சவூதி அரேபியா அரசுக்குச் சொந்தமான ‘அராம்கோ’ எண்ணெய் நிறுவனத்தின் 2 நிலையங்களைக் குறிவைத்து யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்கள் நேற்று (25) வான்வழித் தாக்குதல்களை நடத்தினா்.
’அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஈரான் அடிபணியாது’
கழிவறைகளால் விமான பயணிகள் பதற்றம்
இங்கிலாந்தின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையமான கேட்விக் விமான நிலையத்தில், குறைந்த நீர்ப்பீத்தம் மற்றும் நீர் விநியோகம் தடைப்பட்டதால் ஓடும் நீர் முற்றிலும் நின்றுபோனது.இதனால், விமான நிலையம் முழுவதும் குடிநீர் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. கழிவறைகளில் தண்ணீரை வெளியேற்றும் வசதி (Flushing) மற்றும் கை கழுவும் வசதி இல்லை.குடிநீர்க் குழாய்கள் (Water fountains) செயல்படவில்லை.உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் (Cafes) காபி மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்கப்படவில்லை.
பாரிய காட்டுத் தீ : 10 ஏக்கர் நிலப்பரப்பு நாசம்
உச்சம் தொடும் டெங்கு ஆபத்து: பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு
குவியும் நெத்திலி மீன்கள்: மகிழ்ச்சியில் மீனவர்கள்
வடமராட்சி நாகர்கோவில் பகுதியில் அதிகளவான நெத்திலி மீன்கள் மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளன. கடும் காற்று மற்றும் சீரற்ற காலநிலை காரணமாகக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த இந்த நேரத்தில், தமக்குக் கிடைத்த இந்தப் பெருமளவு நெத்திலி மீன்களால் தாங்கள் அதிக அளவில் மகிழ்ச்சி அடைவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
‘கொடூரக்’ கொலை: குழு தப்பிச் சென்றதால்’ கடும் சீற்றம்.
பிரான்ஸ் கடற்கரையில் நடைபெற்ற மோதலில் நபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அக்கொலையில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் குழுவினர் சிறிய படகு மூலம் இங்கிலாந்துக்குத் தப்பியோடியுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

