காசா மருத்துவமனை பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் உக்கிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், நூற்றுக்கணக்கான நோயாளிகள் காசாவின் வடக்கில் உள்ள மருத்துவமனைகளில் சிக்கித் தவிக்கின்றனர் என பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

VAT இல் மாற்றம்

பெறுமதி சேர் வரி வீதத்தை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து வரி திருத்தம் செய்யப்படவுள்ளது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாளை கொழும்பில் பாரிய போராட்டம்

அனைத்து மின்சார சபை ஊழியர்களையும் நாளை (01) கொழும்புக்கு வரவழைத்து போராட்டம் நடத்தவுள்ளதாக இலங்கைமின்சார சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பணவீக்கம் அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2023 செப்டம்பர் மாதத்தில் 1.3 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் இம்மாதம் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவுப் பணவீக்கம் மாறாமல் தொடர்ந்து -5.2 தவீதமாக காணப்படுகிறது

நவம்பர் 1 முதல் முன்னுரிமை வீதி விதி அமுல்

பேருந்து முன்னுரிமைப் பாதை விதியை நாளை (நவம்பர் 1) முதல் அமல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பேருந்து ஓட்டுநர்கள் விதியைக் கடைப்பிடிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆப்கான் அகதிகளை வெளியேற்றும் பாக்.

பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமார் 17 லட்சம் ஆப்கான் அகதிகளை, ஆப்கானிஸ்தானுக்கு கட்டாயமாக அனுப்பும் பணிகளை பாகிஸ்தான் அரசு நவம்பர் 01  ஆம் திகதியன்று தொடங்க இருக்கிறது.

சியோனிசத்தை முற்றாகத் தோற்கடிக்க பலஸ்தீனியர்கள் ஐக்கியப்பட வேண்டும்

(வானவில்)

மத்தியதரைக்கடல் ஓரத்தில் எகிப்திற்கு வடக்காக 365 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பைக் கொண்ட பகுதிதான் பலஸ்தீன மக்கள் வாழும் காசா என்ற நிலப்பரப்பு. காசாப்பகுதியின் நிர்வாகம் ஹமாஸ் என்ற அமைப்பின் கீழுள்ளளது. இதைவிட காசாவிற்கு வடகிழக்குப் புறமாக, ஜோர்டான் ஆற்றிற்கு மேற்கு கரைப் பகுதியிலும் 5665 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் பலஸ்தீன மக்கள் வாழுகிறார்கள்.

தட்டுப்பாடற்ற மணல் விநியோகம் உறுதிப்படுத்த வேண்டும்

வடக்கு மாகாணத்தின் மணல் அகழ்வு மற்றும் மணல் விநியோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (30) இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

மலரும் நினைவுகள்…

(ரா.அருண் கஸ்தூரி )


ஒரு காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் இந்தக் கிளுவை வேலி இல்லாத வீடுகளோ, வயல்,தோப்புகளோ இல்லாத இடம் இல்லை எனச் சொல்லலாம்.