டிட்வாவில் உயிரிழந்தவர்களும் தியாகிகளே: திலகர்

டிட்வா சூறாவளியுடனான மண்சரிவுகளில் புதையுண்ட 127 மலையக லயன் குடியிருப்பாளர்களும் கூட மலையகத் தியாகிகளாக நினைவு கூரப்படவேண்டியவர்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பலத்த மழை

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் மழை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை: பிரதீபராஜா எச்சரிக்கை

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா இதன் தாக்கம் யாழ் மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு  பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

சொஹரா புஹாரிக்கு ஒருவாரம் காலக்கெடு

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சொஹரா புஹாரிக்கு ஒரு வாரம் காலக்கெடு விதிக்கப்பட்டு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மகிழவெட்டுவான் கிராமத்திற்குள் நுழைந்த 20 மேற்பட்ட காட்டு யானைகள்

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம் பிரதேசங்களில் பல நாட்களாக காட்டு யானைகள் பிரச்சினை அதிகரித்த வண்ணம் உள்ளது. 

“பொறுப்புகளை நிறைவேற்றும் போதே முன்னோக்கி செல்ல முடியும்” – ஜனாதிபதி அநுர

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும்போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மத, மொழி,இன, சாதிகளைக் கடந்து செயல்படும் உலக மானுடராக மீளெழுவோம்..!

(சர்வசித்தன்)
கால நிலைகளால் கை மீறும் தேச வளர்ச்சி…!
சர்வதேசத்திடம் உதவி கோரும் ‘அனுர’…!

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூஸ் வீக்”இதழுக்கு…அனுர குமார திசநாயகா வழங்கிய இவ்வருட இறுதிக்கான நேர்காணலில்…’கடன் நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பிலிருந்து நாடு ஏற்கனவே மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கும் நேரத்தில், பேரழிவை ஏற்படுத்தும் தித்வா சூறாவளியிலிருந்து மீள்வதற்கு இலங்கை போராடி வருகிறது ‘ எனக் கூறியிருக்கிறார்.

நவம்பர் பருவச்சீட்டை டிசெம்பரும் பயன்படுத்தலாம்

பாடசாலை மாணவர்கள் நவம்பர் மாத பருவச்சீட்டை டிசெம்பர் மாதமும் பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் வழங்கப்பட்ட பருவச்சீட்டை சமர்ப்பிப்பதன் மூலம் இந்த வசதியைப் பெறலாம் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உள்ளன

இயற்கை அனர்த்தங்கள் நாட்டையே உலுக்கி, தலைகீழாகப் புரட்டிப் போட்டிருந்தாலும், பலரும் இன்னும் திருந்துபவர்களாக இல்லை. அதிலிருந்து ஏதாவது இலாபத்தை ஈட்டிக்கொள்ளவே முயற்சிக்கின்றனர். ஈற்றில் அவர்கள், எதனைக் கொண்டு போகப்போகின்றனர் என்பது விடைத்தெரியாத கேள்விகளாகவே இன்னும் உள்ளன. 

வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து தடங்கல்

மட்டக்களப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்ததனால் ஆறுகள் பெருக்கெடுத்து காணப்படுவதனால் ஆற்றை அண்டிய சில பகுதிகளில் காணப்படும் வீதிகளுக்கு குறுக்கே வெள்ள நீர் பாய்வதனால் பொதுமக்களது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.