மின்சாரக் கட்டணத்தை 13.56% ஆல் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக இந்த மின்சாரக் கட்டணத் திருத்தக் கோரிக்கையை இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ளது.
சாப்புச் சட்டத்தை மீறினால் சட்டம் பாயும்
பங்களாதேஷ் தேசியவாதக் கட்சிக்கு வெற்றி
பங்களாதேஷில் பொதுத்தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வௌ்ளிக்கிழமை (13) உள்ளூர் நேரப்படி காலை 4 மணியளவில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி 185 இடங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் அறுதிப் பெருபான்மையைப் பெற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் எம்.பி திஸ்ஸ விதாரண காலமானார்
முன்னாள் அமைச்சரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான திஸ்ஸ விதாரண காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 92 ஆகும். இலங்கையின் இடதுசாரி அரசியல் இயக்கத்தில் சிரேஷ்ட அரசியல்வாதியான இவர், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராக நீண்டகாலமாக இருந்த இவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பல முக்கிய அமைச்சர் பதவிகளில் பணியாற்றியுள்ளதுடன், அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிகள் மற்றும் தேசிய நல்லிணக்க முயற்சிகளில் பெறும்பங்காற்றியுள்ளார்.
