ஈரானுக்கு 10 நாள்கள் காலக்கெடுவை விதித்த ட்ரம்ப்

ஈரானுடன் ஐக்கிய அமெரிக்க ஒப்பந்தத்தை எட்டியதாக அல்லது இராணுவ நடவடிக்கையை எடுத்ததா என 10 நாள்களில் உலகம் அறிந்து கொள்ளும் என ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வரிகளை விதிக்கும் ட்ரம்ப்பின் அதிகாரத்துக்கு கட்டுப்பாடு

இறக்குமதி வரிகளை விதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி அமெரிக்க உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அவரது இரண்டாவது பதவிக்காலத்தின் மிக முக்கிய கொள்கைத்தூண் ஒன்றை தகர்த்துள்ளது.

சிவனொளிபாதமலையில் ’சுத்தமான இலங்கை’ திட்டம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படும் ‘கிலின் ஸ்ரீ லங்கா  தேசிய வேலைத்திட்டத்தின்  ஒரு சிறப்பு கட்டம், வியாழக்கிழமை (19) அன்று  மஸ்கெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட சிவனொளி வளாகத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

டைனமைட் வெடிபொருள் பயன்படுத்தி மீன்பிடித்த மீனவர் கைது

மன்னார், ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (17)  கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்து செய்யப்பட்ட வரிகள் : புதிய உலகளாவிய வரியை விதித்த டிரம்ப்

உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரிகளுக்கு பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய 10% உலகளாவிய இறக்குமதி வரியை விதித்துள்ளார். 

47 ஆண்டுகளுக்குப் பின் இணையும் ரஜினி – கமல்

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ள நிலையில், அதன் புரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது.

உணவுப் பழக்கங்களில் மாற்றம் அவசியம்

இலங்கையில் தினசரி சுமார் 100 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும், ஒரு நாளில் சுமார் 40 புற்றுநோயாளர்கள் உயிரிழப்பதாகவும் அண்மையில் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர். ஹன்சக விஜேமுனி தெரிவித்திருந்தார்.

மத்திய கிழக்கில் பதற்றம்; அமெரிக்க படைகள் குவிப்பு

மத்திய கிழக்கில் மிகப் பெரிய அளவில் அமெரிக்கா படைகளை குவித்து வருவதாகவும், ஈரான் மீது போர் தொடுக்க ட்ரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பு : பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் சகோதரரான முன்னாள் இளவரசர் அண்ட்ரூ மவுண்ட் பேட்டன் வின்ட்சர் கைது செய்யப்பட்டுள்ளார். 

‘புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்‌ஷக்கள் முயன்றனர்’

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை இராணுவம் துடைத்தெறிய விரும்பிய நிலையில், அவர்களை சரணடைய அனுமதிக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் ராஜபக்‌ஷக்கள் பேரம்பேசியதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா புதன்கிழமை (18) வெளிப்படுத்தியுள்ளார்.