யாழ்ப்பாணத்தில் தற்காலிக சாக்கு நிழற்பந்தல்

யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தி சமிக்ஞை விளக்குப் பகுதியில், நல்லூர் பிரதேச சபையினரால் சாக்குத் துணிகளைக் கொண்டு தற்காலிக நிழற்பந்தல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலுக்கு மத்தியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் துவிச்சக்கரவண்டிப் பயணிகளுக்கு தற்காலிக நிழல் வழங்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனுர அரசில் அதிரடி : இருவர் இராஜினாமா

பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீன விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சரும் செயலாளரும் இராஜினாமா செய்தனர் நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவுள்ள பக்கச்சார்பற்ற மற்றும் சுயாதீனமான விசாரணைக்கு இடமளிக்கும் வகையில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் இராஜினாமா கடிதங்களை கையளித்து தமது பதவிகளில் இருந்து விலகினர்.

குமார ஜயகொடி எரிசக்தி மின்சக்தி அமைச்சரின் ராஜினாமா

இலங்கையில் உமர் இப்புனு கத்தாப் ரலியால்லாஹு தஆலா அன்ஹும் வரலஹும்.அவர்களின் ஆட்சி ஒத்த ஆட்சி நடக்கின்றது என்றே அல்லது தற்போதும் இலங்கையின் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை தூக்கி பிடிப்பதற்கோ பின்வரும் வரலாற்று சம்பவத்தை எழுதவில்லை.கதையின் நீதி :- குற்றம் சுமத்தப்பட்டவரை பதவியில் வைதாதுக்கொண்டு ஆட்சியாளர் விசாரணை நடத்தக்கூடாது என்பதற்க்கான எடுகோலாக அல்லது உதாரணமாகவே எழுதுகிறேன்.

தற்போதுள்ள பூகோள அரசியற் சூழலில் முக்கியமானதொரு காணொளி

“நெதன்யாகு ஒவ்வொரு நாளையும் மரணத்தையும் இரத்தத்தையும் காலை உணவாகக் கொண்டே தொடங்குகிறார்” என பிரேசில் அதிபர் லூலா டா சில்வா மிகக் கடுமையான மற்றும் உணர்ச்சிகரமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இஸ்ரேல் – லெபனான் பேச்சுவார்த்தை ஆரம்பம்

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையில் மூடிய அறைக்குள் ஆரம்பமாகியுள்ளன.

ஈரானுக்கு இராணுவ உதவிகள்; திட்டவட்டமாக மறுக்கும் சீனா

ஈரானுக்கு சீனா இராணுவ உதவி செய்வதாக ஊடகங்களில் தகவல் வெளியான நிலையில், அதை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

பிஹாரின் புதிய முதல்வராக பொறுப்பேற்றார் சாம்ராட் சவுத்ரி

பிஹாரின் புதிய முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்றுக் கொண்டார். பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவர் பிஹாரின் முதல்வராவது இதுவே முதன்முறையாகும். சுமார் 21 ஆண்டுகளாக் பிஹார் முதல்வராக இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் சமீபத்தில் தனது பதவியை இராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பா.ஜ.கவின் சாம்ராட் சவுத்ரி (57 வயது), நேற்று (15) பிஹார் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

’எங்களை சரணடைய வைப்பதற்கு முயல்வது தோல்வியையே தரும்’

மேற்கு ஆசியாவில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஈரான் அரசு மீது பலத்தைப் பிரயோகிக்கும் எந்தவொரு முயற்சியும் இறுதியில் தோல்வியடையும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ஈரான் மீதான போருக்கு அமெரிக்க செனட் சபை ஆதரவு

ஈரான் மீதான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக ஜனநாயகக் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் தோல்வியடைந்தது.

புத்தளம் வைத்தியசாலையில் முள்ளந்தண்டு நேராக்கல்

புத்தளம் தள வைத்தியசாலையில் இடம்பெற்ற முள்ளந்தண்டு நேராக்கல் (Scoliosis Correction) சத்திரசிகிச்சை கடந்த மார்ச் 25 அன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் இரத்தினபுரி போன்ற ஒரு சில வைத்தியசாலைகளில் மாத்திரம் மேற்கொள்ளப்படும் இவ்வகையான சத்திரசிகிச்சை புத்தளத்தில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது.