உணவுப் பழக்கங்களில் மாற்றம் அவசியம்

இலங்கையில் தினசரி சுமார் 100 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும், ஒரு நாளில் சுமார் 40 புற்றுநோயாளர்கள் உயிரிழப்பதாகவும் அண்மையில் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர். ஹன்சக விஜேமுனி தெரிவித்திருந்தார்.

மத்திய கிழக்கில் பதற்றம்; அமெரிக்க படைகள் குவிப்பு

மத்திய கிழக்கில் மிகப் பெரிய அளவில் அமெரிக்கா படைகளை குவித்து வருவதாகவும், ஈரான் மீது போர் தொடுக்க ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு : பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் சகோதரரான முன்னாள் இளவரசர் அண்ட்ரூ மவுண்ட் பேட்டன் வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார். 

‘புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்‌ஷக்கள் முயன்றனர்’

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை இராணுவம் துடைத்தெறிய விரும்பிய நிலையில், அவர்களை சரணடைய அனுமதிக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் ராஜபக்‌ஷக்கள் பேரம்பேசியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா புதன்கிழமை (18) வெளிப்படுத்தியுள்ளார்.

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

கடும் மழை காரணமாக நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ள அறிவிப்பின்படி நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, நில்தண்டஹின்ன, மதுரட்ட, ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளுக்கும் பதுளை மாவட்டத்தின் மீகஹகிவுல, கந்தகட்டிய ஆகிய பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத சொத்துகள் அரசுடைமை

சட்டவிரோத செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் விபரங்களை பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) வெளிப்படுத்தினார். 

’’பொல்கஸ்ஸோவிட்ட டிலா’’ வுக்கு 90 நாட்கள் தடுத்து வைப்பு

அக்குரெகொட பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியின் இரட்டைப் படுகொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு செல்ல உதவியதாக கருதப்படும் “பொல்கஸ்ஸோவிட்ட டிலா” என அழைக்கப்படும் 28 வயதுடைய சந்தேகநபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸார் அனுமதி பெற்றுள்ளனர்.

புலம்பெயர் தமிழர் எதிர்ப்பு: நாமலின் உரை கேம்பிறிட்ஜ் யூனியனில் ரத்து

கேம்பிறிட்ஜ் யூனியனில் இடம்பெறவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் உரையானது ஐக்கிய இராச்சியத்திலுள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகங்களின் கடும் எதிர்ப்பால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்துக்கான நாமலின் இம்மாத இறுதி விஜயத்தில் ஒக்ஸ்போர்ட் யூனியன், கேம்பிறிஜ் யூனியனில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.

“AI வசதிகளை இலங்கை ஆராய்ந்து வருகிறது”

எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் கூட்டு முயற்சியுடன் முன்னோக்கிச் செல்வதற்கும் இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்ற ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் நிறைவேற்றம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்று (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.