பேரழிவை உண்டாக்கும் போகும் அமெரிக்க ஊடுருவல்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகப் பாதையான ஹார்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். 

’எமது எதிரிகள் உங்கள் நிலத்தை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்’

நீங்கள் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் விரும்பினால், எங்கள் எதிரிகள் உங்கள் நிலங்களிலிருந்து போரை நடத்த அனுமதிக்காதீர்கள் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் வளைகுடா நாடுகளுக்குக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பேரழிவை உண்டாக்கும் போகும் அமெரிக்க ஊடுருவல்

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், உலக நாடுகளுக்கான எரிபொருள் விநியோகப் பாதையான ஹார்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். 

எரிபொருள் ஏற்றுமதியை தடை செய்கிறது ரஷ்யா

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு, எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் பெற்றோல் ஏற்றுமதியைத் தடை செய்ய ரஷ்யா தீர்மானித்துள்ளது.

இலங்கை வருகிறது 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையேயான முக்கிய தொலைபேசி கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து, 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் இலங்கைக்கு வருகிறது. அதில் டீசல் (20,000 மெட்ரிக் தொன்) பெட்ரோல் (18,000 மெட்ரிக் தொன்) அடங்குகின்றது. அந்த சரக்கை தாங்கிய கப்பல் நாளை(28) கொழும்பு துறைமுகத்தை வந்தடையும். 

’இலங்கையில் உணவு விலை 15 வீதம் உயரும்’

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டால், உலக அளவில் உணவுப் பொருள்களின் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இரண்டாவது நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜெர்மனியின் கீல் உலகப் பொருளாதார நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, இந்த நீரிணை முடக்கப்பட்டால் இலங்கையில் உணவுப் பொருள்களின் விலை 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் சிம்பாப்வே 30 வீதம் விலை உயர்வுடன் முதலிடத்தில் உள்ளது.

மட்டு மாவட்ட மாவட்ட ஒருங்கிணப்புக்குழுக்கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட ஒருங்கிணப்புக்குழுக்கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தியமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்றது.

’பாடசாலை மீதான அமெரிக்க தாக்குதல் போர்க்குற்றம்’

ஈரான் பாடசாலை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி 175 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கொன்றமை  தவறான தாக்குதல் அல்ல போர்க் குற்றம் என்று ஐ.நா.வில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறினார்.

சேவையை முடக்கி போராடுவோம் : இ.போ.ச எச்சரிக்கை

யாழில் இ.போ.சவின் இறைமையுள்ள நிலப்பரபில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத்தை நிர்வகிப்பது தொடர்பில் யாழ். மாநகர சபைக்கும் இ.போ.சவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலை இன்று (28) பெரும் பிரச்சினையாக மாறியதால் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் சிலமணி நேரம் பெரும் பரபரபு ஏற்பட்டது.

எரிபொருள் விலை: அதிரடி அறிவிப்பு இதோ…

மார்ச் மாத இறுதியில் எரிபொருள் விலைகள் மீண்டும் உயர்த்தப்படாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர், அடுத்த எரிபொருள் விலை திருத்தம் உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளின் அடிப்படையில் அரசாங்கத்தால் செய்யப்படும் என்று கூறினார்.