நீர் மேலாண்மை குறித்து கலந்துரையாடல்

தற்போது நிலவும் வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ‘எல்-நினோ’ (El-Nino) நிலைமை மற்றும் யல பருவச் சிறுபோகச் சாகுபடி ஆரம்பமாகியுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நீர் மேலாண்மை குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் வியாழக்கிழமை (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

9 கோடி ரூபாயுடன் ஹெரோயின் கடத்தல்காரி கைது

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த 9 கோடியே 37 லட்சத்து 62 ஆயிரத்து 939 ரூபாய் பணத்தை இரண்டு வங்கிகளில் வைப்புச் செய்திருந்த போதைப்பொருள் கடத்தல்காரி ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கைது செய்துள்ளது.

இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரும்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை (05) இச்சங்கத்தின் நிறைவேற்றுக்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் வரை இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு நடைமுறையில் இருக்கும்.

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸ் நாட்டு கப்பல்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் ஒன்று ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியூபாவிற்கு கரம் கொடுக்கும் ரஸ்யா

கியூபாவின் எரிசக்தி நெருக்கடியைத் தீர்ப்பதற்காக, ரஷ்யா தனது இரண்டாவது எண்ணெய் கப்பலை அந்நாட்டிற்கு அனுப்பவுள்ளதாக ரஷ்ய எரிசக்தி அமைச்சர் செர்ஜி சிவிலியோவ் நேற்று (2) அறிவித்துள்ளார்.

2,010 கைதிகளை விடுதலை செய்கிறது கியூபா

அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கியூபா மீது விதித்துள்ள கடும் பொருளாதார அழுத்தத்தினால் அந்நாடு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சூழலில், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிலான ஒரு நடவடிக்கையாக, 2,010 கைதிகளை விடுதலை செய்யப்போவதாக கியூபா அரசாங்கம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

மீண்டும் அதிகரிக்குமா எரிபொருளின் விலை?

ஈரானின் முக்கிய உள்கட்டமைப்புகளை அழிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள புதிய அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் விலை வரலாறு காணாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.

இலவச எரிபொருள் விநியோகத்தால் போக்குவரத்து நெரிசல்

இலவச எரிபொருள் வழங்கும் திட்டத்தினால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலைத் தொடர்ந்து, அந்தப் பணியை நிறுத்துமாறு காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில், 100,000 டாலர் மதிப்பிலான  எரிபொருளே இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது. 

‘ஈரான் வெற்றியைப் பிரகடனப்படுத்தி போரை முடிக்க வேண்டும்’

தனது நாடு “வெற்றியைப் பிரகடனப்படுத்தி, தற்போதைய மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதுடன் எதிர்கால மோதல்களைத் தவிர்க்கும் வகையிலான ஒரு ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள வேண்டும்” என்று , ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜாரீஃப், வலியுறுத்தியுள்ளார்.