பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பினாலேயே இலங்கையில் சமஸ்டி முறை சாத்தியமாகும்

அ. வரதராஜா பெருமாள் —இலங்கையின் அரசியல் கட்டமைப்பு சமஸ்டி முறையைக் கொண்டதாக அமைய வேண்டுமானால், அதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறபோதே – அதற்கு பெரும்பான்மையான மக்கள் சட்டபூர்வமாக ஒப்புதல் அளிப்பதனை சாத்தியமாக்கின்ற போதே, அது இலங்கையின் அரசியலில் நடைமுறையாகும். சமஸ்டிதான் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக அமைய வேண்டும் என தமிழர்கள் தங்களுக்குள்ளேயே மட்டும் பேசிக் கொள்வதாலோ அல்லது தமிழ் ஊடகங்களில் மட்டும் விவாதங்களை நடத்துவதாலோ சமஸ்டி தொடர்பாக இலங்கையின் அரசியலை இஞ்சியளவு கூட நகர்த்த முடியாது.

வடக்கின் கடல் வளம்: 100 மில்லியன் டொலர் இலக்கு

“கடலட்டைப் பண்ணை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினச் செய்கைக்கு வடக்கு மாகாணம் புவியியல் ரீதியாக மிகப்பொ பொருத்தமான அமைவிடத்தைக் கொண்டிருந்தும், அதனை நாம் இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. எனவே, அனைத்துத் திணைக்களங்களினதும் ஒருங்கிணைந்த கள ஆய்வுகளின் ஊடாக, நீர்வாழ் உயிரின செய்கைக்கான பொருத்தமான இடங்களை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அடையாளங்கண்டு ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

மக்கள் போராட்டம்; காணி அளவீடு தற்காலிகமாக நிறுத்தம்

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள 4-வது இலங்கை மின்னியந்திரப் பொறியியல் இராணுவ முகாமிற்காக (SLEME), பொதுமக்களுக்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்யும் முயற்சி மக்களின் பலத்த எதிர்ப்பால் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

பாடசாலை மட்டத்தில் வலுசக்தி முகாமைத்துவ வேலைத்திட்டங்கள்

அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இணையவழி ஊடாக புதன்கிழமை (01) நடைபெற்றது.

உயர்தரப் பரீட்சை: ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் சாதனை

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, யாழ்ப்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரி (Hartley College) மாணவர்கள் மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுப் பெரும் சாதனை படைத்துள்ளனர். துறை வாரியான சாதனைகள்: •

ஹோ சி மின்

பிரிட்டன் – பிரான்ஸ் இவிங்க ரெண்டு பேரும் சுதந்திர கொடுத்த தேசங்கள் உருப்பட்டதா பெரியவில் சரித்திரம் இல்லை. (இன்று மார்ச் 29. தோல்வியடைந்த அமெரிக்க படைகள் வியட்நாமில் இருந்து வாபஸ் பெற்று ஓடிய நாள்)

மேலும் 2 எரிவாயு கப்பல்கள் இந்தியா செல்ல ஈரான் அனுமதி

மேலும் 2 எரிவாயு (எல்​.பி.ஜி) கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து இந்​தியா செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜல சந்​தியை ஈரான் மூடியது. கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்​தில் 5 இல் ஒரு பங்கு ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாகத்​தான் நடை​பெறுகிறது. இதை ஈரான் மூடிய​தால் சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்ணெய் விலை கடுமை​யாக உயர்ந்​தது. 

ஆயிரக்கணக்கான அமெரிக்க நகரங்களில் ட்ரம்புக்கெதிரான அரசர்கள் எவருமில்லை பேரணிகள்

அரசர்கள் எவருமில்லை பேரணிகளின் மூன்றாவது சுற்றாக ஐக்கிய அமெரிக்கா முழுவதுமுள்ள நகர வீதிகளில் சனிக்கிழமை (28) அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆக்ரோஷமான நாடுகடத்தல் நடவடிக்கைகள், ஈரானில் போர், ஏனைய கொள்கைளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் களமிறங்கியிருந்தனர்.

வட கொரியா – சீனா இடையே 6 ஆண்டுகளுக்குப் பின் விமான சேவை

சீனா மற்றும் வட கொரிய தலைநகரங்களுக்கு இடையேயான பயணிகள் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், சீனாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் சைனா, பீஜிங்கிற்கும் வட கொரியாவின் தலைநகரான பியாங்யாங்கிற்கும் இடையே நேற்று நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கியது.

மத்திய கிழக்கில் தரையிறங்கும் அமெரிக்க வீரர்கள்

ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு 82ஆவது வான்வழி பிரிவின் ஆயிரக்கணக்கான படைவீரர்கள் மத்திய கிழக்கைச் சென்றடைய ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் இருவர் றொய்ட்டர்ஸ் இணையத்தளத்துக்கு திங்கட்கிழமை (30) தெரிவித்துள்ளனர்.