’ஹஷிஷ்’ கடத்திய இருவர் கைது

இலங்கை கடற்படை, ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய நடவடிக்கையின் முக்கிய பங்காளியாக, முழு நாட்டையும் உள்ளடக்கியவாறு மேற்கொண்ட தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகளின் விளைவாக, மன்னாரின் தெற்கு கடலில் நடத்தப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 02 பொதிகளை கொண்டு சென்ற 02 சந்தேக நபர்களையும், 01 ஒரு டிங்கி படகும் சனிக்கிழமை (14) அன்று  கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

’’இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும்’’

மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க  தனது சிவராத்திரி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர்

மன்னார், திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை  (15) காலை ஆரம்பமான நிலையில் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமர சூரிய திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சென்று மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற விசேட சிவ தேவி பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.

13.56% ஆல் அதிகரிக்கும் மின் கட்டணம்

மின்சாரக் கட்டணத்தை 13.56% ஆல் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக இந்த மின்சாரக் கட்டணத் திருத்தக் கோரிக்கையை இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ளது.

சாப்புச் சட்டத்தை மீறினால் சட்டம் பாயும்

பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில்  வெள்ளிக்கிழமை (13) முதல் சாப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது, பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்..

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சிக்கு வெற்றி

பங்களாதேஷில் பொதுத்தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வௌ்ளிக்கிழமை (13) உள்ளூர் நேரப்படி காலை 4 மணியளவில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி 185 இடங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் அறுதிப் பெருபான்மையைப் பெற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் எம்.பி திஸ்ஸ விதாரண காலமானார்

முன்னாள் அமைச்சரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான திஸ்ஸ விதாரண  காலமானார். இறக்கும்  போது அவருக்கு வயது 92 ஆகும். இலங்கையின் இடதுசாரி அரசியல் இயக்கத்தில் சிரேஷ்ட அரசியல்வாதியான இவர், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராக நீண்டகாலமாக இருந்த இவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பல முக்கிய அமைச்சர் பதவிகளில் பணியாற்றியுள்ளதுடன், அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் மற்றும் தேசிய நல்லிணக்க முயற்சிகளில் பெறும்பங்காற்றியுள்ளார்.

அதிகாரத்தையும் பொறுப்பையும் பெண்களுக்கு தந்த அரசாங்கம்

சமூக-கலாச்சார-அரசியல் கட்டமைப்பில் பெண்கள் புறக்கணிக்க முடியாத ஒரு முக்கிய காரணியாகும். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் செயல்முறையிலிருந்து அவர்கள் ஓரங்கட்டப்படுவது அல்லது விலக்கப்படுவது ஒரு பொதுவான விஷயமாகிவிட்டது.  

போதையில் சேவை ; 7 ஊழியர்கள் கைது

போதைப்பொருள் பாவித்த நிலையில் தனியார் பேருந்துகளில் சேவையில் ஈடுபட்டிருந்த ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சவப்​பெட்டியுடன் வீதியில் ஆர்ப்பாட்டம்

அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை (12) அன்று இடம்பெற்றது.