லஞ்சம் வாங்கிய காதி நீதவான் கைது

விவாகரத்து வழக்கை பெண்ணுக்கு சாதகமாக முடிவெடுக்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டபோது, ​​கதுருவெல காதி நீதவான் மற்றும் ஒரு லிகிதர் ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

மக்களின் வயிற்றில் அடிக்கும் பராட்டேயும் பராட்டாவும்

பெரும் நகரங்களில் வாழும் நடுத்தர மற்றும் அதற்கு குறைந்த வருமானத்தை ஈட்டும் குடும்பத்தினரின் இரவுவேளை உணவு, பராட்டாகவே இருக்கும். ரொட்டி மாவு, உப்பு, தண்ணீர் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பராட்டா மிகவும் சுவையான உணவாகும். அதுவே, பல நோய்களுக்குக் காரணமாகவும் அமைந்துவிடுகின்றன.

இந்நிலையில், எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சேவைகள் கட்டணங்கள் அதிகரித்துவிட்டதாகக் காரணங்களைக் கற்பிக்கும் சில ஹோட்டல்களின் உரிமையாளர்கள் பராட்டாவின் விலையைக் கூட்டிவிடுவர்.

இல்லையேல் அதன் சுற்றளவைக் குறைத்துவிடுவர். இதனை அவ்வாறானவர்கள் தங்களுடைய வணிக சூட்சுமமாக வியாக்கியானம் செய்கின்றனர். 
ஆக, ஒருவேளை உணவாக பராட்டா மற்றும் பராட்டாவினால் தயாரிக்கப்படும் ஏனைய உணவுவகைகளை சாப்பிட்டோரின் வயிற்றில் அடிவிழக்கூடும்.

எனினும், எரிவாயுக்களின் விலைகளில் மாற்றமில்லை என்பதால், ஹோட்டல் உரிமையாளர்கள் பராட்டாவில் கையை வைக்கமாட்டார்கள் என நம்பலாம்.
எனினும், ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்திருக்கும் பராட்டே (Pareto) சட்டத்தால், நிதி நிறுவனங்களில் கடன் பெற்று சொத்துக்களைக் 
கொள்வனவு செய்திருப்போரில் பலருக்கும் வயிற்றில் அடி விழப்போகிறது என்பது மட்டுமே உண்மையாகும். 

வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட சொத்தை சரியான நேரத்தில் சேமிக்க முடியாத பட்சத்தில் நீதிமன்றத்திற்குச் செல்லாமல் ஏலத்தில் விற்கும் உரிமையை வங்கிக்கு வழங்குகிறது. இது வங்கிகளுக்காக உருவாக்கப்பட்ட சட்டம் என்றாலும், நிதி நிறுவனங்களும் இந்தச் சட்டத்தைப் பின்பற்றுகின்றன.

 கடனை செலுத்தாததால் ஒரு வாகனம் நிலுவையில் இருக்கும்போது, நிதி நிறுவனம் வாகன உரிமையாளரின் கழுத்தைப் பிடித்து, அவரை வெளியே தள்ளி, வாகனத்தைக் கடத்தி விற்க சில சீசர்களை அனுப்புகிறது. பராட்டே சட்டம் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் பயன்படுத்தப்படுகின்றது.  

இந்த நாட்டில் நிதி நிறுவனங்கள் என்று முத்திரை குத்தப்பட்ட ஆயிரக்கணக்கான மோசடி நிறுவனங்கள் உள்ளன. இந்த மோசடி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத, ஆனால் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வைக்கு உட்பட்டு மிகவும் சுத்தமான வணிகத்தைச் செய்யும் நிதி நிறுவனங்களும், நிதி நிறுவனங்களாகக் காட்டிக் கொள்ளும் திருடர்களும் உள்ளனர். பராட்டே சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்த திருடர்கள் எப்போதும் ஏழைகளின் சொத்தை கொள்ளையடித்துள்ளனர். 
கொரோனாவுக்குப் பிறகு இலங்கையின் 95 சதவீத வணிகங்கள் சரிந்தன. 

நிதி மூலம் வணிக நோக்கங்களுக்காக சிறிய லொறிகள், இயந்திரங்கள் மற்றும் 
பிற உபகரணங்களைப் பெற்றவர்கள் சிக்கித் தவித்தனர். இதற்கிடையில், சில சிறிய அளவிலான நிதி நிறுவனங்கள் ஏழை மக்களின் வாகனங்களைக் 
கைப்பற்றத் தொடங்கின. 

ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அல்லது தொழிலதிபர்கள் வேலைக்குத் திரும்பும் வரை பராட்டே சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டது. எனினும், அமைச்சரவை அங்கிகாரத்தின் பிரகாரம், இந்த பராட்டே சட்டம், ஜூலை 

ஹட்டனை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி

ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தவிசாளர் பதவி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொண்டது. பிரதி தவிசாளர் பதவி, பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான  இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்குச் செல்கிறது.

“மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்க வேண்டும்” – இலங்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து தரப்பினரையும் இலங்கை கேட்டுக் கொண்டுள்ளது.

ஈரான்-இஸ்ரேல் மோதல்: சபை ஒத்திவைக்கப்பட்டது

ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தை முன்மொழியவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இல்லாததால், இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் திடீரென முடிவுக்கு வந்தன. பாராமன்ற உறுப்பினர் நிஜாம் காரியப்பர் பிரேரணையை முன்மொழியத் தொடங்கியதை அடுத்து, சபை ஒத்திவைக்கப்பட்டது.

இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய ஈரான்

ஈரானில் இருந்து இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை அலையொன்று ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.  இந்நிலையில், இஸ்ரேல் முழுவதும் சைரன்கள் எச்சரிக்கைகள் ஒலிறத்தொடங்கியுள்ளதோடு, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது 

6 வருடங்களாக தமிழ்நாட்டில் சுற்றித் திரிந்த இலங்கையர்

தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித் திரிந்த இலங்கை வாசியை பொலிஸார் கைது செய்துள்ளனர். காரைக்கால் ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

பொதுமன்னிப்பு சர்ச்சை: ஜனாதிபதி கருத்து

குற்றங்கள் மற்றும் ஊழலைத் தடுக்க வேண்டிய முக்கிய அரசுத் துறைகளில் உள்ள சில அதிகாரிகளே இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சமீபத்திய ஜனாதிபதி மன்னிப்பு ஊழல் குறித்துப் பேசுகையில் கூறினார். 

மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை அவசரப்படுத்தவும்

வடக்கில், தென்னிந்திய மீனவர்களின் அத்துமீறல், மீன் வளத்தை அள்ளிச் செல்வது, வடக்கு மீனவர்கள் பெரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். தற்போது, கிழக்கு மீனவர்கள் மீதான அட்டூழியங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன என்பது அண்மையில் நடைபெற்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது புரிகிறது.