இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதலால் போர்ப் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது.

ஏர் இந்தியா விமான கட்டணம் அதிகரிப்பு

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரண​மாக, விமான எரிபொருள் விலை அதி​கரித்​துள்​ள​தால், ஏர் இந்​தியா நிறு​வனம் விமானக் கட்​ட​ணங்​களை உயர்த்​தி​யுள்​ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரு​கிறது.

புதுக்குடியிருப்பில் சர்வதேச மகளிர் தினம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு பிரதேச மகளிர் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள், புதன்கிழமை (11) அன்றுபுதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றன.

’ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக ஈரானின் புதிய உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் Work from Home?

தற்போதைய நெருக்கடியான காலக்கட்டத்திற்கு மத்தியில், இலங்கையில் வீட்டிலிருந்து வேலை செய்வதை (Work from Home) நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என வர்த்தக, வாணிப மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

போர் பதற்றத்தில் புதிய திருப்பம்

ஈரானை மையமாகக் கொண்டு நடைபெற்று வரும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியன் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சார்பாக திருகோணமலை வலய முன்பள்ளி ஆசிரியர்கள் புதன்கிழமை (11)  காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த ஆசிரியர்கள், பின்னர் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் ஆளுநரிடம் கையளித்தனர்.

ஈரான் கப்பல் தகர்ப்பு ; உடல்களை கொண்டு செல்ல நடவடிக்கை

அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ‘ஐரிஸ் டேனா’ (Iris Dana) ஈரான் போர்க்கப்பலில் இருந்த கடற்படை வீரர்களின் உடல்களை விரைவாக ஈரான் நாட்டுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

’ஈரானிய மக்களால்தான் ஆட்சி மாற்றம் சாத்தியம்’ – பெஞ்சமின் நெதன்யாகு

ஈரானில் ஆட்சியை மாற்றுவது அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும் அடக்குமுறை அமைப்பில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து, வெதுப்பக (Bakery) மற்றும் உணவக உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பல உணவக மற்றும் வெதுப்பக உரிமையாளர்கள், தற்போதைய சூழலில் விலைகளை அதிகரிக்காமல் தொழிலைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது கடினம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.