புத்தளம் ஊடான புகையிர சேவைகள் மீண்டும் ஆரம்பம்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட புத்தளம் மார்க்கத்தின் ஊடான புகையிர சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய, புத்தளம் புகையிர மார்க்கம் இன்று முதல் முழுமையாக திறக்கப்படவுள்ளதாக புகையிர திணைக்களம் அறிவித்துள்ளது. முன்னதாக சிலாபம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் இன்றைய தினம் முதல் புத்தளம் வரை ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்தியா – பாகிஸ்தான் போட்டி ; 15 ஜெட் விமானங்கள் தரையிறக்கம்

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில், பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியைக் பார்பதற்காக, 15 விசேட தனியார் ஜெட் விமானங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள பெருமளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.   

ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் உள்நாட்டு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான மத்திய அமைச்சர் சையத் மொஹ்சின் ரசா நக்வி (Syed Mohsin Raza Naqvi), வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டு மத்திய அமைச்சர் சௌத்ரி சாலிக் ஹுசைன் (Chaudhry Salik Hussain) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரை, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திங்கட்கிழமை (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இந்திய மீனவர்கள் 25 பேர் கைது

இலங்கை கடற்படை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் திங்கட்கிழமை (16) அதிகாலை, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதிக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன்போது உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் இரண்டை கைப்பற்றி இந்திய மீனவர்கள் 25 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் இந்திய மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மைலடி மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகும் சட்டத்தரணிகள்

நாளைய தினம் அனைத்து வழக்கு நடவடிக்கைகளிலிருந்தும் விலகுவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. பத்தரமுல்ல, அக்குரேகொடவில் ஒரு சட்டத்தரணியும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்திற்கு பிறகு, 14 ஆண்டுகளின் பின்னர் சட்டத்தரணிகள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் நேற்று அவசர கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

’ஹஷிஷ்’ கடத்திய இருவர் கைது

இலங்கை கடற்படை, ‘முழு நாடுமே ஒன்றாக’ என்ற தேசிய நடவடிக்கையின் முக்கிய பங்காளியாக, முழு நாட்டையும் உள்ளடக்கியவாறு மேற்கொண்ட தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகளின் விளைவாக, மன்னாரின் தெற்கு கடலில் நடத்தப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது, நச்சு போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 02 பொதிகளை கொண்டு சென்ற 02 சந்தேக நபர்களையும், 01 ஒரு டிங்கி படகும் சனிக்கிழமை (14) அன்று  கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

’’இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும்’’

மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க  தனது சிவராத்திரி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர்

மன்னார், திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை  (15) காலை ஆரம்பமான நிலையில் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமர சூரிய திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சென்று மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற விசேட சிவ தேவி பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.

13.56% ஆல் அதிகரிக்கும் மின் கட்டணம்

மின்சாரக் கட்டணத்தை 13.56% ஆல் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபையினால் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக இந்த மின்சாரக் கட்டணத் திருத்தக் கோரிக்கையை இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ளது.

சாப்புச் சட்டத்தை மீறினால் சட்டம் பாயும்

பொத்துவில் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில்  வெள்ளிக்கிழமை (13) முதல் சாப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது, பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப் தெரிவித்தார்..