அமெரிக்காவில் ஏற்பட்ட மாற்றம் தொடரட்டும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இரண்டு வார காலமாக, நியூயோர்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டம், நேற்று முன்தினம் (27) முடிவடைந்தது. அதில் கலந்து கொள்ளச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அக்கூட்டத்துக்கு முன்னர் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ்ஸையும் சந்தித்து உரையாடினார். 

இலங்கை: கொரனா செய்திகள்

புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகின:

1. மாகாணங்களுக்குள் பஸ்கள் ஓடும்

2. அமர்ந்திருக்கு மட்டுமே பயணிக்க முடியும்

3. பதிவு திருமணங்களுக்கு அனுமதி: ஐவர் பங்கேற்கலாம்

4. பொதுக்கூட்டங்கள், இசை நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு இல்லை

5. சாப்பாட்டு விடுதிக்கு அனுமதி இல்லை

6.மரண வீட்டில் ஒரே தடவையில் 10 பேர் பங்கேற்கலாம்

7..உடற்பயிற்சிக் கூடங்களுக்கு அனுமதி ஐவர் பங்கேற்கலாம்.

சதொச எட்டாக்கனியா? தாழ்திறவாய்

(வ. சக்திவேல்)

அரசாங்கத்தால் நாட்டின் நாலாபாகமும் திறக்கப்பட்டிருக்கும் சதொச விற்பனை நிலையங்கள் மூலம், மக்களுக்கு அரச உத்தரவாதம், நியாய விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனாலும் இவ்வாறான வரப்பிரசாதங்களும் சலுகைகளும், கிராமப்புற மக்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே அமைந்துள்ளன.

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு சிறை

கடந்த அதிமுக ஆட்சியின்போது இடம்பெற்ற ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 3 பேரை குற்றவாளிகளாக இனங்கண்ட சென்னை சிறப்பு நீதிமன்றம், இந்திரகுமாரிக்கும் கணவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தலிபான்களுக்கு இந்தியா-அமெரிக்கா வலியுறுத்து

தலிபான்கள் ஆப்கானிஸ்தான் பிரதேசத்தை எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்தவோ, தாக்கவோ அல்லது பயங்கரவாதக்குழுக்களுக்கு அடைக்கலம் அளிக்கவோ பயன்படுத்தமாட்டோம் என்பதை உறுதி செய்யவேண்டுமென்று இந்தியாவும், அமெரிக்காவும் வலியுறுத்திக்கூறியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு செயலாளர் வர்தன் சிரிங்லா கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், தலிபான் செயல்பாடுகள் இவற்றை வெளிப்படுத்துவதாகத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தால் நீதி கிட்டும்

(சமீஹா சபீர்)

இனங்களுக்கிடையில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகங்களின் பங்களிப்பு அளப்பெரியது. இன, மத, மொழியினூடாக ஏற்படும் கருத்து முரண்பாடுகளால் ஏற்படும் மோதல்களின் நியாயத்தன்மையைக் கண்டு, அவற்றைச் சுமூகமாகத் தீர்த்து வைக்கக் கூடிய விதத்திலேயே சமாதான ஊடகம் செயற்பட்டு, தனது வகிபாகத்தை வகிக்கின்றது.

மோடியின் அமெரிக்க விஜயம், இந்தியாவில் வளமாக்க வழிவகுக்குமா?

அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனில் நடைபெற்ற முதலாவது குவேட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி தனது அவுஸ்திரேலிய மற்றும் ஜப்பானிய சகாக்களுடன் அம்மாநாட்டில் கலந்துகொண்டார்.

தலைமைகளும் தாழ்வுச்சிக்கலும்

(என்.கே.அஷோக்பரன்)

உத்தியோகபூர்வமான நிலைமையைப் பொறுத்தவரையில் நாடானது முழு முடக்கத்தில் இருக்கிறது. இதற்கு அத்தியாவசிய சேவைகள் மட்டும் விதிவிலக்கு. ஆனால் வீதிகளில் வாகனங்கள் அதிகமாக பயணித்துக்கொண்டிருக்கின்றன. சில முக்கிய வீதிச் சந்திகளில் வாகன நெரிசலையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இவையெல்லாம் அத்தியாவசிய சேவைக்கானவையா என்ற கேள்வி வீட்டுக்குள் ஒரு மாதகாலத்தைக் கடந்தும் முடங்கியிருக்கும் சாதாரண இலங்கைக் குடிமகனுக்கு எழும் கேள்விகள்.

திலீபனுக்கு அஞ்சலி: கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளை, பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபைபின் மாதாந்த அமர்வு, இன்று (28) மாநகர சபை மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இலங்கை: கொரனா செய்திகள்

நாட்டில் மேலும் 642 பேர் இன்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, 515,234 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளதுடன், 743 பேர் பூரணமாகக் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 456,087 ஆக அதிகரித்துள்ளது.