அங்கிருந்த நூற்றுக்கணக்கானோர் மனிதத்தோடு உதவியிருந்தாலும்..குறிப்பாக மெத்தை கடை வைத்திருக்கும் ரியாசுதீன் மன்சூரியும் அவரது மகன் அர்மானும் உடனடியாகச் செயல்பட்டனர்.

The Formula
மஹியங்கனை ரஜமகா விகாரையிலிருந்து திருடப்பட்ட, தொல்பொருள் மதிப்புமிக்க சமாதி புத்திசிலை ஒன்றுடன் பிக்கு ஒருவர், அவருக்கு உதவிய நபர் மற்றும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற வாரண்ட் அதிகாரிகள் இருவர் கண்டி நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கண்டி தலைமையகப் பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் பரவியுள்ள போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிப்பது, போதைப்பொருள் விநியோகத்தை முடக்குவது, அதன் தேவையை குறைப்பது மற்றும் அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது ஆகிய நோக்கங்களுடன், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் கீழ் “நாடே ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கை கடந்த 2025.10.30ஆம் திகதி முதல் நாடேங்கிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய, 2026.06.06ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் தினசரி அறிக்கை விபரம் பின்வருமாறு:
கட்டாய உழைப்பின் (Forced labour) மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதிக்குத் தடைகளை விதிக்கத் தவறிய அல்லது அந்தத் தடைகளைச் சரிவர நடைமுறைப்படுத்தத் தவறிய 60 பொருளாதார நாடுகளை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) இலக்கு வைத்துள்ளது. இந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதல் வரிகளை விதிக்க அது பரிந்துரைத்துள்ளது. இந்த 60 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளது.