மீண்டும் ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதன் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதற்கு ஈரான் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

2026 உ/த பரீட்சை: நடக்குமா? நடக்காதா? கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் பிற்போடுமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் தொடர்பாக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் பின்வரும் விளக்கங்களை அளித்துள்ளார்:

15 வயதில் உலக சாதனை: அதிவேக அரைசதம் அடித்து அசத்திய சூர்யவன்ஷி

இலங்கையில் நடைபெற்ற இந்தியா ஏ, இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி, லிஸ்ட் ஏ (List A) கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

2026 உ/த பரீட்சை: நடக்குமா? நடக்காதா? கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சையை மேலும் பிற்போடுமாறு பல்வேறு தரப்பினரால் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் தொடர்பாக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் பின்வரும் விளக்கங்களை அளித்துள்ளார்:

பரீட்சார்த்த ரயில் ஓட்டம்…

மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரையிலான புகையிரதப் பாதையில், புகையிரத சேவைக்கான பரீட்சார்த்த நடவடிக்கை   வெள்ளிக்கிழமை (19) மதியம் இடம்பெற்றது.

’கன்சைட்’ நிலத்தடி சிறை: நீதவானின் நேரடி கள ஆய்வு

திருகோணமலை கடற்படை முகாமில் அமைந்துள்ள ‘கன்சைட்’ (Gun Site) எனப்படும் நிலத்தடி சிறைச்சாலையில், கடந்த காலத்தில் பலர் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் அடிப்படையில், திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். எஸ். எம். சம்சுதீன் புதன்கிழமை (17) குறித்த சிறைச்சாலைக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்தம்

இஸ்ரேல் இராணுவம் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த போர்நிறுத்தம் நேற்று (19) மாலை 4:00 மணி முதல் அமு லுக்கு வந்துள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11,790 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ’A’

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். 

தென்கிழக்கு பல்கலைக்கழக முதுமானிகளுக்கு இந்தியாவில் வதிவிடப் பயிற்சி

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் வணிக நிர்வாக முதுமானி (MBA) கற்கையைத் தொடரும் மாணவர்கள் குழு, வதிவிடப் பயிற்சிப் பட்டறை மற்றும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்குச் சென்றுள்ளனர்.