‘AI’க்கு புதிய கட்டுப்பாடு

மின்னிலக்கப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) நிர்வாகச் சட்ட மசோதாவை இந்த ஆண்டு (2026) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மலேசியாவின் மின்னிலக்க அமைச்சு திட்டமிட்டுள்ளது.

மெக்சிகோவில் அவசர நிலை; முகக்கவசம் கட்டாயம்

மெக்சிகோவில் பல்வேறு நகரங்களில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக ஜாலிஸ்கோ மாநிலத்தில் அமைந்துள்ள குவாடலஜாராவில் (Guadalajara), இதுவரை 1,245 பேருக்கு தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

தேயிலைத் தோட்டத்தில் ஜனாதிபதி…

நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் உள்ள தேயிலைத் தோட்டமொன்றுக்கு சென்று தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

கிளிநொச்சி , கண்டவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் அமைந்துள்ள கண்டாளை, பரந்தன் மற்றும் தர்மபுரம்  பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில்  02, 03 மற்றும் 05 ம் திகதிகளில் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால்  உணவு கையாளும் நிலையங்களில்  சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அமரகீர்த்தி எம்.பி படுகொலை: 12 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது பாதுகாப்பு காவலர் மீது தாக்குதல் நிட்டம்புவ  நகரில் நடத்திய வழக்கில் கம்பஹாவைச் சேர்ந்த மூன்று நீதிபதிகள் கொண்ட மேல் நீதிமன்றம் 12 பேருக்கு மரண தண்டனை விதித்தது.

போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கும்“முழு நாடுமே ஒன்றாக”

போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கும்“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடுமக்கள் பேரணிஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில்பெப்ரவரி 11 ஆம் திகதி மாலை 2.30 மணிக்கு நுவரெலியாக நகரத்தில்

முல்லைத்தீவில் யாழ். பல்கலைக்கழகப் பீடம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட காணியில் அபிவிருத்திப் பணிகளைப் படிப்படியாக ஆரம்பிப்பதற்கும், காணி ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் எல்லைகளை இட்டு வேலி அமைப்பதற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

பதவி விலக மறுக்கும் பிரித்தானியப் பிரதமர் ஸ்டாமர்

ஐக்கிய அமெரிக்க தூதுவராக பீற்றர் மன்டெல்சனை பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் நியமித்தமையானது அவரது அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளிய நிலையில், அவரது தொழிலாளர் கட்சியின் ஸ்கொட்லாந்துத் தலைவர் அனஸ் சர்வர் போராடப் போவதாக தெரிவித்த நிலையிலும் பதவி விலகும் கோரிக்கைகளை கணக்கிலெடுக்க அவர் திங்கட்கிழமை (09) மறுத்துள்ளார்.

மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மலையக மக்கள்

“இலங்கை வரலாற்றில் மலையக பெருந்தோட்ட மக்களை பொறுத்தவரையில் நாட்டின் 09வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவின் ஊடாக மாத்திரமே பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய  சம்பள பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.” என மலையக மக்கள் தெரிவித்துள்ளனர் 

SIM பதிவு செய்தல் விதிகளில் திருத்தம்

சந்தாதாரர் சிம் அட்டை (சிம் காட் மொடியூள் SIM) பதிவு செய்தல் ஒழுங்குவிதிகளைத் திருத்தம் செய்தல் மற்றும் 2019.08.02 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக்கொள்ளப்பட்ட சிம் அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.