போர் மேகம் சூழ் உலகு

( Gopikrishna Kanagalingam)
இந்த உலகத்தைப் பல்வேறு வழிகளில் வர்ணிக்க முடியும். ஆனால், ‘போர் மேகம் சூழ் உலகு’ என்று சொல்வது, பொருத்தமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. எங்கு பார்த்தாலும் பிரிவினைகளும் பதற்றங்களும் அதிகரித்திருக்கும் சூழல் தான் காணப்படுகிறது. அவ்வாறான ஒரு நிலைமை தான், இலங்கையின் புவியியலில் நெருக்கமான இரு நாடுகளுக்குமிடையிலும் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும், புவியியல் ரீதியாக நெருக்கமானவை மாத்திரமன்றி, அரசியல் ரீதியாகவும் மிகவும் நெருக்கமானவை.

இந்திய அரசையும் மக்களையும் நோக்கி , “போர் வேண்டாம், உட்கார்ந்து பேசுவோம்”

(Annam Sinthu Jeevamuraly)
இந்திய அரசையும் மக்களையும் நோக்கி , “போர் வேண்டாம், உட்கார்ந்து பேசுவோம்”
என்று இம்ரான்கான் தெளிவாக அழைப்பு விடுத்தபின்னும்,மோடியரசு பாக்கிஸ்தான் மீது வலிந்து தாக்குதல் நடத்துமாயின்,
இந்திய மக்கள் அனைவரும் போருக்கெதிராக தெருவில் இறங்குவதுதான் அரசியல் சாணக்கியம்.

‘‘நிறுத்திக் கொள்ளுங்கள்’’- விமானப்படை தாக்குதல் குறித்து சீனா கருத்து

இந்தியாவும், பாகிஸ்தானும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதன் மூலம் இந்தப் பகுதியில் அமைதி நிலவ ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.

9 நாடுகளுக்கு வருகைதரு விசா

கெனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து உள்ளிட்ட ஒன்பது நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் உல்லாசப் பயணிகளுக்காக, சுமார் 6 மாத காலப்பகுதிக்கு, வருகைதரு விசா அனுமதிகளை வழங்க, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

வடக்கு ஆளுநரின் வழி, எவ்வழி?

(காரை துர்க்கா)
வவுனியா நகரில் எழுந்தருளி, கருணை மழை பொழியும் கந்தசுவாமி கோவிலின் புதிய சித்திரத் தேருக்கான வெள்ளோட்டம், அண்மையில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் புடை சூழ, அமைதியாக, பக்திமயமாக வெள்ளோட்டம் நடைபெற்றது.

Putin to U.S.: I’m ready for another Cuban Missile crisis if you want one

By Andrew Osborn,Reuters 

MOSCOW, Feb 21 (Reuters) – President Vladimir Putin has said that Russia is militarily ready for a Cuban Missile-style crisis if the United States is foolish enough to want one and that his country currently has the edge when it comes to a first nuclear strike.

நாடாளுமன்றத் தேர்தல்: அமைந்தது அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி

(எம். காசிநாதன்)
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் களம், களைகட்டி விட்டது. இரு பிளவுகளான அ.தி.மு.கவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.கவுக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் முதலில் கூட்டணி ஏற்படுத்தப்பட்டது. நேற்று வரை கடுமையாக, அ.தி.மு.க ஆட்சியை விமர்சித்துக் கொண்டிருந்த டொக்டர் ராமதாஸ், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துக் கூட்டணி அமைத்தார். அக்கூட்டணி, அ.தி.மு.க அலுவலகத்திலோ, பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்திலோ நடைபெறவில்லை.

வடக்கில் 248 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்

வடமாகாணத்தில் சுமார் 248 பாடசாலைகள் மூடப்படக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக 50 மாணவர்களுக்கும் குறைந்த அளவில் கல்வி கற்று வரும் அரசாங்க பாடசாலைகளை மூடுவதுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நாயகனும் கைக்கூலியும்

– எஸ்.பி.ராஜேந்திரன்
35 வயதே நிரம்பிய அந்த ரகசிய மனிதன், யாருக்கும் தெரியாமல் அந்த அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறான். இரண்டு வாரம் அவனுக்கு அவகாசம் தரப்படுகிறது. அவனும் உறுதியளிக்கிறான். என்ன உதவி வேண்டுமானாலும் பெற்றுக் கொள்; என்ன வேண்டுமானாலும் செய்துகொள்; ‘அவன்’ பதவியிலிருக்கக் கூடாது என உத்தரவிடுகிறார்கள். உன்னை ஜனாதிபதியாக்குகிறோம் என்கிறார்கள். வாயெல்லாம் பல்லாக, கெக்கெலி கொட்டிச் சிரித்தவாறு கை கொடுத்து விடைபெறுகிறான்.