ஏப்ரல் 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (ஏப்ரல் 10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டுஇ இன்று முதல் ஏப்ரல் 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதன்படி இரண்டாம் பாடசாலைத் தவணை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகிஇ ஜூலை 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடரும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மதுவை இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது

லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபானப் போத்தலை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்ட போதே, தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியப் படகுடன் 10 மீனவர்கள் கைது

இலங்கை எல்லைக்குட்பட்ட மன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில், 2026 ஏப்ரல் 08 ஆம் திகதி இரவு கடற்படையினர் மேற்கொண்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஓர் இந்திய மீன்பிடிப் படகையும் அதிலிருந்த பத்து (10) மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.

பேருந்துப் பயணிகளின் கவனத்துக்கு

 யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்குத் தனியாகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளைக் குறிவைத்து, மயக்க மருந்து கலந்த ‘லெமன் பஃப்’   பிஸ்கட்டுகளை வழங்கிப் பெருமளவிலான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

நான் முஸ்லிம் என்பதால் சஹ்ரானுடன் முடிச்சு போட முயற்சி: முஜிபுர்

 “நான் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக என்னைச் சஹ்ரானுடன் சிக்கவைக்கச் சிலர் முயற்சிக்கின்றனர். இத்தகைய அச்சுறுத்தல்கள் மூலம் எமது வாயை மூடி, விசாரணைகளை மூடிமறைக்க இடமளிக்கப் போவதில்லை” என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு எதிரான போரில் ’’வரலாற்று வெற்றி’’: ஈரான் அறிவிப்பு

அமெரிக்காவுக்கு எதிரான போரில் தாங்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

50ஆம் ஆண்டு எழுச்சி மாநாடு யாழில்

வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நினைவாக, 2026 மே 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் ஒரு நினைவு எழுச்சி மாநாடு நடைபெற உள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

ஈரான் விவகாரத்தில் டிரம்ப் பின்வாங்கியது ஏன்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் போர் முழக்கம், இறுதியில் வெறும் சலசலப்பாக முடிந்து, அவர் பின்வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதற்குக் காரணம் ஈரானுடனான நேரடிப் போர் மட்டுமல்ல, அமெரிக்காவிற்குள்ளேயே அவர் எதிர்கொள்ளும் அரசியல் ரீதியான உள்நாட்டுப் போராட்டமுமே ஆகும்.

இரு வார கால போர் நிறுத்தம்: ஈரான் – அமெரிக்கா சம்மதம்

ஈரான் மீது இரண்டு வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டுட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி சில நிபந்தனைகள் பின்பற்றப்படவுள்ளன.

இலங்கையின் மத்திய ஆட்சியே மாகாண ஆட்சியை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்

அ. வரதராஜா பெருமாள்)

(இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்)

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கொண்ட மாகாண ஆட்சி இப்போது இலங்கையின் எந்தப்பாகத்திலும் நடைமுறையில் இல்லை.. அவை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களின் தலைமையில் செயற்படுகின்றன. மாகாண ஆட்சியானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் கீழ் செயற்பட்டாலென்ன அல்லது ஆளுநரின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தாலென்ன அது அரசியல் யாப்பின்படி – வரையறுக்கப்பட்ட அளவிலாயினும் – சுயாதீனமானமாக செயற்பட வேண்டிய அரச கட்டமைப்பாகும். மக்களால் தெரிவு செய்யப்படும் மாகாண அரசாங்கங்கள் செயற்படுகின்ற நிலைமை எப்போது இலங்கையில் ஏற்படும் என்று இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை.