தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,000ஐ கடந்தது

கேகாலை மாவட்டத்தில், இதுவரை 1,007 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், 4,583 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில், தெஹியோவிட்டயில் மாத்திரம் 326 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

ஐந்து நாட்களுக்கு காத்தான்குடி முடக்கம்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு இன்று(31) முதல் எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருனாகரன் தெரிவித்தார்.

கொழும்பு, கம்பஹாவில் பரவும் கொரோனா

கொவிட் 19 தொற்றாளர்களாக நாட்டில் நேற்று(30) அடையாளம் காணப்பட்ட 639 தொற்றாளர்களில், அதிகமானோர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தில் நேற்றைய தினம், 190 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

காவாலிகளின் கைகளில் தமிழ்த் தேசியம்

(புருஜோத்தமன் தங்கமயில்)

கடந்த பொதுத் தேர்தலில் இருவர் பெற்றுக் கொண்ட அமோக வெற்றிகள், தமிழ்த் தேசிய அரசியலின் செல்நெறி தொடர்பில் பல கேள்விகளை எழுப்பியது. அதோடு, எச்சரிக்கை மணியையும் அடித்திருக்கின்றது.

மத்திய மாகாணத்தில் அதிகரிக்கும் கொரோனா

மத்திய மாகாணத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1740 ஆக அதிகரித்துள்ளதாக, மத்திய மாகாண சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலேயே அதிகளவு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இதற்கமைய, கண்டி மாவட்டத்தில் இதுவரை 1076 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் நுவரெலியா மாவட்டத்தில் 538 தொற்றாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 126 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் 354 பேருக்கு தொற்று உறுதியானது

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 354 பேர் இன்று(30) இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, மினுவாங்கொடை – பேலியகொட கொரோனா கொத்தணி தொற்றாளர் எண்ணிக்கை 38,697ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், நாட்டில் இதுவரை பதிவான தொற்றாளர் எண்ணிக்கை 42 417 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 7599 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 34 623 பேர் குணமடைந்துள்ளனர்.

சோனியா, ராகுல் பங்கேற்கவில்லை

டில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 136ஆவது நிறுவன தின விழாவில் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்காத நிலையில், தலைமையகத்தில் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி கட்சிக் கொடியேற்றி னார்.

21 வயது மாணவி மேயராக பதவியேற்பு

திருவனந்தபுரம் மாநகர மேயராக 21 வயதான, பிஎஸ்சி கணிதவியல் மாணவி ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்றார். கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமை யிலான இடதுசாரி கூட்டணி 51 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 34 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும் வென்றன. மற்றவர்கள் 5 இடங்களில் வென்றனர்.

உதவிக்காக 12 மணித்தியாலங்கள் நடந்ததையடுத்து காப்பற்றப்பட்டனர்

அவுஸ்திரேலியாவில் தந்தையொருவரும், அவரது 10 வயதான மகனும் அவர்களுடன் பயணித்த மூவர் உதவிக்காக 12 மணித்தியாலங்கள் நடந்ததைத் தொடர்ந்து மீட்கப்பட்டுள்ளனர். வட மேற்கு குயிஸ்லாந்தினூடாக நேற்று முன்தினம் செல்லும்போது இவர்களின் காரானது வெள்ள வீதிகளில் சிக்கியுள்ளது.

ஐன் இஸாவிலிருந்து வெளியேறும் பொதுமக்கள்

துருக்கி ஆதரவளிக்கும் சிரிய தேசிய இராணுவத்துக்கும், குர்திஷ்களால் தலைமை தாங்கப்படும் சிரிய ஜனநாயகப் படைகளுக்குமிடையிலான மோதல்கள் இம்மாத நடுப்படுதியிலிருந்து அதிகரித்துள்ளன.