தனியார் வங்கியில் கோடிக்கணக்கில் கடன் மோசடி: 9 ஊழியர்கள் கைது

தலாதா வீதியிலுள்ள தனியார் வங்கி கிளை ஒன்றில் போலி ஆவணங்கள் மூலம் பெருமளவு பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், அந்த வங்கியின் ஊழியர்கள் ஒன்பது பேர் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

98 இலட்சம் மோசடி: ID கட்டுப்பாட்டாளர் கைது

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் சுமார் 98 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில், அந்த திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் (IT Controller) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மலசலகூட விவகாரம்: முன்னாள் முதல்வர் வலியுறுத்து

மக்களின் அவசியத் தேவையைக் கருத்திற்கொண்டு யாழ் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத் தொகுதியை நிர்வகிப்பது தொடர்பில், யாழ் மாநகரசபைக்கும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் (இ.போ.ச) இடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை இரு தரப்பும் இணைந்து பேசி, மக்கள் நலன் சார்ந்து சுமுகமாகத் தீர்க்க முன்வர வேண்டும் என யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வலியுறுத்தியுள்ளார்.

“தீர்ப்பு நியாயமாகி விடுவிக்கப்படுவேன்”

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2013ஆம் ஆண்டு 14 ‘ஏயார்பஸ்’ (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் திங்கட்கிழமை (12) அன்று முன்னிலையானார்.

பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது

பண்டாரவளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, பண்டாரவளை நகரின் முக்கிய வீதிகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மு. கா ஸ்டாலினை சந்தித்தார் முதல்வர் விஜய்

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், இன்று தி.மு.க தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டார்.

முக்கிய கட்சிகளின் குற்றப் பின்னணி (வழக்குகள் உள்ளவர்கள்)

தமிழக வெற்றி கழகம் (TVK): புதிதாகத் தேர்தலைச் சந்தித்த இக்கட்சியில் 107 எம்.எல்.ஏ-க்களில் 41 பேர் (38%) மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன.

பொது உளவியலின் அரசு

(அ. ராமசாமி)


திரு. ச.ஜோசப் விஜய் தலைமையில் உருவாகியுள்ள புதிய அரசு முந்தைய அரசுகளிலிருந்து பெரிதளவு விலகிவிடப்போவதில்லை. தமிழ்நாட்டு மக்களிடம் உணர்ச்சிகரத் தூண்டல்களைச் செய்யும் உரைகளை நம்புவார்கள்; ஏற்பார்கள் என்பது நீண்டகால நம்பிக்கை. அந்த நம்பிக்கையிலிருந்து விலகி விடவில்லை புதிய முதல்வர். அதற்குத் தனது நடிப்பு சார்ந்த தொழில்துறை உத்தியையும் சேர்த்துக் கொண்டு கூடுதல் உணர்ச்சிகளை உருவாக்க நினைக்கின்றார்.

முத்துவேல்.கருணாநிதி ஸ்ராலின்

(Balasingam Sugumar)

இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் எதற்காக இன்றும் கொண்டாடப் படுகிறார். கடந்த ஆறு நாட்கள் சமூக வலைத்தளங்களிலும் சரி பொது வெளியிலும் சரி அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் .

2016 ம் ஆண்டிலும் சரி இந்த 2026 ம் ஆண்டிலும் சரி குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சிக்காத ஒரு கண்ணியமான ஒரு அரசியல் தலைவராக உயர்ந்து நிற்கிறார்.

த.வெ.க.வுக்கு ஆதரவு வழங்கியது வி.சி.க

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை அளித்துள்ளது.