விசேட தேவையுடைய மாணவனை தாக்கிய ஆசிரியர்

மொனராகலை, கும்புக்கன பகுதியில் அமைந்துள்ள ‘சுபாக்யா’ விசேட தேவையுடைய பாடசாலையில், ஆசிரியர் ஒருவரால் மாணவன் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து மொனராகலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கூட்டு தமிழ் பேசும் எதிர்க்கட்சி வெறும் ‘வெங்காயம்’: ஜனகன் சாடல்

“கூட்டு தமிழ் பேசும் எதிர்க்கட்சி என்பது, உரிக்க உரிக்கக் கண்ணீர் மட்டுமே வரவழைக்கும், உள்ளே ஒன்றுமில்லாத வெங்காயம் போன்றது. இது கொள்கையற்ற, சுயநலத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு நீர்க்குமிழி கூட்டணி” என்று கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

யாழ் பல்கலைக் கழகத்தில் பெண்கள் போராட்டம்

இன்று காலையில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம். பல்கலைக்கழகங்களில் அதிகாரத்தில் உள்ளவர்களால் நடாத்தப்படும் பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு எதிரான இப் போராட்டத்தில் இலங்கையில் பல்வேறு பெண்கள் அமைப்புக்கள் மற்றும் சமூக அக்கறையாளர்கள் கலந்துகொண்டனர். சிறப்பாக நிகழ்ந்தது.

தவெக அமைச்சரவையில் பாமக?: என்ன செய்யப்போகிறது விசிக?

“பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்“ என்று திருமாவளவன் கூறியிருந்தார். ஆனால், அதற்குள் தவெக கூட்டணியை விட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்ற வேண்டும் என்ற குரல்கள் எதிரொலிக்கத் தொடங்கி விட்டன.

திமுக வாரிசுகளின் இடப் பெயர்வு

விருப்பப்பட்ட கட்சியில் சேர்வது..ஒரு தனி நபரின் உரிமை..உறவு முறை எல்லாம்..அதற்கு பிறகுதான்..தமிழ்நாட்டில் இதுபோல்.. இலட்சக்கணக்கில்..

கல்ஓயா: மீண்டும் வீழ்ச்சியடையாத கிழக்கின் உதயம்

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற ஒரு ஆண்டிற்குப் பிறகு, அக்காலப் பிரதமர் மாண்புமிகு டி. எஸ். சேனாநாயக்க அவர்களின் வழிகாட்டலில், மனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட இந்நாட்டின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான ‘சேனாநாயக்க சமுத்திரத்தின்’ பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வடக்குக்கு விசேட ரயில் சேவை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழாக் காலத்தில், வடக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகளை விசேடமாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

’தற்போதைய அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறந்த வாழ்க்கை’

தற்போதைய அரசாங்கம் விவசாய மக்களைப் பாதுகாக்கும் அரசாங்கமாகும் என்றும் அவர்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கை, சமூக மதிப்பு மற்றும் கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானத்தில் நடந்த திடீர் அனர்த்தம்

இன்று (11) காலை கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட A330 ரக பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியுள்ளது.  இதன் காரணமாக, குறித்த விமானம் சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்து, எரிபொருளைக் குறைத்து பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. TK-731 என்ற இலக்கமுடைய இந்த விமானம், 246 பயணிகளுடன் இன்று காலை 7:07 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Wide-body ஏ330 ரக விமானமாகும்.

பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தப்பியோடிய ஸ்பெய்ன்

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் திருவிழாவின் மிக விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியில், காயங்களால் நிலைகுலைந்த பெல்ஜியத்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஐரோப்பிய சம்பியனான ஸ்பெய்ன். மெகா அரையிறுதிப் போட்டியில், பலப்பரீட்சை நடத்த பிரான்ஸ் அணியுடன் மோதவுள்ளது ஸ்பெய்ன்.