இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான இரா. நல்லகண்ணு (101) சென்னையில் புதன்கிழமை (25) அன்று காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி பிற்பகல் 1:55 மணிக்கு காலமானார். எளிமை, நேர்மை மற்றும் போராட்ட குணத்திற்குப் பெயர் பெற்ற அவர், 13 ஆண்டுகளுக்கும் மேலாக CPI-ன் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக பணியாற்றியவராவார்






