அம்பாறையில் நீராடத் தடை: மீறுவோர் மீது சட்டம் பாயும்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் ஏந்து பகுதிகளில் பொதுமக்கள் நீராடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ், வியாழக்கிக்கிழமை  (09) அன்று  தெரிவித்தார்.

பேருந்து நிலையத்தை சேதப்படுத்தியவருக்கு விளக்கமறியல்

புனரமைக்கப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், களனியில் கைது செய்யப்பட்ட 33 வயது நபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் ஏப்ரல் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அமெரிக்கா vs ஈரான்.. பாகிஸ்தானில் நடப்பது என்ன?

உலகமே போர்க்களமாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் இப்போது அமைதிப் பேச்சுவார்த்தைக்கான மையப்புள்ளியாக மாறியிருக்கிறது. 

ஏப்ரல் 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (ஏப்ரல் 10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டுஇ இன்று முதல் ஏப்ரல் 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதன்படி இரண்டாம் பாடசாலைத் தவணை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகிஇ ஜூலை 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடரும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மதுவை இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபானப் போத்தலை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்ட போதே, தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியப் படகுடன் 10 மீனவர்கள் கைது

இலங்கை எல்லைக்குட்பட்ட மன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில், 2026 ஏப்ரல் 08 ஆம் திகதி இரவு கடற்படையினர் மேற்கொண்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஓர் இந்திய மீன்பிடிப் படகையும் அதிலிருந்த பத்து (10) மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.

பேருந்துப் பயணிகளின் கவனத்துக்கு

 யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்குத் தனியாகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளைக் குறிவைத்து, மயக்க மருந்து கலந்த ‘லெமன் பஃப்’   பிஸ்கட்டுகளை வழங்கிப் பெருமளவிலான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

நான் முஸ்லிம் என்பதால் சஹ்ரானுடன் முடிச்சு போட முயற்சி: முஜிபுர்

 “நான் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக என்னைச் சஹ்ரானுடன் சிக்கவைக்கச் சிலர் முயற்சிக்கின்றனர். இத்தகைய அச்சுறுத்தல்கள் மூலம் எமது வாயை மூடி, விசாரணைகளை மூடிமறைக்க இடமளிக்கப் போவதில்லை” என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு எதிரான போரில் ’’வரலாற்று வெற்றி’’: ஈரான் அறிவிப்பு

அமெரிக்காவுக்கு எதிரான போரில் தாங்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

50ஆம் ஆண்டு எழுச்சி மாநாடு யாழில்

வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நினைவாக, 2026 மே 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் ஒரு நினைவு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.