இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடா தூதரகம் (The High Commission of Canada), கொழும்பு 07 இல் உள்ள 5ஆம் லேனிலிருந்து (5th Lane) புதுப்பிக்கப்பட்ட தனது சொந்த வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
Category: Uncategorised
நினைவேந்தல்
புதிய அரசியல் அமைப்பு புதிய அவசரகால தடைச் சட்டம் உரையாடல்
ரெலோ தலைமைக்கு எதிராக போராட்டம்!
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கட்சியின் 12-வது தேசிய மகாநாட்டை உடனடியாகக் கூட்டி புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்ய வலியுறுத்தியும் இன்று (27) திருகோணமலையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஈராக்கிலுள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல்
யாழ். படகு விபத்து: முழு விசாரணைக்கு அமைச்சர் சந்திரசேகர் பணிப்பு
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துயரார்ந்த படகு விபத்துக்கான உண்மையான காரணங்களைக் கண்டறியும் வகையில், கடற்படையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை விடுத்துள்ளார்.
விபத்துக்குள்ளான படகு கடற் பயணத்திற்குத் தகுதியான நிலையில் இருந்ததா? பயணிகளின் எண்ணிக்கை வரம்பைத் தாண்டியதா? மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டனவா? என்பது குறித்து ஆராய்ந்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
கடலில் காணாமல் போயிருக்கக் கூடியவர்களைத் தேடும் பணிகளைத் துரிதப்படுத்துமாறும், இதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் எவ்வித தாமதமுமின்றி பயன்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
விபத்து தொடர்பாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் அமைச்சர் அவசரக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள அமைச்சர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் முன்னின்று வழங்கும் என உறுதியளித்தார்.
மேலும், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உடல்நிலை குறித்து அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கேட்டறிந்த அவர், அவர்களுக்குச் சிறந்த சிகிச்சைகளை வழங்குவதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
சிவனொளிபாத மலையில் அறுவர் கைது
மத்திய கிழக்கில் பதற்றம்; அமெரிக்க படைகள் குவிப்பு
இன்று பலத்த மழை வீழ்ச்சிக்கான சாத்தியம்
நவம்பர் மாத ’அனுர மீட்டர்’
‘அனுர மீட்டர்’ (Anura Meter) தேர்தல் விஞ்ஞாபன கண்காணிப்பானின் சமீபத்திய புதுப்பிப்பின்படி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க 2025 நவம்பர் மாதத்திற்குள் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். அதேவேளை, மேலும் 10 வாக்குறுதிகள் முன்னேற்றத்தில் உள்ளன, 9 வாக்குறுதிகளில் முன்னேற்றம் இல்லை, மற்றும் ஒரு வாக்குறுதி தோல்வியடைந்துள்ளது.



