ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை

மத்திய மாகாண கல்வி பணிபாளரின் பணிப்புரைக்கு அமைய ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம்(2026.05.15) விடுமுறை வழங்கப்படுகின்றது. மேலும், நாளைய தினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏனைய விடயங்களுக்காக பாடசாலைகளுக்கு அழைப்பதனையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அறியத் தருகின்றேன். ஆ.சுமதி வலய கல்வி பணிப்பாளர் (கடமை நிறைவேற்றல்) வலய கல்வி பணிமனை, ஹட்டன்.

கிளிநொச்சியில் 2 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்திலுள்ள பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாய பீட மாணவர்களின் விடுதி வளாகத்தில் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 2026 மே 11 அன்று திறந்து வைக்கப்பட்டன.

நீடிக்கும் குறைந்த அழுத்தப் பிரதேசம் : கன மழைக்கு வாய்ப்பு

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நீடிப்பதாகவும், இது அடுத்த 36 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு நகரக்கூடும் என  எதிர்பார்ப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்கிறது

மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மவுசாக்கலை மற்றும் காசல்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது.

வாகனங்களின் விலை 10 சதவீதத்தால் அதிகரிப்பு?

அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வாகனங்களின் விலைகள் கணிசமாக அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கைது

சுமார் 50 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வர முயன்ற சீன நாட்டுப் பெண் ஒருவர், இன்று (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் வங்கியில் கோடிக்கணக்கில் கடன் மோசடி: 9 ஊழியர்கள் கைது

தலாதா வீதியிலுள்ள தனியார் வங்கி கிளை ஒன்றில் போலி ஆவணங்கள் மூலம் பெருமளவு பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், அந்த வங்கியின் ஊழியர்கள் ஒன்பது பேர் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

98 இலட்சம் மோசடி: ID கட்டுப்பாட்டாளர் கைது

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் சுமார் 98 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில், அந்த திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்ப கட்டுப்பாட்டாளர் (IT Controller) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மலசலகூட விவகாரம்: முன்னாள் முதல்வர் வலியுறுத்து

மக்களின் அவசியத் தேவையைக் கருத்திற்கொண்டு யாழ் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொது மலசலகூடத் தொகுதியை நிர்வகிப்பது தொடர்பில், யாழ் மாநகரசபைக்கும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் (இ.போ.ச) இடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை இரு தரப்பும் இணைந்து பேசி, மக்கள் நலன் சார்ந்து சுமுகமாகத் தீர்க்க முன்வர வேண்டும் என யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வலியுறுத்தியுள்ளார்.

“தீர்ப்பு நியாயமாகி விடுவிக்கப்படுவேன்”

ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 2013ஆம் ஆண்டு 14 ‘ஏயார்பஸ்’ (Airbus) விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் திங்கட்கிழமை (12) அன்று முன்னிலையானார்.