம்

வருடா வருடம் கனடாவின் ரொறன்ரோவில் நடைபெற்று வரும் மே தின நிகழ்வு இம்முறையும் நடைபெற உள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணைந்து நடாத்தும் மே தினம் இம்முறையும் மே மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. பத்மநாபா ஈபி ஆர்எல்டிவ், ஈபிஆர்எல்எவ் என்ற பதாகைகளில் கடந்த காலங்களில் நாம் இணைந்து பங்கு பற்றி வந்தோம். இம்முறை பத்மநாபா ஈபி ஆர்எல்டிவ் இன் புதிய கட்சி  உருவாகத்தின் பின்பு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT) என்ற அமைப்பினராகிய நாமும் நடைபெறவுள்ள மே தினத் நிகழ்வில் இணைந்தே வருகின்றோம் (மேலும்….)

வாக்களிப்போம், மக்கள் நலக் கூட்டணி.

வாட்ஸ் அப் வலம்! இன்றைய தலைமுறை தங்கள் தாய் தந்தையரிடம் இதற்கு விளக்கம் கேட்க வேண்டும். அப்பா, அம்மா, ஏன் இப்படி ஊழல் ஆட்சியை உங்கள் காலம் முழுவதும் காப்பாற்றி வந்தீர்கள்? வாருங்கள், மாற்றுவோம். வாக்களிப்போம், மக்கள் நலக் கூட்டணி.
******
1977. எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராகி ஆறு மாதம் ஆகியிருந்தது. தலைவர் கருணாநிதி அவர்கள் பட்டென்று ஒரு கடிதம், முரசொலியில் எழுதினார். ‘உடன் பிறப்பே…பார்த்தீரா. நடிகரின் ஆட்சியை. நாடெல்லாம் ஊழல். நாளெல்லாம் ஊழல்’ என்று கடிதம் தீட்டியிருந்தார்.

(“வாக்களிப்போம், மக்கள் நலக் கூட்டணி.” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு, – கிழக்கு இணைப்பு என்பது பிரிவினைவாதத்திற்கே வழிகோலும் – சுவாமிநாதனின் புதிய கண்டுபிடிப்பு

வடக்கு கிழக்கு இணைப்பு, தனி மாநிலம் எனக்கூறி தமிழ், சிங்கள மக்களிடையே மீண்டுமொரு பிரிவினைவாதத்தை அரசியல்வாதிகள் ஏற்படுத்தக்கூடாது என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் கடந்த கால சம்பவங்களை மறந்து, சிங்கள மொழியைக் கற்றுக்கொண்டு அனைவருடனும் இணைந்து வாழக்கற்றுக் கொள்ளுமாறு முன்னாள் போராளிகளுக்கு அமைச்சர் அறிவுரை கூறினார்.

(“வடக்கு, – கிழக்கு இணைப்பு என்பது பிரிவினைவாதத்திற்கே வழிகோலும் – சுவாமிநாதனின் புதிய கண்டுபிடிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று காலி மேதினக் கூட்டத்தில் ஈ.பி.டி.பி கலந்து கொள்ளும்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சக்திமிக்கதாக பலப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்ததோடு,கலந்து கொண்ட கட்சிகள் அனைத்தும் காலியில் நடைபெறும் மேதினக் கூட்டத்திலும் பங்கு கொள்ளுமாறும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.

(“ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று காலி மேதினக் கூட்டத்தில் ஈ.பி.டி.பி கலந்து கொள்ளும்.” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் டி.ஆர.ஓ (பதிவு 21)

அய்யா திரும்பி வந்து ஓரிரு மாதங்களின் பின் நான் ,அம்மா,எனது நாலாவது அண்ணன் இரத்தினசிங்கம் ஆகியோரும் குச்சவெளி பயணமானோம். நான் குழந்தையாக இருக்கும்போது பற்குணம் பல்கலைக்கழகம் போய்விட்டார்.இதனால் நான் அவரோடு இருந்த நாட்கள் குறைவு.ஆனாலும் அவருக்கும் எனக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானதாகவே இருந்தது.என்னுடைய சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றும் அண்ணனாக இருந்தார்.அவரின் குறும்புகள் எனக்கும் அவருக்கும் இடையில் வாடா போடா வாரத்தைப் பிரயோகங்கள் பாவிப்பேன்.அம்மா அய்யா மற்ற அண்ணன்மார்கள் கண்டித்தாலும் நான் டா போட்டுக் கதைப்பதையே விரும்பினார்.மற்றவரகள் கண்டிப்பதையும் தடுத்தார்.

(“பற்குணம் டி.ஆர.ஓ (பதிவு 21)” தொடர்ந்து வாசிக்க…)

மேதினத்தில் 12 கூட்டங்கள், 16 பேரணிகள்

தொழிலாளார் தினமான மே 1ஆம் திகதியன்று 12 பிரதான கூட்டங்கள் மற்றும் 16 பேரணிகளை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. கொழும்பு மற்றும் காலி ஆகிய பிரதான நகரங்களிலேயே பெரும் கூட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படவுள்ளன. அதற்கு அப்பால், பெருந்தோட்ட தொழிலாளர்கள் செறிந்து வாழ்கின்ற மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா, தலவாக்கலை உள்ளிட்ட நகரங்களில் கூட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படவுள்ளன.

(“மேதினத்தில் 12 கூட்டங்கள், 16 பேரணிகள்” தொடர்ந்து வாசிக்க…)

தற்கொலை அங்கியுடன் பிறந்த வட மாகாண சமஷ்டி பிரேரணை

வட மாகாண சபையில், கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட, உத்தேச புதிய அரசியலமைப்புக்கான கொள்கைத் திட்டமானது, நிச்சயமாக நாட்டில் மற்றொரு பாரிய சர்ச்சையைக் கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை. அதனை வாசிக்கும் பலருக்கு, 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி, அன்றைய இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முதலாவதும் கடைசியுமான முதலமைச்சர் வரதராஜப் பெருமாளினால் முன்மொழியப்பட்டு, அன்றே அச்சபையில் நிறைவேற்றப்பட்ட தனி நாட்டுப் பிரகடன எச்சரிக்கைப் பிரேரணையும் 2003ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அன்றைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் சமர்ப்பித்த இடைக்கால சுயாட்சி அதிகாரசபையும் (Interim Self-Governing Authority- ISGA) ஞாபகத்துக்கு வருவதைத் தடுக்க முடியாது.

(“தற்கொலை அங்கியுடன் பிறந்த வட மாகாண சமஷ்டி பிரேரணை” தொடர்ந்து வாசிக்க…)