அதிக மின்கட்டணம் செலுத்தும் நாடுகளில் இடம்பிடித்த இலங்கை

ஆசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் செலுத்தும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. இலங்கையில் அதிகரித்துள்ள மின்கட்டணத்தினால் பெரும்பாலான மக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் சில மின்சார பாவனையாளர்கள் தமது மாதாந்த மின்கட்டணம் கட்டுக்கடங்காத அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதேவேளை, ஜூன் மாதம் மின் கட்டணத்தில் மாற்றம் வரும் என எரி சக்தி அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு

18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரி தொடர்பில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் கோப்பு ஒன்றை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு ஏற்ப 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவரும் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் கோப்பொன்றை திறக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் விமான சேவை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள், கற்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். 

ஒடிசா விபத்தில் 207 பேர் பலி; 900 பேர் படுகாயம்

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்தில் சிக்கியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதியதில் இதுவரை 207 பயணிகள் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ தாண்டியது

மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாயிகள் களமிறங்கல்!

பாஜக பிரிஜ் பூஷன் எம்பி., மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் சீண்டல் செய்ததைத் தொடர்ந்து அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் போராடி வந்தனர்.

“மலையமாருதம்” ஓய்ந்து போனது!

(Nadarajah Kuruparan)


இப்போதெல்லாம் முகநூலை பார்ப்பதற்கு அச்சமாக இருக்கிறது. இலையுதிர் காலத்தில் எங்கும் இலைகள் உதிர்வது போல், உதிர்ந்து போகும் நண்பர்களின், உறவினர்களின், நன்கு அறிமுகமானவர்களின் முகங்கள் முகநூலை தினம்தோறும் ஆக்கிரமிக்கின்றன.

பேரிழப்பு!

நண்பன், தோழன், மனிதநேயன், அரசியல் சமூகசெயற்பாட்டாளன் திரு. லோறன்ஸின் இழப்பு ஆறுதல்கொள்ள முடியாதது!!

1975ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் சக மாணவனாக சந்தித்ததிலிருந்து 1997இல் கொழும்புக்கு மாற்றலாகி வந்ததுவரை இடையறாது உடன்பாடுகள், முரண்பாடுகளுடனான கருத்துப் பரிமாறல்களுடன், நட்புடன் பழகிவந்தவர் தோழர் லோறன்ஸ் அவர்கள்!

முன்பு ஒருநாள் செய்த வினை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் – 02:

தமிழ் மக்கள் மீதான இனவன்முறை, 1983இல் நடந்தேறியபோது அதை ஒரு தனித்த நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடியாது. அது நீண்டகாலமாகத் தொடர்ந்துவந்த நெருக்கடிகளின் விளைவாக, திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்செயல் ஆகும். 

டிஜிட்டல் மயமாகிறது பொதுப் போக்குவரத்து

நாட்டின் பொதுப் போக்குவரத்து முறையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது அணுகுமுறையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்

(என்.கே அஷோக்பரன்)

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, தையிட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி, மே மாத ஆரம்பத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சிறிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். போராட்டம் ஆரம்பமான காலப் பகுதியானது, வெசாக் நிகழ்வுகள் இடம்பெற்ற காலப்பகுதியாகும்.