யாழில் தோன்றியுள்ள வாள் வெட்டு…. வாய் வெட்டுக் குழுகள்….!

கிறீஸ் பேய் -வாழ்வீச்சுக்காரர்கள் போதை வஸ்து வரை சமூகத்தை சீரழிப்பதற்கென்றே தலை நிமிர்ந்து நிற்பதற்கான சீராக வளர்ச்சி பெறுவதற்கான நிலைமைகளை இல்லாமல்செய்வதற்கான தீய எண்ணம் கொண்ட சக்திகளின் சதியின் அங்கமோ என நியாயமான சந்தேகம் எழுகிறது.

(“யாழில் தோன்றியுள்ள வாள் வெட்டு…. வாய் வெட்டுக் குழுகள்….!” தொடர்ந்து வாசிக்க…)

போராடிய சமூகம் என்று சொல்லப்பட்டதில் கடைசியில் மிச்சம் வெட்டுவாழ்வீச்சு, வெடி துவக்குகளுடன்.

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வென்றெடுப்பது_ இருப்பதை கொண்டு சமூக பொருளாத அபிவிருத்தி என்பதை விட தத்தமது புஜ பல பராக்கிரமத்தை காட்டுவது குடுமிபிடிச் சண்டை கழுத்தறுப்பு என்பனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னணி நிகழ்ச்சி நிரலாக இருந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் சம்பந்தர் அணிகளுக்கிடையிலான சச்சரவு தீவிரமடைந்திருக்கிறது
வடக்கு மாகாண சபையில் ஒரு பிரதி சபாநாயகரை நியமிப்பதற்கே குத்தி முறிகிறார்கள். கூட்டத்தில் கூடி நின்று கூவி பிதற்றல் அன்றி நாட்டத்தில் கொள்ளாத சபையாக சீரழிகிறது. கிழக்கு மாகாண சபையைப் பற்றி பேசவே வேண்டாம். பெரும்பாலான தமிழ்மக்கள் பிரதி நிதிகள் அதிகாரபோதை பதவி சொகுசு ஊழலில் திளைக்கிறார்கள். போராடிய சமூகம் என்று சொல்லப்பட்டதில் கடைசியில் இவை தான் மிச்சம் வெட்டுவாழ்வீச்சு- வெடி துவக்குகளுடன்.

(Sritharan Thirunavukarasu)

‘மீண்டும் யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும்’

“நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். “அத்துடன், தேசிய நல்லிணக்கத்தைப் பலப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார். காங்கேசன்துறை, கீரிமலை, நல்லிணக்கபுரம் கிராமத்தை இன்று(31) பிற்பகல் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

(“‘மீண்டும் யுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும்’” தொடர்ந்து வாசிக்க…)

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் வல்வெட்டித்துறையின் ஆதிக்கம்….

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் வல்வெட்டித்துறையின் ஆதிக்கம் தொடர்பாக யூலை 7 2009இல் எழுதப்பட்ட VVT Eஆக மாறும் LTTE என்ற கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:

(“தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் வல்வெட்டித்துறையின் ஆதிக்கம்….” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில்‘வட மாகாணசபை அசமந்தப்போக்கு’ – எம். ஏ.சுமந்திரன்

“வடமாகாண சபையின் நிர்வாகத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பொறுப்பில்லை எனக் கூறமுடியாது. எனினும் வடமாகாண சபை, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அசமந்தப் போக்கைக் காட்டுகிறது” என, நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம். ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

(“வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில்‘வட மாகாணசபை அசமந்தப்போக்கு’ – எம். ஏ.சுமந்திரன்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 21 நாட்களுக்கு காலக்கெடு

வடமாகாணத்தில் சேவையாற்றிவரும் தமிழ் பொலிஸ் உத்தயோகத்தர்களை இலக்குவைத்து, அச்சுறுத்தல் கடி​தமொன்று வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் என்று குறிப்பிட்டு, “பிரபாகரன் படை” எனும் அமைப்பொன்றினால் உரிமை கோரப்பட்ட கடிதமொன்றே, இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு மாணவர்களும் உயிரிழந்த சம்பவத்தில் நியாயம் கிட்டும் வரை, தமிழ் பொலிஸ்
உத்தி​யோகத்தர்கள் அனைவரும், தங்களது சேவையிலிருந்து தற்காலிகமாக விலகியிருக்க வேண்டும் என, அக்கடிதத்தின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

(“தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 21 நாட்களுக்கு காலக்கெடு” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முடக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்துச் செயற்பாடுகளையும் முடக்கும் வகையில், இன்றுத் திங்கட்கிழமை (31) பல்கலைக்கழகத்தின் வாயில் கதவுக்கு பூட்டுப் போட்டு, எவரையும் உள்ளே செல்லாதவாறு மாணவர்கள் தடைவிதித்துள்ளனர். இதனால், பல்கலைக்கழக ஊழியர்கள் எவரும் உட்செல்ல முடியாமல் வாயில் கதவில் நிற்கின்றனர்.

(“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முடக்கம்” தொடர்ந்து வாசிக்க…)

அறிவு என்பது நம் அறியாமையை நாம் அறிந்துகொள்வதே…

டபிஷ் கேர் பிஹாரில் பிறந்தவர். கவிஞர், புனைவு மற்றும் புனைவு சாரா எழுத்தாளர். முக்கிய நூல்கள் பலவற்றின் ஆசிரியர். டென்மார்க் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆங்கிலப் பேராசிரியர். அவரது சுவையான, சிந்தனையைத் தூண்டும் கட்டுரை ஒன்று இன்றைய The Hindu நாளிதழில் வந்துள்ளது.

(“அறிவு என்பது நம் அறியாமையை நாம் அறிந்துகொள்வதே…” தொடர்ந்து வாசிக்க…)

‘ஆவா’ வுடன் தொடர்புடைய‘அக்லின்’ குழு தலைவர் கைது

ஆவா குழுவுடன் தொடர்பினைப் பேணி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தவர் என்று கூறப்படும் இளைஞர் ஒருவரை, பத்தமேனிப் பிரதேசத்தில் வைத்து, சனிக்கிழமை (29) கைது செய்ததாக, அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். சமூக விரோதக் குழுவெனக் குறிப்பிடப்படும் ஆவா குழுவுடன், இவர் தொடர்பினை பேணி வந்துள்ளமை பொலிஸ் புலன் விசாரணையிலும், பேஸ்புக் தொடர்பு மூலமும் தெரியவந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டனர்.

(“‘ஆவா’ வுடன் தொடர்புடைய‘அக்லின்’ குழு தலைவர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

வலதுசாரிகள் பக்கம் செல்கிறது பிரேஸில்

பிரேஸில் றியோ டி ஜெனீரோவின் மேயராக, சீர்திருத்த சபையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் தெரிவாகியுள்ளார். கத்தோலிக்கர்களை ஒரு முறை, “அரக்கர்கள்” என்றழைத்த இவரின் தெரிவு, பிரேஸிலின் அரசியல், வலதுசாரிகள் பக்கமாகச் செல்வதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.

(“வலதுசாரிகள் பக்கம் செல்கிறது பிரேஸில்” தொடர்ந்து வாசிக்க…)