நிலக்கரி முறைக்கேடு: ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

இலங்கையில் நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார உற்பத்தி ஆகியவற்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளைக் கண்டறிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் முழு அதிகாரமுடைய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டது முதல் 2026 ஏப்ரல் 16 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் முறைகேடுகள் குறித்து இந்த ஆணைக்குழு விசாரணை நடத்தும்.

அரசாங்கம் சட்ட அமுலாக்க நிறுவனங்களில் தலையிடுகிறது’

நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்கள் மீது நேரடி மற்றும் கடுமையான அழுத்தங்களை பிரயோகிக்கும் நிலை உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஐ.எம்.எப். பாராட்டு

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது. வொஷிங்டனில் நடைபெற்று வரும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2026 வசந்தகாலக் கூட்டத் தொடரில் இலங்கை தூதுக்குழுவினர் மிக முக்கியமான ஆலோசனைகளை நடத்தியுள்ளனர்.

ஹோர்முஸ் ஊடாக கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி

லெபனானில் அமுல்படுத்தப்பட்டுள்ள 10 நாள் போர்நிறுத்தத்திற்கு இணங்க, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களும் தடையின்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி நேற்று அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தற்காலிக சாக்கு நிழற்பந்தல்

யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தி சமிக்ஞை விளக்குப் பகுதியில், நல்லூர் பிரதேச சபையினரால் சாக்குத் துணிகளைக் கொண்டு தற்காலிக நிழற்பந்தல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலுக்கு மத்தியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் துவிச்சக்கரவண்டிப் பயணிகளுக்கு தற்காலிக நிழல் வழங்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனுர அரசில் அதிரடி : இருவர் இராஜினாமா

பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சரும் செயலாளரும் இராஜினாமா செய்தனர் நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் இராஜினாமா கடிதங்களை கையளித்து தமது பதவிகளில் இருந்து விலகினர்.

குமார ஜயகொடி எரிசக்தி மின்சக்தி அமைச்சரின் ராஜினாமா

இலங்கையில் உமர் இப்புனு கத்தாப் ரலியால்லாஹு தஆலா அன்ஹும் வரலஹும்.அவர்களின் ஆட்சி ஒத்த ஆட்சி நடக்கின்றது என்றே அல்லது தற்போதும் இலங்கையின் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை தூக்கி பிடிப்பதற்கோ பின்வரும் வரலாற்று சம்பவத்தை எழுதவில்லை.கதையின் நீதி :- குற்றம் சுமத்தப்பட்டவரை பதவியில் வைதாதுக்கொண்டு ஆட்சியாளர் விசாரணை நடத்தக்கூடாது என்பதற்க்கான எடுகோலாக அல்லது உதாரணமாகவே எழுதுகிறேன்.

தற்போதுள்ள பூகோள அரசியற் சூழலில் முக்கியமானதொரு காணொளி

“நெதன்யாகு ஒவ்வொரு நாளையும் மரணத்தையும் இரத்தத்தையும் காலை உணவாகக் கொண்டே தொடங்குகிறார்” என பிரேசில் அதிபர் லூலா டா சில்வா மிகக் கடுமையான மற்றும் உணர்ச்சிகரமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இஸ்ரேல் – லெபனான் பேச்சுவார்த்தை ஆரம்பம்

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையில் மூடிய அறைக்குள் ஆரம்பமாகியுள்ளன.