சவூதி எண்ணெய் நிலையங்களில் வான்வழித் தாக்குதல்

சவூதி அரேபியா அரசுக்குச் சொந்தமான ‘அராம்கோ’ எண்ணெய் நிறுவனத்தின் 2 நிலையங்களைக் குறிவைத்து யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்கள் நேற்று (25) வான்வழித் தாக்குதல்களை நடத்தினா்.

’அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு ஈரான் அடிபணியாது’

அமெரிக்காவின் அச்சுறுத்தல் மொழிகளை ஈரான் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்ச்சி தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், இருதரப்பும் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.

கழிவறைகளால் விமான பயணிகள் பதற்றம்

இங்கிலாந்தின் இரண்டாவது மிகப்பெரிய விமான நிலையமான கேட்விக் விமான நிலையத்தில், குறைந்த நீர்ப்பீத்தம் மற்றும் நீர் விநியோகம் தடைப்பட்டதால் ஓடும் நீர் முற்றிலும் நின்றுபோனது.இதனால், விமான நிலையம் முழுவதும் குடிநீர் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. கழிவறைகளில் தண்ணீரை வெளியேற்றும் வசதி (Flushing) மற்றும் கை கழுவும் வசதி இல்லை.குடிநீர்க் குழாய்கள் (Water fountains) செயல்படவில்லை.உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் (Cafes) காபி மற்றும் குளிர்பானங்கள் தயாரிக்கப்படவில்லை.

பாரிய காட்டுத் தீ : 10 ஏக்கர் நிலப்பரப்பு நாசம்

நுவரெலியா மாவட்டம், வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ காரணமாக இதுவரை 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

உச்சம் தொடும் டெங்கு ஆபத்து: பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் (NDCU) சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் இந்த ஆண்டு டெங்கு நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதுடன், பதிவான மொத்த நோயாளர் தொகையும் 81,511 ஆக உயர்ந்துள்ளது.

குவியும் நெத்திலி மீன்கள்: மகிழ்ச்சியில் மீனவர்கள்

வடமராட்சி நாகர்கோவில் பகுதியில் அதிகளவான நெத்திலி மீன்கள் மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளன. கடும் காற்று மற்றும் சீரற்ற காலநிலை காரணமாகக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த இந்த நேரத்தில், தமக்குக் கிடைத்த இந்தப் பெருமளவு நெத்திலி மீன்களால் தாங்கள் அதிக அளவில் மகிழ்ச்சி அடைவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

‘கொடூரக்’ கொலை: குழு தப்பிச் சென்றதால்’ கடும் சீற்றம்.

பிரான்ஸ் கடற்கரையில் நடைபெற்ற மோதலில் நபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அக்கொலையில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் குழுவினர் சிறிய படகு மூலம் இங்கிலாந்துக்குத் தப்பியோடியுள்ளதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘திருமலையிலிருந்து இலங்கைக்கு வீரர்களை உருவாக்க வேண்டும்’

எதிர்காலத்தில் இலங்கை பிறீமியர் லீக், இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை திருகோணமலை மாவட்டத்திலிருந்து உருவாக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

பிறப்பு நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தாத உலகக் கிண்ண வீரர்கள்

2026 சர்வதேச கால்பந்தாட்டச் சம்ம்மேளன உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரானது, கால்பந்து வரலாற்றிலேயே தங்களது பிறப்பு நாட்டைத் தவிர்த்து வேறு நாடுகளுக்காக விளையாடும் வீரர்களின் அதிகப்படியான எண்ணிக்கையைக் (கிட்டத்தட்ட கால் பகுதி) கொண்டு புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.

எடைக்கொத்த தக்காளி பரிசு: சம்பியன்களுக்கு விசித்திர மரியாதை

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் சம்பியனான ஸ்பெய்னின் வரலாற்று வெற்றியில் முக்கிய பங்கு வகித்த நட்சத்திர வீரர்கள் பேபியன் ரூய்ஸ், கவிக்கு, அவர்களின் சொந்த ஊரில் மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.