பிணங்களுடன் கிடந்து மீண்டேன்

1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை”


இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய இரவு 1987 மார்ச் 30ம் திகதிய யாழ்ப்பாணத்து இரவு அப்படி இருக்கவில்லை. அது ஒரு கோர இரவு அது படு கோரமாகத் தமக்கு அமையப் போகின்றது என்பதை உணராமல், நாளாந்தம் கடந்து போகும் சாதாரண இரவு போலக்கருதி மறுநாளைத் தரிசிக்கத் துயில்வதற்காகத் தமது இரவு உணவைப் புசித்து கொண்டிருந்தார்கள்… அவர்கள் புலிகள் இயக்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள்.

(“பிணங்களுடன் கிடந்து மீண்டேன்” தொடர்ந்து வாசிக்க…)

திருச்செல்வம் யாழ்ப்பாணத்தில் முரசொலியில்

(“திருச்செல்வம் யாழ்ப்பாணத்தில் முரசொலியில்” தொடர்ந்து வாசிக்க…)

Canada 150 is a celebration of Indigenous genocide

This year, the federal government plans to spend half a billion dollars on events marking Canada’s 150th anniversary, prompting a great deal of debate about its historical treatment of Indigenous peoples. The majority of Canadians don’t have all the facts about that, while First Nations continue to live the crisis-level effects of that legacy. Perhaps Canada should cancel its celebrations and undertake the hard work necessary to make amends.
(BY PAMELA PALMATER MARCH 29, 2017, NOW)

(“Canada 150 is a celebration of Indigenous genocide” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாபுலவு காணிகள், மே 15க்கு முன் விடுவிப்பு

கேப்பாபுலவில் அமைந்துள்ள 279 ஏக்கர் காணிகள், எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி விடுவிக்கப்படுமென, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
கடந்த வாரம், அமைச்சருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாகவே, கேப்பாபுலவில் உள்ள 279 ஏக்கர் காணியை, மே 15ஆம் திகதிக்கு முன்னர் விடுவிப்பதாக, பாதுகாப்பு அமைச்சு உறுதியளித்துள்ளது. அந்தவகையில், கேப்பாபுலவிலிருந்து 248 ஏக்கர் காணியும் சீனியாமோட்டையிலிருந்து 31 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படவுள்ளது. அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கமைய, 5 மில்லியன் ரூபாய் நிதி, எமது மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்படுமிடத்து, 189 ஏக்கர் தனியார் காணிகளும், ஒரு மாத காலத்துக்குள் விடுவிக்கப்படும். இதன் பிரகாரம், மொத்தமாக 468 ஏக்கர் காணிகள், பாதுகாப்பு அமைச்சின் மூலமாக விடுவிக்கப்படும் என, மீள்குடியேற்ற அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

March 30, 1987

ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் ஓர் கரிய நாள்.  போராளிகளின் இரத்தத்தினால் எழுதப்பட்டு ஈழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை கேள்விக்குட்படுத்திய நாள். யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் யாழ். இந்துக் கல்லூரிக்கும் யாழ். மகளிர் கல்லூரிக்கும் இடையே அமைந்திருந்தது ஒரு வீடு. அது பல அறைகளைக் கொண்ட மாடி வீடு. இந்த வீட்டில் 64 ஈழ விடுதலைப் போராளிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் அநேகர் ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகள்.

(“March 30, 1987” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையில் மே-17 இயக்கம் விடுதலைப் போராட்டம்!

இலங்கையில் மீண்டும் விடுதலைப் போராட்டமொன்றை மேற்கொள்வது தொடர்பில் தமிழ்நாட்டின் மே-17 இயக்கம் ஆலோசனையொன்றை நடத்தியுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் வருடாந்த அமர்வில் இலங்கை தொடர்பில் மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அத்துடன் குறித்த அமர்வில் கலந்து கொண்டிருந்த இலங்கையின் தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்து உரையாடிய அவர், மீண்டும் போராட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பில் ஆலோசனைகளும் வழங்கியுள்ளார். தமிழ் மக்கள் சுயநிர்ணயம், தங்களைத் தாங்களே நிர்வகிக்கும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதாயின் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் தேர்தல் முறை தொடர்பில் எந்தவொரு நம்பிக்கையும் வைக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாவும் பொன்சேகாவும் கொலைக் குழுக்களும்

(எம்எஸ்எம் ஐயூப்)

ஐ.நா மனித உரிமைப் பேரிவையின் கூட்டத் தொடர்கள் ஆரம்பிக்கும் போது, உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் பிரிட்டனில் இருந்து இயங்கும் சனல் 4 போன்ற தொலைக்காட்சி நிறுவனங்களும் இலங்கையில் அரச படைகளாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமை மீறப்பட்டமையை எடுத்துக் காட்டும் வகையில் பல நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம்.

(“கோட்டாவும் பொன்சேகாவும் கொலைக் குழுக்களும்” தொடர்ந்து வாசிக்க…)

5 மாணவர்கள் படுகொலை வழக்கு; 2 சாட்சிகளுக்கு அழைப்பாணை

திருகோணமலைக் கடற்கரையில் வைத்து 2006ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதியன்று, இலங்கை சிறப்பு இராணுவப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 5 மாணவர்கள் படுகொலை வழக்கில், வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ள சாட்சியாளர்கள் இருவருக்கு சர்வதேச அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

(“5 மாணவர்கள் படுகொலை வழக்கு; 2 சாட்சிகளுக்கு அழைப்பாணை” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாணத்தில் நாளை போராட்டங்கள்

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்டச் செயலகங்களுக்கு முன்பாக, வேலையற்ற பட்டதாரிகளால் நாளை (30) கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இப்போராட்டங்களுக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆகியன தமது ஆதரவைத் தெரிவித்துள்ளன. கடந்த 27ஆம் திகதி முதல், வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக, காலவரையறையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு இதுவரையில் உரிய தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறி, வடமாகாணத்தின் 5 மாவட்டச் செயலகங்களுக்கும் முன்பாக நாளை போராட்டங்களை நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

புலிகளின் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழன் ஐ.நா வில்.

ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 34 வது மனித உரிமைகள் மாநாட்டில் புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழன் ஒருவன் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகள் சபை முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட சம்பவம் வரலாற்றில் முதற்தடவையாக நிறைவேறியுள்ளது. அங்கு பேசிய அவர் நடடைபெற்று முடிந்த யுத்தத்தில் இருதரப்பும் குற்றங்களை புரிந்துள்ளது என்றும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

(“புலிகளின் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழன் ஐ.நா வில்.” தொடர்ந்து வாசிக்க…)