உலகில் ஒரே ஓர் அரசியல் குழு மட்டுமே உள்ளது. அதுதான் முதலாளித்துவ அரசியல் குழு. உலகில் சோசலிச மற்றும் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் பல நாடுகள் உள்ளன, ஆனால் அவை முற்றிலும் போலியானவை. சீனா ஒரு சோசலிச நாடாகத் தெரிகிறது. ஆனால் அவர்கள் உலகில் உள்ள அனைத்து முதலாளித்துவ ஒப்பந்தங்களிலும் உள்ளனர்.
லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
2,000க்கும் மேற்பட்ட ஊழல் முறைப்பாடுகள்
2025ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு சுமார் 2,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஜனவரி 1 முதல் மே 31 வரை, மொத்தம் 2,138 புதிய முறைப்பாடுகள் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கிழக்கில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பு
கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சம்பந்தப்பட்ட துஷ்பிரயோக வழக்குகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது. 2024ஆம் ஆண்டில் 304 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மூத்த டி.ஐ.ஜி. வருண ஜெயசுந்தர சுட்டிக்காட்டினார். ஒரு சம்பவம் நடந்த பின்னரே சுமார் 90% சிறுவர்கள் பாதுகாப்பற்றவர்களாகக் கண்டறியப்படுவதாக அவர் மேலும் கூறினார்.
பொடி சஹ்ரான் கைது
ஆளுநர் உத்தரவாதம் ; இ.போ.ச இணக்கம், கைவிடப்பட்டது சேவை முடக்கல்
இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்ட விரோத அத்து மீறிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இ.போ.ச துறைசார் தரப்பினருக்கு உறுதி வழங்கியதன் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (01) முன்னெடுக்கவிருந்த சேவை முடக்கல் ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் சிவபரன் தெரிவித்தார்.
நோர்வூட்டில் குழப்பம்: அறுவர் சுயாதீனமாக மாறினர்
நோர்வூட் உள்ளூராட்சி மன்றத்தின் தவிசாளர் உட்பட 6 உறுப்பினர்கள் சுயாதீனமாக செயல்பட முடிவு செய்துள்ளனர். சபையில் உள்ள ஆளும் கட்சி உறுப்பினர்கள், தவிசாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியிலிருந்து சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6 உறுப்பினர்களும் இனிமேல் சுயாதீன உறுப்பினர்களாகச் செயல்பட முடிவு செய்துள்ளதாகக் கூறினர்.
இஸ்ரேல் மீது ஏமனும் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஏமன் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும், ஏமன் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஏமன் மீது பதில் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. சமீபத்தில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்த நிலையில் தற்போது ஏமனும் இஸ்ரேலும் மோதலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானில் உயிரிழந்த விஞ்ஞானிகளுக்கு இறுதிச் சடங்கு
ஈரான் அணு ஆயுதம் தயாரிப் பதை தடுக்க இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கியமான ராணுவ தளபதிகள், அணுசக்தி துறையில் ஈடுபட்டு வந்த விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தாக்குதலில் மேஜர் ஜெனரல் மொகம்மது பஹெரி, கமாண்டர் உசைன் சலாமி, அணுசக்தி விஞ்ஞானி மொகம்மது மெஹ்தி டெஹ்ரான்சி உட்பட முக்கிய நபர்கள் பலர் உயிரிழந்தனர்.
நாடு அனுரவோடு… வீடு வீணையோடு’
(முருகானந்தன் தவம்)
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் முழு ஆட்சி அதிகாரத்தை தாங்களே கைப்பற்றுவோம், ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்த இலங்கை தமிழரசுக் கட்சி யாழ். மாவட்டத்தில் உள்ள முக்கிய சில சபைகளைப் பறிகொடுத்துள்ள நிலையில், தமிழினத் துரோகி என தங்களினாலேயே குற்றம்சாட்டப்பட்ட ஈ.பி.டி.பி. (வீணை) டக்ளஸ் தேவானந்தாவின் காலடி சென்று மண்டியிட்டதன் மூலம் அவரின் கட்சி ஆதரவுடனேயே சில யாழ். மாநகரசபை உள்ளிட்ட சில சபைகளைக் கைப்பற்றியுள்ளது.