யாழ். குருநகரில் பரபரப்பு: கடலில் மூழ்கிய பக்தர்களின் படகு: ஒருவர் பலி

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குதுறையிலிருந்து பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்குப் பயணித்த பக்தர்களின் படகு  வெள்ளிக்கிழமை (06) விபத்துக்குள்ளானது.

யாழ். படகு விபத்து: முழு விசாரணைக்கு அமைச்சர் சந்திரசேகர் பணிப்பு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துயரார்ந்த படகு விபத்துக்கான உண்மையான காரணங்களைக் கண்டறியும் வகையில், கடற்படையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை விடுத்துள்ளார்.

விபத்துக்குள்ளான படகு கடற் பயணத்திற்குத் தகுதியான நிலையில் இருந்ததா? பயணிகளின் எண்ணிக்கை வரம்பைத் தாண்டியதா? மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டனவா? என்பது குறித்து ஆராய்ந்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

கடலில் காணாமல் போயிருக்கக் கூடியவர்களைத் தேடும் பணிகளைத் துரிதப்படுத்துமாறும், இதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் எவ்வித தாமதமுமின்றி பயன்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.

விபத்து தொடர்பாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் அமைச்சர் அவசரக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார்.

 விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள அமைச்சர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் முன்னின்று வழங்கும் என உறுதியளித்தார்.

மேலும், காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் உடல்நிலை குறித்து அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கேட்டறிந்த அவர், அவர்களுக்குச் சிறந்த சிகிச்சைகளை வழங்குவதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

சுரேஷ் சலேயின் கைதின் பின்னணி

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அரச உளவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.

சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு  ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி, வியாழக்கிழமை (05) அன்று நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர் மற்றும் யுவதிகளால் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அமெரிக்கா வருந்தும் – ஈரான்

ஈரானின் கடற்கரையிலிருந்து 2,000 மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி X இல் தெரிவித்துள்ளார்.  இந்திய கடற்படையின் விருந்தினராகச் சென்ற சுமார் 130 வீரர்களை கொண்ட ஈரானின் frigate Dena கப்பலை சர்வதேச கடலில் எச்சரிக்கை இல்லாமல் தாக்கப்பட்டுள்ளது. “எனது வார்த்தைகளைக் கவனியுங்கள்: அமெரிக்கா தான் அமைத்த இந்த முன்னுதாரணத்திற்கு கடுமையாக வருத்தப்பட வேண்டியிருக்கும்.

கட்டார் மீது அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்

கட்டாரின் தலைநகர் தோஹாவில் உள்ள அமெரிக்க படையின் முகாமுக்கு அருகில் பாரிய வெடிச்சத்தங்கள் கேட்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டார் வான்வெளியில் நுழையும் ஏவுகணைகளை இடைமறித்து, கட்டார் பாதுகாப்பு அமைச்சு தாக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவுவதுடன், பல இடங்களில் புகைமண்டலமாக இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. 

முபாரக் அல்-கபீர் மீது தாக்குதல் மறுத்தது குவைத்

குவைத் முபாரக் அல்-கபீர் துறைமுகத்திற்கு அருகில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சில ஊடக தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை குவைத் உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

மற்றுமொரு ஈரானிய கப்பலால் சலசலப்பு

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று 05 விசேட கூற்று ஒன்றை விடுத்து உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்தார்.

உலகை பங்கு போட்டு தோற்றுப் போகும் அமெரிக்க இஸ்ரேல் யுத்தம்


(தோழர் ஜேம்ஸ்)

துல்லியமாக குறி வைத்து அதற்கேற்ப தொழில் நுட்பத்தை பாவித்து முக்கிய நபர்களை கடந்த பல வருடங்களாக ‘தூக்கியது’ என்றாக செயற்படும் மொசாட் இம்முறையும் காமெனியை அவ்வாறு தூக்கியது என்றாக பாம்பின் தலையை அறுத்துவிட்டோம் என்று அமெரிக்க தரப்பு மார் தட்டிக் கொண்டது.