வட்டத் தொகையாக பேருந்து கட்டணம் வேண்டும்

சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பேருந்து கட்டண திருத்தமானது, பயணிகளின் நுகர்வோர் மற்றும் பொருளாதார அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாக, ஹம்பாந்தோட்டை மாவட்ட மனித உரிமைகள் முதலுதவி நிலையத்தின் இணைப்பாளர் தரங்க எல். பதம்பேண்டி குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐவரில் ஒருவர் பட்டினியில் வாடுகிறார்

பொருளாதார ஸ்திரத்தன்மையும், பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புதலும் ஒன்றல்ல என்பதைப் பல இலங்கை மக்கள் அன்றாடம் உணர்ந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வருமான மட்டம் மீண்டு வந்தாலும், பலரின் சம்பளம் இன்னும் பொருளாதார நெருக்கடிக்கு முந்தைய நிலையை எட்டவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொழில் சந்தை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்பதையும், குறிப்பாகப் பெண்கள் இதில் அதிக பாதிப்புக்கு உள்ளாவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இல்லத்தரசிகளுக்கு கசக்கிறது: முதலாளிகளுக்கு இனிக்கிறது

பச்சை மிளகாயின் விலை ஒரு கிலோகிராம் 1,400 தொடக்கம் 1,600 ரூபாய் என்ற அளவில் உச்சத்தைத் தொட்டுள்ளது. எண்ணிக்கையில் பிரித்துப் பார்த்தால், சாதாரண பருமனுள்ள ஒரு பச்சை மிளகாய் 10 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது. சமீப நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில், ஏறாவூர் நகரம் உள்ளிட்ட பல பிரதேசங்களிலேயே உச்சத்தைத் தொட்டுள்ளது

அர்ச்சுனாவும் சந்திரசேகரனும் அடிக்க பாய்ந்து கொண்டனர்

கிளிநொச்சியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போது, பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எம்.பி. அர்ச்சுனா மற்றும் அங்கு கூடியிருந்த ஏனைய அரசியல் பிரதிநிதிகள், அதிகாரிகள் மத்தியில் கடும் வாக்குவாதமும் கைகலப்பு ஏற்படும் சூழலும் உருவானது.

நீர்கொழும்பில் பதற்றம், பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கி சூடு

நீர்கொழுபு, ஆண்டிஅம்பலம,  தெவமொட்டாவ பகுதியில், சற்று முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீதித் தடை (Roadblock) கடமையில் ஈடுபட்டிருந்த போதே குறித்த அதிகாரி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் அதிகாரியின் காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை  பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

இலங்கையின் சனத்தொகை எதிர்காலம்

(பூன்ட்ஷோ வாங்யெல் , இலங்கைக்கான ஐ. நா சனத்தொகை நிதியத்தின்  தற்காலிகப் பிரதிநிதி.)

சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கை எதிர்கொண்ட மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்து, தற்போது நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான புதிய அறிகுறிகளை வெளிப்படுத்தி வருகிறது. உலக வங்கியின் புதிய வகைப்படுத்தலின் அடிப்படையில், இலங்கை மீண்டும் ‘மேல்-நடுத்தர வருமானம்’ (Upper-middle-income) கொண்ட நாடாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது நாட்டின் பொருளாதார மீட்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

வங்காளதேசத்தில் தீர்க்க முடியாத நீரியல் நெருக்கடி

வங்காளதேசத்தின் பெரும் பகுதிகள் மீண்டும் ஒருமுறை பருவமழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல கோடி ரூபாய் செலவில் வடிகால் கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும், நகரங்கள் ஏன் இன்னும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

“தரம் வாய்ந்த சேவை அவசியம்”

அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், தரமான மற்றும் வசதிகள் கொண்ட பொதுப் போக்குவரத்துத் துறையை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இதன் மூலம் பொதுமக்கள் போக்குவரத்திற்காகத் தனிப்பட்ட ரீதியில் செலவிடும் சுமையைக் குறைத்து, நாட்டிற்குள் தரமான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்த முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மகளிர் அணிகள் மோதல்

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் அணிகள் மோதல்-பன்சேனை-அம்பிளாந்துறை அணிகள் மோதல் -1-0 பன்சேனை வெற்றி…….