கமேனியின் மனைவியும் பலி?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதலால் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைககாக அனுமதிக்கப்பட்டிருந்த மறைந்த கமேனியின் மனைவியும் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு மாணவர்களை வௌியேறுமாறு ஈரான் அறிவுறுத்தல்

ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் வான்​வழி தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன. இதற்கு பதிலடி​யாக இஸ்​ரேல் மற்​றும் வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க தளங்​கள் மீது ஈரான் ஏவு​கணை தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இதனால் மேற்கு ஆசி​யப் பிராந்​தி​யத்​தில் போர் பதற்​றம் உச்​சகட்​டத்தை எட்​டி​யுள்​ளது. 

“பிரித்தானியாவில் புகலிடத்திற்கு இனி இடமில்லை”

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார்.

ஒரு சொட்டு எண்ணெய் இல்லை; உலகத்துக்கே செக் வைத்த ஈரான்

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

“தமிழக இளைஞர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்”

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய திருப்பயணக் குழு ஒருங்கிணைப்பாளர் சே. நல்லதம்பி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரதம நீதியரசர் மன்னாரிற்கு விஜயம்

இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, உத்தியோகபூர்வ பயணமாக செவ்வாய்க்கிழமை (03) அன்று காலை மன்னாரிற்கு விஜயம் செய்தார்.

“அனுரவின் அது எங்கே? ஜூலி எடுத்துச் சென்றுவிட்டாரோ”

“அன்று ஜனாதிபதிக்கு இருந்த அந்தத் தீவிரமான கொள்கைப் பிடிப்பை அமெரிக்காவின் முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்  நாட்டை விட்டுச் செல்லும் போது அவரோடு சென்றுவிட்டதா என்று தெரியவில்லை” என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சிறைக்கைதிகளின் நெற்செய்கை, காட்டு யானைகளால் அழிவு

மட்டக்களப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளினால் பயிரிடப்பட்டு, அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த மூன்று ஏக்கர் நெற் செய்கை காட்டு யானை தாக்குதலால் முற்றாக அழிவடைந்துள்ளதாக, மட்டக்களப்பு திறந்த வெளிச் சிறைச்சாலை பொறுப்பதிகாரி திலிப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

205 விமான சேவைகள் இரத்து

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவிருந்த 107 விமானப் பயணங்களும், கட்டுநாயக்கவிலிருந்து மத்திய கிழக்கு நோக்கிப் புறப்படவிருந்த 98 பயணங்களும் என மொத்தம் 205 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

சடலத்திற்கு பாலியல் வல்லுறவு : பதற்றம்

டிக்கோயா – கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணின் சடலத்திற்கு, அங்கு பணிபுரியும் சிற்றூழியர்கள் மூவரால் பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி, ​செவ்வாய்க்கிழமை(03) அன்று   வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.